புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
81 Posts - 68%
heezulia
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_m10தமிழக காவல்துறையின் வரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக காவல்துறையின் வரலாறு


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 04, 2010 8:33 pm

தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ...
1659 - மதராஸ்பட்டணத்தின் (பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை) பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல்.
1770 - சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி, பொது சுகாதாரம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1771 - சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்ட்ரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்.
1780 - காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பதவி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்களை கண்காணித்து, பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.
1782 - தவறுகளைத் தடுக்கவும், மோசடிகளை தடுக்கவும், சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்குவது குறித்த விரிவான திட்டத்ைத போஃபாம் என்பவர் உருவாக்கினார்.
1791 - கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் (லஞ்சம்) வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது.
1806 - 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பி.யாக வால்டர் கிரான்ட் பதவிேயற்றார்.
1815 - மெட்ராஸ் எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்.
1829 - 1832 - மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், செயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1834 - முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும், டி.எஸ்.பியாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்.
1856 - போலீஸ் சட்டம் 12 திருத்தப்பட்டது. அதன் படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி. போட்லர்சன் நியமிக்கப்பட்டார்.
1858 - ராபின்சன் தலைமை போலீஸ் ஆணையராக (ஐஜி) நியமிக்கப்பட்டார்.
1859 - நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்குதான் ஆரம்பித்தது. போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது. 1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்.
1865 - தற்போதைய போலீஸ் (டிஜிபி) தலைமையிடம் அமைந்துள்ள கட்டடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
1874 - இந்தக் கட்டடத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ. 20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ. 10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1884 - மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது.
1895 - கை விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது.
1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையர் தலைமையிலும், தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன.
1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. பாவ்செட் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.
1909 - கிங்க்ஸ் போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது.
1919 - மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான். பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
1928 - சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப் பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1929 - மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப் பிரிவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது.
1935 - பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
1946 - போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது.
1947 - சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி, டெல்லி ஐபியின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்.
1951 - மெட்ராஸ் மோப்ப நாய்ப் படை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்ப் படைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது.
1956 - போலீஸ் ரேடியோ அலுவலகம் உருவாக்கப்பட்டது.
1959 - தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது.
1960 - போலீஸ் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.
1961 - மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது.
- மாநில தடயவியல் ஆய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது.
1963 - மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழு அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
- ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.
1971 - போலீஸ் கம்ப்யூட்டர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான்.
- கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது.
- தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது.
1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.
1976 - ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை, பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.
- சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.
1979 - தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது.
- தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்.
1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது.
1984 - சிஐடி வனப் பிரிவு உருவாக்கப்பட்டது.
1989 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது.
- காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
1991 - காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.
- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது.
1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
- தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது.
1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
1994 - கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
1997 - மதக் கலவரங்களைத் தடுக்க விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
2001 - புதிய நூற்றாண்டில், தமிழக காவல்துறை 91,331 போலீஸார், 11 சரகங்கள், 30 போலீஸ் மாவட்டங்ள், 2 ரயில்வே மாவட்டங்கள், 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சர்க்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது.
- சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஐஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
2003 - நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம், 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன.
- 177 போலீஸ் கிளப்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.
2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் ஆகும்.
- சந்தனக் கடத்தல் வீரப்பனை கொன்று தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பெரும் சாதனை படைத்தது.
2005 - செங்கை கிழக்கு காவல் மாவட்டம், சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது.
2006 - ஆசியாவிலேயே மிகப் பெரியதும், நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது.
2007 - சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக