புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
284 Posts - 45%
heezulia
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
19 Posts - 3%
prajai
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
7 Posts - 1%
Guna.D
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
7 Posts - 1%
mruthun
MK Azhagiri - 25 - Poll_c10MK Azhagiri - 25 - Poll_m10MK Azhagiri - 25 - Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

MK Azhagiri - 25 -


   
   
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Thu Mar 18, 2010 8:23 pm

அழகிரி 25


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!




google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
[You must be registered and logged in to see this image.]மதுரை
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!

From Ananda Vikatan Mar 24'2010 issue

Raja

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக