ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ம தத்துவம்

2 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty ஆன்ம தத்துவம்

Post by சிவா Thu Mar 18, 2010 12:13 am

First topic message reminder :

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.


பரமாணு


பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:21 am

காற்றில் விண்னும், வெப்பத்தில் காற்றும், விண்ணும் நீரில் வெப்பம், காற்று, விண், இவையும், மண்ணில் நீர் வெப்பக்காற்று, விண் ஆகிய நான்கும் அடக்கம். இப்படி கலந்து இயங்குகின்றன. ஒவ்வொரு பூதமும் தன்னளவில் தனித்தனியே இயங்கும்போது ஒரு தன்மையோடும் மற்றொன்றில் இயங்கும்போது அந்த இயக்க மண்டலத்தில் அமைந்த பஞ்சபூதக்கூட்டு, அதன் காலம், தூரம் பருமன், வேகம், இவைகட்கு ஏற்ப வெவ்வேறான சிறப்புத்த ன்மையோடும் இயங்கும். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேறு வேறான தன்மையோடு பலகோடான கோடித் தோற்றங்களாக உருவாகின்றது.

பஞ்சபூத செயற்கையான, தோற்றமாகக் காணும் நிகழச்சிகளில் பரமாண எனம் விண், பல கட்டங்களிலும் ஊடுருவி ஒடி இயங்கும் தன்மைக்கும், முறைக்கும் விரைவிற்கும் ஏற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சவை, மணம் உணர்ச்சிகள் என்ற ஆறுவகையான தொடர் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. எனவே, பரமாணவே உயில் என மதிக்கப்பெறுகின்றன. விண்ணின் தன்நிலை இயக்கம் கொள்ளல் சக்தி ஆகிறது. அது காற்றில் இயங்கும்போது ஒலிக்கும் சக்தியாகின்றது. அது வெப்பத்தில் ஒளிக்கும் சக்தியாகிறது. நீரில் அதுவே சுவையாகி மண்ணில் வாசனையாகிறது. அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற இயக்கத்தன்மைகள் ஒன்றோடு ஒன்றிணைந்து ஒரு மண்டல நிகழ்ச்சியில் முறையாக இயங்கும்போது அந்த மண்டலத்தில் காந்தம், மின்சாரம், வெப்பம், காற்று ஆகிய நால்வகையான சுழல்கள் முறையாக அதனதன் வேகத்தில் அதனதன் பாதையில் சுழன்று மேலே சொல்லப்பட்ட அழுத்தம் முதலான ஐவகை இயக்கங்களிலும் காக்கப்பெறுகின்றன.

இந்த ஐவகை இயக்க அதிர்வு அலைகள் முறையாகத் தொடர்ந்து நடைபெறுமானால் அதன் விளைவாக வித்துக்கூறுகள் விளைந்து இணைந்து அந்த மண்டலத்தில் உணர்ச்சி என்ற இயக்கம் உருவாகின்றன. அப்போது அந்த மண்டலம் அறிவு என்ற சிறப்பியக்கத்திற்கு அடிப்படையான வித்து ஆகின்றது. இந்த வித்துக் கோளங்கள்தான் எல்லாவகையான உயிரினங்களுக்கும் அடிப்படையான சிற்றரைகள் ஆகும். இத்தகைய வித்தக் கோளங்கள் எண்ணிக்கையில் பெருகிக்கூடி கொத்தாக அமைந்து இயங்கி கொள்ளல், தள்ளல், உணர்தல், வித்திடுதல் என்ற சிறப்பியக்கங்களைப் பெறும்போத அத்தொகுப்பு இயக்கமே ஜீவன் எனப்படும். இந்த விளக்கத்தால் பரமாணு ஒரே சக்தி ஒருபுறம் காற்று, வெப்பம், நீர், நிலம், இவையாகி தூலக் காட்சிகாளவும், இவற்றினுடே அதே பரமாணுவின் எழுச்சி கவர்ச்சி என்ற இயக்கச் சிறப்பே மடக்கு நிகழச்சிகளாகி ஒலி, ஒளி, சுவை மணம், அறிவு, என்றும் சூட்சம இயக்கங்களாக ஜீவகாந்தமாகவும் மிளர்கின்றன.

