ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமண மகரிஷி

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரமண மகரிஷி - Page 2 Empty ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 9:57 am

First topic message reminder :

ரமண பகவான்



[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]

{எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், பதிப்பாளர் சி.டி.என்.வெங்கட்ராமன், நிர்வாகி,-தலைவர் , ரமணாச்ரமம்திருவண்ணாமலை 1963}




பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.

ரமண மகரிஷி - Page 2 1


அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.


ரமண மகரிஷி - Page 2 2


பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:11 am

ரமண மகரிஷி - Page 2 9


உடனே இருக்கையை விட்டு எழுந்து கோவிலை நோக்கி நடந்தார். வழியிலே அருணாசலேசுவரர் ஊர்வலம் வருகிறார். சாஷ்டாங்கமாக அஞ்சலி செய்தார். ஆனால் அசரீரியின் அழைப்புக்கு அர்த்தம் புலப்படவில்லை.



சஞ்சலமடைந்த மனத்துடன் இருந்த அவருக்கு மறுநாள் மத்தியானம் மலைமீதுள்ள சுவாமிகளின் ஞாபகம் வந்தது. உக்கிரமான வெயிலையும் கவனியாமல் உடனே மலைமீது ஏறிச் சென்றர். அன்று அதிர்ஷ்ட வசமாக விருபாக்‌ஷிக் குகையின் தாழ்வாரத்தில் சுவாமிகள் தனியே அமர்ந்திருந்தார். கணபதி முனிவர் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து தம் இரு கரங்களாலும் சுவாமிகளின் அடிகளைப் பற்றிக்கொண்டு சரண் புகுந்தார். " கற்க வேண்டிய யாவையும் கற்றேன்; வேதாந்த சாஸ்த்திரங்கள் யாவையும் பயின்றேன்; மனங்கொண்டமட்டும் மந்திரங்களைச் செபித்தாகி விட்டது.ஆனாலும் தபஸ் என்பதின் தாத்பர்யம் தெரியவில்லை ஐயனே! உனது அடியினைச் சரண் அடைந்தேன்." என்று இறைஞ்சினார்.



சுவாமிகள் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை கணபதி முனிவரைக் கருணையுடன் நிச்சலமாகக் கடாக்‌ஷித்து இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார்: "நான், நான்" என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ் ஒரு மந்திரத்தை செபம் பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ். இவ்வருள் வாக்கு, இத்திவ்ய உபதேச மொழிகள் கணபதி முனிவரின் ஐயங்கள் யாவையும் தீர்த்துவிட்டன. குகையிலேயே அன்று இரவுவரை தங்கினார். பக்கத்தில் உள்ளவரிடம், ரமண மகரிஷிகள் என்பதே சுவாமிக்குப் பொருத்தமான பெயர் என்று வெளியிட்டார். "மறுவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக" என்று பாடி, "இனிமேல் பகவான் என்றே பக்தர் யாவரும் மகரிஷிகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார். அன்று முதல் இப்பெயர்கள் நிலைத்துவிட்டன. மகரிஷிகளைச் சேர்வதற்கு முன்னமேயே காவ்யகண்டர் பிரசித்திபெற்றவர். அவரைப் பின்பற்றும் பக்தர்கள் பலர் இருந்தனர்.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:11 am

ரமண மகரிஷி - Page 2 10


ஆகவே காவ்ய கண்டரின் வருகைக்குப் பின் மகரிஷிகளின் தரிசனத்துக்கு வருபவர்களின் தொகை அதிகரித்தது. இப்போது பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன. மகரிஷிகள் அருளிய விடைகளின் முக்கியமான பாகங்களைத் தொகுத்துச் சுலோகங்களாக அமைத்து ", ரமண கீதை" என்னும் நூலாக வெளியிட்டார், காவ்ய கண்டர். கணபதி முனிவர் சுவாமிகளிடம் நெருங்கிய அன்பு பூண்டவர். மகரிஷிகளிடம் அவர் கண்ட அற்புத சக்திகள் பல. 1906-ஆம் ஆண்டு காவ்யகண்டர் திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் தவம் செய்துகொண்டிருந்தர். திடீரென்று ஓர் இடத்தில் சந்தேகம் தோன்றியது. " மகரிஷிகள் அருகிருந்தல் இந்தச் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!" என்று மனதில் நினைத்தார். அக்கணமே மகரிஷிகள் உள்ளே நுழைவதுபோல் தோன்றியது. சாஷ்டாங்கமாக வீழ்ந்து அடிபணிந்தார்.



மகரிஷி தமது திருக்கரத்தால் அவர் தலையைத் தொட்டு அழுத்தினார். மின்சாரம் போன்றதோர் புதிய சக்தி தன்னுள் பாய்வதுபோன்று முனிவர் உணர்ந்தார்.மகரிஷிகளின் திருக்கரத்தால் ஹஸ்த தீட்சை பெற்றுவிட்டதை உணர்ந்த முனிவர் மகிழ்ந்தார். இதைப் பற்றிப் பின் மகரிஷிகள்கூறிய விவரமும் இதை ஒத்து இருக்கிறது. பகவான் அருளியதாவது: "ஒரு நாள் படுத்துக்கொண்டிருந்தது; சமாதியில் இல்லை.



திடீரென்று சரீரம் ஆகாயத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. சுற்றும் உள்ள பொருட்கள் யாவும் மறைந்தன.எங்கும் ஒரே வெண்§f¡தி. பிறகு சரீரம் ஓர் இடத்தில் இறங்கியதும் பொருள்கள் புலப்பட்டன.திருவொற்றியூரில் இருப்பதாக ஓர் எண்ணம் உதித்தது. ஒரு பெரிய ரஸ்தாவைப் பின்பற்றிச் செல்லுகையில், கொஞ்ச தூரம் தள்ளி ஒரு கணபதி கோயில் காணப்பட்டதும் உள்ளே சென்றது. அங்கே பேசியது உண்டு; என்ன பேசியது; என்ன செய்தது என்பது நினைப்பில் இல்லை. திடீரென்று விழித்த போது விரூபாக்‌ஷிகுகையில் படுத்திருந்தது. இப்படித் தான் சித்தர்களும் உலாவுவார்கள் என்று தெரிந்தது." இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மகரிஷிகள் திருவொற்றியூருக்குச் சென்றதே இல்லை. ஆனால் மகரிஷிகள் சொன்ன அடையாளங்கள் யாவும் காவ்யகண்டர் அச்சமயத்தில் வசித்துவந்த கோயிலுக்குப் பொருத்தமாகவே இருந்தன.



காவ்யகண்டர் மகா மேதாவி; பண்டித சிரோமணி; அறிவிற் சிறந்த கவி. பல மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற புலவர்.ஆனாலும் மகரிஷிகளிடம் உள்ள அபார பக்தியினால் தனது சிறப்பனைத்துக்கும் காரணம் தமது குருதேவரான மகரிஷியின் அருளே என்று கூறுவார். அற்புதமான யோக அநுபவங்கள் பல இவருக்கு நேர்ந்தன. 1922-ஆம் ஆண்டில் மாமரக் குகையிலிருந்து யோகம் செய்த போது கணபதி முனிவருக்கு ஒரு நாள் கபாலம் வெடித்து தழும்பும் ஏற்பட்டது.



அந்தோ! உன்னத குறிக்கொள்களைக் கொண்ட இப்பெரியார், சிறந்த தபஸ்வி, சீரிய அறிஞர், வெகுநாள்வாழ்ந்திருக்க இந்நாடு பாக்கியம் பெறிருக்கவில்லை. 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று கல்கத்தாவை அடுத்த கரக்பூருக்கு அருகில், நிம்புரா என்னும் இடத்தில் உள்ள ஆசிரமத்தில் இவர் பூத உடலை நீத்தார்.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:13 am

இதர பக்தர்கள் - பாகம் 7



அக்காலத்து பக்தர்களுள் திருவண்ணாமலையில் சூபர்வைசராக இருந்த திரு இராமசாமி ஐயர் என்பவரும் ஒருவர். பகவானது சந்நிதானத்துக்கு வந்த இரண்டாம் முறையே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. வணங்கி வீழ்ந்து வேண்டுவாராயினர், "சுவாமி ஏசுநாதர் போன்ற மகான்கள் பாவிகளைக் கரையேற்றவே இவ்வுலகில் தோன்றினர். எளியேனுக்குக் கடைத்தேற வழியில்லையா? உய்வில்லையா?"


"ஆமாம் உய்வுண்டு, வழி உண்டு" என்றுஆங்கிலத்திலேயே விடை கிடைத்தது.


மற்றோர் ரசமான சம்பவத்தைப் பற்றி, ஐயர் தமது 'டைரி'யில் பின் வறுமாறு குறிப்பிடுகிறார்: " வெகு நாட்களாக நான் வயிற்று வலிக்காரன். உணவு சீரணம் ஆவதில்லை; தூக்கமும் இல்லை. இதைப் பற்றியே சதா கவலை. ஒரு நாள் சுவாமிகள் விசாரிக்கவே என் உடம்பைப் பற்றிச் சொன்னேன். அச்சமயம் தலையெல்லாம் சூட்டால் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர் விசாரித்த ஒரு நிமிடத்துக்குள் கொதிப்பெல்லாம் பறந்துவிட்டது. மூளை குளிர்ச்சி அடைந்தது."


"அன்று சௌமிய ஆண்டு ஆடி 18-ஆம் தேதி. அன்னமும் தோசையும் கொண்டு ஒரு பெண்மணி பகவானுக்கு
விருந்தளித்தாள். எனக்குக் கஞ்சி தான் அப்போது ஆகாரம்; வேறு எதுவும் சீரணம் ஆவதில்லை. எல்லோரும் என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். 'என்னால் சீரணிக்க முடியாது' என்று மறுத்தேன். ஆனால் சுவாமியும் வற்புறுத்தவே நன்றாகச் சாப்பிட்டேன். என்ன ஆச்சர்யம்! அன்றிரவுதான் அயர்ந்த, சுகமான நித்திரை.

ரமண மகரிஷி - Page 2 11


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:13 am

சுவாமிகளிடம் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. முதலில் நான் சுவாமிகளிடம் போவதை விரும்பாத என் குடும்பத்தினர் என் பிணி நீங்கியதைக் கண்டதும் பகவான் சந்நிதானத்துக்கே தினந்தோறும் அன்னம் அனுப்பஆரம்பித்தனர். 'அடடா!' எத்தனையோ மருந்துகளுக்கு எவ்வளவோ ரூபாய் செலவழித்தோமே! முன்னமேயே இவரது பெருமையை உணராமல் போனோமே' என்று தோன்றியது.

எச்சம்மாள் என்று ரமணாசிரமத்தில் அழைக்கப்பட்டுவந்த ஓர் அம்மணி இருந்தாள். அவருடைய அநுபவங்கள் இதைவிட ஆச்சரியமானவை. மிகவும் பரிதாபமான நிலையில் இவ்வம்மை ஆசீரமத்தை அடைந்தார். அருமைக் கணவனைப் பறிகொடுத்த துயரம் ஆறும் முன்னரே புதல்வர் இருவரும் ஆவி துறந்தனர். எச்சம்மாளின் துயரம் சொல்லும் தரமன்று.

வீட்டில் வசிக்க மனம் சகிக்கவில்லை. வீட்டைத் துறந்து, தீர்த்த யாத்திரையாகக் கோகர்ணத்துக்குச் சென்றார். வடநாட்டிலேயே பல சாதுக்களை அடுத்து சேவை செய்தார். ஆனால் மனத் துயரம் சிறிதும் ஆறவில்லை.

இதன் பின் சுவாமிகளைக் கேள்வியுற்று திருவண்ணாமலையை அடைந்தார். மலை மீதிருந்த சுவாமிகளைத் தரிசித்தார். அவர் அசையாது வீற்றிருந்தார். எச்சம்மாளும் நின்ற இடத்திலேயே ஒருமணி நேரம் நின்றிருந்தார். வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இம் மௌன தரிசனம் அவரது எண்ணங்களில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றார். பொழுது போய்க் கொண்டிருந்தது.

மாலையும் வந்தது. பிறகு சற்று சமாளித்துக் கொண்டு பிரியாமல் பிரிந்து சென்றார். சுவாமிகளின் அருளால் தம் துயர் எல்லாம் மறைந்துவிட்டதாகக் கூடவந்த தோழியிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்.


அன்று முதல் எச்சம்மாள் திருவண்ணாமலையிலேயே வசித்து வந்தார். தாம் இருந்தவரைக்கும் முப்பது வருடங்களுக்கு மேலாக, முதலில் சுவாமிகளுக்கு அன்னம் படைக்காமல் இவ்வம்மை சாப்பிட்டதில்லை. இவ்வம்மையின் செல்வமெல்லாம் கைங்கரியத்திலேயே செலவாயிற்று. சுவாமிகள் மலைமேல் வசித்துவந்த காலத்தில் எச்சம்மாளின் வீடு ரமண பக்தர்கள் தங்கும் ஒரு சத்திரமாகவே விளங்கியது. ஞான ராக்கியத்திலே எச்சம்மாள் மிகுந்த முன்னேற்றம் அடைந்தவர். அனேகமாக எப்போதும் தியானத்திலேயே ஆழ்ந்திருப்பார்


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:14 am

முதல் மேல் நாட்டு பக்தர் - பாகம் 8

ஐரோப்பியர்களில்முதல் முதலாக சுவாமிகளை நாடி வந்தவர் எப்.எச்.கம்ப்ரீஸ்(Hambris) என்பவரே. 1911-ஆம் ஆண்டு முதல் போலீசு சூப்ரெண்டாக வேலை பார்த்த போதிலும் மிகுந்த மதப்பற்றுள்ளவர். பூர்வப் பிறவியில் தான் ஒரு சித்தர் குழுவில் இருந்ததாக அவருக்கு ஒரு நம்பிக்கை. திரு கம்ப்ரீசு மும்முறை சுவாமிகளைச் சந்தித்து, நடந்த உரையாடல்களை எழுதி இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்பினார்.



'இண்டர்நேசணல் சைக்கிக் கெசட்' என்ற பதிரிக்கையில் பிரசுரமாயின. இதன் பிறகு திரு கம்ப்ரீசு தன் வேலையை உதறிவிட்டு கதோலிக்க சந்நியாசி ஆகிவிட்டார். இவர்களின் உரையாடல்களில் சில பாகங்களைக் கீழே காணலாம்:

கம்ப்ரீசு: உலகுக்கு நான் ஏதாவது உதவி செய்யக் கூடுமா? சுவாமி: முதலில் நீ உனக்கு உதவி செய்து கொள்; அதன் மூலம் உலகுக்கே உதவி உண்டு கம்ப்ரீசு: உலகுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன்; செய்யலாம் அல்லவா?


சுவாமி:ஆகா, செய்யலாம்; உனக்கு உதவி செய்வதன் மூலம் உலகுக்கே உதவி செய்தவன் ஆகிறாய். நீ இருப்பது உலகில் தானே? நீ தான் உலகம்; உலகத்தினின்றும் நீ வேறல்ல; உலகமும் உன்னிலிருந்து வேறுபட்டது அன்று.

கம்ப்ரீசு: பெரியோய்! பூர்வம், கிருட்டினன், ஏசு போன்றோர், பல அற்புதங்களைச் செய்தனர். என்னாலும் அவ்வாறுசெய்ய முடியாதா?


சுவாமி: அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்போது இவர்களுள் யாராவது இயற்கைக்கு மாறுபட்ட ஆச்சரியங்களைச் செய்கிறோம் என்று உணர்ந்தா செய்தார்கள்?

கம்ப்ரீசு: (சிறிது யோசனை செய்த பின்னர் ) இல்லை. இதன் பின் சித்து விளையாட்டுச் சக்திகளை அடைவதில் ஆசை கொண்டு மோசம் போகாமல் ஆத்ம விசாரத்தின் மூலம் முக்தியடையும் மார்க்கத்தைத் தேடுமாறு அவருக்கு உபதேசித்தருளினார்.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:15 am

ரமண மகரிஷி - பாகம் 9

முதல் தடவையிலேயே சுவாமிகள் தமது அன்னையிடம் குடும்ப பாசம் அற்றுவிட்டது என்று அறிவித்திட்ட போதிலும் அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். 1914-ஆம் ஆண்டு ஒரு தடவை அன்னை உடல் நலம் குன்றி இரண்டு மூன்று வாரம் படுத்த படுக்கையாய் இருந்தார். அப்போது சுவாமிகள் விருபாட்சக் குகையில் வாசம். வியாதியுற்ற அன்னையை அவர்கள் வெகு அன்புடன் பராமரித்து பணிவிடைகள் செய்தார். குணப்பட்டவுடன் அன்னை மானாமதுரைக்குத் திரும்பிச்சென்றார். ஆனால் வெகு சீக்கிரத்தில் திருவண்ணாமலைக்குத் திரும்பி வரும்படி நேரிட்டது.



1900-ஆம் ஆண்டு அன்னையின் மூத்த புதல்வன் மரனமடைந்தார். மைத்துனரும் காலம் சென்றார். பிரிவினையாகாத ஏழைக்குடும்பம் வறுமையில் சிக்கியது. பின்னர் நாக சுந்தரத்தின் இளமனைவியும் ஓர் ஆண் மகவை விட்டுவிட்டுப் பரகதி அடைந்தாள். இப்படிப்பட்ட பெரும் வியாகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படவே அன்னையின் மனம் மாறிற்று; வீட்டைத் துறந்து இரண்டாவது புதல்வன் மீது மனம் சென்றது; 1916-ல் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு சுவாமிகள் கந்தாசிரமத்தில் வசிக்கலானார். அது சற்று விசாலமான இடம். இங்கே வந்த பின்னர் அன்னை சமையல் கைங்கரியத்தைத் தாமே மேற்கொண்டு தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார். அதிதிகள் அனைவருக்கும் அன்னம் படைக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆசிரமத்தில் ஏற்பட்டது.


நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது.


சில நாளைக்கெல்லாம் அன்னையின் விருப்பத்திற்கிணங்க, கடைசிக் குமரனும் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். அழகம்மையார் 1916- ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் சாசுவதமாகத் தங்குவதற்கு வந்ததும் பக்தர்கள் பலர் கலக்கம் அடைந்தனர். சுவாமிகளுக்கு இது பிடிக்காமல் போய் திடீரென்று எங்காவது வேறு இடத்திற்கு நடந்துவிடப் போகிறாரே! என்று அஞ்சினர்.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:23 am

ரமண மகரிஷி - Page 2 12

ஆனால் நல்ல வேளையாக இம்மாதிரியான முடிவு ஒன்றும் ஏற்படவில்லை. ஆயினும், கொஞ்ச நாள்வரைக்கும் அன்னைக்கு இடம் பழக வில்லை.

சுவாமிகளின் போக்கு அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. பக்தர்களிடம் சுவாமிகள் சகசமாகப் பேசுவார்; ஆனால், தாயிடம் பேசுவதில்லை. அன்னைக்கு இதனால் மனத்தாங்கல் ஏற்பட்டது இயற்கையே.

ஆனால் வெகு சீக்கிரத்திலேயே இதன் அர்தத்தை அழகம்மையார் உணர்ந்து கொண்டார். "ஆசிரமத்திலுள்ள எத்தனையோ பேரில் அன்னையும் ஒருவர், அவ்வளவுதான். அவரின் அன்னை என்பதற்காகத் தனி உரிமைகள் ஒன்றும் அவருக்கு இல்லை" என்ற உண்மை புலப்பட்டது.

இப்படிப் பட்ட சிறு சம்பவங்களைக் கொண்டே தனது மாதாவின் மனத்தைப் பக்குவப்படுத்தி, முழு முக்தியான சமாதி நிலைக்குத் தயாராக்கினார். தனது பேச்சு, மௌனம், நடத்தை ஆகியவை மூலம் தாயின் ஞான வாழ்வைச் செம்மையுறச் செய்தார். அரிய உபதேசங்கள் புரிவார். உண்மை நிறைந்த கதைகளைச் சொல்லுவார்.


லௌகீக வாழ்வில் நீடித்த வழக்கத்தினால் ஏற்பட்ட வைதீக ஆசாரங்களில் உள்ள மூட நம்பிக்கைகளைச் சிறிது சிறிதாக மாற்றவும் முற்பட்டார். ஆனால் கட்டாயப்படுத்துவது மட்டும் இல்லை. சிரிய சிரிப்புச் செய்கைகளினாலேயே இவற்றை விலக்கி வெற்றி பெற்றார்.

"அடடா, உன் புடவையை யாரோ தொட்டுவிட்டார்களே! ஐயையோ, தீட்டு தீட்டு! மடி கெட்டுப் போச்சே! போச்சு ஆசாரம்; போச்சு பக்தியெல்லாம்; மோட்சத்துக்கு குறுக்கே நிற்பதெல்லாம் இதுதான்" என்று சிரிப்பார்.

அழகம்மாளின் அந்திய காலத்தின் ஆறு வருடங்கள் இவ்வாறாகக் கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் முனிவரிடம் பூரண நம்பிக்கை வைத்து, அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், முனிவரின் பக்கத்திலிருந்து அவருக்குப் பூரணமான ஞானத்தைப் புகட்டமுடிந்தது.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:25 am

அன்னையின் மகா சமாதி - பாகம் 10

1922- ஆம் ஆண்டு மே திங்கள் 10-ம்நாளன்று அன்னையின் ஆவி முடிவுற்ற தினம். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. அன்னையின் மார்பில் வலக் கையையும் தலையில் இடக்கையையும் வைத்துக்கொண்டு மகரிஷிகள் நாள் முழுவதும் கண் கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின் பிராணன் இதயத்தில் ஒடுங்கிப் புனிதமான அருட்ஜோதி ஆனந்தத்தில் கலந்தது.


அன்றுதான் அன்னையின் கடைசி நாள் என்று தெரிந்ததும் பக்தர்கள் பலர் மத்தியானமே சாப்பிடவில்லை. இரவு மறுபடியும் சமையல் ஆயிற்று. ஆனால் மகரிஷிகள் சாப்பிடக்கூட எழுந்திருக்கவில்லை. மூச்சு அடங்கி அன்னை மகா சமாதி அடைந்த பின்னரே எழுந்தார். அவர் குரலில் எந்தவிதமான கவலையோ, தழுதழுப்போ இல்லை.

"இனி நாம் சாப்பிடலாம், சாப்பிட வாருங்கள். தீட்டும் இல்லை, ஒன்றும் இல்லை." என்று அழைத்து எப்போதும் போல் பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தனர்.

மறுநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. உறவினர் வந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். சுவாமியும் அவர்களுள் ஒருவரைப் போலவே தோன்றினார். உடற் கோயிலை அலங்கரித்து மலைக்கு அப்பாலுள்ள பாலி தீர்த்தம் என்னும் இடத்துக்கு எடுத்துச் சென்றனர்.

ரமண மகரிஷி - Page 2 13


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:25 am

ரஸ்தாவுக்கு அப்பால் ஒரு குகை செய்து, பூ மேனியை இருத்தி உட்காரவைத்து, ஏராளமாக விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றைக் கொட்டினர். அதன் மேல் சமாதி கட்டி ஒரு லிங்கம் ஸ்தாபித்தனர்.

மாத்ருபூதேஸ்வரர் என்றபெயருடன் இன்றைக்கும் அதற்குத் தூப தீப நைவேத்தியங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கிருஷ்ணபட்சம் நவமி திதியில் மாத்ருபூதேஸ்வர மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

மகா பூஜையின் உட்கருத்து பின்வருவனவற்றால் நன்கு விளங்கும்: சில நாள் சென்றபின் அன்னை போய்விட்டதைப் பற்றி ஒருவர் பிரஸ்தாபித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் குறுக்கிட்டு, "இல்லை போய்விட்டாளாவது? .... கலந்துகொண்டாள்....... அவ்வளவுதான்." என்றுகூறினார்.

மற்றொருமுறை மகரிஷிகள் கூறியதாவது: " ஆமாம்! அவளிடம் இதுபலித்தது. இதற்கு முன் வேறு ஒருவருக்கு- முடிவு நெருங்கியபோது-- இதே முறையைக் கையாண்டேன்; ஆனால் காரியம் சித்திக்கவில்லை. கண்ணைத் திறந்து ஒருமுறை விழித்தார். பிராணன் போய்விட்டது."

அன்னையின் உச்சிக் கமலத்திலும், இருதயகமலத்திலும் கரங்களை வைத்துக் கொண்டிருந்த அந்த பத்துப் பன்னீரண்டு மணி நேரத்தில் நேர்ந்த சம்பவங்களைக் குறித்து மகரிஷிகள் சொல்லியிருப்பதாவது:

" இயற்கையாக அமைந்த எண்ணங்களும் பூர்வ ¦ஜன்ம அநுபவங்களும் வெகு துரிதமாக வேலை செய்தன. வெளி உலகத்தின் அறிவு மங்கிவிட்டதால் சூக்ஷம நிலையிலே ஒவ்வொரு காட்சியும் அவள் முன்பு அடுத்தடுத்துத் தோன்றி மறைந்தது. அந்த ஆத்மா எத்தனையோ விதமான அநுபவங்களில் ஆழ்ந்து வெகு வேகமாகக் கடைத்தேறிச் சென்றது."

அச்சமயத்தில் பகவான்தமது திருக்கரங்களை அன்னையின் சிரத்திலும், மார்பிலும் பதித்து, ஜீவனை இருதயத்தில் ஒடுங்கச் செய்யாதிருந்தால் அது எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கவேண்டிஇருந்திருக்கும்.

கடைசியாக ஆத்மாவானது பல பல சூக்‌ஷ்ம சரீரங்களைக் களைந்தெறிந்து அஞ்ஞான நிலையை முடிவாகக்
கடந்து, நித்தியானந்த நிர்வாண நிலையாகிய மீளாப் பதவியை அடைந்தது.

தெய்வீகமணம் கமழும் ஆசிரமத்தின் புனிதமான காட்சியையும் அன்னையின் சமாதியின் மேல் பகவான் கொண்டுள்ள பக்தியையும் உணர்ந்தோருக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.

மாத்ருபூதேஸ்வர மகா சந்நிதானம்.

அன்னையின் சமாதியின் மேல் சாஸ்திர லட்சணம் பொருந்திய ஓர் ஆலயம் அமைக்கப்பெற்றுள்ளது. பகவான் அதைத் தம் அநுக்கிரகத்தால் பிரதிஷட்டை செய்து பக்தர்கள் தம் தம் அபீஷடங்களை அடைய உதவி செய்துள்ளார்.


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by சிவா Thu Mar 04, 2010 10:25 am

ஸ்ரீ ரமணாசிரமம் - பாகம் 11

முதலில் கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பெற்றிருந்த அன்னையின் சமாதிக்கு ஸ்ரீ ரமண பகவான்
ஸ்கந்தாசிரமத்திலிருந்து அடிக்கடி வந்து போவதுண்டு. 1922- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பகவான் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். நாளடைவில் பக்தர்களும் அங்கேயே வந்து கூடித் தங்கிப் பகவானைத் தரிசிக்க ஆரம்பித்தனர். அதனால் இச்சந்நிதி வரவர பற்பல அழகிய கட்டிடங்களாக வளர்ச்சியுற்று, தற்போதுள்ள 'ஸ்ரீ ரமணாச்சிரமம்' ஆயிற்று.

பரிபூரண சமத்துவமே பகவானின் தினசரி வாழ்வாயிற்று. நம் நாட்டின் பரம ஏழை ஒருவன் தனது உடலின்
தேவையாக எவ்வளவு உடுத்தியிருப்பானோ அதைவிடக் குறைவான உடையையே-ஒற்றைக் கௌபீனத்தையே - அவர் தமது இறுதி நாள் வரை உடுத்திவந்தார். உணவிலும் அப்படியே. அனைவருடனும் சமமாக அமர்ந்தே அவர் உண்பார்.


அனைவருக்கும் எது பரிமாறப்படுகிறதோ அதை மட்டுமே, அதிலும் குறைந்த அளவிலேயே, தாம் ஏற்றுக்கொள்வார். அவர் சந்நிதியில் யார் எதைக் கொண்டுவந்து சமர்ப்பித்தாலும் அது அவ்வப்போதே அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டு வினியோகிக்கப்படும். பசு, நாய், குரங்கு, அணில், மயில் முதலிய சகல ஜந்துக்களுக்கும் அங்கு அத்தகைய சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட்டு வந்தன. 'பசு லக்ஷிமி' ஆசிரமத்தின் செல்வ மகள் போல் வாழ்ந்து இறுதியில் பகவானது ஹஸ்த தீக்ஷையுடன் 18-06-1948 இல் முக்தியடைந்தாள்.

பகலும் இரவும் பகவான் வாழ்ந்துவந்த அறையின் கதவுகள் திறந்தே இருக்கும். அகண்ட சிதாகாச வெற்ற வெளியாக விளங்கிய அவருடைய வாழ்வில் மறைவேது? மறைந்திருக்க அவசியம் ஏது? நடு நிசியிலும் கூட அன்பர்கள் சென்று அவரைத் தரிசிக்கலாம். "நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவிலா உள்ளத்தவர்" என்பது ஆன்றோர் வாக்கன்றோ? அவரது தரிசனம் சகலர்க்கும் சதாகாலமும் நிபந்தனையற்ற பாக்கியமாக இருந்தது.

ரமண மகரிஷி - Page 2 14

ஆசிரமத்தின் ஆதிக்காலத்தில் கள்வர் சிலர் நடுநிசியில் வந்தபோதுங்கூட,பகவான், " உள்ளேவந்து வேண்டியதை எடுத்துப்போகலாமே " என்று வரவேற்பளித்தனரென்றால், அவரது வெற்ற வெளி வாழ்வுக்கு வேறென்ன சான்று வேண்டும்?


ரமண மகரிஷி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமண மகரிஷி - Page 2 Empty Re: ரமண மகரிஷி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum