Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்காக_என்னால் முடிந்தது
2 posters
Page 1 of 1
குழந்தைகளுக்காக_என்னால் முடிந்தது
இப்போது கடைகளில் அதிகமாக விற்பனையாகும் குழந்தைகளுக்கான பொருட்களில், தோள்களில் குழந்தைகளை லாவகமாக மாட்டும் பெல்ட்கள் அடங்கிய தோள் பைகள்(Baby Carry Sling) மற்றும் குழந்தைகளை உட்கார வைத்து கைகளால் தள்ளிக் கொண்டு போகும் சிறியதள்ளு வண்டி(Baby Stroller) போன்றவை மிக முக்கியமானவை.
[You must be registered and logged in to see this link.]
நகரங்களில் மாலையில் சாலையின் இரு பக்கங்களிலும் இந்த வண்டிகளில் குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் தாய்மார்கள் அதிகம். அந்த வண்டியில் குழந்தையானது கொலுவில் வைக்கப்பட்ட பொம்மை போல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதைச் சுற்றி கயறுகளால் கட்டியது போல் பெல்ட்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். அந்த தள்ளுவண்டியும் பூ, பலூன், மணி போன்ற விளையாட்டு பொருட்கள் ஏதாவது ஒன்று கட்டபட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். எனக்கு அந்த குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக தான் தோன்றும். காரணம் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியாது. மாறாக திருவிழாக் கூட்டதில் வழி தெரியாமல் தத்தளிக்கும் குழந்தைப் போல் அதன் கண்கள் மிரளும். வழியில் வருவோரையும், போவோரையும் ஒரு பயம் கலந்த பார்வையுடன் தான் பார்க்கும். அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சர்வசாதரணமாக அந்த குழந்தையின் தாய் அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார். நமது சாலைகளை சொல்ல வேண்டியது இல்லை, அந்தஅளவு பளபளப்பாக இருக்கும். ஒரு சிறியகல்லின் மீது அந்தவண்டி ஏறினால் போதும் மொத்தவண்டியும் அதிரும், அதனுடன் சேர்ந்து குழந்தையும் ஒரு ஆட்டம் போடும்.
இவ்வாறு குழந்தைகளை அழைத்து செல்லும் அம்மாக்களை எங்க கிளம்பிட்டீங்க? என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டால் சிரிப்பதா? அல்லது அந்த குழந்தையின் நிலையை பார்த்து வருத்தபடுவதா? என்று நமக்கே தெரியாது. தினமும் நடைப்பயிற்ச்சி செய்தால் உடம்புக்கு நல்லது என்று மருத்துவர் கூறினார், அதனால் தான் மாலையில் தினமும் இவ்வாறு குழந்தையுடன் நடக்கிறேன் என்று பதில் தருவார். அதோடு குழந்தையும் எப்போதும் வீட்டில் இருப்பதால் அதற்கும் ஒரு மாறுதலுக்காக வெளியில் அழைத்து வந்தேன் என்று சொல்வார். ரெம்ப நல்லவிசயம் தான். ஆனால் உடம்பு குறைவதற்காக நடக்கிறோம் என்றால் குழந்தையை தூக்கி கொண்டு நடந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே உடம்பு குறையும். அது மட்டும் அல்லாது அந்த குழந்தையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயற்கையை ரசிக்கும். நடைப்பயிற்ச்சி மேற்கொள்ளும் போது நமது உடலின் எடையை கால்கள் தாங்க வேண்டும். ஆனால் இவர்கள் குழந்தையை தாங்கும் வண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த வண்டியின் சொல்படி நடப்பார்கள். அதற்கு நடைப்பயிற்ச்சி என்று ஒரு பெயரும் வைத்து விடுவார்கள்.
[You must be registered and logged in to see this link.]
நாம் வெளியில் நடந்து போகும்போது ஏதாவது ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்லது ஒரு பயங்கர சத்தத்தினால் தடுமாறினாலோ, நாம் எப்படி பக்கத்தில் உள்ளவர்களின் துணையை நாடுகிறோம் அல்லது அவர்களை கட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழந்தைகளும். எந்த வித ஆபத்து வந்தாலும் நாம் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்லது சத்தமோ கேட்டால் அம்மாவை இறுக கட்டி, முகத்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வந்து விடும். இது குழந்தைகளின் இயல்பு.
எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, எனது அம்மா என்னை தோளில் தூக்கி சுமந்த நாட்கள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டது கூட எனக்கு மறக்கவில்லை. அவ்வாறு எழு, எட்டு வயது இருக்கும் போது கூட என்னை எனது அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்கள். இத்தனைக்கும் நான் எங்கள் வீட்டில் தனியாக பிறந்து வளர்ந்தவன் கிடையாது. எனக்கு ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் உண்டு. இது எனது வீட்டில் நடக்கும் அதிசயம் என்று நான் சொல்ல வரவில்லை. பெரும்பாலான கிராமத்து நன்பர்கள் அனுபவித்த ஒன்றாக தான் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை வைத்திருக்கும் இப்போதைய தாய்மார்களோ, அந்த குழந்தையை சுமக்க தள்ளுவண்டி வைத்திருப்பது தான் பரிதாபம்.
[You must be registered and logged in to see this link.]
எங்கள் உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் மது அருந்தினால் அமைதியாக வந்து தூங்குவது கிடையாது. வழியில் வருவோர் மற்றும் போவோரை கெட்டவார்த்தைகள் சொல்லி வம்புசண்டைக்கு இழுப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் அவரும் ஒருவரின் குரலைக் கேட்டால் பெட்டி பாம்பாக அட்ங்கி போய், அமைதியாக வீட்டிற்குள் தூங்க சென்று விடுவார். அது யாருடைய குரல் என்றால் அவரை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவருடைய அக்காவின் குரல் தான். அந்த அளவுக்கு அவரின் மேல் மதிப்பு வைத்திருந்தார் எனது உறவுக்காரர். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நம் மீது சிறுவயதில் ஒருவர் காட்டும் அக்கறை வாழும் நாள் முழுவதும் நமக்கு மறப்பதில்லை. அந்த ஒருவரின் மீது மதிப்பும், மரியாதையும் கூடுகிறது என்பதே உண்மை.
ஒரு நாள் நான் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் பாடியில் இருந்து மணலி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது வண்டிக்கு முன்னால் ஒரு தம்பதிகள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தார்கள். அப்போது எனது பார்வை அந்த குழந்தையின் மீது திரும்பியது. அந்த குழந்தை முகம் மிகுந்த இறுக்கத்துடன் அதன் பிடி தளர்ந்தது போல் எனக்கு காட்சியளித்தது. உடனே அந்த அம்மாவை பார்த்தேன். அவர்கள் ஏதோ தூக்ககலக்கத்தில் இருப்பது போல் கண்கள் சுழன்றது. ஒரு கையால் தனது கணவனின் தோளை இறுக்கியபடி இருந்தார். அந்த அம்மாவின் கவனம் சிறிதும் குழந்தையின் மீது இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. பின்னால் இருப்பவர்களில் நிலைமையை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த அம்மாவின் கணவர் வண்டியை அறுபது மைல்களுக்கு மேல் வேகமாக செலுத்தினார். ஒரு கட்டத்தில் என்னால் குழந்தையின் நிலைமையை பார்க்க முடியவில்லை. அது விழுந்து விடுவது போலவே எனக்கு தோன்றியது. அதனால் எனது வண்டியை வேகமாக செலுத்தி அவரிடம் வண்டியை நிறுத்த சைகை செய்தேன். அவரும் உடனே வண்டியை ஓரமாக நிறுத்தினார். அவரிடம் குழந்தையை பற்றி சொன்னேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே எனது மனைவி குழந்தையை மார்புடன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) கட்டியுள்ளார் என்று அவர் மனைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் கவனித்தேன், கங்காரு தனது வயற்றில் உள்ள பையில் குழந்தையை சுமப்பது போல அந்த பெண்மணியும் தனது மார்புடன் அந்த குழந்தையை சேப்டி பெல்டால் கட்டியிருந்தார்.
எந்த ஒரு தாய்க்கும் தனது குழந்தையை தூக்கி சுமக்க வலு இல்லாமல் கடவுள் படைப்பது இல்லை. அப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருந்தால், அது தாய்பால் கொடுப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் போல் தான் அமையுமே தவிர மற்றவை ஒன்றும் கிடையாது. தாவரங்களை பாருங்கள், அவைகளின் கனிகளையும், மலர்களையும் தாங்க முடியாமல் கீழே முறிந்து விழுந்து விடுவது கிடையாது.
"மனமிருந்தால் மார்க்கமுண்டு"
நான் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம், எனது நன்பர் ஒருவர் ஊருக்கு பார்சல் அனுப்ப வேண்டும் அதற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். சரி நன்பனின் அழைப்பை ஏற்று, என்ன பொருள் வாங்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவன் தனது மனைவி அலைபேசியில் பேசும் போது குழந்தையை வைத்து தள்ளுவதற்காக ஒரு வண்டி வாங்கி அனுப்பி வைக்க சொன்னாள், உனக்கு தான் தெரியுமே அதை பற்றியுள்ள செய்திகளை இனையதளத்தில் இருந்தால் சேகரித்து சொல்லு என்றான். எனது நன்பர் ஒன்றும் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராசரி கட்டிட தொழிலாளி. அவனுடைய மனைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, நமது மாவட்டத்தில் உள்ள பதினேழு பட்டியில் அதுவும் ஒரு பட்டி. இதற்கு மேலும் நான் அவனுக்கு அந்த வண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
குறிப்பு: இவை அனைத்தும் நாகரீகம் என்ற பெயரில் நடமாடும் மாயைகள். அவைகளில் நம்மில் சில பேர்களும் அறிந்தோ, அறியாமலோ விழுந்து விடுகிறோம். எது நாகரீகம் என்பதை முழுமையாக அடையாளம் காணவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
button="hori";
submit_url ="http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/03/blog-post_16.html"
nadodiyinparvaiyil.blogspot.com
[You must be registered and logged in to see this link.]
நகரங்களில் மாலையில் சாலையின் இரு பக்கங்களிலும் இந்த வண்டிகளில் குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் தாய்மார்கள் அதிகம். அந்த வண்டியில் குழந்தையானது கொலுவில் வைக்கப்பட்ட பொம்மை போல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதைச் சுற்றி கயறுகளால் கட்டியது போல் பெல்ட்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். அந்த தள்ளுவண்டியும் பூ, பலூன், மணி போன்ற விளையாட்டு பொருட்கள் ஏதாவது ஒன்று கட்டபட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். எனக்கு அந்த குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக தான் தோன்றும். காரணம் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியாது. மாறாக திருவிழாக் கூட்டதில் வழி தெரியாமல் தத்தளிக்கும் குழந்தைப் போல் அதன் கண்கள் மிரளும். வழியில் வருவோரையும், போவோரையும் ஒரு பயம் கலந்த பார்வையுடன் தான் பார்க்கும். அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சர்வசாதரணமாக அந்த குழந்தையின் தாய் அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார். நமது சாலைகளை சொல்ல வேண்டியது இல்லை, அந்தஅளவு பளபளப்பாக இருக்கும். ஒரு சிறியகல்லின் மீது அந்தவண்டி ஏறினால் போதும் மொத்தவண்டியும் அதிரும், அதனுடன் சேர்ந்து குழந்தையும் ஒரு ஆட்டம் போடும்.
இவ்வாறு குழந்தைகளை அழைத்து செல்லும் அம்மாக்களை எங்க கிளம்பிட்டீங்க? என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டால் சிரிப்பதா? அல்லது அந்த குழந்தையின் நிலையை பார்த்து வருத்தபடுவதா? என்று நமக்கே தெரியாது. தினமும் நடைப்பயிற்ச்சி செய்தால் உடம்புக்கு நல்லது என்று மருத்துவர் கூறினார், அதனால் தான் மாலையில் தினமும் இவ்வாறு குழந்தையுடன் நடக்கிறேன் என்று பதில் தருவார். அதோடு குழந்தையும் எப்போதும் வீட்டில் இருப்பதால் அதற்கும் ஒரு மாறுதலுக்காக வெளியில் அழைத்து வந்தேன் என்று சொல்வார். ரெம்ப நல்லவிசயம் தான். ஆனால் உடம்பு குறைவதற்காக நடக்கிறோம் என்றால் குழந்தையை தூக்கி கொண்டு நடந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே உடம்பு குறையும். அது மட்டும் அல்லாது அந்த குழந்தையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயற்கையை ரசிக்கும். நடைப்பயிற்ச்சி மேற்கொள்ளும் போது நமது உடலின் எடையை கால்கள் தாங்க வேண்டும். ஆனால் இவர்கள் குழந்தையை தாங்கும் வண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த வண்டியின் சொல்படி நடப்பார்கள். அதற்கு நடைப்பயிற்ச்சி என்று ஒரு பெயரும் வைத்து விடுவார்கள்.
[You must be registered and logged in to see this link.]
நாம் வெளியில் நடந்து போகும்போது ஏதாவது ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்லது ஒரு பயங்கர சத்தத்தினால் தடுமாறினாலோ, நாம் எப்படி பக்கத்தில் உள்ளவர்களின் துணையை நாடுகிறோம் அல்லது அவர்களை கட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழந்தைகளும். எந்த வித ஆபத்து வந்தாலும் நாம் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்லது சத்தமோ கேட்டால் அம்மாவை இறுக கட்டி, முகத்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வந்து விடும். இது குழந்தைகளின் இயல்பு.
எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, எனது அம்மா என்னை தோளில் தூக்கி சுமந்த நாட்கள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டது கூட எனக்கு மறக்கவில்லை. அவ்வாறு எழு, எட்டு வயது இருக்கும் போது கூட என்னை எனது அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்கள். இத்தனைக்கும் நான் எங்கள் வீட்டில் தனியாக பிறந்து வளர்ந்தவன் கிடையாது. எனக்கு ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் உண்டு. இது எனது வீட்டில் நடக்கும் அதிசயம் என்று நான் சொல்ல வரவில்லை. பெரும்பாலான கிராமத்து நன்பர்கள் அனுபவித்த ஒன்றாக தான் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை வைத்திருக்கும் இப்போதைய தாய்மார்களோ, அந்த குழந்தையை சுமக்க தள்ளுவண்டி வைத்திருப்பது தான் பரிதாபம்.
[You must be registered and logged in to see this link.]
எங்கள் உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் மது அருந்தினால் அமைதியாக வந்து தூங்குவது கிடையாது. வழியில் வருவோர் மற்றும் போவோரை கெட்டவார்த்தைகள் சொல்லி வம்புசண்டைக்கு இழுப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் அவரும் ஒருவரின் குரலைக் கேட்டால் பெட்டி பாம்பாக அட்ங்கி போய், அமைதியாக வீட்டிற்குள் தூங்க சென்று விடுவார். அது யாருடைய குரல் என்றால் அவரை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவருடைய அக்காவின் குரல் தான். அந்த அளவுக்கு அவரின் மேல் மதிப்பு வைத்திருந்தார் எனது உறவுக்காரர். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நம் மீது சிறுவயதில் ஒருவர் காட்டும் அக்கறை வாழும் நாள் முழுவதும் நமக்கு மறப்பதில்லை. அந்த ஒருவரின் மீது மதிப்பும், மரியாதையும் கூடுகிறது என்பதே உண்மை.
ஒரு நாள் நான் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் பாடியில் இருந்து மணலி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது வண்டிக்கு முன்னால் ஒரு தம்பதிகள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தார்கள். அப்போது எனது பார்வை அந்த குழந்தையின் மீது திரும்பியது. அந்த குழந்தை முகம் மிகுந்த இறுக்கத்துடன் அதன் பிடி தளர்ந்தது போல் எனக்கு காட்சியளித்தது. உடனே அந்த அம்மாவை பார்த்தேன். அவர்கள் ஏதோ தூக்ககலக்கத்தில் இருப்பது போல் கண்கள் சுழன்றது. ஒரு கையால் தனது கணவனின் தோளை இறுக்கியபடி இருந்தார். அந்த அம்மாவின் கவனம் சிறிதும் குழந்தையின் மீது இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. பின்னால் இருப்பவர்களில் நிலைமையை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த அம்மாவின் கணவர் வண்டியை அறுபது மைல்களுக்கு மேல் வேகமாக செலுத்தினார். ஒரு கட்டத்தில் என்னால் குழந்தையின் நிலைமையை பார்க்க முடியவில்லை. அது விழுந்து விடுவது போலவே எனக்கு தோன்றியது. அதனால் எனது வண்டியை வேகமாக செலுத்தி அவரிடம் வண்டியை நிறுத்த சைகை செய்தேன். அவரும் உடனே வண்டியை ஓரமாக நிறுத்தினார். அவரிடம் குழந்தையை பற்றி சொன்னேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே எனது மனைவி குழந்தையை மார்புடன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) கட்டியுள்ளார் என்று அவர் மனைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் கவனித்தேன், கங்காரு தனது வயற்றில் உள்ள பையில் குழந்தையை சுமப்பது போல அந்த பெண்மணியும் தனது மார்புடன் அந்த குழந்தையை சேப்டி பெல்டால் கட்டியிருந்தார்.
எந்த ஒரு தாய்க்கும் தனது குழந்தையை தூக்கி சுமக்க வலு இல்லாமல் கடவுள் படைப்பது இல்லை. அப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருந்தால், அது தாய்பால் கொடுப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் போல் தான் அமையுமே தவிர மற்றவை ஒன்றும் கிடையாது. தாவரங்களை பாருங்கள், அவைகளின் கனிகளையும், மலர்களையும் தாங்க முடியாமல் கீழே முறிந்து விழுந்து விடுவது கிடையாது.
"மனமிருந்தால் மார்க்கமுண்டு"
நான் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம், எனது நன்பர் ஒருவர் ஊருக்கு பார்சல் அனுப்ப வேண்டும் அதற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். சரி நன்பனின் அழைப்பை ஏற்று, என்ன பொருள் வாங்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவன் தனது மனைவி அலைபேசியில் பேசும் போது குழந்தையை வைத்து தள்ளுவதற்காக ஒரு வண்டி வாங்கி அனுப்பி வைக்க சொன்னாள், உனக்கு தான் தெரியுமே அதை பற்றியுள்ள செய்திகளை இனையதளத்தில் இருந்தால் சேகரித்து சொல்லு என்றான். எனது நன்பர் ஒன்றும் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராசரி கட்டிட தொழிலாளி. அவனுடைய மனைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, நமது மாவட்டத்தில் உள்ள பதினேழு பட்டியில் அதுவும் ஒரு பட்டி. இதற்கு மேலும் நான் அவனுக்கு அந்த வண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
குறிப்பு: இவை அனைத்தும் நாகரீகம் என்ற பெயரில் நடமாடும் மாயைகள். அவைகளில் நம்மில் சில பேர்களும் அறிந்தோ, அறியாமலோ விழுந்து விடுகிறோம். எது நாகரீகம் என்பதை முழுமையாக அடையாளம் காணவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
button="hori";
submit_url ="http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/03/blog-post_16.html"
nadodiyinparvaiyil.blogspot.com
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: குழந்தைகளுக்காக_என்னால் முடிந்தது
[You must be registered and logged in to see this image.]
அ.பாலா- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
Similar topics
» குழந்தைகளின் கலாட்டா - சில குழந்தைகள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் இவை
» குழந்தைகளிடம் யோசிச்சிப் பேசணும்
» குழந்தைகளின் கண்களை சுத்தப்படுத்துதல்
» குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்
» குழந்தைகள் முன்பு தீய பழக்கவழக்கங்கள்
» குழந்தைகளிடம் யோசிச்சிப் பேசணும்
» குழந்தைகளின் கண்களை சுத்தப்படுத்துதல்
» குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்
» குழந்தைகள் முன்பு தீய பழக்கவழக்கங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|