இத்தகைய சூக்கும நிகழ்ச்சிகளில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய உயிர் எனப்படும். உணர்தல் என்ற நிகழ்ச்சியே அறிவு எனப்படும். உயில் இயக்கத்தின் விளைவான ஒரு சிறப்பு நிலையே அறிவு ஆகும். உயிர் என்பது பரமாணு. இதன் இயக்க வேறுபாடுகள் எண்ணிறந்தன, என்பதாலும் சுருக்கமாக மூன்று பிரிவுகளில் தெரிந்து கொள்ளலாம். பேரியக்க மண்டலம் முழுவதும் விண் என்ற உயிர்த்துகள் நிறைந்த பெருங்களமாக இருக்கின்றது. இந்நிலையில் இது பிரபஞ்ச உயில். இதுவே மகாகாசம் (மகா ஆகாசம்) விண் திரட்சி நிலைகளான காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய நான்கு பூதங்களிலும் உள் நிறை ஆற்றலாக அமைந்து ஒலி, ஒளி, சுவை மணம், என்பனவாக, விளைவுகளாக மலர்ந்து கொண்டிருக்கும் இயக்க இயக்க நிகழ்ச்சிகளில் இதுவே பூதாகாசம் (பூதம் ஆகாசம்) எனப்படும் வித்து என்ற அடிப்படை அமைப்பைக் கொண்டு அணு அடுக்குளால் அமைந்த உடலில் இதே விண் உணர்ச்சி என்ற சிறப்பாற்றலாக மிளிர்கின்றது. இந்த நிலையில் அதே விண் சிதாகாசம் (சித்தம் ஆகாசம்) ஆகும். இதுதான் ஜீவன், சிதாகாசம் என்ற நிலையோடு, பூதாகாசமும், மகாகாசமும், நேர் தொடர்பு கொண்டிருத்தலால் ஒவ்வொரு ஜீவனும் பிரஞ்சம் முழுமையும் தன்னோடு இணைப்பாகக் கொண்டே இயங்குகின்றது.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:22 am


தோற்றம்


உணர்தல் என்ற சிறப்பாற்றலான அறிவு முதலில் அழுத்தம், வெப்ப, தட்ப, ஏற்ற தாழ்வு, இவற்றை உணர்வாகப் பெறுதல் தொடங்குகின்றது. இந்த உணர்வை ஸ்பரிச உணர்வு உணர்வு ஆகும். இந்த ஓரறிவு இயக்கமுடைய ஜீவனே தாவரம் ஆகும்.

தாவரத்திலிருந்தோ (அல்லது) அதன் வித்துக்களில் இருந்தோ உயிரியக்க விரைவு அதிகமாகி, சுவையுணர்வு கூடி அதற்குரிய கருவியான வாய் அமையப் பெருகும்போது அது ஈரறிவு ஆகிறது. இந்த ஈரறிவு உயிரினங்களிடம் உயிரியக்க சக்தி விரைவு பெற்று வாசனையுணர்வான கருவியான மூக்கு பரிணாமமடைந்தால் அதுவே மூவறிவாகும். ஜீவனாகும் எறும்பு, செல், இவற்றைப் போன்றவை மூன்றறிவு ஜீவன்கள், மேலும் ஒளியுணர் கருவியான கண்தோன்ற நாலறிவாகவும் பாம்பு முதலியன தோன்றின.

ஒலியுணர்வு கருவியான காது என்று கருவி தோன்ற ஐந்தறிவு உயிராகவும், மிருகங்கள், பறவைகள், முதலியன தோன்றின. இத்தகைய பரிணாம வளர்ச்சியின் தொடர் நிகழ்ச்சியில் வால் உள்ள குருங்கு தோன்றி, பின்பு வால் இல்லா குரங்கு தோன்றி, பின் மனிதன் தோன்றியிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. வெள்ளத்தால் பூமி அதிர்ச்சி, பிளவுகள், அவற்றால் இந்த மனித குடும்பம் சிதறடிக்கப்பட்டு பூமியில் பல்வேறு இடங்களில் பரவி அந்தந்த நாட்டு தட்பவெட்ப அமைப்புக்களுக்கேற்ப கருப்பர்கள், வெள்ளையர்கள், குட்டையர்கள், நெட்டையர்கள், பனியில் வாழும் எஸ்கிமோக்கள் போன்று பலவேறுபாடுகளுடன் மனித இனம் தோன்றி பழக்கம், வழக்கம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற முறைகளால் மதங்கள் பலவாகப் பிரிந்து, உலக முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:23 am

மரணம்

அணுக்களில் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூய உடல். அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவி ஓடிச்சுழன்று கொண்டே இருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகிறது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கிப் பழகும் அளவிற்கு மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி, துன்பமாகி, நோயாக வருகிறது.

இந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின்சாரம், காற்று, இரத்தம் ஆகிய மூன்று சுழல்களும் தடைபடுமேயானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவிற்கு மேல் கனல் கொண்டு அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிர்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்கமுடியாமல் உடலை விட்டு வெளியேறிவிடும்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:26 am

மனிதமூளை ஆற்றல்

ஒரு மனித உடலில் நாளொன்றுக்கு 27,949.3 மீட்டர் ரத்தம் 99776.6 கி.மீ நீளமுள்ள ரத்தக்குழாய்கள் வழிச் செலுத்தப்படுகின்றன. ஒரு மனிதன் சராசரி வாழ்நாளில் இதயத்தின் தசைகள் இயங்கும் (பம்ப் செய்யும்) ரத்தத்தின் அளவு, சந்திரமண்டலத்திற்கு செல்லும் 56 ராக்கெட்டுகளில் நிரப்பப்படும் எரிபொருள் அளவாகும். பிறதசைகள் போலன்றி இதயத்தின் தசைகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன.

கருவில் குழந்தை நான்குவார சிசுவாக இருக்கும்போது நரம்புகள் தோன்றுவதற்கு முன்பே சிசுவின் உடம்பிற்கு வெளியே உப்பு நீரில் மிதந்து கொண்டு இதயம் துடிக்கத் தொடங்குகின்றது. MYOCYTER என்ற தசை செல்கள் சுமார் 2 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து இழைகளை இயக்க வைக்கின்றன. குழந்தை பிறந்ததும் இந்த செல்கள் பெருகி வளத்தை நிறுத்திக் கொள்கின்றன. மனிதன் மூளை 1.36 கிலோ எடையுள்ளது. சுமார் 100 திரில்லியன் (ஒரு திரில்லியன் என்பது ஒன்றிற்குப் பின் 18 பூஜ்ஜீயங்கள் கொண்டதாகும்) செய்தித் துணுக்குகளை சேகரித்து வைக்கும் திறன் கொண்டதாகும். அதாவது 70 ஆண்டுகளில் அது சேர்க்கும் செய்திகள் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் ஐந்து லட்சம் தொகுதிகளில் அடங்கக்கூடிய அத்தனை தொகுதிகளை அடுக்கி வைத்தால் 711.31 கிலோ மீட்டர் தூரம் வரும். அதன் சிறிய அளவு (1.3608 கிலோ) பயன்படுத்தும் சக்தி 20 வாட் பல்புக்குத் தேவையான மின்சாரம் மற்றும் அளப்பறிய சேமிப்பு திறன் 100 திரில்லியன் செய்திகளாகும்.

இவற்றைப் பார்க்கும்போது தற்போது நடைமுறையில் உள்ள கணக்கை விட அது சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரியப் வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூளை தனது சிறிய நினைவுப் பகுதியில் ஒரு செய்தியை நிரப்பிக்கொள்ளும். உடலின் நீளமான செல் நியூரான் (1.2 மீ) முழுவளர்ச்சியடைந்த மூளையில் 100 மில்லியன் நியூரான்கள் நரம்பு செல்கள் உள்ளன. ஆனால் நியூரான்கள் எண்ணிக்கைக்கும் மனித அறிவுக்கும் சம்பந்தம் இல்லை.

நியூரான்களுக்கு இடையே ஆன இணைப்பு பிறப்புகளுக்கு முன்பே துவங்கி 2 வயது வரை தொடர்கிறது. நியூரான் டிரான்ஸ்பர் மீட்டர் மூலம் செய்திகள் அனுப்பப் படுகின்றன. ஒரு நியூரான் செய்தியை அனுப்பியதும் மற்றொரு நியூரானில் உள்ள ஆயிரக்கணக்கான செய்திகள் வாங்கப்பட்டு அது இன்னொரு நியூரானுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. மனித உடலில் 96,000 கி.மீ. இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இரத்தத்தில் பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள்,

வெள்ளை அணுக்கள் பிளாடெலட்ஸ் போன்றவைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வினாடியும் 80 லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் எலும்பு, மஞ்ஜயில் உற்பத்தி ஆகிறது. ஹீமோகுளோபினில் அது 54 ஒரு யளவியில், 4 முதல் 6 மில்லியன் சிவப்பு அணுக்கள் காணப்படும். பிளாடெலட்கள் ஒரு யளவியில் 3 லட்சம் வரை இருக்கும்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:28 am

சுவாசம்

ஓய்விருக்கும்போது ஒரு மனிதன் நிமிடத்திற்கு 13 முதல் 17 வரை சுவாசிக்கிறான். விளையாடும்போது 80 மடங்கு வரை அதிகரிக்கின்றது. ஒரு நாளில் சராசரி 21,600 முறை சுவாசிக்கிறோம். இது வாழ்நாளில் 295.261 மில்லி.லி அளவாகும். தாயின் வயிற்றில் பிறந்த அதிர்ச்சியில் குழந்தைக்கு முதல் சுவாசம் ஏற்படுகிறது. தசைகள் சுருங்கி, மார்பு விரிந்து உள்ளே காற்றழுத்தம் குறைகிறது. திணறிப்போன குழந்தை வாயைத் திறக்கிறது. காற்று உள்ளே விரைகிறது. குழந்தை முதல் மூச்சை விடத்தொடங்கி நிமிடத்திற்கு 60 தடவை சுவாசித்து மூச்சுவிடும் போராட்ட சுழற்சி ஆரம்பிக்கிறது.

வளர்ச்சி அடைந்த ஒருவரின் சுவாசப்பைகளின் உள் அளவு 93, இது மனித உடம்பின் வெளிப்பரப்பின் 40 மடங்காகும். மனித உடம்பில் கல்லீரலின் பணிகள்மிகவும் சிறப்பானது. கல்லீரம் சுமார் 1,000 விதவிதமான பணிகளை மேற்கொள்கிறது. உடம்பை நல்லநிலையில் வைத்திருப்பது, இரத்தம் உரையாமல் பாதுகாப்பது, விஷத்தை முறிப்பது போன்றவை இதன் முக்கிய பணிகள். உடல் உறப்புகளில் கல்லீரல் மட்டுமே தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் திறன் உடையது. 3-ல் 2 பகதி கல்லீரல் எடுக்கப்பட்டு விட்டாலும் கூட அது மீண்டும் பழைய நிலைக்கே வளர்ந்துவிடும்.

வாயில் தொடங்கி மலத்துவாரம் வரையான 9.14 நீளமள்ள குழாய்தான் உணவை நுண்ணிய துணுக்குகளாகப் பரித்து குடலுக்கும், ரத்தநாளங்களுக்கும் அனுப்புகிறது. சத்துக்கள் உடம்பின் மிகப்பெரிய உறுப்பான 1.36 கிலோ எடையுள்ள கல்லீரலுக்குச் சென்று அங்கு ரசாயனப்பொருளாக மாற்றப்பட்டு தேவைப்படும்போது பயன்பட சேமித்து வைக்கிறது. டி.என்.ஏ. குரோமோஸாமின் முக்கிய பகுதி பெற்றோரிடமிருந்து குழந்தை மரபணுவழி செலுத்தப்படும் பாரம்பரியத் தகவல் இதன் மூலமே செல்லுகின்றன. உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் சுமார் 2 மீ அளவுள்ள டி.என்.ஏ சுருட்டப்பட்டு 10 மைக்ரோ மீட்டர் அளவுகளுக்கு அடக்கப்பட்டு விடுகிறது. டி.என்.ஏ. நான்கு அடிப்படைகள் கொண்டது. G, A, C, T, U (GUANINE, ADENINE, CYSTOSINE, THYMINE) இலை இரட்டை மடிப்பாக அமைந்திருக்கும். 6.096 மீ நீளமுள்ள சிறுகுடலும், 6 மீ நீளமுள்ள பெருங்குடலும் சேர்ந்து 9.26 ச.மீ இடத்தை ஆக்கிரமித்துள்ளது. உடலின் சருமத்தின் 5 மடங்கு இது குடல்கள் 70 ஆண்டுகளில் 40.04 மெட்ரிக் டன் உணவை செரிமானத்திற்காக பதப்படுத்துகின்றன.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:33 am

எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 206. தொடை எலும்புதான் மிக நீளமானது. மிகச்சிறிய எலும்பு காதின் கடுப்பக்கம் இருக்கும் எலும்பாகும். மிக வலுமையானது கணுக்காலையும் முழங்காலையும் இணைக்கும் எலும்பு, சுமார் 1,600 கிலோ எடையைத்தாங்கும் சக்தி இதற்கு உண்டு. மனித உடம்பில் 639 தசைகள் இருக்கின்றன. உடலின் மொத்த எடையில் அவை 40. புன்னகை புரியும் போது 17 தசைகள் இயங்குகின்றன. கோபப்படும்போது 42 தசைகள் இயங்குகின்றன. பினபகுதியில் இயங்கும் தசை தான் மிகப்பெரிய தசை. ஒரு விரைப்பை நொடிக்கு 2,000 உயிரணுக்கள் உற்பத்தி செய்கிறது. ஒரு பெண்ணின் கருப்பையில் அவள் வாழ்நாளில் 400 முட்டைகள்தான் உற்பத்தி செய்ப்படுகிறது. தலையில் சுமார் (சராசரி) ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மயிர்கள் முளைக்கின்றன. தினசரி 45 மயிர்கள் விழுந்துவிடுகின்றன.

ஒவ்வொரு மயிர்காலும் தனது வாழ்நாளில் 9.14 மீ உற்பத்தி செய்யும் திறன்கொண்டது. சராசரி மனிதனின் 1.85 ச.மி.உடம்பை 2.72 கிலோ எடையுள்ள தோல் மூடியிருக்கிறது. நமது காதுகள் 1,500 வெவேறு ஒலிகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றவை. 72.418 கி.மீ. நெடிய நரம்புகள் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் செய்திகளை அனுப்புகின்றன. மிக அதிகப்படியான வேகம் 532 கி.மீ. நாக்கில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்ச்சி குமிழ்கள் இருக்கின்றன. வாரம் தோறும் அவை தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. மனிதனின் நாக்கு சுமார் 500 விதமான சுவைகளை உணரும் திறன் கொண்டது.

2,000 முதல் 4,000 வரையிலான மணத்தை மூக்கால் உணர முடியும். சுமார் 10,000 நிறங்களை பகுத்தறியும் சக்தி கொண்டது. மனிதனின் கண்கள் 1.68 கி.மீ தொலைவில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகுவர்த்தியைக் இதனால் காண முடியும். இமைகள் கண்களை மூடி மூடி திறக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் ஒரு நாளில் நாம் 30 வினாடிகள் குருடர்களாக இருக்கிறோம். வயிறு நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் ஹைட்ரோ குளோரிர் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. வயிற்றின் உட்பகுதி சுவரில் ஒவ்வொரு நிமிடமும் ஐந்து இலட்சம் செல்கள் புதிதாக உற்பத்தியாகி இந்த அமிலம் வயிற்றுச் சுவரை அழித்து விடாதவாறு பார்த்துக் கொள்கின்றன. மனித உடலில் அதிகப்பரப்பில் பரந்துள்ளது தோல். சராசரி மனிதனின் தோலை பரப்பி வைத்தால் அது 2 ச.மீ வரும். மூளையின் அடிப்பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரபி மிக முக்கியமான உறுப்பு, வளர்ச்சி, இனவிருத்தி, என்டாக்ரின, சுரப்பிகளின் செயல்பாடு போன்றவற்றை இதுவே கவனிக்கிறது. இதயமும் மூத்திரப்பைகளும் ஓய்வு எடுக்காமல் உழைக்கின்றன.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:34 am

டான்சில், அப்பென்டிக்ஸ் இரண்டும் தேவையற்ற உறுப்புக்கள். அவை இல்லாமல் எந்த பாதிப்பும் இல்லாமல் மனிதனால் உயிர் வாழமுடியும். உடம்புக்கு உடனடி சக்தியை வழங்குவது கல்லீரல், இது கிளைக்கோஜனை சேமித்து வைத்துக் கொண்டு, அதை குளுகோசாக மாற்றி சக்தி அளிக்கிறது. பல்லின் எனாமல் தான் உடம்பின்மிகக்கடினமாக பகுதி. தினசரி இரண்டு இலட்சம் செல்கள் பிறந்து அதே எண்ணிக்கையில் இறந்து போகின்றன.

தோலின் மேல் பகுதி 15-30 நாட்களுக்கு ஒரு முறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. மிக உயரமான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தாழ்ந்த பகுதியில் வசிப்பவர்களை விட இரண்டு லிட்டர் இரத்தம் அதிகமாக இருக்கும். உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும். உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க உணவு, உழைப்பு, உறக்கம், ஆண்- பெண் உறவு, எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவிற்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறி கொள்ளப்பெற்றாலும் உயிர் சக்தி, ஓட்டம் பாதிக்கப்பம். நோய்கள் உண்டாகும். வாரத்திற்கு ஒருமுறையாவது இரவில் உணவு உட்கொள்ளாமல் இலேசாகப் பழவகை உண்டோ அல்லது சிறிது பால்அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மையாகும்.

அளவுக்கு மீறினால் இந்த உணவு உடலை ஜீரணிக்கும், கருவமைப்பு எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல், ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலில் உள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் அவற்றின் விகிதாச்சாரங்கள் கூடவோ, குறையவோ இடமுண்டு. இக்காரணங்களால் உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், காற்று இரத்தம் ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்ற தாழ்வுகளைப் பெறும் விரைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச்செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:37 am

இந்த தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்த சக்தி ஓட்டத்தில் தடைபடுகிறதோ, அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்கு காலமும் நிர்ணயிக்கப் பெறுகின்றன. நோய்களை நீக்கிக்கொள்ளும் சக்தி இயற்கையான உடலில் அமைந்துள்ளது. ஒத்த பத்தியம் காத்து ஓய்வு எடுத்துக் கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம். நோயற்ற உடலில்தான் அறிவும், திறன்பட வேலைசெய்யும். இயற்கை இன்பங்களை அனுபவிக்க முடியும், எனவே ஒவ்வொருவரும் நோயற்ற வாழ வழிகண்டு நின்று ஒழுகிவாழ வேண்டும்.

மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சகம், கவலை, காம எண்ணங்கள், இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீற அழித்துவிடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சிகளை மாற்றி விடலாம்.

உணர்ந்தோரை அன்பு முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம். உணவு உண்டவுடன் அதிக ஓட்டம், சவாரி, கடின உழைப்பு, ஆண்-பெண் உடலுறவு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப் புண் உண்டாகிவிடும். அது குன்மம் என்ற நோயாகிவிடும். உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப்பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கினறது.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வெந்நீரிலோ தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம், அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது. உடல் உயிர்சக்தி, விந்து, நாதம், சீவகாந்தம், மனம் இவை ஐந்தும் ஒருசேர இயங்கும் அமைப்புதான் மனித வடிவமாகும். கோடிக்கணக்கான சிற்றரைகள் சேர்ந்து அடுக்கடுக்காக இயங்குவது இந்த உடல், ஒவ்வொரு சிற்றரைக்கும் இருபுறம் காந்தக் கவர்ச்சி உண்டு. உடல் நிலைத்திருக்க வேண்டுமானால் அதில் அமைந்துள்ள சிற்றரைகளின் எண்ணிக்கைக்கும், பளுவுக்கும் ஏற்ற ஜீவகாந்த அழுத்தம் தேவை.

ஜீவகாந்தம் என்பது உயிர்ச்சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர்த்துகளும் தன்னைத் தானே மிகவிரைவாகச் சுற்றிக் கொண்டு இருப்பதால் அதிலிருந்து விரிந்து கொண்டே இருக்கும் அலை, தொடர்ந்து தோன்றிக் கொண்டிருக்கும் ஓர் உடலில் உள்ள உயிர்துகளின் எண்ணிக்கைகு ஏற்பட ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில்தான் உடலிலுள்ள சிற்றரைகளின் அடுக்கு குரையாமல் நிலைத்து இருக்கும். இரத்த ஓட்டம், காற்றோட்டம், வெள்ள ஓட்டம் இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள ஆற்றலை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத் தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவாகாந்தத்தைப் பெருக்க வேண்டுமானால் அதற்கு வேண்டிய எண்ணிக்கயுள்ள உயிர்த்துகள்கள் தேவை. உயிர்த்துளிகள் விந்து நாத திரவத்தின் அளவையும், தன்மையும் பொறுத்தது.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:41 am

போதியளவு விந்து (ஆண்விந்து), நாதம் (பெண்விந்து) இருந்தால் தான் உடலை நடத்தப்போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர் சக்தி துகள்கள் நிலைத்திருக்கும். ஜீவகாந்த அளவு சரியாக இருந்தாதான் பரு உடலானது சிற்றரைகளின் ஒழுங்கான இயக்கத்தால் சீராக இயங்கிக் கொண்டிருக்கும். மனமும் நல்ல முறையில் இயங்கும். ஜீவகாந்தத்தின் ஒரு பகுதி உடல் சீற்றரைகளின் மூலம் உடலியக்கமாகவும் மற்றொரு பகுதி மூனளயின் சிற்றரைகள் மூலமாக மனஅலைகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கும். உடல், விந்து, உயிர்சக்தி, ஜீவகாந்தம், உடல் மனை இயக்கம் என்ற தொடரினை நன்றாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஐந்தில் ஒன்று குறை இருந்தாலும் இயக்க ஒழுங்கு குலைந்தாலும், அது மற்றவற்றை ஒவ்வொன்றாகப் பாதிக்கும். அப்படி ஒன்றுக்கொன்று ஏற்படும் இயக்கம் முரண்பாட்டிற்கு ஏற்ப வலி, வியாதி, மரணம், இவை சம்பவிக்கும். தனது செயல்கள் மூலமாகவோ, வெளிப்புற மோதுதலோ, கோள்களின் காந்த அலைவீச்சு மூலமாகவோ உன்னுடைய ஜீவகாந்தம் உடல் இயக்கம் பாதிக்கப்படலாம். உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இந்த ஐந்து வகையில் அலட்சியம் மிதமிஞ்சிய உபயோகம், முரண்பாடற்ற உபயோகம், இவற்றால் உடல் இயக்கம் பாதிக்கப்படலாம். இது தன்னுடைய செயல் மூலமாக வரும் விளைவு.

தட்ப வெப்ப ஏற்ற தாழ்வு மற்றும் தற்செயல் விபத்துக்களால் ஏற்படும் குடிப்பங்கள், கோள்கள் சஞ்சாரத்தில் அன்மை சேமை, ஒன்றோடு ஒன்று நேர்படுதல், ராசிமாற்றம் ஆகிய காரணங்கள் ஒவ்வொரின் பிறந்தநாள் கோள் நிலைக்கு எற்ப ஜீவகாந்தம் ஏற்ற தாழ்வடைதல் இப்படி அனேக அம்சங்களால் குழப்பம் வரும்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா Tue Mar 23, 2010 8:50 am

எந்த விதத்தில் உடல் நலம் குழப்பம் அடைந்தாலும், தானே அதனைச் சரிபடுத்தி உடலை நலமாக்கி கொள்கின்ற இயற்கை வியாதி உடலிலேயே ஒவ்வொருவருக்கும் ஓரளவு அமைந் திருக்கிறது. இதனை குழப்பத்தை தாங்கிக் கொள்ளும் இயற்கை நியதி ஆகும். இயற்கை நியதி அமைத்த அளவுற்கும் மேலாக குழப்பம் மீறினால்தான் அது உடல் இயக்கத்தைப் பாதிக்கும். பாதிப்பு ஏற்படும்பொழுது, மனிதன் தன்னுடைய முயற்சியினால் உடற்பயிற்சி, மனப்பயிற்சி, உணவு முறை மூலம் உடல நலத்தைக் காத்துக் கொள்ளலாம்.


ஆன்ம தத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்ம தத்துவம் - Page 4 Empty Re: ஆன்ம தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum