ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_c10 
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 9 of 50 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா Tue May 04, 2010 6:14 pm

///இனி, அடுத்த பகுதியில் ஒருவகைப் பாடல் எழுதப் போகிறோம்.///

நன்றி ஐயா! நாங்களும் பாடல் எழுதிப் பழகுகிறோம்!


மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by ஹாசிம் Tue May 04, 2010 6:45 pm

நன்றி ஐயா அடுத்த பாடத்தை எதிர்பார்கிறேன் மரபுப் பா பயிலரங்கம் - Page 9 678642


நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sun May 09, 2010 5:32 pm

( பல்வேறு பணியழுத்தங்களால் காலம்தாழ்ந்தது; பொறுத்துக்கொள்க - த.ந.)

13. வெண்செந்துறை

பாட்டின் உறுப்புகளாக உள்ள எழுத்து, அசை, சீர், அடி, தொடைகளைப் பற்றி அறிந்துகொண்டோம். இனிச் சிலவகைப் பாடல்களை இயற்றப் பயில்வோம்.

நாம் முதலில் எழுத இருக்கும் பாட்டு வெண்செந்துறை ஆகும். இப் பாடல் எழுதல் மிக எளிமையாகும்.

இலக்கணம் இவையே :

1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம்.

2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.

3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து இருக்க வேண்டும்.

4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.

பொதுவாக, சிறந்த பொருளும் ஒழுங்கான ஓசையும் பெற்றிருக்க வேண்டும். (விழுமிய கொருளும் ஒழுகிய
ஓசையும் என்பர்)

முதலில் நாற்சீர் வெண்செந்துறை எழுதுவோம்.


எடுத்துக் காட்டு :

நற்றமிழ் மக்களை நசுக்கிய சிங்களன்
உற்ற வெற்றி உமிழத் தக்கதே.

இதில், முதலடியில் ந-வுக்கு ந மோனையாக வந்துள்ளது. இரண்டாமடியில், உ-வுக்கு உ மோனையாக வந்துள்ளது.
முதல் அடியின் இரண்டாம் எழுத்தும், இரண்டாம் அடியின் இரண்டாம் எழுத்தும் ற்- ஆக எதுகை அமைந்துள்ளது.

ற்றமிழ் மக்களை சுக்கிய சிங்களன்
ற்ற வெற்றி மிழத் தக்கதே.

புரிகிறதா? சரி. இன்னொரு எடுத்துக்காட்டு :

வு விடுதியில் ழைக்கும் சிறுவரை
நினைக்கும் பொழுதே நெஞ்சம் நடுங்கும்.

பழந்தமிழ் நூலில் இருந்து ஓர் எடுத்துக்காட்டு :

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இப்பொழுது பெரும்பாலும் புரிந்திருக்கும்.

எழுதிக் காட்டுங்கள். என்ன தோன்றுகிறதோ அந்தக்கருத்தை வைத்து எழுதுங்கள்.
பிழையாக இருக்குமே எனக் கொஞ்சமும் தயங்க வேண்டா. திருத்தி அமைத்துக்கொள்ளலாம். வாருங்கள், எழுதுங்கள். உதவ அணியமாயிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பார்த்துக் கருத்துரை எழுதுகிறேன்.
வருக, வருக! எல்லாரும் கலந்து கொண்டு எழுதுக!


Last edited by தமிழநம்பி on Mon May 10, 2010 4:29 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by ஹாசிம் Sun May 09, 2010 6:31 pm

மிக்க நன்றி ஐயா மிகவும் அவசியமான பாடமிது
இன்றுதான் கற்றுக்கொண்டேன்
எனது பாடல் சரி பிழை கூறுங்கள் ஐயா

ன்னை என்ற த்தியாயம் கற்றால்
ன்பில் குறைவில்லா கிலம் காண்பாய்

மிக்க நன்றி ஐயா மரபுப் பா பயிலரங்கம் - Page 9 678642


நேசமுடன் ஹாசிம்
மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sun May 09, 2010 10:16 pm

ஹாசிம் wrote:
ன்னை என்ற த்தியாயம் கற்றால்
ன்பில் குறைவில்லா கிலம் காண்பாய்



அருமை! பாராட்டுகின்றேன்.

மற்றவர்களும் எழுத முன்வருக!
தயங்காமல் எழுத அழைக்கின்றேன்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira Sun May 09, 2010 10:32 pm

”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..


மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Mon May 10, 2010 1:18 am

அருமையான எடுத்துக் காட்டு விளக்கத்துடன் பாடம் பயில இலகுவாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள்.

எனது பயிற்சி

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய் கண்டேன் உனையே!


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon May 10, 2010 7:40 am

Aathira wrote:”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பாராட்டுகிறேன்.

முன் பகுதிகளைப் படித்தால் செப்பமாகவும் சிறப்பாகவும் எழுதமுடியும்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon May 10, 2010 7:46 am

வழிப்போக்கன் wrote:

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய்க் கண்டேன் உனையே!

மிகச்சிறப்பு.

மனமார்ந்த பாராட்டு.

தொடர்ந்து படித்து எழுதுங்கள். மற்றவர்களையும் எழுத ஊக்கம் கொடுங்கள்.

ஈகரைத் தமிழ் உள்ளங்களே!
எளிதாக மரபுப்பாடல் எழுத வருக!
அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க என அழைக்கிறேன்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira Mon May 10, 2010 8:46 am

தமிழநம்பி wrote:
Aathira wrote:”அன்பின் பிடியில் டங்கும் பெண்ணை
ன்னை என்றால் கிலம் பூக்கும்”

இது சரியா ஐயா? இத்துனை ஆழமாக கற்க உதவிடும் தங்கள் தமிழ்த்தொண்டிற்குத் தலை வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி.. முன் பகுதிகளைப் படிக்க வில்லை.. படித்து விட்டு மறுமொழி இடுகிறேன் ஐயா.. மீண்டும் நன்றி..

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி ஐயா..

பாராட்டுகிறேன்.

முன் பகுதிகளைப் படித்தால் செப்பமாகவும் சிறப்பாகவும் எழுதமுடியும்.


மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Tமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Hமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Iமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Rமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Aமரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 9 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 50 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum