Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
+4
jahubar
mmani15646
சரவணன்
nandhtiha
8 posters
Page 1 of 1
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா
கழகக் கட்டாயமா
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
– பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
Thuglak – Mar 14’2010
சமயத் தமிழை ஒதுக்கியது – காலக் கட்டாயமா ? கழகக் கட்டாயமா ?
– பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு :
பாண்டித்துரை தேவர் என்னும் பேரருளாளரால் நிறுவப்பட்ட ‘மதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்’ இதழில், 1902-ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள் ‘தமிழ் உயர் தனிச் செம்மொழியே’ எனப் பல சான்றுகள் காட்டி எழுதி நிறுவினார்.
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
1918-ஆம் ஆண்டில் ஜே.எம். நல்லுசாமி பிள்ளை அவர்களும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும், திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘தமிழ் செம்மொழியே’ எனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.
1919, 1920, 1922, 1923 மற்றும் 1938-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கக்
கூட்டங்களில் ‘சென்னைப் பல்கலைக்கழகம், தமிழைச் செம்மொழி என அறிந்தேற்க வேண்டும்’ என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை ஆவர். அயோத்தி அரண்மனையில் தமிழ் பேசப்பட்டது என வால்மீகி ராமாயணச் செய்தி கொண்டு எழுதி, தமிழின் தொன்மையை எடுத்துக் காட்டினார் செந்தமிழ் இதழாசிரியர் நாராயண ஐயங்கார்.
இந்தப் பெருமக்கள் தமிழை எந்த அளவுக்கு நேசித்தார்களோ, அந்த அளவுக்குத் தங்கள் சமயத்தை நேசித்தார்கள். சமயத் தமிழை நேசித்தார்கள். தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும், கம்பனின் ராமகாதையும், சேக்கிழாரின் பெரிய புராணமும் அவர்கள் வாழ்க்கை நெறியை வகுத்தன. அவற்றையே அவர்கள் தங்கள் வாழ்முதலாகக் கொண்டனர்.
அந்தப் பெரியோர்கள் போற்றிக் கொண்டாடிய சமயத் தமிழ், செம்மொழி அன்று என்றும், அவர்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டாடிய சமய நூல்கள் ஆய்வுக்குக் கொள்ளும் அளவிற்கு அறிவு சார்ந்தவை அல்ல என்றும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் முடிவு செய்துள்ளது. இன்று அந்தச் சான்றோர்கள் இருந்தால், உதிரக் கண்ணீர் உகுத்து நின்று வருந்துவார்கள் என்பது திண்ணம்.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமே செம்மொழித் தமிழின் பொற்காலம் எனச் செம்மொழிச் செய்தி மடல் கூறுகிறது. இது ஒரு வேடிக்கையான விந்தையான கூற்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல கி.பி. 8, 9-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையே என இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ‘ஆசாரக் கோவை’யைச் சான்றுக்குக் கொள்வோம். தலைப்பே தமிழன்று. இந்நூல் சுக்கிர ஸ்மிருதி, மனு ஸ்மிருதி, ஸங்க ஸ்மிருதி, லகுஹரித ஸ்மிருதி எனப்படும் வடமொழி ஸ்மிருதி நூல்களின் செய்திகளைக் கொண்டு, வட சொற்கள் பல நிரவி எழுதப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இந்த நூலைச் செம்மொழித் தமிழ் நூல் எனக் கொள்ளும் ஆய்வு மையம், நமது சமயச் சான்றோர்களால் கொழுத்த தமிழில் அருளிச் செய்யப்பட்டவற்றைச் செம்மொழித் தமிழ் நூல்கள் அல்ல என முடிவு செய்துள்ளதை என்னென்று சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?
எங்கள் ஆய்விற்கு 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலக் கணக்கீடே கொள்ளப்படுகிறது என்று ஆய்வு மையம் வாதிடுமேயானால், திருவாசகத்தின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டென திருமலைக் கொழுந்து பிள்ளையும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டென பொன்னம்பலப் பிள்ளையும், மூன்றாம் நூற்றாண்டென மறைமலை அடிகளாரும், மூவர் முதலிகள் காலத்திற்கு முற்பட்டதென சிவக்கவிமணியும் சொல்லும் முடிவுகளையே நாம் முன்னிறுத்த வேண்டிவரும்.
ஏதோ ஒரு நோக்கத்தில் செம்மொழித் தமிழ்ச் சமய நூல்களை ஆய்வு மையம் ஒதுக்கி விட்டது. அதன் நோக்கம் எதுவேயாயினும் ஆகுக. அது பற்றிய ஆய்வில் நாம் இறங்கப் போவதில்லை. செம்மொழித் தமிழாய்வு மையத்தின் நிலைப்பாட்டைக் கொண்டுச் சிந்திக்கும்போது, நடைபெறப் போகின்ற செம்மொழித் தமிழ் உலக மாநாட்டில், சமயத் தமிழ் இடம் பெறவில்லை; இடம் பெறாது என உறுதியாகத் தெரிகிறது.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள், இப்போது பேசப்படுகின்ற அறிவியல் தமிழை அறியாதவர்கள். ஆனால், அந்த அறிவியல் தமிழ் செம்மொழித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கான அறிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இமயம்முதல் குமரிவரை பரவிநிற்கும் இந்தியத்தின் வாழ்வியலில் இலக்கியத்தில் சமயமெனும் சிந்தனையில் தத்துவத்தில் தமிழ்மொழியின் பங்குண்டு சாற்றவேண்டும்.
- குலோத்துங்கன்
எவ்வளவு அருமையான அர்த்தமுள்ள கவிதை.
அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளிடத்தில் வடமொழியில் பேசினால், சிறிது நேரத்துக்கு முன் வடமொழியே பேசிய ராவணன், வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின்றான் எனப் பயம் கொள்ளுவாள் எனச் சிந்தித்து, மக்கள் மொழியே பேச வேண்டும் என்று முடிவு செய்து, மதுரமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசினான் என்கிறார் வால்மீகி.
வடமொழி தேவர்களுக்கான மொழியென்றும், மதுரமான (இனிமையான) தமிழ், மக்கள் மொழி என்றும் வால்மீகியார் குறிக்கின்றார் என வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்களான, மதுரைத் தமிழ்ச் சங்கத்து இதழான செந்தமிழ் ஆசிரியர் திரு. நாராயண அய்யங்காரும்; பேராசிரியர் ரா.இராகவையங்காரும் சொல்லுகின்றனர்.
மேலே குலோத்துங்கன் கவிதையின் சொல்லப்படும் குமரியையும் கடந்து தென்னிலங்கையிலும், வடபுலத்துக் கங்கை, யமுனைக் கரைகளிலும் தமிழ் – அதுவும் மதுரத் தமிழ் செல்வாக்குடன் பங்கு பெற்று விளங்கியது என்பது மகிழ்ச்சிதானே!
‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ எனப் பிங்கல நிகண்டு கூறும். இனிமை மட்டும் அன்றி ஒழுங்கையும் கொண்டது தமிழ் என்பது இந்தத் தொடருக்கான பொருளாகும்.
எந்த ஒரு மொழி, நேர்த்தியையும் இனிமையையும் பெற்று விளங்குகிறதோ அது ‘செம்மொழி’ எனப்படும். இதுபற்றியே ஈட்டுரைகாரர் “சர்வாதிகாரம் படைத்த திராவிட பாஷை” எனத் தமிழைப் போற்றுகின்றார். வேதாந்த தேசிகரோ தமிழை “ஸ்வைர பாஷா” என்றே வருணிக்கின்றார். இதற்கான பொருள் ‘ஒரு தனிச் செம்மொழி’ என்பதாகும்.
திருவரங்கத்தில் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லும்போது, திராவிட வேதம் எனச் சொல்லப்படும் ‘நாலாயிரம்’ முன்னே செல்ல; வடமொழி வேதம் பின்னே செல்வது பற்றி, பெருமாள் தன் அடியவர்களின் தமிழில் மனத்தைப் பறி கொடுத்து, ரசித்துக் கொண்டு பின்னே செல்கின்றான் என்பதாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.
‘தமிழின் நீர்மை பேசி’ என்பார் திருஞான சம்பந்தர். திருஞான சம்பந்தரைச் சைவ உலகம் ‘தமிழ் ஞானசம்பந்தன்’ என்றே குறிப்பிடும். தமிழே அவர். அவரே தமிழ். “நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனச் சுந்தரர் அவரைப் பற்றிப் புகழுகின்றார். திருஞான சம்பந்தர் புராணத்தைச் சொல்ல வந்த சேக்கிழார், 155 இடங்களில் ஞானசம்பந்தரைத் தமிழோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றார் என்றால், தமிழிற்கும் அவருக்குமான தொடர்பை நாம் நன்கறியலாம்.
‘எனதுரை தனதுரை’ என்பது ஞானசம்பந்தர் வாக்கு. இதற்கு என்ன பொருள்? நான் சொல்வது இறைவன் சொல்வதேயாகும் என்பதாகும். அப்படியாயின் இறைவனும் அவரும் ஒன்றே. ஈசன்தான் அவர். அவர்தான் ஈசன். சிவபெருமான்தான் தமிழை அகத்தியருக்குத் தந்தவன் என்பதைத் “தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” எனக் கம்பன் மிக அழகாகச் சொல்கின்றான். ஆகத் “தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்” எனப் பெரியோர் கூறுவது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று என்பதை உணரலாம்.
சைவம் வைணவம் எனப்படும் தமிழ்ச் சமயங்களோடு தமிழிற்கான தொடர்பைப் பார்த்த நாம், அந்தத் தமிழ்ச் சமயம், வாழ்க்கையை எவ்வாறு செம்மைப்படுத்துகிறது என்பதைச் சிறிது பார்ப்போம்.
தாழ்ந்த குலத்தினர் எனப்படும் திருநீலகண்ட யாழ்ப்பாணரை, உயர்ந்த குலத்தினர் எனப்படும் ஞானசம்பந்தர் எதிரே சென்று வரவேற்று; “ஐயரே!” என அழைத்துக் கோயிலுக்குக் கொண்டுபோய் இறைவனைக் கும்பிடச் செய்து, “உங்கள் இறைவருக்கு பொருந்தும் யாழிசை கொண்டு பாடும்” எனச் சொன்னது, தமிழ்ச் சமயத்தில் ஜாதிப் பாகுபாடு கிடையாது என்பதைப் பறைசாற்றவில்லையா?
‘உங்கள் இறைவருக்கு’ என்னும் தொடர் உரிமையை உறுதி செய்வதாகும். இந்த அருமைப் பாட்டை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தான் பெற்ற புதல்வர்களுக்காகத் தரணியையே நாசப்படுத்தும் ஜனநாயகத் தலைவர்கள் இருக்கும் நமது நாட்டில்; ‘ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன்தான் உள்ளான், வேறு வாரிசு இல்லை’ என்ற நிலையிலும், தனது மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று, நீதியை வீதியிலேயே வழங்கிய மனுநீதிச் சோழனின் வரலாறு, தமிழ்ச் சமய வாழ்வியலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக் காட்டில்லையா?
பறையரான நந்தனையும், பார்ப்பனரான மாணிக்கவாசகரையும் ஒன்றுபோல் தனது திருவடிக் கீழ் ஒடுக்கிக் கொண்ட தில்லைக் கூத்தனின் செயல்பாடு, எதனைக் காட்டுகின்றது? ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டவில்லையா?
63 நாயன்மார்கள் சிலை வரிசையைப் பாருங்கள். எல்லாரும் நிற்கின்ற இடத்தில், காரைக்கால் அம்மையார் மட்டும் உட்கார்ந்த கோலத்தில் இருப்பார். பேய் உருக்கொண்ட அம்மையார் நியாயமாக யார் கண்ணிலும் படக்கூடாது. அந்தப் பேய் நிற்பதால் அதற்கும் சங்கடமில்லை. நமக்கும் சங்கடமில்லை. இருப்பினும் தாய்மையைப் போற்றும் தமிழ்ச் சமயப் பண்பாடு, அவரை அமர வைத்து அழகு பார்க்கின்றது.
(கட்டுரையாளர், கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். திராவிடச் சான்றோர் பேரவைத் தலைவராக இருப்பவர்.)
நந்திதா குறிப்பு
சமஸ்கிருதம் தேவ மொழி என்பதை என்னால் ஒப்ப முடியவில்லை, காரணம் சமஸ்கிருதம் என்ற சொல் சம்ஸ்காரேண க்ருதம் ( பண்படுத்தப் பட்டது) என்ற பொருளைத் தரும், துவைக்கப் பட்ட துணி என்றால் அது துவைக்கப் படாத நிலையில் இருந்தது என்பது அருத்தா பத்தி, ஆக சமஸ்கிருதம் என்பது பண்படா நிலையிலிருந்து பண்பட்ட நிலைக்கு வந்தது என்று தேறும், பாணினி என்பார் சமஸ்கிருதத்துக்கு அஷ்டாத்யாயி என்ற இலக்கணம் வகுத்தார், அதற்கு முன்பு இலக்கணம் இருந்திருந்தால் முதல் இலக்கணத்தைக் குறிப்பிட்டிருப்பார், பதஞ்சலி முனிவர் தாம் எழுதிய யோக சாத்திரத்தை வழி நூல் என்றே கூறுகின்றார், ( அத யோக அனுசாசனம்) இதற்கு முதல் நூல் ஹிரண்ய கர்பர் என்பவர் எழுதிய நூலாகும்,சான்று (ஹிரண்யகர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன) பொருள் ஹிரண்ய கர்பர் என்பவர் தான் முதலில் யோக நூலை இயற்றினார் அதற்கு முன் எவரும் இயற்றவில்லை என்பது ஆம். கம்பனும் கூட தான் எழுதிய இராம காதைக்கு முதல் நூல் வான்மீகியார் எழுதிய இராமாயணம் என்கிறார் (நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் )
பாணினி முனிவருக்கு முன்னால் தேவர்கள் பண்படா மொழியைப் பேசி வந்தனர் என்றும் அவர்கள் பேசி வந்த பண்படாமொழிக்கு இலக்கணம் வகுக்க ஒரு மானிட ரிஷி தேவைப் பட்டது என்பது பொருந்தாக் கூற்று, வட மொழி தேவ மொழியானால் தமிழ் இறை மொழி, திருமூலர் தன்னைப் பிறப்பித்த காரணத்தைச் சொல்லுங்கால்
என்னை நன்றாய் இறைவன் படைத்தான்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே
என்கிறார், தன்னைத் தமிழில் பாடச் சொல்லவில்லை இறைவன் தன்னைத் தமிழாகவே ஆக்குமாறு கூறினான் என்கிறார், ஈகரையின் அன்பர்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் முடித்து அமைவுறுகிறேன்
அன்புடன்
நந்திதா.
கழகக் கட்டாயமா
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
– பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
Thuglak – Mar 14’2010
சமயத் தமிழை ஒதுக்கியது – காலக் கட்டாயமா ? கழகக் கட்டாயமா ?
– பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு :
பாண்டித்துரை தேவர் என்னும் பேரருளாளரால் நிறுவப்பட்ட ‘மதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்’ இதழில், 1902-ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள் ‘தமிழ் உயர் தனிச் செம்மொழியே’ எனப் பல சான்றுகள் காட்டி எழுதி நிறுவினார்.
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராசன்
1918-ஆம் ஆண்டில் ஜே.எம். நல்லுசாமி பிள்ளை அவர்களும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும், திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘தமிழ் செம்மொழியே’ எனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.
1919, 1920, 1922, 1923 மற்றும் 1938-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கக்
கூட்டங்களில் ‘சென்னைப் பல்கலைக்கழகம், தமிழைச் செம்மொழி என அறிந்தேற்க வேண்டும்’ என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை ஆவர். அயோத்தி அரண்மனையில் தமிழ் பேசப்பட்டது என வால்மீகி ராமாயணச் செய்தி கொண்டு எழுதி, தமிழின் தொன்மையை எடுத்துக் காட்டினார் செந்தமிழ் இதழாசிரியர் நாராயண ஐயங்கார்.
இந்தப் பெருமக்கள் தமிழை எந்த அளவுக்கு நேசித்தார்களோ, அந்த அளவுக்குத் தங்கள் சமயத்தை நேசித்தார்கள். சமயத் தமிழை நேசித்தார்கள். தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும், கம்பனின் ராமகாதையும், சேக்கிழாரின் பெரிய புராணமும் அவர்கள் வாழ்க்கை நெறியை வகுத்தன. அவற்றையே அவர்கள் தங்கள் வாழ்முதலாகக் கொண்டனர்.
அந்தப் பெரியோர்கள் போற்றிக் கொண்டாடிய சமயத் தமிழ், செம்மொழி அன்று என்றும், அவர்கள் வாழ்க்கை நெறியாகக் கொண்டாடிய சமய நூல்கள் ஆய்வுக்குக் கொள்ளும் அளவிற்கு அறிவு சார்ந்தவை அல்ல என்றும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் முடிவு செய்துள்ளது. இன்று அந்தச் சான்றோர்கள் இருந்தால், உதிரக் கண்ணீர் உகுத்து நின்று வருந்துவார்கள் என்பது திண்ணம்.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமே செம்மொழித் தமிழின் பொற்காலம் எனச் செம்மொழிச் செய்தி மடல் கூறுகிறது. இது ஒரு வேடிக்கையான விந்தையான கூற்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல கி.பி. 8, 9-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையே என இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ‘ஆசாரக் கோவை’யைச் சான்றுக்குக் கொள்வோம். தலைப்பே தமிழன்று. இந்நூல் சுக்கிர ஸ்மிருதி, மனு ஸ்மிருதி, ஸங்க ஸ்மிருதி, லகுஹரித ஸ்மிருதி எனப்படும் வடமொழி ஸ்மிருதி நூல்களின் செய்திகளைக் கொண்டு, வட சொற்கள் பல நிரவி எழுதப்பட்டுள்ளது. காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இந்த நூலைச் செம்மொழித் தமிழ் நூல் எனக் கொள்ளும் ஆய்வு மையம், நமது சமயச் சான்றோர்களால் கொழுத்த தமிழில் அருளிச் செய்யப்பட்டவற்றைச் செம்மொழித் தமிழ் நூல்கள் அல்ல என முடிவு செய்துள்ளதை என்னென்று சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?
எங்கள் ஆய்விற்கு 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலக் கணக்கீடே கொள்ளப்படுகிறது என்று ஆய்வு மையம் வாதிடுமேயானால், திருவாசகத்தின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டென திருமலைக் கொழுந்து பிள்ளையும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டென பொன்னம்பலப் பிள்ளையும், மூன்றாம் நூற்றாண்டென மறைமலை அடிகளாரும், மூவர் முதலிகள் காலத்திற்கு முற்பட்டதென சிவக்கவிமணியும் சொல்லும் முடிவுகளையே நாம் முன்னிறுத்த வேண்டிவரும்.
ஏதோ ஒரு நோக்கத்தில் செம்மொழித் தமிழ்ச் சமய நூல்களை ஆய்வு மையம் ஒதுக்கி விட்டது. அதன் நோக்கம் எதுவேயாயினும் ஆகுக. அது பற்றிய ஆய்வில் நாம் இறங்கப் போவதில்லை. செம்மொழித் தமிழாய்வு மையத்தின் நிலைப்பாட்டைக் கொண்டுச் சிந்திக்கும்போது, நடைபெறப் போகின்ற செம்மொழித் தமிழ் உலக மாநாட்டில், சமயத் தமிழ் இடம் பெறவில்லை; இடம் பெறாது என உறுதியாகத் தெரிகிறது.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள், இப்போது பேசப்படுகின்ற அறிவியல் தமிழை அறியாதவர்கள். ஆனால், அந்த அறிவியல் தமிழ் செம்மொழித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கான அறிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இமயம்முதல் குமரிவரை பரவிநிற்கும் இந்தியத்தின் வாழ்வியலில் இலக்கியத்தில் சமயமெனும் சிந்தனையில் தத்துவத்தில் தமிழ்மொழியின் பங்குண்டு சாற்றவேண்டும்.
- குலோத்துங்கன்
எவ்வளவு அருமையான அர்த்தமுள்ள கவிதை.
அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளிடத்தில் வடமொழியில் பேசினால், சிறிது நேரத்துக்கு முன் வடமொழியே பேசிய ராவணன், வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின்றான் எனப் பயம் கொள்ளுவாள் எனச் சிந்தித்து, மக்கள் மொழியே பேச வேண்டும் என்று முடிவு செய்து, மதுரமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசினான் என்கிறார் வால்மீகி.
வடமொழி தேவர்களுக்கான மொழியென்றும், மதுரமான (இனிமையான) தமிழ், மக்கள் மொழி என்றும் வால்மீகியார் குறிக்கின்றார் என வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்களான, மதுரைத் தமிழ்ச் சங்கத்து இதழான செந்தமிழ் ஆசிரியர் திரு. நாராயண அய்யங்காரும்; பேராசிரியர் ரா.இராகவையங்காரும் சொல்லுகின்றனர்.
மேலே குலோத்துங்கன் கவிதையின் சொல்லப்படும் குமரியையும் கடந்து தென்னிலங்கையிலும், வடபுலத்துக் கங்கை, யமுனைக் கரைகளிலும் தமிழ் – அதுவும் மதுரத் தமிழ் செல்வாக்குடன் பங்கு பெற்று விளங்கியது என்பது மகிழ்ச்சிதானே!
‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ எனப் பிங்கல நிகண்டு கூறும். இனிமை மட்டும் அன்றி ஒழுங்கையும் கொண்டது தமிழ் என்பது இந்தத் தொடருக்கான பொருளாகும்.
எந்த ஒரு மொழி, நேர்த்தியையும் இனிமையையும் பெற்று விளங்குகிறதோ அது ‘செம்மொழி’ எனப்படும். இதுபற்றியே ஈட்டுரைகாரர் “சர்வாதிகாரம் படைத்த திராவிட பாஷை” எனத் தமிழைப் போற்றுகின்றார். வேதாந்த தேசிகரோ தமிழை “ஸ்வைர பாஷா” என்றே வருணிக்கின்றார். இதற்கான பொருள் ‘ஒரு தனிச் செம்மொழி’ என்பதாகும்.
திருவரங்கத்தில் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லும்போது, திராவிட வேதம் எனச் சொல்லப்படும் ‘நாலாயிரம்’ முன்னே செல்ல; வடமொழி வேதம் பின்னே செல்வது பற்றி, பெருமாள் தன் அடியவர்களின் தமிழில் மனத்தைப் பறி கொடுத்து, ரசித்துக் கொண்டு பின்னே செல்கின்றான் என்பதாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.
‘தமிழின் நீர்மை பேசி’ என்பார் திருஞான சம்பந்தர். திருஞான சம்பந்தரைச் சைவ உலகம் ‘தமிழ் ஞானசம்பந்தன்’ என்றே குறிப்பிடும். தமிழே அவர். அவரே தமிழ். “நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனச் சுந்தரர் அவரைப் பற்றிப் புகழுகின்றார். திருஞான சம்பந்தர் புராணத்தைச் சொல்ல வந்த சேக்கிழார், 155 இடங்களில் ஞானசம்பந்தரைத் தமிழோடு தொடர்பு படுத்திப் பேசுகின்றார் என்றால், தமிழிற்கும் அவருக்குமான தொடர்பை நாம் நன்கறியலாம்.
‘எனதுரை தனதுரை’ என்பது ஞானசம்பந்தர் வாக்கு. இதற்கு என்ன பொருள்? நான் சொல்வது இறைவன் சொல்வதேயாகும் என்பதாகும். அப்படியாயின் இறைவனும் அவரும் ஒன்றே. ஈசன்தான் அவர். அவர்தான் ஈசன். சிவபெருமான்தான் தமிழை அகத்தியருக்குத் தந்தவன் என்பதைத் “தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” எனக் கம்பன் மிக அழகாகச் சொல்கின்றான். ஆகத் “தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்” எனப் பெரியோர் கூறுவது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று என்பதை உணரலாம்.
சைவம் வைணவம் எனப்படும் தமிழ்ச் சமயங்களோடு தமிழிற்கான தொடர்பைப் பார்த்த நாம், அந்தத் தமிழ்ச் சமயம், வாழ்க்கையை எவ்வாறு செம்மைப்படுத்துகிறது என்பதைச் சிறிது பார்ப்போம்.
தாழ்ந்த குலத்தினர் எனப்படும் திருநீலகண்ட யாழ்ப்பாணரை, உயர்ந்த குலத்தினர் எனப்படும் ஞானசம்பந்தர் எதிரே சென்று வரவேற்று; “ஐயரே!” என அழைத்துக் கோயிலுக்குக் கொண்டுபோய் இறைவனைக் கும்பிடச் செய்து, “உங்கள் இறைவருக்கு பொருந்தும் யாழிசை கொண்டு பாடும்” எனச் சொன்னது, தமிழ்ச் சமயத்தில் ஜாதிப் பாகுபாடு கிடையாது என்பதைப் பறைசாற்றவில்லையா?
‘உங்கள் இறைவருக்கு’ என்னும் தொடர் உரிமையை உறுதி செய்வதாகும். இந்த அருமைப் பாட்டை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தான் பெற்ற புதல்வர்களுக்காகத் தரணியையே நாசப்படுத்தும் ஜனநாயகத் தலைவர்கள் இருக்கும் நமது நாட்டில்; ‘ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன்தான் உள்ளான், வேறு வாரிசு இல்லை’ என்ற நிலையிலும், தனது மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று, நீதியை வீதியிலேயே வழங்கிய மனுநீதிச் சோழனின் வரலாறு, தமிழ்ச் சமய வாழ்வியலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக் காட்டில்லையா?
பறையரான நந்தனையும், பார்ப்பனரான மாணிக்கவாசகரையும் ஒன்றுபோல் தனது திருவடிக் கீழ் ஒடுக்கிக் கொண்ட தில்லைக் கூத்தனின் செயல்பாடு, எதனைக் காட்டுகின்றது? ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டவில்லையா?
63 நாயன்மார்கள் சிலை வரிசையைப் பாருங்கள். எல்லாரும் நிற்கின்ற இடத்தில், காரைக்கால் அம்மையார் மட்டும் உட்கார்ந்த கோலத்தில் இருப்பார். பேய் உருக்கொண்ட அம்மையார் நியாயமாக யார் கண்ணிலும் படக்கூடாது. அந்தப் பேய் நிற்பதால் அதற்கும் சங்கடமில்லை. நமக்கும் சங்கடமில்லை. இருப்பினும் தாய்மையைப் போற்றும் தமிழ்ச் சமயப் பண்பாடு, அவரை அமர வைத்து அழகு பார்க்கின்றது.
(கட்டுரையாளர், கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். திராவிடச் சான்றோர் பேரவைத் தலைவராக இருப்பவர்.)
நந்திதா குறிப்பு
சமஸ்கிருதம் தேவ மொழி என்பதை என்னால் ஒப்ப முடியவில்லை, காரணம் சமஸ்கிருதம் என்ற சொல் சம்ஸ்காரேண க்ருதம் ( பண்படுத்தப் பட்டது) என்ற பொருளைத் தரும், துவைக்கப் பட்ட துணி என்றால் அது துவைக்கப் படாத நிலையில் இருந்தது என்பது அருத்தா பத்தி, ஆக சமஸ்கிருதம் என்பது பண்படா நிலையிலிருந்து பண்பட்ட நிலைக்கு வந்தது என்று தேறும், பாணினி என்பார் சமஸ்கிருதத்துக்கு அஷ்டாத்யாயி என்ற இலக்கணம் வகுத்தார், அதற்கு முன்பு இலக்கணம் இருந்திருந்தால் முதல் இலக்கணத்தைக் குறிப்பிட்டிருப்பார், பதஞ்சலி முனிவர் தாம் எழுதிய யோக சாத்திரத்தை வழி நூல் என்றே கூறுகின்றார், ( அத யோக அனுசாசனம்) இதற்கு முதல் நூல் ஹிரண்ய கர்பர் என்பவர் எழுதிய நூலாகும்,சான்று (ஹிரண்யகர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன) பொருள் ஹிரண்ய கர்பர் என்பவர் தான் முதலில் யோக நூலை இயற்றினார் அதற்கு முன் எவரும் இயற்றவில்லை என்பது ஆம். கம்பனும் கூட தான் எழுதிய இராம காதைக்கு முதல் நூல் வான்மீகியார் எழுதிய இராமாயணம் என்கிறார் (நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் )
பாணினி முனிவருக்கு முன்னால் தேவர்கள் பண்படா மொழியைப் பேசி வந்தனர் என்றும் அவர்கள் பேசி வந்த பண்படாமொழிக்கு இலக்கணம் வகுக்க ஒரு மானிட ரிஷி தேவைப் பட்டது என்பது பொருந்தாக் கூற்று, வட மொழி தேவ மொழியானால் தமிழ் இறை மொழி, திருமூலர் தன்னைப் பிறப்பித்த காரணத்தைச் சொல்லுங்கால்
என்னை நன்றாய் இறைவன் படைத்தான்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே
என்கிறார், தன்னைத் தமிழில் பாடச் சொல்லவில்லை இறைவன் தன்னைத் தமிழாகவே ஆக்குமாறு கூறினான் என்கிறார், ஈகரையின் அன்பர்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் முடித்து அமைவுறுகிறேன்
அன்புடன்
நந்திதா.
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
அருமையான கட்டுரை. தங்கள் விளக்கமும் அருமை.
கோவில்களில் அர்ச்சனை செய்யும் மொழி சமஸக்ரிதம், அதற்க்கு அவர்கள் கூறும்
காரணம் சமஸ்க்ரிதம் ஒருவித அதிர்வை உண்டுக்குவதாக, ஒப்புக்கொள்கிறேன்.
தமிழிலும் சமஸ்க்ரிதத்திற்கு இணையான மந்திரங்கள்/பாடல்கள் உள்ளது (எ.கா திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் போன்ற பல).
ஏன் தமிழை பயன்படுத்தக்கூடாது. யாருக்கும் புரியாத ஏன் அர்ச்சகருக்கே
புரியாமல் மனப்பாடம் செய்து சில வேளைகளில் தவராகாவும்(யாருக்கு
தெரியப்போவுது என்ற மனப்பான்மை) அர்ச்சனை செய்கின்றனர்.
அதற்க்கு பதிலாக எல்லாருக்கும் புரியும் தமிழில் (திருமந்திரம்,
திருவாசகம் சாமான்ய மக்களுக்கு புரிவது சிறிது கடினம் தான் என்றாலும் "something is better than nothing") அர்ச்சனை
செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.
நன்றி
சரண்.
கோவில்களில் அர்ச்சனை செய்யும் மொழி சமஸக்ரிதம், அதற்க்கு அவர்கள் கூறும்
காரணம் சமஸ்க்ரிதம் ஒருவித அதிர்வை உண்டுக்குவதாக, ஒப்புக்கொள்கிறேன்.
தமிழிலும் சமஸ்க்ரிதத்திற்கு இணையான மந்திரங்கள்/பாடல்கள் உள்ளது (எ.கா திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் போன்ற பல).
ஏன் தமிழை பயன்படுத்தக்கூடாது. யாருக்கும் புரியாத ஏன் அர்ச்சகருக்கே
புரியாமல் மனப்பாடம் செய்து சில வேளைகளில் தவராகாவும்(யாருக்கு
தெரியப்போவுது என்ற மனப்பான்மை) அர்ச்சனை செய்கின்றனர்.
அதற்க்கு பதிலாக எல்லாருக்கும் புரியும் தமிழில் (திருமந்திரம்,
திருவாசகம் சாமான்ய மக்களுக்கு புரிவது சிறிது கடினம் தான் என்றாலும் "something is better than nothing") அர்ச்சனை
செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.
நன்றி
சரண்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
எல்லாக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யலாம். நம் மக்கள் சமஸ்கிரித அர்ச்சனையையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
அருமையான கட்டுரை
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
அரிய செய்திகள் அடங்கிய கட்டுரை. இங்கே பதிப்பித்ததற்கு நந்திதாவுக்கு நன்றி. நந்திதாவின் ஸம்ஸ்க்ருதம் என்ற சொல் விளக்கம் அருமை. தமிழும், ஸம்ஸ்க்ருதமும் இரு கண்கள். இரண்டும் செம்மொழிகள் தான். ஒரே கலாசாரத்தை, அறத்தை பறைசாற்ற வந்தவை தான்.
ராவணன் ஸாம வேதத்திலும், இசையிலும் வல்லவன் என்று படித்திருக்கிறேன். அவன் ஸம்ஸ்க்ருதத்தில் பேசினான் என்பது புதிய செய்தி.
6ஆம் நூற்றாண்டுக்கு முன் என்றால் எந்தந்த இலக்கியங்களை எடுத்துக் கொள்ள போகிறார்கள்? நாத்திகத்திற்கு அவைகள் உதவாதே. திருக்குறள் என்றால் அதில் கடவுள் வாழ்த்து இருக்கிறது. தொல்காப்பியம் என்றால் அதில் வேதத்தை ஒட்டிய மண முறைகளை கற்பியலில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் என்றால் அதிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவைகளில் ராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும் வருகிறதே...!! எதை ஒதுக்கப் போகிறார்கள்? எதை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?
கட்டுரை ஆசிரியர் கூறியது போல் சமய தமிழை விடுத்து தமிழ் மாநாடு நடத்துவது கண்ணை பிடுங்கி எடுத்து விட்டு ஓவியம் கற்க முனைவது போல் தான் இருக்கும்.
ராஜா
ராவணன் ஸாம வேதத்திலும், இசையிலும் வல்லவன் என்று படித்திருக்கிறேன். அவன் ஸம்ஸ்க்ருதத்தில் பேசினான் என்பது புதிய செய்தி.
6ஆம் நூற்றாண்டுக்கு முன் என்றால் எந்தந்த இலக்கியங்களை எடுத்துக் கொள்ள போகிறார்கள்? நாத்திகத்திற்கு அவைகள் உதவாதே. திருக்குறள் என்றால் அதில் கடவுள் வாழ்த்து இருக்கிறது. தொல்காப்பியம் என்றால் அதில் வேதத்தை ஒட்டிய மண முறைகளை கற்பியலில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் என்றால் அதிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவைகளில் ராமனைப் பற்றியும், கண்ணனைப் பற்றியும் வருகிறதே...!! எதை ஒதுக்கப் போகிறார்கள்? எதை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?
கட்டுரை ஆசிரியர் கூறியது போல் சமய தமிழை விடுத்து தமிழ் மாநாடு நடத்துவது கண்ணை பிடுங்கி எடுத்து விட்டு ஓவியம் கற்க முனைவது போல் தான் இருக்கும்.
ராஜா
Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
அருமையான கட்டுரை...பகிர்வுகளுக்கு நன்றி.. தமிழ் பற்றி அரிய கொடுத்தமைக்கு எனது இனிய வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமன் அவளிடத்தில் வடமொழியில் பேசினால், சிறிது நேரத்துக்கு முன் வடமொழியே பேசிய ராவணன், வேற்றுருக் கொண்டு வந்து பேசுகின்றான் எனப் பயம் கொள்ளுவாள் எனச் சிந்தித்து, மக்கள் மொழியே பேச வேண்டும் என்று முடிவு செய்து, மதுரமான மொழியைத் தேர்ந்தெடுத்துப் பேசினான் என்கிறார் வால்மீகி.
சமஸ்கிருதம் தழைத்தோங்கிய காலத்தில் இங்கே தமிழ் கொடிகட்டிப்பறந்தது. நிறைய சொற்கள் தமிழிலிருந்து வடபுலத்தில் வழ்ங்கப்பட்டது என்பதற்கும் சான்று உண்டு.
அன்னதொரு பெருமையுடைய தமிழில் இறைவன் அர்ச்சணை ஏற்கமாட்டான் என்று சிதம்பர புல்லுருவிப்பண்டிதர்கள் பிடிவாதமாக இருப்பது தவறான செயலாகும்.
அருமையான கட்டுரையைப் பிரசுரித்த நந்திதா அவர்களுக்கு நன்றி.
கட்டுரை ஆசிரியர் முனைவர் தியாகராஜன் எனக்கு தமிழ்ப்பயிற்றுவித்தவர் என்பதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
nandhtiha wrote:வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா
என்னிலும் நிறைய தாங்கள் அறிந்தவர். உங்கள் கருத்தில் பிழை ஏதும் கண்டறிய இயலவில்லை.
நான் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பயின்ற போது முனைவர் தியாகராசன் முனைவர் எழில்முதல்வன் ( மா.இராமலிங்கம்) ஆகியோரின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களிடம் பணிவுடன் தமிழ் கற்றுள்ளேன்.
ஆனாலும் பொருளாதாரச்சந்தையில் புது தில்லியில் வந்து ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றி வரும் இன்னாளில் ( ஆங்கில முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளேன் ) தமிழில் என்னால் அதிகப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது.
ஈகரை முத்தமிழ் மன்றம் தமிழ்மன்றம் ஆகிய தளங்கள் என்னை ஊக்குவித்து என் தமிழைப் புதுப்பித்து இப்போது உங்கள் முன் நான்...
உங்கள் திறம் கண்டு அதிசயித்து நின்றுள்ளேன் பல சமயம்.
வாழ்க நந்திதா...வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சமயத் தமிழை ஒதுக்கியது காலக் கட்டாயமா கழகக் கட்டாயமா
கலை wrote:nandhtiha wrote:வணக்கம்
முனைவர் திரு சாமி தியாகராசன் அவர்களிடம் தாங்கள் தமிழ் படித்தீர்கள் என்பது மகிச்சிகரமான செய்தி. அவர் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளர். தூய தமிழ் வல்லுநர். அவரிடம் படித்த தங்கள் தமிழ் மிளிர்கிறது, ஒரு விடயம், என் கருத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா
என்னிலும் நிறைய தாங்கள் அறிந்தவர். உங்கள் கருத்தில் பிழை ஏதும் கண்டறிய இயலவில்லை.
நான் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பயின்ற போது முனைவர் தியாகராசன் முனைவர் எழில்முதல்வன் ( மா.இராமலிங்கம்) ஆகியோரின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களிடம் பணிவுடன் தமிழ் கற்றுள்ளேன்.
ஆனாலும் பொருளாதாரச்சந்தையில் புது தில்லியில் வந்து ஆங்கில ஆசிரியராகப்பணியாற்றி வரும் இன்னாளில் ( ஆங்கில முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளேன் ) தமிழில் என்னால் அதிகப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது.
ஈகரை முத்தமிழ் மன்றம் தமிழ்மன்றம் ஆகிய தளங்கள் என்னை ஊக்குவித்து என் தமிழைப் புதுப்பித்து இப்போது உங்கள் முன் நான்...
உங்கள் திறம் கண்டு அதிசயித்து நின்றுள்ளேன் பல சமயம்.
வாழ்க நந்திதா...வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு...!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?
» கனிமொழி கைது காலத்தின் கட்டாயமா?
» வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குவது கட்டாயமா?
» அதிமுகவில் டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா ஒதுக்கியது ஏன்?
» இணைய கலாட்டா
» கனிமொழி கைது காலத்தின் கட்டாயமா?
» வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குவது கட்டாயமா?
» அதிமுகவில் டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா ஒதுக்கியது ஏன்?
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|