புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_m10அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 24, 2009 8:00 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar

ஒருவரின் உடலைக்காட்டி, "பிரபாகரன்
கொல்லப்பட்டு விட்டார்' என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, இதனை நிரூபிக்க
வேண்டி, "மரபணு சோதனை (டி.என்.ஏ. டெஸ்ட்) மூலம் உறுதி செய்து கொண்டோம்'
என்றும் அழுத்தமாக தெரிவிக்கிறது. மேலும், பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்
பட்டதாக கூறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் டி.என்.ஏ. சோதனையை நடத்தி
முடித்தோம் என்றும் தெரிவிக்கின்றது இலங்கை ராணுவம்.

இந்நிலையில்,
பிரபாகரன் உடலை அடையாளப் படுத்துவதற்காக டி.என்.ஏ. டெஸ்டினை இலங்கை
ராணுவம் துணைக்கழைத்திருப்பதில்தான் அறிவியல் உலகம் அதிர்ச்சி
அடைந்திருக்கிறது.

தமிழக அரசின் தடய அறிவியல் துறையின் இயக்குநர்
விஜயகுமாரை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, ""இறந்து போனவர் இவர்தான் என
கண்டறியவும், ஒரு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்தான்
மரபணு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக, ரத்தம், திசு, விந்து,
உமிழ்நீர், வேருடன் கூடிய முடி ஆகியவற்றில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறினை
தனியாகப் பிரித்து அதன்மூலம் கண்டறியப்படும். இதற்கு இரண்டு, மூன்று
நாட்களாகும். அதுவே பல், எலும்பு, மண்டை ஓடு ஆகிய வற்றிலிருந்து டி.என்.ஏ.
எடுக்கப்பட்டு சோதிக்க வேண்டுமானால் குறைந் தது 10 நாட்கள் ஆகும். இதுதான்
அறிவியல்'' என்கிறார்.

தமிழக அரசின் தடய அறிவியல் துறை முன்னாள்
இயக்குநரும், ராஜீவ் படுகொலை விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு உதவியவரும்,
தற்போதைய பெங்களூர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியரு மான
டாக்டர் ப.சந்திரசேகரனிடம் பேசிய போது, ""விஞ்ஞானத்தை கேவலப்படுத்துகிறது
இலங்கை அரசு. இறந்தவரின் ரத்தத்தையோ, அல்லது திசுக்களையோ எடுத்துக் கொண்டு
முதலில் "லேப்'புக்கு போக வேண்டும். "லேப்' பில்தான் இதிலிருந்து
டி.என்.ஏ. பிரித்தெடுக் கப்படும். பிரபாகரனின் உடல் போர் நடந்துள்ள
பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்கிறது ராணுவம். அதனால், இந்த பகுதி
யில் "லேப்' இருக்கும் என்பதற்கு சாத்திய மில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 24, 2009 8:02 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar1
லேப்பிற்கு எடுத்துச் செல்லப்படும் ரத்தம்
(அல்லது) திசுக்களை டி.என்.ஏ.அனலைஸர், சீக்குவன்சர் மெஷினில் செலுத்தி
டி.என்.ஏ. புரஃபைல் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதன் ரிசல்ட் என்பது
"பார்கோட்' மாதிரி இருக்கும். பிரபாகரனிடமிருந்து ஏற்கனவே ரத்த மாதிரிகள்
எடுத்து அதிலிருந்து டி.என்.ஏ. மூலக்கூறு ரிசல்ட்டினை எடுத்து வைத்திருந்
தால்... அந்த ரெக்கார்டோடு இப்போது கிடைத்துள்ள ரிசல்ட்டினையும்
ஒப்பிட்டு, "அவர்தானா? இல்லையா?' என்று கண்டறிய வேண்டும். இத்தகைய
சோதனைகளுக்கு குறைந்த பட்சம் 4 நாட்கள் தேவைப்படும்.

இறந்து
போனவரின் டி.என்.ஏ. ஏற் கனவே பாதுகாத்து வைக்கப்பட வில்லை என்றால், இறந்தவ
ரின் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரித்து
அதிலிருந்து டி.என்.ஏ. மூலக்கூறினை பிரித்தெடுத்து பிரபாகரனின் டி.என்.ஏ.
ரிசல்ட்டோடு ஒப்பிட்டு, உண்மைகளை கண்டறியலாம். இந்த செயல்முறைகள்
பிரபாகரன் விஷயத்தில் நடந்ததாக தெரியவில்லை.

மேலும், பிரபாகரன்
மகன் சார்லஸ் கொல்லப்பட்டதாகவும் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த
மாதிரிகளைக் கொண்டு டி.என்.ஏ. ரிசல்ட் பெறப்பட்டு, அதனை பிரபாகரனின்
டி.என்.ஏ. ரிசல்ட்டுடன் ஒப்பிட்டு, பிரபாகரனின் உடல்தான் என உறுதி செய்து
கொண்டோம்' என்கிறார்கள் ராணுவத்தினர். இதுவும் அபத்தமானது. சார்லஸ் உடலை
கண்டுபிடித்ததாக திங்கட்கிழமை சொன்னது ராணுவம். செவ்வாயன்று பிரபாகரனின்
உடலை கண்டுபிடித்ததாக சொன்னது. இந்த ஒருநாளில் இருவரின் டி.என்.ஏ.
ரிசல்ட்டையும் எப்படி கண்டறிந்திருக்க முடியும்? சில உண்மைகளை மறைக்க
இலங்கை ராணுவம் முயற்சிப்பதாகவே சந்தேகம் எழுகிறது'' என்று சுட்டிக்
காட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சந்திரசேகரன், ""விஞ்ஞான
ரீதியிலான இந்த ரிசல்ட்டைத் தவிர, இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்,
நண்பர்களை அழைத்து வந்து உடலை அடையாளம் காட்டச் சொல்லலாம். ஆனால் அப்படிச்
சொல்பவர்கள் உண்மையை சொல்ல வேண்டும். ஆனால், சொல்வார்களா? என்று சந்தேகம்
எழுவதும் இயற்கையானது. பிரபாகரன் விவகாரத்திலும், கருணாவை அழைத்து
அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் ""ஆமாம்... இது பிரபாகரன்
உடல்தான்'' என்றிருக்கிறார். ஆனால் அவர் சொல்வதை 100 சதவீதம் உண்மை என்று
எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 24, 2009 8:03 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar2
54 வயதான பிரபாகரனின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், ராணுவம் காட்டிய உடலில் இல்லை.
இது மிகப் பெரிய சந்தேகம். மேலும் பிரபாகரன் மரணம் நிகழ்ந்திருந்தால்...
அது 3 விதங்களில் நிகழ்ந்திருக்கலாம். அதாவது, சயனைடு அருந்தி
இறந்திருக்கலாம். அப்படி சயனைடு அருந்தினால் அதன் தாக்கம் நாக்கில்
தொடங்கி, முகத்தில் பரவி, உடலைத் தாக்கும். அப்போது முகம் விகாரமாகும்.
இந்தச் சம்பவம் அங்கு நிகழவில்லை என்று தெரிகிறது. தன்னைத்தானே அவர்
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கலாம். அப்படி அவர்
சுட்டுக்கொண்டிருந்தால் முகமே சிதறியிருக்கும். ராணுவம் காட்டிய உடலில்
நெற்றியில் சுடப்பட்ட அடையாளம் தெரிகிறது. முகம் பிரகாசமாக இருக்கிறது.
அதனால் அவரே சுட்டுக்கொள்ள வாய்ப்பில்லை. அடுத்து, பிரபாகரன் தப்பிக்க
முயற்சித்தபோது ராணுவம் சுட்டிருந்தால்... நெற்றியில் மட்டும் சுட்டிருக்க
முடியாது. கண்மூடித்தனமாக சுட்டிருப்பார்கள். இதனால் அவரது உடலே
சின்னாபின்னமாகியிருக்கும். இந்த சம்பவமும் நடக்கவில்லை, நடந்த மாதிரி
தெரியவில்லை. அடுத்து பிரபாகரனைப் பிடித்து, நிற்க வைத்து ராணுவம்
சுட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் முகம் சிதைந்து போயிருக்கும்.
இதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. அதனால், அது பிரபாகரனின் உடலா?
இறந்தவர் பிரபாகரன்தானா? என்பதில் அசைக்க முடியாத சந்தேகம் இருக்கிறது.

பிரபாகரன்
பயங்கரவாதி, தீவிரவாதி என்கிற கேள்விகளையெல்லாம் ஒரு புறம் தள்ளி
வைத்துவிட்டு, உலகத் தமிழர்களே போற்றும் வரலாற்று தலைவனாக இருந்துள்ள
பிரபாகரனை பற்றிய உண்மையை உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய ஜனநாயக கடமை
ராஜபக்சேவிற்கு இருக்கிறது. அதேபோல, இரண்டே மணி நேரத்தில் டி.என்.ஏ.
ரிசல்ட்டை தந்து அறிவியலை கேவலப்படுத்தி அனைவரையும் முட்டாளாக்கியுள்ள
சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளை ராஜபக்சே தண்டிக்க வேண்டும். இதுதவிர,
பெனாசிர் உடலை அவசரம் அவசரமாக பாகிஸ்தான் அடக்கம் செய்தது போல இல்லாமல்,
தெளிவான உண்மைகள் வெளியாகும் வரை "இவர்தான் பிரபாகரன்' என்று ராணுவம்
காட்டிய உடலை பாதுகாக்க வேண்டிய கடமையும் ராஜபக்சேவிற்கு இருக்கிறது.
ஆனால், பிரபாகரன் பற்றிய உண்மைகளை மறைக்க... ராணுவம் காட்டிய உடலை அடக்கம்
செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறதாக தகவல்'' என்று விரிவாக சுட்டிக்
காட்டுகிறார் சந்திரசேகரன்.

மேலும் பிரபாகரனின் உடலை நந்திக்கடல்
நீர் பகுதியில் இருந்து மீட்டதாகவும் கூறுகிற ராணுவம், பிரபாகரனை அடை
யாளம் காட்ட, அந்த உடலின் முகத்தை மிக எளிதாக திருப்பு கின்றனர். இத்தகைய
செயல்கள் மருத்துவ வட்டாரங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை
அரசு மருத் துவமனையின் அனாடமி (உடற் கூறுகள்) துறையின் டாக்டர் களிடம்
இதுபற்றி விசாரித்த போது, ""இறந்து போன வரின் உடல் 6 மணி நேரம் தண்ணீரில்
கிடந்தாலே உடலெல் லாம் உப்பிக்கொள்ளும். விகாரத்தோற்றம் வந்து விடும்.
பிரபாகரனின் உடலை 1 நாளுக்குப் பிறகு கண்டுபிடித்த தாகச் சொல்கிறார் கள்.
அப்படியானால், அந்த உடல் மிகவும் மோசமாகியிருக் கும். ஆனால், ராணுவம்
காட்டிய அந்தமுகம் ரொம்ப வும் பிரகாசமாக இருக்கிறது. கைகள் மட்டும்
கொஞ்சம் வீங்கியுள்ளது. அதனால், உடலுக்கும் முகத் திற்கும் சம்பந்தமில்லை
என்கிற சந்தேகம் இருக்கிறது. மேலும் அந்த உடலின் முகத்தை மிக ஈஸியாக
திருப்புகின்றனர் ராணுவத்தினர். ஒருவர் இறந்த உடனேயே அவரது உடல் முழுவதும்
ஸ்ட்ரிப்னஸ் ஆகிவிடும். அதாவது விறைத்துக் கொள்ளும். விரல் களைக் கூட
மடக்க முடியாது. அப்படிப் பட்ட சூழலில், ராணுவத்தினர் அந்தபாடியின்
முகத்தை மிக அனாயசமாக திருப்புகிறார்கள். இது சாத்தியமே இல்லை. கழுத்துப்
பகுதி துண்டிக்கப்பட்டிருந்தால்தான் சாத்தியம். மேலும், ஒருவர் இறந்து
விட்டால், அடுத்த இரண்டுமணி நேரத்தில் அவரது கண்கள் ஒளியை இழந்து விடும்.
ஆனால், பிரபாகரனின் உடல் என காட்டப் பட்டதில் உள்ள முகத்தில் கண்கள் மிக
பிரகாசமாக இருக்கிறது. மருத்துவ விஞ்ஞானத்தை வைத்துப் பார்க்கையில்,
சம்பந்தப்பட்டவரின் உடல்தானா என்பதில் சந்தேகமிருக்கிறது. ஏதோ மேஜிக்
நடந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது'' என்று விவரிக்கின்றனர்.

இப்படிப்பட்ட
சந்தேகங்கள் அறிவியல், மருத்துவ வட்டாரங்களில் எதிரொலிக்கும் நிலையில்,
சினிமாக்களில் வருவது போல பிளாஸ்டிக் சர்ஜரி மாதிரி மாஸ்க்
தயாரிக்கப்பட்டு ஏதோ ஒருவரின் முகத்தில் அது பொருத்தப் பட்டிருக்கலாம்
என்று உலகம் முழுவதும் சந்தேகம் பரவிக்கிடக்கிறது.

"இது
சாத்தியமா?' என்று தமிழ்த் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டர்களில் ஒருவரான
சிவா யாதவ்விடம் கேட்டபோது, ""யாருடைய முகத்தினையும் "மாஸ்க்' மூலம்
உருவாக்க நினைக்கிறோமோ அவரது புகைப்படம் 3 ஆங்கிள்களில் இருந்தாலே போதும்.
ஃபோட் டோவை வைத்தே மாஸ்க் உருவாக்கிடலாம். ரப்பர், ஃபைபர், ப்ளாஸ்டர் ஆஃப்
ஃபாரிஸ் ஆகிய வகைகளில் "மாஸ்க்' உருவாக்க முடியும். ரப்பரை பயன்படுத்தி
தயாரித்தால் அப்படியே ஒரிஜினல் முகம் கிடைத்துவிடும். ஆனால் இதனை
தயாரிப்பதற்கு குறைந்தது 2 நாள் தேவைப்படும். அதேசமயம், ஏற்கனவே "மாஸ்க்'
உருவாக்கி வைத்திருந்தால் சில மணி நேரங்களில் யாரோ ஒருவரின் முகத்தில்
பொருத்திவிட முடியும். இது சாத்தியம்தான்'' என்கிறார் சிவா யாதவ்.

இலங்கை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களில் ஒருவரான சிவாஜிலிங்கத்திடம்
பேசியபோது, ""எங்கட தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். இதில்
சந்தேகம் இல்லை. இலங்கை ராணுவம் காட்டியுள்ள உடல் போர்ஜரி. அது
பிரபாகரனின் உடல் அல்ல. விஞ்ஞான ரீதியாகவே இதனை நிரூபிக்க முடியும்.
விரைவில், வெளியே வரவிருக்கிறார் பிரபாகரன். அப்போது, நிறைய கேள்விகளுக்கு
பதில் தர வேண்டிய நிர்பந்தம் ராஜபக்சேவிற்கு ஏற்படப் போகிறது'' என்கிறார்
சிவாஜிலிங்கம்.

ஆக, அறிவியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில்
எப்படி விசாரித்தாலும் இலங்கை ராணுவம் காட்டிய உடல், பிரபாகரன் உடலாக
இருக்க வாய்ப்பே இல்லை என்றே அடித்துச் சொல்கின்றன.

-இளையசெல்வன்

படம் : ஸ்டாலின்

நன்றி : நக்கீரன்

avatar
vaasu_ng
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/05/2009

Postvaasu_ng Mon May 25, 2009 8:06 pm

கமலஹசன் அடுத்த படத்திற்கு makeup போட இனி America போக வேண்டாம். அது பக்கத்து நாட்டிலேயே கிடைக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக