புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
39 Posts - 30%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
175 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
Raji@123
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்ம தத்துவம் - Page 3 I_vote_lcapஆன்ம தத்துவம் - Page 3 I_voting_barஆன்ம தத்துவம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ம தத்துவம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:13 am

First topic message reminder :

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.


பரமாணு


பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:45 am

மண்டலம்-3

* அக்னி மண்டலம்,
* ஆதித்த மண்டலம்,
* சந்திர மண்டலம்

1. அக்னி மண்டலம்-இது மூலாதாரம் ஆகும்
2. ஆதித்த மண்டலம்-இருதய ஸ்தானம் ஆகும்
3. சந்திர மண்டலம்-சகன்கார தளமாகும்.

மலம்-3

* ஆணவம்,
* காமியம்,
* மாயை

1. ஆணவம்-உடம்பை நான் என்று இருப்பது
2. காமியம்-கண்டவற்றில் மனம் ஆசைப்படும்
3. மாயை-தனக்கு வருவதை அறியாமல் இருப்பது.

தோசம்-3

* வாதம்,
* பித்தம்,
* திலோத்தமம்

1. வாதம்-வாயுவின் செயல் விளைவு
2. பித்தம்-அக்கினியின் விளைவு
3. திலோத்தமம்-கபத்தின் விளைவு

ஏடனை-3

* அர்த்த ஏடனை,
* புத்திர ஏடனை,
* உலக ஏடனை

1. அர்த்த ஏடனை-திரவியத்தை தேடி ஆசைப்படல்
2. புத்திர ஏடனை-புத்திரர்கள் தேடி ஆசைப்படல்
3. உலக ஏடனை-உலக விசயங்கள் தேடி ஆசைப்படல்

குணம் -3

* இராட்சகம்,
* தாமசம்,
* சாத்வீகம்

1. இராட்சகம்-அகங்காரமாய் வெட்டவும், குத்தவும், கடிக்கவுமாயிருப்பது

2. தாமசம்-மந்த புத்தி, உன்மத்தமாய், மத்தியமாய் இருப்பது

3. சாத்வீகம்-அடக்கம், அன்பு, விவேகம், ஐம்பொறியாக்கல், அருள், ஞானம், தவம், பொறை, மேன்மை, வாய்மை முதலியவற்றையுடையதாய நாட்டங் கொண்டிருப்பது



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:48 am

இராகம்-8

* காமம்,
* குரோதம்,
* உலோபம்,
* மோகம்,
* மதம்,
* மாச்சரியம்,
* இடும்பை,
* அகங்காரம்

1. காமம்-ஆசை
2. குரோதம்-பிணக்கு
3. உலோபம்-பிடிபாடு
4. மோகம்-பிரியம்
5. மதம்-கர்வம்
6. மாச்சரியம்-உதட்டில் உறவும், உள்ளத்தில் பகையும் வைப்பது
7. இடும்பை-உதாசீனம்
8. அகங்காரம்-கோபித்தல்

வினை-2


* நல்வினை,
* தீவினை

1. நல்வினை-புண்ணியம் செய்தல்
2. தீவினை-பாவம் செய்தல்

அவத்தை-5

* சாக்கிரம்,
* சொப்பனம்,
* சுழத்சி,
* துரியம்,
* துரியாதீதம்

1. சாக்கிரம்-லலாடத்தானம்
2. சொப்பனம்-கண்டஸ்தானம்
3. சுழத்சி-இருதய ஸ்தானம்
4. துரியம்-நாபி (தொப்புழ்)
5. துரியாதீதம்-குறியிடம்

முப்பது முப்பது முப்பத்தவறுவருஞ்
செப்பு மதிலுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்பு மதிலுடைக் கோயில் சிதைந்த பின்
லொப்பிலன் வரு மோட்டெடுத்தாரே

96 தத்துவங்களும் நம்முடைய சரீரத்தின் எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.

இதில் ஆன்மத்துவம் என்பது 24. அவையாவன,

* பூதங்கள்-5,
* தன்மாத்திரைகள்-5,
* ஞானேந்திரியங்கள்-5,
* கன்மேந்திரியம்-5,
* அந்தக்காரணம்-4

ஆகிய இந்த 24-ம் ஆன்மாவுக்கு தூய வடிவாக இருந்து நேரே தொடர்பு கொண்டு விளங்குவதால் ஆன்ம தத்துவம் எனப்பட்டது. மேற்கண்ட ஆன்மதத்துவத்தின் விளக்கத்தை எவர் அறிவாரோ அவரே இவ்வுலகத்தில் வாழத்தெரிந்தவன் ஆவான். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமுமனிறைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்ற வள்ளுவர் வாய்மை பொழியின் மூலம் காணலாம். மேற்கண்ட பூதங்களின் ஐந்தின் சூட்சும குணங்களே தன்மாத்திரைகளாகும்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 1:52 am

தன்மாத்திரைகள்

தன்மாத்திரைகள் என்பது உருபண்பு இல்லாதவை, அணுக்கள் ஒன்று கூடி தன்மாத்திரை ஆகின்றன. தன் மாத்திரைகளிலிருந்தே பூதங்கள் தோன்றுகின்றன என்று ஏற்கனவே படித்தோம்.

பஞ்சபூதங்கள் பிறப்புக்குக் காரணம் தன்மாத்திரைகள். இதே தன்மாத்திரைகள்தான் பஞ்சபூதங்களின் தொடர்பால் இந்திரியங்கள் நுகர்ச்சியில் தொழிற்படுவதற்குத் துணை செய்வனவாயும் உள்ளன. தன்மாத்திரை என்றாலும் சூக்கும பூதம் என்றாலும் பொருள் ஒன்றே. இவைகள் இயந்திரிய இயக்கங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து செயல்படவைக்கும். ஞானேந்திரியமான மெய், வாய், கண், மூக்கு, செவி இவ்வனைத்தும் பஞ்சபூதங்களின் தொடர்பு, அது அதன் உணர்ச்சிகளை அறியும். கண்மேந்திரியம் வாய், கால், கை, இருவாய், குறி, இவைகள் அதன் அதன் வேலைகளைச் செய்யும்.

அந்தக் காரணம்-4

* மனம்,
* புத்தி,
* சித்தம்,
* அகங்காரம்

என நான்கு வகைப்படும். ஒரு பொருளை அறிய புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை புறத்தே இருந்து செயல்படுகின்றன. அவை தரும் விசயங்களைப் பதிவு செய்து அகத்தின் உள்ளே இருந்து செயல் படுகின்றன. அகத்தே நின்று செயல்படும் கருவி அகக்கருவிகள் ஆகும். ஏதேனும் ஒரு பொறிவாயிலாக வரும் பொறிகளின் செய்திகளை அந்தப்பொருளின் மீது நிறுத்தி இது இன்னதாக இருக்கலாம் என நினைத்து சந்தேக நிலையில் இருப்பதே மனம் எனப்படும். புத்தி அது இதுதான் என நிச்சயிக்கும்.

இந்த நிச்சய உணர்வு செயல்வடிவம் பெற கருவி, கரணாதிகள் ஊக்குவிக்க எழும்பும் நிகழ்ச்சியே அகங்காரம் ஆகும். இந்த செயல்பாடுகைள முடிவுக்குக் கொண்டு வருதல் சித்தம் என்பதாகும். ஆன்மாவானது மனம் முதலிய கருவிகளைக் கொண்டு உணரும்போது அவ்வுணர்வு பற்றுதல், நிச்சயித்தல், ஒருப்பட்டு எழுதல், சித்தித்தல், என நான்கு வகைப்படும். இனி ஒரு பொருளை இன்னது என நிச்சயிக்கும் புத்தி, அதனை முன்னைய பழக்கம் பற்றி அதன் வினைக்கு ஈடாக அதைத் தனக்கு உறவாகவோ, பகையாகவோ பொதுவாகவோ உணரும். இப்படி உணர்தலார் இன்பம், துன்பம், மயக்கம் என மூன்று வித குணங்களுள் ஒன்றாக பரிணமிக்கும். இவ்வாறு பரிணமித்து நிற்கும் புத்தியை ஆன்மா இது துன்பம், இது இன்பம், இது இரண்டுமில்லாதது என அறிந்து பின் அக்குணம் தோன்றுகின்ற காரணத்தால் நான் இன்புற்றேன், துன்புற்றேன், மயங்கினேன் என உணரும் இவ்வுணர்வுகள் வேதனைக் காட்சிகள் ஆகும்.

புறத்தேயுள்ள வேதனைக் கண்ணுக் கினியதொரு பொருளைக் கண்டு இன்புறும் போது முன்னர் இது தோன்றாகாட்சியும் இன்னதென உணரும் மானசக்காட்சியும், இது இன்ன இன்பம் என்னும் தன் வேதனைக் காட்சியும் ஒன்றன்பின் ஒன்றாக காரண காரிய முறையில் கடல் அலைபோல் ஆன்மாவின் உணர்வில் வந்து தோன்றும்.

இப்படியாக ஆன்மத்துவம் 24-ம் ஆன்மாவுக்குத் தூயவடிவில் நேரே தொடர்புடன் செயல் படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தனது ஜீவனின் சரித்திரத்தைக் கண்டு கொண்டால் உலகில் எல்லாம் இன்பம்தான் இவ்வுலகில் எதுவும் நல்லதும் இல்லை நண்பன் பகைவன் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் தன் சுய தூய அறிவை அறிந்து விட்டால் எல்லாம் சமம், எல்லாம் இன்ப மயம் ஆகும். ஆகவே ஆத்மஞானம் பெறுவது இன்றிமையாதது. மனிதன் வாழத்தெரிந்தவன். வாழவேண்டும். தெரியாதவர் தெரிந்தவர் காட்டும் வழியை நம்பியும், பின்பற்றியும் வாழ வேண்டும். வாழத்தெரிந்து வாழ்பவர்களான அறிஞர் பெருமக்கள் ஞானிகளை நம்பி அவர்களைப் பின்பற்றியும் வாழ்பவர்களே பக்தர்கள்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 7:37 am

பஞ்சபூதமும் உடலும்


உண்மையான பொருளின் விளக்கத்தை ஆன்மா அறியும்போதுதான் நம்முடைய மயக்கமான மாயை நம்மை விட்டு விலகி தெளிவாகிறது. அப்போதுதான் பொருளாக இருக்கும் பொருளாகக் கருதும் மெய்யுணர்வும் ஏற்படுகின்றது. இப்போது மெய்ப்பொருள் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. அதன் முதல் நிகழ்ச்சியான பரமாணு நிலை விளங்கிவிட்டது. இந்த அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்தால் அணுக்கள் இணைந்து விண், காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற ஐந்து பிரிவுகளும் அவற்றிலிருந்து அழுத்தம், ஒலி ஒளி சுவை மணம், அறிவு என்ற ஆறுவகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்பது தெரியும். மெய்நிலையாகிய பரவெளியும் உயில் நிலையாகிய பரமாணுக்களும் ஒரு எல்லைக்குள் அமையும் அளவின் விகிதாசாரத்திற்கு ஏற்ப, அங்கு நடைபெறும் இயக்கம் பல்வேறு நிலைகளை அடைகின்றது. அத்தகைய வேறுபாடுக்ளதான் குறிப்பாக அறிவினால் உணரப்பெறும் முக்கிய பிரிவுகளாகிய விண், காற்று, வெப்பம், தண்ணீர், நிலம் என்பனவாகும்.


இவ்வைந்து பிரிவுகளில் ஒரு நிலையோடு மற்ற நிலையை எந்த அளவில் கூடி இணைந்து இயங்குகின்றதோ அதற்கு ஏற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், அறிவு என்ற ஆறுவகையான நிகழச்சிகளும் அவற்றின் ஒவ்வொரு பிரிவிலும் பலவித ஏற்ற தாழ்வு நிலைகளும் உண்டாக்குகின்றன. இப்படி ஒவ்வொரு இயக்கத்திலும் தன்னியக்கம், தொடரியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், தரம், மாற்றம் ஏற்பட்டு ஒன்று பலவாக இயங்கும் நிகழச்சிகளாகின்றன. இந்த முறையிலே இயங்கும் தொடர் நிகழச்சிகள் அணுவாகி, அணுக்கள் கூடி காற்றாகி, வெப்பாகி, நீராகி அண்டவெளியிலே தன்னைத்தானே சுழன்று சுற்றி மிதந்து கொண்டு இருக்கின்றன. அதன் மத்தியில் பகுதியில் விரைவு குறைந்த அணுக்கள் நெருக்க முற்று கனற்குழம்பாகி மேல்நோக்கி நீர்வரம்பிற்கு மேல் வந்து கெட்டியான பரிணாமமே நிலமாகும். மேலும் பூமியின் நடுமையத்தில் ஏற்படும் அணுக்கள் அழுத்தத்தால் வெப்பம் அதிகமாகி அதன் விளைவாக உலோகங்கள், இரத்தினங்கள், இரசாயனங்கள் இவையாவும் உற்பத்தியாகின்றன. மேலும் மேலும் விளைந்து கொண்டே இருக்கின்றன.


முறையாகத் தானாக உண்டாகும் அணு அடுக்குப்பெற்ற ஒரு இயக்க மண்டலத்தில் காந்தம், மின்சாரம், காற்று, நீர், ஆகிய நால்வகைச் சுழல்களும் ஏற்பட்டு கொள்ளல், தள்ளல் என்ற இயக்க நிகழ்ச்சிகள் முறையாக நடைபெறும்போது அது வித்தாகின்றது. மேலும் அவ்வித்தானது ஆற்றலால் எழுச்சி பெற்று இயங்கி தாவர இனமாகிய ஓரறிவு ஜீவனாகியது. அதிலிருந்த ஈரறிவு இனமான புழு தோன்றி, அதைத் தொடர்ந்து மூவறிவு, நாலறிவு, ஐயறிவுப் பிராணிகள், ஆறறிவுள்ள மனித இனமும் தோன்றியுள்ளன.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 7:49 am

இவ்வாறு பரமே அணுவென்ற உயிராகி அதுவே தன்னழுத்த இயக்கத்தால் உடலாகி உடலுள் இயங்கும் உயிர்சசக்தியாகிஅச்சக்த்தியே ஒலியாகி, ஒளியாகி, சுவையாகி, மணமாகி, உணரும் திறனுமாகி, உயிர்கள் என்ற பரிணாம சிறப்பை பெற்றது. இத்தகைய பரிணாமத் தொடரும் இயக்கங்களும் இணைந்த ஒரு பேரியக்க மண்டலம்தான் பிரபஞ்சம், பஞ்சபூதம் என்றழைக்கப் படுகின்றது. மனிதனான ஜீவனிடம் அனுபவமும் சிந்தனையும் கூடி அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு தன் காரண நிலைநாடி ஆராயும் போது, பரநிலை நாடி ஆராயும்போது அந்நிலை உணர்ந்த மனிதனால் தத்துவ விளக்கம் ஏற்பட்டது. பிரபஞ்ச பரிணாமம் ஒரு வளையத்தைப் போன்றது.

இது பரத்திலே தொடங்கி அணு, காற்று, வெப்பம், நீர், நிலம், ஓர் அறிவு ஜீவன் முதல் ஐயறிவு ஜீவன் வரையுள்ள மனிதன். மனிதனே தன் இயல்பையும், நிலையும் உணர்ந்தபோது தான் தேவன் என்று கடைசியிலே பரத்திலே முடிவு பெறுகிறது. கடலிலே தோன்றும் அலைகள் கடலிலே அடங்குவது போலவும், நீரின் அசைவை அலையென மதிக்கப்பெறுவது போலவும் பரம்ம தனது இயக்கக் கட்டங்களுக்கேட்ப்ப பல்வேறு அளிவலும் வலுவிலும் ஏற்ற தாழ்வுகளை கொண்ட இயக்கங் களாகவும் காட்சிகளாகவும் இருக்கினறன. இவை அறிவால் உணரப் படுகின்றன.

எனவே நாம் காணும் எந்தத் தோற்றமும் பொருள் நிலையில் பரமேயாம் பரத்தை; தவிர்த்து வேறு பொருள்தான் ஏது? காணும் தோற்றமும் காண்பவனும் இயக்க நிலைகளில் ஒப்பிட்டு உணரும் கருத்துக்கு வேறு வேறாக விளக்கப்பெற்ற போதும், ஆழ்ந்த ஆராய்ந்த விளக்கத்தில் பொருள் நிலையாகிய பரமும், அதன் நிலையாகிய காட்சியும், நிகழ்ச்சியின் நிழச்சியாகிப் பரத்திலே முடிந்து கொண்டிருக்கும் அறிவும் மூன்றும் ஒன்றாகவே இருக்கும் பேருண்மை அக்காட்சியாகும். உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி. இதற்கு யாரும் எவையும் விலக்கல்ல.

இத்தனிப்பொருட்கள் தன் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 7:51 am

காற்று மண்ணை அள்ளி வீசும், மண் நீரைக்கட்டும் உறிஞ்சும், நெருப்புக்கு எதிரி நீர், நெருப்பு வெற்றிடத்தை ஆட்கொண்டு விடும், வெற்றிடமோ காற்றை ஆட்கொண்டு விடும், இதுவே இயற்கையில் அமைந்த சமநிலைத் தத்துவமாகும். இவை ஒன்றை ஒன்று மிஞ்சும்போது உலகில் பேரழிவு ஏற்படும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். துன்பங்களை உணர்கிறோம். மனித உடலிலும் இந்த ஐந் தனிப்பொருட்கள் (பூதம்) உள்ளன. பஞ்சபூதமாகிய ஐந்து தனிப்பொருட்களால் ஆன இவ்வுடம்பு முடிவில் மண்ணோடு நேரடியாகவோ மற்ற நான்கு தனிப்பொருட்களால் உந்தப்பட்டு பின்னர் மண்ணோடு மண் சேர்வது திண்ணம்.

தோல்-மண், வாய்-நீர், கண்-நெருப்பு வயிறு-வெளி மூக்கு-காற்று இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சமமாக வைத்திருக்கும் வரை அமைதி நிலவுவதைக் காணலாம். இந்த ஐந்த தனிப்பொருட்களும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் முதுமொழியாகும். இறைவன் உலகில் பல ஜீவராசிகளைப் படைத்தார். 84 ஆயிரம் ஜீவராசிகள் என்று கூறுவர் சான்றோர். ஆனால் நாம் அறிந்தது என்னவோ ஒரு நூறு இருநூறு என்றாலே அதிகம். இதிலே மனிதனின் படைப்புமிகவும் அரிய ஒன்று. அறிவு முழுமையடைந்த ஒன்று என்று சொல்கின்றனர் ஞானிகள்.

பரமே அணுவாகி அணு இயக்கத் தொடர் விளைவாக அதுவே பல கட்டக் காட்சிகளாகி, பலப்பலவன வேறுபாடுகளைப் பெற்று விளங்குகின்றன என முன்னமே அறிந்தோம். அதுவே தூய அமைப்பில் உயிராகவும், உணர்ச்சி நிலையில் காலம், தூரம், பருமன், வேகம் என்ற எல்லைகளில் கட்டுப்பட்ட உணர்வில், இன்ப துன்பமாகவும், கணிதத்திற்கு உட்பட்ட பலவாகவும் இந்த நான்கு அளவைகளைக் கடந்த போது எல்லாம் ஒன்றுபட்டு பரமாகவும் இருக்கின்றது என்ற விளக்கங்கள் தெளிவாக உணரப்பெறும். பரமே நானாகவும் உள்ளது. நான் என்பது தனியே இல்லை. பரத்தைத் தவிர்த்து வேறு ஒன்றுமே இல்லை. இயக்க நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருளாகவும், அவற்றிற்கு முதல் மூல சக்தியாகவும் இருப்பது பரம்பொருள் ஒன்றே. ஆதிநிலையில் பரமாகவும், அணுநிலையில் உயிராகவும், அணுக்கள் இணைந்த கொத்து இயக்க நிகழ்ச்சியில் உருவங்களாகவும், காட்சிகளாகவும், இயக்கங்களாகவும், இருக்கின்ற அந்த ஒரு பொருள் நான் என்ற சொல்லின் உண்மைக்கருத்து என்று தெளிவாக விளங்கும்.

அழுத்தமாக அணுக்கள் இணைந்து இயங்கும் ஒரு நிகழ்ச்சியே தூய உடல். அதனுடே அழுத்தம் குறைந்து ஆனால் விரைவு அதிகமாகி சூக்குமாகச் சுழன்று இயங்கும் அணுத் தொடரியக்கமே உயிர், தூயத்தினுடே உயிர்சக்தி சுழன்று வரும்போது ஏற்படும் மோதல் நிகழச்சியிலிருந்து ஒலி, ஒளி, சவை மனம், உணர்தல் என்றும் தொடர் நிகழ்ச்சிகள் விளைகின்றன. உடலும் அணுக்களால், உயிரும் அணுக்களால் அணுக்களின் மூலமே பரம் ஆகவே உடலாக உயிராக உணர்வாக அவற்றின் முடிவில் பரமாக இருப்பவன் எவனோ அவனே நான். நான் எனப்படுபவனே அவன். அவன் எனப்படுவன் தெய்வம் எனப்படுகிறான், ஆதியெனப்படுகிறான். பிரம்மம் எனப்படுகிறான். அவனைத் தவிர்த்து தனியே ஒரு நிகழ்ச்சியும் இல்லை. அவனே நான், நானே அவன், என்று தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னைப் புலன் உணர்ச்சிகளால் எல்லைகட்டி உணரும் தன் முனைப்பே மயக்கம்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 8:10 am

இங்குதான் தெளிவு பெற்று நீங்கி ஒழிகின்றது. பரமாணுக்களின் பல்வேறுபட்ட இயக்க நிகழ்ச்சிகளே பேரியக்க மண்டலம். அதன் முதல் தனிநிலை விண் எனப்படும். அவற்றின் முதல் கொத்து நிகழ்ச்சியே காற்று எனப்படும். அவை மோதிக் கொள்வதால் ஏற்படும் வெப்ப நிகழ்ச்சியே நெருப்பு எனப்படும். நீரகவாயு, பிராணவாயு எனும் இருவகையான காற்று குறிப்பிட்ட அளவில் சேரும்போது நீர் ஆகிறது. நீரின் இருகிய நிலையே மண். இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதீகம் பிரிவுகள் ஆனபடியால் அவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம்.


மண்ணின் இறுக்கத்தால் பலவேறு உலோகங்கள் விளைகின்றன என்றாலும் அவையெல்லாம் பஞ்சபூதங்கள் என்கிறோம். பரமாணுவின் பலகட்டக் கொத்து நிகழ்ச்சிகளை ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஒவ்வொரு எழுச்சியும் விளையத்தக்க பிரிவுகளாகப் பிரித்து எழுச்சி, கவர்ச்சியாக உள்ள அழுத்த இயக்கக்கட்டத்தை விண் என்றும், ஒலி எழுச்சிபெறம் இயக்கத்தை காற்று என்றும், ஒளி எழுச்சிபெறம் இயக்கத்தை நெருப்பு என்றும், சுவை எழுச்சி பெறும் இயக்கத்தை நீர் என்றும், மனம் எழுச்சி பெறும் இயக்கத்தை மண் என்றும் கூறுகிறோம். விஞ்ஞானிகள் கூறும் 92 வகையான Element-களும் இவ்வைந்து பரிவுகளில் அடங்கியுள்ளன.

பன்னனெடுங்காலமாக மானுடம் அண்டவெளியில் மனிதனைப் போன்ற பிற உயிரினங்கள் உண்டா? அங்கு வேற்றுலகவாதிகள் உண்டா என சிந்தனை வந்துள்ளது. உதாரணமாக பாகவதம் சூரியனைப் போன்று பலகோடி சூரியன்களும், பலகிரகங்களும், அங்கு வாழும் மனிதர்களைப் போல மேம்பட்ட ஜீவன்களைக் குறித்து பேசுகிறது. பஞ்ச பூதத்தில் பூமியில் மட்டுமே பிரபஞ்சத்தில் உயிரும், அறிவும் ஏற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கிரகம் என கருதும் மத நம்பிக்கைகளும் உள்ளன.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 8:14 am

விஞ்ஞான நோக்கில் பிரபஞ்சம்

அறிவியல் புனை கதைகள் பிரபலமாகத் தொடங்கியதும் பலர் வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாகவும், அதிலிருந்து வேற்று கிரக வாசிகளால் தாம்பல சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினர். பரக்கும் தட்டு பெரும் மர்மப் புதிராக கருதப்பட்டது. இம்மர்மத்தை அறிய அமைக்கப்பட்ட கான்டைன் குழு இந்தப் பறக்கும் தட்டுக்கள் உண்மையில் பூச்சிகள், நட்சத்திர பிரதிபலிப்புக்கள், செய்ற்கை கோள்கள், வானிலைப் பலூன்கள் ஆகியவற்றையே தவறுதலாகப் பறக்கும் தட்டு என மக்கள் கருதியதாக அறிவித்தது. அறிவியலின் வளர்ச்சி இந்நம்பிக்கைகளுக்கு அப்பால் வேற்று கிரகங்களில் அறிவுடைய ஜீவன்கள் உள்ளனவா? எனத் தேட ஆரம்பித்துள்ளது. கார்ல்சாகன், புரேக் போன்ற வானவியலாளர்கள் SETI -SEARCH FOR EXTRA TERRESTRIAL INTELLIGENCE என்னும் செயல் திட்டத்தை உருவாக்கினர். பூமியில் பல புள்ளிகள் அமைக்கப்பட்ட ரேடியோ அலை, தொலை நோக்கிகள், வேற்று கிரக வாசிகள் அனுப்பும் மின்காந்த அலை செய்திகளுக்காக தேடுகின்றன.

