புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
Page 1 of 1 •
விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உள்பட்ட ஹம்பி எனும் சின்னஞ்சிறு கிராமம்.
அங்கே இருந்த வீடுகளுள் ஒன்றிலிருந்து வேத மந்திரங்களின் ஒலி எழுந்து, அந்த கிராமம் முழுதும் நிறைந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணமான திம்மண்ணபட்டர், தம் வீட்டின் நடுவே அமர்ந்து, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு, வேதத்தினை சொல்லித் தந்து கொண்டிருந்தார்.
வேத விற்பன்னரான திம்மண்ணபட்டர், வீணையை மீட்டி இனிமையாக நாதம் எழுப்புவதிலும் வல்லவர்.
வேதமும், வீணை நாதமும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், வேதனையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது, திம்மண்ணபட்டரின் மனதில். வேதஒலியும், வீணை இசையும், ஒரு குழந்தையின் அழுகைக் குரலுக்கு ஈடாக முடியுமா? அப்படியோர் அழுகைச் சங்கீதம் தம் வீட்டில் ஒலிக்கவில்லையே...! என்பதுதான், அவரது வேதனைக்குக் காரணம்.
வேதனையைப் போக்கவல்லவன், வேங்கடவனே என நினைத்த திம்மண்ணர், மனைவி கோபாம்பாளையும் அழைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்றார். வேங்கட அசல பதியை வேண்டினார். திருமாலின் அருளால், திருமகள் ஒருத்தி பிறந்தாள் திம்மண்ணருக்கு. வெங்கடம்மாள் என்று பெயரிட்டு வளர்த்தார். மீண்டும் திருப்பதிமலையானை வேண்டினார். "திருப்தியாக வாழ்" என்று, ஆண் மகவு ஒன்றை அருளினான், திருமலையான். குருராஜன் எனப் பெயரிட்டார்கள் குழந்தைக்கு.
அந்தச் சமயத்தில், ஹம்பியை விட்டு புவனகிரி எனும் கிராமத்திற்குக் குடி வந்திருந்தார் திம்மண்ணா.
சிறிது காலத்திற்குப் பின், "மனை சிறக்க மகப்பேறு" தந்த மலையப்பனுக்கு நன்றி சொல்லி வணங்க, மனைவியோடு மீண்டும் திருமலைக்குச் சென்றார், திம்மண்ணா. ஆனால், திருப்பதி சென்றதும் அவர் மனதுள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது. அதனால், வேங்கடவனை வேண்டினார், ""மாதவா... மாதவம் புரிந்தோர் பெற்றிடும் பேறு போல், மகா மேதையான மகனைப் பெற்றிடும் வரம் தா!""
வேண்டுவோர் வேண்டுவன தருபவன் அல்லவா வேங்கடவன்! திம்மண்ணர் விஷயத்திலும், அப்படியே செய்தான். அதன் பலனாக, 1598_ம் வருடம், பால்குண ஆண்டு, சுக்லபட்ச சப்தமி, வியாழக்கிழமையன்று, மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், திம்மண்ணபட்டர், கோபாம்பாள் திருமனையில், ஆண்குழந்தை ஒன்று பிறந்து, அழுதது! அந்த அழுகை, திம்மண்ணர் மீட்டும் வீணை இசையை வீணாக்கிவிட்டு சங்கீதமாய் எதிரொலித்தது.
வெங்கடேசன் அருளால் பிறந்த குழந்தைக்கு, அவன் பெயரையே சூட்டி, ""வெங்கட நாதா"" என்று வாய்நிறைய அழைத்தார், அப்பா! பாலூட்டி, தாலாட்டி, சீராட்டினாள் அம்மா...!
நாட்கள் நகர்ந்தன... குழந்தை வெங்கடநாதனுக்கு பல் முளைக்க ஆரம்பித்தது... கூடவே, சொல்லும் முளைத்தது... அதுவும், வேதச் சொல். அதனால், முத்துப் பற்கள் முளைத்து அவனுக்கு மூன்று வயது நிரம்பியதுமே வித்யாப்பியாசம் செய்துவைத்தார், திம்மண்ணர்.
சரஸ்வதி இருக்குமிடத்தில், தனக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என நினைத்தோ என்னவோ, திம்மண்ணரின் வீட்டுக்குள் நுழைய மகாலட்சுமி தயங்கினாள். எனவே, குழந்தை வெங்கடநாதனின் கல்விஞானம் வளர்ந்தபோது, வீட்டில் வறுமையும் சேர்ந்து வளர்ந்தது. குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பிடிக்காமலோ என்னவோ, சீக்கிரமே திருமாலின் திருவடி சேர்ந்தார் திம்மண்ணபட்டர்.
அம்மாவுடன் அண்ணன் குருராஜர் தங்கிவிட, அக்கா வெங்கடம்மாளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வெங்கடநாதன்.
வெங்கடம்மாளின் கணவர் லட்சுமி நரசிம்மாசாரியார், மைத்துனனை மகனாகவே பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். அதோடு, ஆசானாக இருந்து அனைத்தையும் போதித்தார். கற்பிக்கப்பட்ட அனைத்தையும் கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டான், வெங்கடநாதன்.
ஆண்டுகள் வளர்ந்தன... வெங்கடநாதனின் அறிவு வளர்ந்தது... கூடவே, அவனும் வளர்ந்தான். தம்பியைப் பார்க்க வந்த குருராஜர், அவனது அறிவுத் திறமையைப் பார்த்து மகிழ்ந்தார். சரஸ்வதி கடாட்சம் நிரம்பப் பெற்றிருந்த வெங்கடநாதனுக்கு, "சரஸ்வதி" என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் இறங்கிய பின்னரும், இரை தேடலைவிட, இறைதேடலே பிடித்திருந்தது வெங்கடநாதனுக்கு. அதனால், ஏற்ற குருவைத் தேடி அலைந்தவன், கும்பகோணத்திற்குச் சென்றான். அங்கே, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் எனும் மத்வ மகானைக் கண்டான். அவரே தமக்கு ஏற்ற குரு எனக் கொண்டான்.
ஒளி இருக்கும் திசை நாடி, செடி வளைந்து செல்வதுபோல், ஞானஒளி நிறைந்திருந்த வெங்கடநாதன் வந்தது முதல், அவன்மேல் தனி அன்பு காட்டினார், சுதீந்திரர். அதுவே, மற்ற சீடர்களின் பொறாமை விதைக்கு உரமிட்டது. அதனால், எப்போதும் உறங்குகிறான் வெங்கடநாதன் என்று, சுதீந்திரரிடம் பழி கூறினர்.
கோள் மூட்டியவர்களின் வார்த்தைகளின் உண்மை அறிய அன்று இரவு, வெங்கடநாதன் என்ன செய்கிறான் எனப் பார்க்கப் போனார், குருதேவர். அங்கே, பழைய ஓலைகளை தீமூட்டி எரித்து, அந்த வெளிச்சத்தில் எதையோ எழுதிவிட்டு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வெங்கடநாதன். அவன் விழித்துக் கொண்டு விடாதபடி, மெதுவாக அருகே சென்றார், சுதீந்திரர். எழுதிவைக்கப்பட்டிருந்த சுவடியை எடுத்துப் பார்த்தார்.
சுவடியில் வெங்கடநாதன் எழுதிவைத்திருந்ததைப் படித்ததுமே அவருக்குப் புரிந்து போனது, உறங்கிக் கொண்டிருக்கும் அவன், உலகை விழிப்புறச் செய்யப் பிறந்தவன் என்பது. அன்போடு தன் போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டுப் போனார்.
விடிந்தது. விழித்தெழுந்த வெங்கடநாதன், திடுக்கிட்டான். "தான் எழுதிவைத்த சுவடியைக் காணவில்லை... அதைவிட அதிர்ச்சி, குருநாதரின் போர்வை, தன்மீது போர்த்தப்பட்டுள்ளது...!"
பதட்டத்தோடு சென்று, குருநாதரிடம் சொன்னான் வெங்கடநாதன். தாமே அவற்றைச் செய்ததாகச் சொன்னார், சுதீந்திரர். அதோடு, மற்ற சீடர்களுக்கும் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினார். வெங்கடநாதன் தங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து தலைகுனிந்தார்கள் அவர்கள்.
கற்க வேண்டியவற்றை கசடறக் கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன், இல்லறத்தை நல்லறமாக நடத்த எண்ணி, குருவிடம் அனுமதி பெற்று புவனகிரிக்குத் திரும்பினான். மனைவியுடனான மகிழ்வான வாழ்வின் பயனாக ஆண்மகவு ஒன்று பிறந்தது வெங்கடநாதனுக்கு. தொடர்ந்த வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்த வெங்கடநாதன், குரு சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டான். பிறரிடம் பொருள் கேட்டுத் தேடிப் போக வழி தெரியாத அவன் நிலை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருதேவர். அதேசமயம், அவர் உள்மனம் ஒன்றைச் சொன்னது.
"வெங்கடநாதன், எனக்குப்பின் மத்வ பீடத்தை அலங்கரிக்க வேண்டியவன்!" உள்ளம் சொன்னதை மறைத்துக் கொண்டு, உவகையோடு அவனை ஊருக்குச் செல்ல அனுமதித்தார் சுதீந்திரர்.
சிலகாலம் சென்றது... சுதீந்திரரின் உடல்நலம் குன்றியது. தம் சீடர்களை அழைத்து, ""எனக்குப்பின் இந்த பீடத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி, வெங்கடநாதனுக்கு மட்டுமே உள்ளது. அவனை அழைத்து வாருங்கள்!"" என்றார் சுதீந்திரர்.
கும்பகோணம் வந்து குருதேவரைப் பணிந்த வெங்கடநாதன், துறவறம் ஏற்க மறுத்தான். பாசம், பந்தம் எனும் கட்டுகள் தன்னைப் பிணைத்திருப்பதாகச் சொன்னான்.அப்போதைக்கு அதனை ஏற்று, வெங்கடநாதனைத் திருப்பி அனுப்பினார், சுதீந்திரர். ஆனால், அவருக்கு நம்பிக்கை இருந்தது_வெங்கடநாதன் நிச்சயம் திரும்பிவந்து சந்நியாசம் ஏற்பான் என்று. அதனால், யாதவேந்திரர் என்ற சீடரிடம் தலைமைப் பொறுப்பை சிலகாலம் ஒப்படைத்தார்.
சுதீந்திரரின் நம்பிக்கை சீக்கிரமே பலித்தது. மீண்டும் சுதீந்திரரின் உடல் நலம் பாதிக்கப்பட, இப்போதும் வெங்கடநாதன் அழைத்து வரப்பட்டான். இந்தமுறை சந்நியாசம் ஏற்க, அவன் மறுக்காமல் சம்மதித்தான். அதேசமயம், மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருவதாகக் கூறி குருவிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான்.
விரைவிலேயே, தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்துவிட்டு, இல்லாளிடமும் சொல்லாமல் வந்து சந்நியாசம் பெற்ற வெங்கடநாதனுக்கு, "ராகவேந்திர தீர்த்தர்" என்று தீட்சா நாமம் சூட்டப்பட்டது.
கரம் பிடித்த கணவன், சந்நியாசம் பெற்றுவிட்டார் என்பதை அறிந்த சரஸ்வதி, வாழ்வை வெறுத்து, கிணற்றில் குதித்தாள். பேயுருவாகி கணவரைத் தேடிப்போனாள்.
தன்னை நெருங்க முடியாமல் தவிக்கும் மனைவி சரஸ்வதியின் ஆவியைக் கண்ட ராகவேந்திரர், அவள் அவதியைப் போக்க மனம் கொண்டார். புனித நீரை அவள் மீது தெளித்து, புண்ணிய லோகம் செல்ல வழி செய்தார். அதோடு, அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்பட வேண்டும் என்றும் நியமம் செய்தார்.
சுதீந்திரரின் சீடராக இருந்தபோதே, தமது ஞானஅறிவு, பூவின் மணம்போல் பரிமளிப்பதை உணர்த்தி பரிமளாச்சாரியார் என அழைக்கப்பட்ட ராகவேந்திரர், குருவின் மறைவுக்குப்பின் தலைமை ஏற்றபோது, மேலும் அதனை நிரூபித்தார்.
மத்வ பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளுக்குப்பின், தீர்த்த யாத்திரை புறப்பட்டார் ராகவேந்திரர். உடுப்பி, பண்டரி புரம், கொல்லாபுரம், கர்நூல் என அவர் பாதம் பதித்த தலங்கள் யாவும் புண்ணியத் தலங்களாயின. அவரது பயண வேகத்தை விடவும் வேகமாக, அவரது ஞானமும், அறிவும், உயர்வும், பெருமையும் எங்கும் பரவியது.
புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதாவானி எனும் ஆதோனிக்குச் சென்றார், ராகவேந்திரர். அங்கே அநாதைச் சிறுவன் ஒருவன் தன் சோகத்தினை அவரிடம் சொன்னான். அவன் பெயரைக் கேட்ட ராகவேந்திரர், ""வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள்... உயர்வடைவாய்!"" என்று சொல்லிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார்.
சில மாதங்களுக்குப் பின், அந்த வழியே வந்த ஹைதராபாத் நவாப், தனக்கு வந்த கடிதம் ஒன்றை வெங்கண்ணாவிடம் தந்து படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாத வெங்கண்ணா, ராகவேந்திரரை மனதால் நினைத்தான். மறுகணம், ""மன்னா, இன்னும் சில நாட்களில் உங்கள் ஆட்சியின் கீழ் மேலும் சில நாடுகள் வரப் போவதாக இதில் எழுதியுள்ளது!"" என்று கடிதத்தைப் படித்துச் சொல்ல முடிந்தது அவனால்... நவாப் மகிழ்ந்தார். வெங்கண்ணாவை அவ்வூரின் திவானாக நியமித்தார்.
"ஒருமுறை நினைத்ததற்கே இத்துணை உயர்வா...!" ராகவேந்திரரின் திருநாம மகிமையை வியந்த வெங்கண்ணா, அப்போதுமுதல் தன் சுவாசமாகவே அவரது திருநாமத்தை நினைத்தான்.
செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ராகவேந்திரரைப் பின்தொடர்ந்தார்கள். பொதுவாக, மகான்கள் மட்டுமே மகிமைகளைப் புரிவார்கள். ஆனால், ராகவேந்திரரோ, தான் மட்டுமல்ல, தன் சீடர்கள், தன் பக்தர்களும்கூட மகிமைமிக்கவர்களே என்பதை பல்வேறு சமயங்களில் உணர்த்தினார். அவரது காஷாய ஆடைகள், அவர் கைப்பட்ட அட்சதை, அவர் தரும் பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின.
ராகவேந்திரர், தமது திருத்தல யாத்திரைக்கு இடையிடையே, வியாசராஜரின் சந்திரிகைக்கு "பிரகாசம்" எனும் உரை; தந்திர தீபிகை எனும் நூலுக்கு "நியாய முக்தாவளி" எனும் உரை என்பதுபோல் பல நூல்களை எழுதினார்.
வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்த ராகவேந்திரர், வேதாந்த உலகுக்கும், கல்விக்கும், மத்வ சித்தாந்தத்திற்கும் உதவும்படி ஏராளமான கிரந்தங்களை இயற்றினார்.
"புதிது புதிதாக எழுதவேண்டும்; பழைய நூல்களுக்கு புதியதாக அதுவும் எளியதாக வியாக்யானங்கள் (விளக்க உரைகள்) சொல்ல வேண்டும்" என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்போல், இரவு பகல் பாராமல் எழுதினார் பரிமளாச்சாரியார். அவரது நூல்களும் பரிமளம் மிக்கவையாகவே திகழ்ந்தன.
ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.
""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.
""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.
""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். "எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்... என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்... பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""
""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார். பல்வேறு இடங்களில் காலடி பதித்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ராகவேந்திரர். அவரது வருகையை அறிந்து பக்தியோடு ஓடிவந்து பணிவோடு வரவேற்றான் வெங்கண்ணா. அதோடு, பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடமும் சொன்னார்.
ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.
புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.
நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. தன் செயலுக்காக வருந்திய நவாப், மன்னிக்கும
அங்கே இருந்த வீடுகளுள் ஒன்றிலிருந்து வேத மந்திரங்களின் ஒலி எழுந்து, அந்த கிராமம் முழுதும் நிறைந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணமான திம்மண்ணபட்டர், தம் வீட்டின் நடுவே அமர்ந்து, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு, வேதத்தினை சொல்லித் தந்து கொண்டிருந்தார்.
வேத விற்பன்னரான திம்மண்ணபட்டர், வீணையை மீட்டி இனிமையாக நாதம் எழுப்புவதிலும் வல்லவர்.
வேதமும், வீணை நாதமும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், வேதனையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது, திம்மண்ணபட்டரின் மனதில். வேதஒலியும், வீணை இசையும், ஒரு குழந்தையின் அழுகைக் குரலுக்கு ஈடாக முடியுமா? அப்படியோர் அழுகைச் சங்கீதம் தம் வீட்டில் ஒலிக்கவில்லையே...! என்பதுதான், அவரது வேதனைக்குக் காரணம்.
வேதனையைப் போக்கவல்லவன், வேங்கடவனே என நினைத்த திம்மண்ணர், மனைவி கோபாம்பாளையும் அழைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்றார். வேங்கட அசல பதியை வேண்டினார். திருமாலின் அருளால், திருமகள் ஒருத்தி பிறந்தாள் திம்மண்ணருக்கு. வெங்கடம்மாள் என்று பெயரிட்டு வளர்த்தார். மீண்டும் திருப்பதிமலையானை வேண்டினார். "திருப்தியாக வாழ்" என்று, ஆண் மகவு ஒன்றை அருளினான், திருமலையான். குருராஜன் எனப் பெயரிட்டார்கள் குழந்தைக்கு.
அந்தச் சமயத்தில், ஹம்பியை விட்டு புவனகிரி எனும் கிராமத்திற்குக் குடி வந்திருந்தார் திம்மண்ணா.
சிறிது காலத்திற்குப் பின், "மனை சிறக்க மகப்பேறு" தந்த மலையப்பனுக்கு நன்றி சொல்லி வணங்க, மனைவியோடு மீண்டும் திருமலைக்குச் சென்றார், திம்மண்ணா. ஆனால், திருப்பதி சென்றதும் அவர் மனதுள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது. அதனால், வேங்கடவனை வேண்டினார், ""மாதவா... மாதவம் புரிந்தோர் பெற்றிடும் பேறு போல், மகா மேதையான மகனைப் பெற்றிடும் வரம் தா!""
வேண்டுவோர் வேண்டுவன தருபவன் அல்லவா வேங்கடவன்! திம்மண்ணர் விஷயத்திலும், அப்படியே செய்தான். அதன் பலனாக, 1598_ம் வருடம், பால்குண ஆண்டு, சுக்லபட்ச சப்தமி, வியாழக்கிழமையன்று, மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், திம்மண்ணபட்டர், கோபாம்பாள் திருமனையில், ஆண்குழந்தை ஒன்று பிறந்து, அழுதது! அந்த அழுகை, திம்மண்ணர் மீட்டும் வீணை இசையை வீணாக்கிவிட்டு சங்கீதமாய் எதிரொலித்தது.
வெங்கடேசன் அருளால் பிறந்த குழந்தைக்கு, அவன் பெயரையே சூட்டி, ""வெங்கட நாதா"" என்று வாய்நிறைய அழைத்தார், அப்பா! பாலூட்டி, தாலாட்டி, சீராட்டினாள் அம்மா...!
நாட்கள் நகர்ந்தன... குழந்தை வெங்கடநாதனுக்கு பல் முளைக்க ஆரம்பித்தது... கூடவே, சொல்லும் முளைத்தது... அதுவும், வேதச் சொல். அதனால், முத்துப் பற்கள் முளைத்து அவனுக்கு மூன்று வயது நிரம்பியதுமே வித்யாப்பியாசம் செய்துவைத்தார், திம்மண்ணர்.
சரஸ்வதி இருக்குமிடத்தில், தனக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என நினைத்தோ என்னவோ, திம்மண்ணரின் வீட்டுக்குள் நுழைய மகாலட்சுமி தயங்கினாள். எனவே, குழந்தை வெங்கடநாதனின் கல்விஞானம் வளர்ந்தபோது, வீட்டில் வறுமையும் சேர்ந்து வளர்ந்தது. குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பிடிக்காமலோ என்னவோ, சீக்கிரமே திருமாலின் திருவடி சேர்ந்தார் திம்மண்ணபட்டர்.
அம்மாவுடன் அண்ணன் குருராஜர் தங்கிவிட, அக்கா வெங்கடம்மாளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வெங்கடநாதன்.
வெங்கடம்மாளின் கணவர் லட்சுமி நரசிம்மாசாரியார், மைத்துனனை மகனாகவே பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். அதோடு, ஆசானாக இருந்து அனைத்தையும் போதித்தார். கற்பிக்கப்பட்ட அனைத்தையும் கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டான், வெங்கடநாதன்.
ஆண்டுகள் வளர்ந்தன... வெங்கடநாதனின் அறிவு வளர்ந்தது... கூடவே, அவனும் வளர்ந்தான். தம்பியைப் பார்க்க வந்த குருராஜர், அவனது அறிவுத் திறமையைப் பார்த்து மகிழ்ந்தார். சரஸ்வதி கடாட்சம் நிரம்பப் பெற்றிருந்த வெங்கடநாதனுக்கு, "சரஸ்வதி" என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் இறங்கிய பின்னரும், இரை தேடலைவிட, இறைதேடலே பிடித்திருந்தது வெங்கடநாதனுக்கு. அதனால், ஏற்ற குருவைத் தேடி அலைந்தவன், கும்பகோணத்திற்குச் சென்றான். அங்கே, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் எனும் மத்வ மகானைக் கண்டான். அவரே தமக்கு ஏற்ற குரு எனக் கொண்டான்.
ஒளி இருக்கும் திசை நாடி, செடி வளைந்து செல்வதுபோல், ஞானஒளி நிறைந்திருந்த வெங்கடநாதன் வந்தது முதல், அவன்மேல் தனி அன்பு காட்டினார், சுதீந்திரர். அதுவே, மற்ற சீடர்களின் பொறாமை விதைக்கு உரமிட்டது. அதனால், எப்போதும் உறங்குகிறான் வெங்கடநாதன் என்று, சுதீந்திரரிடம் பழி கூறினர்.
கோள் மூட்டியவர்களின் வார்த்தைகளின் உண்மை அறிய அன்று இரவு, வெங்கடநாதன் என்ன செய்கிறான் எனப் பார்க்கப் போனார், குருதேவர். அங்கே, பழைய ஓலைகளை தீமூட்டி எரித்து, அந்த வெளிச்சத்தில் எதையோ எழுதிவிட்டு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வெங்கடநாதன். அவன் விழித்துக் கொண்டு விடாதபடி, மெதுவாக அருகே சென்றார், சுதீந்திரர். எழுதிவைக்கப்பட்டிருந்த சுவடியை எடுத்துப் பார்த்தார்.
சுவடியில் வெங்கடநாதன் எழுதிவைத்திருந்ததைப் படித்ததுமே அவருக்குப் புரிந்து போனது, உறங்கிக் கொண்டிருக்கும் அவன், உலகை விழிப்புறச் செய்யப் பிறந்தவன் என்பது. அன்போடு தன் போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டுப் போனார்.
விடிந்தது. விழித்தெழுந்த வெங்கடநாதன், திடுக்கிட்டான். "தான் எழுதிவைத்த சுவடியைக் காணவில்லை... அதைவிட அதிர்ச்சி, குருநாதரின் போர்வை, தன்மீது போர்த்தப்பட்டுள்ளது...!"
பதட்டத்தோடு சென்று, குருநாதரிடம் சொன்னான் வெங்கடநாதன். தாமே அவற்றைச் செய்ததாகச் சொன்னார், சுதீந்திரர். அதோடு, மற்ற சீடர்களுக்கும் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினார். வெங்கடநாதன் தங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து தலைகுனிந்தார்கள் அவர்கள்.
கற்க வேண்டியவற்றை கசடறக் கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன், இல்லறத்தை நல்லறமாக நடத்த எண்ணி, குருவிடம் அனுமதி பெற்று புவனகிரிக்குத் திரும்பினான். மனைவியுடனான மகிழ்வான வாழ்வின் பயனாக ஆண்மகவு ஒன்று பிறந்தது வெங்கடநாதனுக்கு. தொடர்ந்த வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்த வெங்கடநாதன், குரு சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டான். பிறரிடம் பொருள் கேட்டுத் தேடிப் போக வழி தெரியாத அவன் நிலை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருதேவர். அதேசமயம், அவர் உள்மனம் ஒன்றைச் சொன்னது.
"வெங்கடநாதன், எனக்குப்பின் மத்வ பீடத்தை அலங்கரிக்க வேண்டியவன்!" உள்ளம் சொன்னதை மறைத்துக் கொண்டு, உவகையோடு அவனை ஊருக்குச் செல்ல அனுமதித்தார் சுதீந்திரர்.
சிலகாலம் சென்றது... சுதீந்திரரின் உடல்நலம் குன்றியது. தம் சீடர்களை அழைத்து, ""எனக்குப்பின் இந்த பீடத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி, வெங்கடநாதனுக்கு மட்டுமே உள்ளது. அவனை அழைத்து வாருங்கள்!"" என்றார் சுதீந்திரர்.
கும்பகோணம் வந்து குருதேவரைப் பணிந்த வெங்கடநாதன், துறவறம் ஏற்க மறுத்தான். பாசம், பந்தம் எனும் கட்டுகள் தன்னைப் பிணைத்திருப்பதாகச் சொன்னான்.அப்போதைக்கு அதனை ஏற்று, வெங்கடநாதனைத் திருப்பி அனுப்பினார், சுதீந்திரர். ஆனால், அவருக்கு நம்பிக்கை இருந்தது_வெங்கடநாதன் நிச்சயம் திரும்பிவந்து சந்நியாசம் ஏற்பான் என்று. அதனால், யாதவேந்திரர் என்ற சீடரிடம் தலைமைப் பொறுப்பை சிலகாலம் ஒப்படைத்தார்.
சுதீந்திரரின் நம்பிக்கை சீக்கிரமே பலித்தது. மீண்டும் சுதீந்திரரின் உடல் நலம் பாதிக்கப்பட, இப்போதும் வெங்கடநாதன் அழைத்து வரப்பட்டான். இந்தமுறை சந்நியாசம் ஏற்க, அவன் மறுக்காமல் சம்மதித்தான். அதேசமயம், மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருவதாகக் கூறி குருவிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான்.
விரைவிலேயே, தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்துவிட்டு, இல்லாளிடமும் சொல்லாமல் வந்து சந்நியாசம் பெற்ற வெங்கடநாதனுக்கு, "ராகவேந்திர தீர்த்தர்" என்று தீட்சா நாமம் சூட்டப்பட்டது.
கரம் பிடித்த கணவன், சந்நியாசம் பெற்றுவிட்டார் என்பதை அறிந்த சரஸ்வதி, வாழ்வை வெறுத்து, கிணற்றில் குதித்தாள். பேயுருவாகி கணவரைத் தேடிப்போனாள்.
தன்னை நெருங்க முடியாமல் தவிக்கும் மனைவி சரஸ்வதியின் ஆவியைக் கண்ட ராகவேந்திரர், அவள் அவதியைப் போக்க மனம் கொண்டார். புனித நீரை அவள் மீது தெளித்து, புண்ணிய லோகம் செல்ல வழி செய்தார். அதோடு, அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்பட வேண்டும் என்றும் நியமம் செய்தார்.
சுதீந்திரரின் சீடராக இருந்தபோதே, தமது ஞானஅறிவு, பூவின் மணம்போல் பரிமளிப்பதை உணர்த்தி பரிமளாச்சாரியார் என அழைக்கப்பட்ட ராகவேந்திரர், குருவின் மறைவுக்குப்பின் தலைமை ஏற்றபோது, மேலும் அதனை நிரூபித்தார்.
மத்வ பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளுக்குப்பின், தீர்த்த யாத்திரை புறப்பட்டார் ராகவேந்திரர். உடுப்பி, பண்டரி புரம், கொல்லாபுரம், கர்நூல் என அவர் பாதம் பதித்த தலங்கள் யாவும் புண்ணியத் தலங்களாயின. அவரது பயண வேகத்தை விடவும் வேகமாக, அவரது ஞானமும், அறிவும், உயர்வும், பெருமையும் எங்கும் பரவியது.
புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதாவானி எனும் ஆதோனிக்குச் சென்றார், ராகவேந்திரர். அங்கே அநாதைச் சிறுவன் ஒருவன் தன் சோகத்தினை அவரிடம் சொன்னான். அவன் பெயரைக் கேட்ட ராகவேந்திரர், ""வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள்... உயர்வடைவாய்!"" என்று சொல்லிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார்.
சில மாதங்களுக்குப் பின், அந்த வழியே வந்த ஹைதராபாத் நவாப், தனக்கு வந்த கடிதம் ஒன்றை வெங்கண்ணாவிடம் தந்து படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாத வெங்கண்ணா, ராகவேந்திரரை மனதால் நினைத்தான். மறுகணம், ""மன்னா, இன்னும் சில நாட்களில் உங்கள் ஆட்சியின் கீழ் மேலும் சில நாடுகள் வரப் போவதாக இதில் எழுதியுள்ளது!"" என்று கடிதத்தைப் படித்துச் சொல்ல முடிந்தது அவனால்... நவாப் மகிழ்ந்தார். வெங்கண்ணாவை அவ்வூரின் திவானாக நியமித்தார்.
"ஒருமுறை நினைத்ததற்கே இத்துணை உயர்வா...!" ராகவேந்திரரின் திருநாம மகிமையை வியந்த வெங்கண்ணா, அப்போதுமுதல் தன் சுவாசமாகவே அவரது திருநாமத்தை நினைத்தான்.
செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ராகவேந்திரரைப் பின்தொடர்ந்தார்கள். பொதுவாக, மகான்கள் மட்டுமே மகிமைகளைப் புரிவார்கள். ஆனால், ராகவேந்திரரோ, தான் மட்டுமல்ல, தன் சீடர்கள், தன் பக்தர்களும்கூட மகிமைமிக்கவர்களே என்பதை பல்வேறு சமயங்களில் உணர்த்தினார். அவரது காஷாய ஆடைகள், அவர் கைப்பட்ட அட்சதை, அவர் தரும் பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின.
ராகவேந்திரர், தமது திருத்தல யாத்திரைக்கு இடையிடையே, வியாசராஜரின் சந்திரிகைக்கு "பிரகாசம்" எனும் உரை; தந்திர தீபிகை எனும் நூலுக்கு "நியாய முக்தாவளி" எனும் உரை என்பதுபோல் பல நூல்களை எழுதினார்.
வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்த ராகவேந்திரர், வேதாந்த உலகுக்கும், கல்விக்கும், மத்வ சித்தாந்தத்திற்கும் உதவும்படி ஏராளமான கிரந்தங்களை இயற்றினார்.
"புதிது புதிதாக எழுதவேண்டும்; பழைய நூல்களுக்கு புதியதாக அதுவும் எளியதாக வியாக்யானங்கள் (விளக்க உரைகள்) சொல்ல வேண்டும்" என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்போல், இரவு பகல் பாராமல் எழுதினார் பரிமளாச்சாரியார். அவரது நூல்களும் பரிமளம் மிக்கவையாகவே திகழ்ந்தன.
ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.
""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.
""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.
""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். "எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்... என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்... பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""
""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார். பல்வேறு இடங்களில் காலடி பதித்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ராகவேந்திரர். அவரது வருகையை அறிந்து பக்தியோடு ஓடிவந்து பணிவோடு வரவேற்றான் வெங்கண்ணா. அதோடு, பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடமும் சொன்னார்.
ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.
புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.
நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. தன் செயலுக்காக வருந்திய நவாப், மன்னிக்கும
நன்றி தாமு!
http://www.sivaraghavendra.com/2009/09/blog-post.html
http://www.eegarai.net/-f8/-t6665.htm
http://www.sivaraghavendra.com/2009/09/blog-post.html
http://www.eegarai.net/-f8/-t6665.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sorry
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|