Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இந்த நித்தியானந்தா
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா Nithyananda-Ranjita-scandal-images-01](https://2img.net/h/1.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-HoT1mqnI/AAAAAAAABxo/nHm56ybm3fA/s400/Nithyananda-Ranjita-scandal-images-01.jpg)
இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு
கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் பிரபல ஆன்மிக தலைவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தாவின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. இவரை நிஜ சாமியார் என நினைத்து பல தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் இவரது உரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இப்போது தனது செயல் மூலம் அவரை நம்பிய மக்களையும் ஊடகங்களையும் நித்யானந்தா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் அரசு பள்ளியிலையே படித்து உள்ளார்.அதன் பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.ஆரம்ப காலங்களில் இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே சுற்றி உள்ளார்.கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம் என்பது மேலதிக தகவல்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா A](https://2img.net/h/2.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-H7THD2bI/AAAAAAAABxw/NpFRIzN2Kq4/s400/a.jpg)
கர்நாடக மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.
உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 7](https://2img.net/h/2.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IAVJ7TbI/AAAAAAAABx4/eBjTyV88tP0/s400/7.jpg)
இந்நிலையில் நித்யானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியை பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் " சன் டிவி " ஒளிபரப்பியதை தொடர்ந்து பொது மக்களுக்கு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி பரமஹம்ச நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 6](https://2img.net/h/2.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IF-PxiMI/AAAAAAAAByA/vUaykyLeGlk/s400/6.jpg)
33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
தமிழகத்திலும் பிரபலமானவர் நித்யானந்த சுவாமி. இவர் பிறந்த ஊர் திருவண்ணாமலைதான். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 5](https://2img.net/h/3.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-ILT3YNaI/AAAAAAAAByI/G9FEq1et3vk/s400/5.jpg)
1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன், 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூரு சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 4](https://2img.net/h/2.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IP-ARFhI/AAAAAAAAByQ/pdXobG0Rg0U/s400/4.jpg)
சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள்.
புனிதமான காவி உடை தரித்து மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் உல்லாச லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 3](https://2img.net/h/4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IUuuY0pI/AAAAAAAAByY/a9UdhsZ9oGg/s400/3.jpg)
சுவாமி-நித்யானந்தா-ஆசிரமம்-சூறை
சுவாமி நித்யானந்தா ஒரு நடிகையுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட காட்சிகளை தனியார் தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து தமிழகம், புதுச்சேரி முழுவதும் உள்ள அவரது ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர்.
திருவண்ணாமலையில் நித்யானந்தர் ஆசிரமம் முன் மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவரது பேனரையும் சிலர் கிழிக்க முயன்றனர்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 2](https://2img.net/h/4.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IcYbBjAI/AAAAAAAAByg/oWYhzrbSSqE/s400/2.jpg)
இதற்கிடையில் நித்யானந்தா ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சிவபாபு, ஆசிரமத்தை மூடும்படி அங்கிருந்த நிர்வாகிகளுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதையொட்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் நித்யானந்தா சாமியார் ஆசிரமம் அமைத்துள்ளதால் அங்கும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணித்தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ''நித்யானந்தரின் சுயரூபம் வெளியாகி விட்டது.அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆசிரமத்தை பூட்டுவோம்'' என்றார்.
கோவையில் பேருந்து நிலையம் அருகே நித்யானந்தா உருவ படத்தை இந்து மக்கள் கட்சியினர் கிழித்து எறிந்து அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
![யார் இந்த நித்தியானந்தா 1](https://2img.net/h/1.bp.blogspot.com/_ljX6BQ6qCK4/S4-IhAVHUaI/AAAAAAAAByo/vVtvfoxlM6c/s400/1.jpg)
கடலூரில் வண்டிப்பாளையத்தில் உள்ள நித்யானந்தா பீடம் அருகே அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது. பெயர் பலகையையும் அழித்தனர்.
இதுபோல் விழுப்புரம் மோகினிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆசிரமத்திலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏம்பலத்தில் உள்ள ஆசிரமத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள் சுவாமி நித்யானந்தாவின் பேனர்களை அடித்து நொறுக்கினர். ஆசிரமத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யார் இந்த நித்தியானந்தா
கூரையினால் வேயப்பட்டிருந்த ஆசிரமம் முழுவதும் அடித்து நொறுக்கி தரைமட்டாக்கினர். இதேபோல் கானாந்தோப்பு பகுதியில் பக்தர்களால் வைக்கப்பட்டிருந்த அவரது பேனர் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அம்பலமாகும் நித்தியானந்தா லீலைலகள் - அரசியல் பழிவாங்கல் காரணமா?
நடிகையுடன் உல்லாசகமாக சுவாமி நித்தியானந்த இருந்த காட்சிகள், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து , ஆத்திரம் அடைந்த பொது மக்கள், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள அவரது ஆசிரமங்களை முற்றுகையிட்டுத் தாக்கி வருவதாகத் தெரியவருகிறது.
திருவண்ணாமலையில், நித்யானந்தர் ஆசிரமம் முன்பாக கூடிய மக்கள், நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் அவரது பேனரையும் கிழித்தனர். ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சிவபாபு, ஆசிரமத்தை மூடும்படி அங்கிருந்த நிர்வாகிகளுடன் தகராறு செய்ததாகவும், இதனால் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க நித்தியானந்தரைக் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகைள் எழுந்துள்ளன. ''நித்யானந்தரின் சுயரூபம் வெளியாகி விட்டது.அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆசிரமத்தை பூட்டப்பட வேண்டும்'' என திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணித்தலைவர் டி.எஸ்.சங்கர் தெரிவித்திருக்கின்றார். இது போன்று தமிழகத்தின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருவதாக அறியப்படுகிறது.
'சன்' தொலைக்காட்சிச் செய்திகளில் சாமியாரின் சல்லாப விடீயோக் காட்சிகள் காட்டப்பட்டதும், அதில் சாமியாரின் முகம் தெளிவாகத் தெரிவதனாலும், சாமியாரின் போலிமுகம் காட்டப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் அத்தனை தெளிவாக அக்காட்சியினைப் படம் பிடித்தவர்களும் சரி, ஒளிபரப்பியவர்களும் சரி, ஏன் நடிகையின் முகத்தை மறைத்தார்கள் எனக் கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்கள் இருக்கலாம் எனவும், இதற்ககாகவே இந்த நடிகையை வைத்து சாமியாரை வலையில் வீழ்த்தியிருக்க வேண்டும் அல்லது எடுக்கப்ட்ட வீடியோவில் இருக்கும் நடிகையின் முகத்தைக் காட்டினால், அந்த நடிகை ஆத்திரத்தில் சாமியார் தவிர, தன்னடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனப் பெரிய பட்டியலை வெளியிட்டு விடக் கூடும், அப்படி வெளியிடப்படும் பட்டியலில் அரசியல் பிரமுகங்கள் இருந்துவிடக் கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் தீவிரம் காட்டிய ஊடகங்கள், அந்தப் பிரச்சனையால் திரையுலகத்துடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அடக்கி வாசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியென்றாலும், வெளுத்துப் போயிருப்பது சாமியாரின் முகம் மட்டுமல்ல, தமிழகத்தின் பிரபல ஊடகங்களது முகங்களும்தான் என்கின்றார்கள்,இந்தச் செய்தியில் வெறுப்படைந்துள்ள மக்கள்.
சாமியாருக்குப் பிரபலம் தேடித் தந்த பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில் , அவர் எழுதிய தொடருக்கு "கதவைத் திற காற்று உள்ளே வரட்டும்" என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு 'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்காட்சிகளால், ஊடகத் தலைப்புச் செய்திக்குள் வந்திருப்பவர் சாமியார் நித்தியானந்தா.
நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் : நெருங்கிய நடிகைகள் பட்டியல் நீள்கிறது!
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» யார் இந்த நம்மாழ்வார்?
» யார் இந்த அமித் ஷா?
» யார் இந்த பிரபாகரன்?
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த நம்மாழ்வார்?
» யார் இந்த அமித் ஷா?
» யார் இந்த பிரபாகரன்?
» யார் இந்த யூதர்கள்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|