செயற்கையாக உருவாக்கப் பட்ட மின்காந்த அலை பண்புகளுக்காக அவை சேகரிக்கும் தகவல்கள் உலகெங்குமுள்ள கணனிகளால் ஆராயப் படுகின்றன. வேற்றுல வாழ்வே நாம் விதிக்கபட்டவர்களா என்னும் மர்மம் விரைவில் தெளிவாகிவிடும். 1930-ல் வெற்றிடத்தில் விசைகள் உருவாகிறது எனவும் இவ்விசைகள் மிக நுண்ணியவை எனவும் கண்டுபிடித்தார் கஸ்மிர் என்னும் இயற்பியலாளர். வெற்றிடம் என நாம் பிரபஞ்சத்தின் எந்தப் புள்ளியையும் கருதமுடியாது. வெற்றிடம் எனப்படுவதில் குவாண்ட சலனங்கள் இருக்கின்றன. ரோஜர் பென்ரோல் என்னும் அறிஞர் தன்னுணர்வை குவாண்டம் இயற்பியல் மூலம் விளக்க முற்படுகிறார்.

சில உயிரியிளாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். இந்நிலை பிரக்ஞை குவாண்டம் தன்மை கொண்டதெனில் அதில் கஸ்மிர் விசைக்கு ஒரு முக்கிய பங்க இருக்கலாம். நுண்ணிய கஸ்மிர் விசையை அளவிட தற்போது கருவிகள் உருவாகிவிட்ட நிலையில் இவ்வெற்றிடத்தின் விசையை அளவிடுதல் மூலம் தன்னுணர்வின் மர்மத்தை அறிவோமா? பிரபஞ்சவியலின் சில மிகவும் ஆழ்ந்த மர்மங்களை நாம் அறிவோமா? பிரபஞ்சவியலின் சில மிகவும் ஆழ்ந்த மர்மங்களை நாம் அறியவும், கஸ்மிர்விசை பயன்படக்கூடும்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 8:15 am

பிரபஞ்சம் விரிதல், பிரபஞ்சத்தோற்றம், ஆகியவற்றை அறிவியல் இன்னமும் முழுமையாக அறிந்து விடவில்லை. குவாண்டம் வெற்றிடச் சலனக் கிளர்ச்சிகள் பிரபஞ்ச நிகழ்ச்சிகளுக்கு காரணமாக இருக்கலாம் என சில அறிவியலாளர்கள் கதுகின்றனர் என்கிறார். கஸ்மிர் விசையை அளப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கும் கொலம்பியா பல்கலைக் கழக இயற்வியலாளர் உமர் மொகைதீன் பிரபஞ்சம், பிரஞை ஆகியவற்றை இணைக்கிறது. வெற்றிடத்தின் விசைகள் இயற்பியலின் மொழியில் பொத்தமும், உபநிடதம், கூறிய சூனியமா இது? என பிரபலமாகியுள்ள அண்டவெளி கருந்துளைகள் ஒளியையும் வெளிவிடாத அளவு கடும் வலுக்கொண்ட ஈர்ப்பு பலமுடைய பிரதேசங்கள் அதிகமான நிறையும் அதிக அடர்த்தியும் கொண்ட விண்மீன்கள் தங்கள் எரிபொருள் தீரும் நிலையில் கருந்துளைகளாக மாறுவதாக வானவியலாளர்கள் கருதுகின்றனர்.

1916-ல் ஐயன்ஸ்டின் பொதுச்சார்பியலின் (GENERAL THEORY OF RELATIVITY) கருத்துளை கருதுகோளை முன் வைத்தார். கருந்துளை தொடர்பான முக்கிய கண்டு பிடிப்புக்களை செய்தவர் சந்திரசேகர சுப்ரமணயிம். கருந்துளைகள் உண்மை, எதையும் வெளிவிடாது என்பதே ஏற்கப்பட்ட கருத்தாக இருந்தது.

ஆனால் 1914-ல் ஸ்டிபன் ஹாக்கிங் கருந்துளைகள், துகள்களை ஒரு சீரளவில் உமிழும் எனக் கண்டு பிடித்தார். ஒளியையும் வெளிவிடாத வலுவான ஈர்ப்பு பிரதேசம் எவ்வாறு இவ்வாறு இயங்க முடியும்? ஆனால் தம் சமன்பாடுகள் மூலம் இது உண்மை என நிரூபித்தார். ஹாக்கிங் இவ்வாறு பிரபஞ்சத்தில் இன்னும் பல மர்மங்கள் இருக்கின்றன என்று சான்றோர்கள் ஞானிகள் கூறியுள்ளதை அறியலாம். பிரபஞ்ச மூலக்கூறுகளின் தொகுப்பு நிகழ்வுதான் மனித இனமும், மற்ற ஜீவராசிகளும் உருவானது. மூலப்பொருட்கள் ஐந்தை முன் வைத்துத்தான் நம் உடல் நிலை இருக்கிறது. இதை நாம் முன் அத்யாயங்களில் கண்டோம். பெங்சுயி (Feng Shui) ஐந்து பொருட்களை வைத்துத்தான் தன் உடல் ஆரோக்கியம், இடம், பொருள், இன்பம், வீடுபேறு அடைந்து வருகின்றனர்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 8:18 am

பூமி, நீர், நெருப்பு, உலோகம் மற்றும் மரம் ஆகிய மூலப்பொருளாகக் கருதி பெங்சுயி இருக்கிறது. உலோகமும், மரமும், மூலப்பொருட்களாக முடியாது. பெங்சுயி என்பது இது சைனாவில் பின்பற்றப்படும் சாஸ்திரம், பெங் என்ற சீனவார்த்தை காற்றைக் குறிக்கும், சூயி என்பது நீரைக்குறிக்கும். சைனாவில் ஒரு பழமொழி உண்டு. நீரை எவர்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ அவரே உலகை ஆழ்வார். பொருளாதார மேதைகள் மூன்றானது உலகயுத்தம் ஒன்று வந்தால் அது நீருக்காகத்தான் இருக்கும் என ஐயப்படுகின்றனர். சந்தேசம் வேண்டாம் நீரால்தான் யுகம் முடியும். அதைத்தான் சித்தார்கள் ஜலப்பிரளயம் என்றனர். முதல் யுத்தம் பெண்ணால், இரண்டாம் யுத்தம் மண்ணால், மூன்றாம் யுத்தம் நீரால் தான் முடியும்.

இப்பொழுது அழிவும் நீரால் ஏற்பட்ட பேறசைவுதான் கடும் அலையாகத்தோன்றி பல சேதங்களை உருவாக்கி விட்டன. சுனாமி பேரலையை உலக மக்கள் கனவிலும் மறக்க முடியாது. அதேபோல அமெரிக்காவில் நடந்த அலையும் மறக்க இயலாது. ஐந்து பொருட்களும் ஆக்கும் எட்டத்தில் தீ பூமியை உண்டாக்குகிறது (எரிமலைக்குழம்பு). எரிமலைக்குழம்பு சாம்பல் பூசி உலோகத்தை உண்டாக்குகிறது (தாதுப்பொருட்கள்). உலோகம் நீரை உண்டாக்குகிறது (குளிர்ந்த நீர் உள்ள டம்ளரின் வெளியில் நீர் முத்துக்கள). நீர் காட்டை உணடாக்கி மரங்களைப் பெருக்குகின்றது. உலோகம் மரத்தை வெட்டும். இந்த அவசர யுகத்தில் மனிதர்கள் தங்கள் குறைகளைக் களைய எதைத் தின்றால் குறை நீங்கும் என்ற மனநிலையில் இருப்பதால் எதையும் சாப்பிடத் தயங்குவதில்லை. இங்கு அறிவு தூங்குகிறது. உணர்ச்சி கோலோச்சுகின்றது. இரண்டு விதமான சக்திகள் உலகத்தில் உள்ளன. நல்ல சக்தி, தீய சக்தி. நல்ல சக்தியை ஏற்று வரவேற்க வேண்டும்.

கிரகிக்கப் பழகவேண்டும். தீய சக்தியை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மா இவ்வுலகில் எப்போதும் சந்தோச வாழ்க்கை வாழமுடியும். பிபரஞ்சத்தில் உள்ள காஸமிக் கதிர்கள் மனிதன் வாழ்க்கை முறையை நடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த கதிர்களில் நல்லதுமுண்டு கெட்டதுமுண்டு. ஒவ்வொரு மனிதனும் நல்ல அதிர்ஷடம், மத்திம அதிர்ஷ்டம், கெட்ட அதிர்ஷடம் இவைகளின் கவலையோடு வினைப் பதிவுகளுக்கேற்ப பிறக்கிறான். தியானம், நல்லெண்ண உறவ, நலமுள்ள சுற்றுசுழல் போன்றவைகளை கடைபிடிப்பதன் மூலம் மனிதன் தன் கெட்ட அதிர்ஷ்டத்தை, தீவினையை நல்வினையாக்க அதிர்ஷ்டமாகவும் அதற்கு அதிகமாகவும் மாற்ற முடியும். பஞ்ச பூதங்களும் ஒரு நிகழ்ச்சி மண்டலத்தில் அது சிறிதானாலும் பெரிதானாலும் எந்த விகிதத்தில் கலந்துள்ளனவோ, அதற்கேற்ப இயக்க வேகத்திலும், விளைவுகளிலும் வேறுபாடு உண்டாகும்.



ஆன்ம தத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக