ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

Top posting users this week
heezulia
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 
cordiac
ஹலோ தோழியே ..! Poll_c10ஹலோ தோழியே ..! Poll_m10ஹலோ தோழியே ..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ தோழியே ..!

Go down

ஹலோ தோழியே ..! Empty ஹலோ தோழியே ..!

Post by இளமாறன் Sun Mar 14, 2010 2:36 am

ஹலோ தோழியே ..!
விவாகரத்து வழக்குகளும், இன்றைய பெண்களின் பிரச்னைகளும்


விவாகரத்து பெறும் போக்கு பெண்களிடையே அதிகரித்து
வருவதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக உள்ள, ஜி.கீதாஞ்சலி:
குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களின் பல தீர்க்க முடியாத பிரச்னைகள், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு பேசத்தக்கவைகளாக இல்லை என்பது, குடும்ப நல நீதிமன்ற வழக்குகள் காட்டுகின்றன. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது, பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.சென்னையில், மூன்று குடும்ப நல நீதிமன்றங்களில் 2000ம் ஆண்டு, 1,733 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. 2009ம் ஆண்டில் 4,265 வழக்குகள் பதிவாகி உள்ளன. பாதுகாப்பு, ஜீவனாம்சம் என்று தலைப்புகளில் பதிவாகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தனி பட்டியல்.சென்னையில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநிலங் களிலும், தமிழகத்தில் உள்ள மற்ற வட்டங்களிலும் இதே நிலைமைதான். முன்பு, விவாகரத்து கேட்பவர்களில், அதிகபட்சம் ஆண்களே முதலிடம் வகித்தனர்.

ஒரே ஆணோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது, வரையறைக்கு அடங்கிய படிப்பு ஆகியவை காரணமாக, முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை மாறியுள்ளது. பெண்களின் படிப்பு, அவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஆண்களுக்கு சமமாக எதிலும் முன் நிற்க அவர்களுக்கு ஊக்கம் தரும் பல சூழ்நிலைகள் சமுதாயத்தில் உருவாகி உள்ளன.
கட்டுக்கோப்பான பண்பாடு மிக்க குடும்பங்களில் கூட பெண்களின் இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் எதிர்பாரா சினிமாபட திருப்பங்களைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.


பெண்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வும் தானாக
முடிவெடுக்கும் சிந்தனைத் திறனும் ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் தைரியமாக விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இப்போது தான், சட்டம் உரிய பாதுகாப்பை தரும் என்ற தைரியமும், நம்பிக்கையும் அவர்களுக்குப் பிறந்திருக்கிறது. அதன் விளைவு தான், தற்போதைய விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு. வினோதமான, வேடிக்கை யான,
அம்பலத்துக்கே வராத மேலோட்டமான வழக்குகள், தூசித்தட்டி எடுக்க வேண்டிய அளவிற்கு குவிந்துள்ளன. இங்கு தான், பிரச்னைகளுக்குரிய நபர்களின் வழக்குகள், தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டி உள்ளது. ஆண், பெண் சமம் என்ற நியாயமான உணர்வு பல குடும்பங்களில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நட்பு எல்லை மீறுபவர்களுடன், வரையறை வைத்து பழக வேண்டுமே தவிர, பெற்றோருக்கு பிரச்னை தரும் அளவுக்கு, விவகாரமாக்கி விடக் கூடாது.
"நண்பர்களாகப் பழகலாம்; தவறில்லை. ஆனால், தம்பதிகள் போல ஜோடி போட்டுக் கொண்டு நேரம் காலம் இல்லாமல் ஊர் சுற்றுவதும், ஊர்களுக்கு சென்று வருவதையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பது?' என்று, மனைவியால் பாதிக்கப்பட்ட, சென்னையில் உள்ள எம்.என்.சி., கம்பெனியில், ஐந்து
இலக்க சம்பளம் வாங்கும் நண்பர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அதே ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் அவரது மனைவி, "தொழில் ரீதியாக, கூட வேலை செய்பவர்களுடன் சென்று வருவதையெல்லாம், சந்தேகப்பட்டால் எப்படி? மனிதன் படித்தால் மட்டும் போதாது; பக்குவமும் இருக்க வேண்டும்.
சந்தேகப்படுவது என்பது ஆண்களது பிறவி குணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்?' என்கிறார். இருவரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மணவிலக்குப் பெற காத்திருக்கும் இந்த இரண்டு பேரும், மறுமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண, சின்னஞ்சிறிய விஷயங்களைக் கூட
பொறுத்து போகக் கூடிய மனப்பக்குவம் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. அதனால் தான், விவாகரத்து வழக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமான பிரச்னைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ள முடிகிற விஷயங்களே. ஆனால், இங்கே "ஈகோ,' பார்த்தீனிய விஷச் செடி போல வளர்கிறது. எந்த பிரச்னைக்கும், தீர்வு என்ற ஒன்று இல்லாமல் இல்லை.
நமக்கு சில சமயம், "தீர்வு' பற்றிய ஞானம் தெரியும். ஆனால், சுயமரியாதை தடுத்து விடும். தெரியாததை, பெரியோர்களிடம் கேட்டு தீர்வு காணலாம்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹலோ தோழியே ..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum