ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 44 of 50 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 08, 2011 6:34 pm

அன்பார்ந்த கிரி,

நீங்கள் எழுதிய ஏழு பாடல்களில் ஒவ்வொன்றைப் பற்றியும் நேற்றே குறிப்பு எழுதினேன். முன்பார்வைக்காகச் சொடுக்கிச் சரிசெய்துவிட்டு, அதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறேன். அன்பர்களின் திருமண வேலைகள் தொடர்பாக ஈடுபட்டதால் முன்னரே காலந்தாழ்ந்த நிலையில் என் பிழையும் காலத்தாழ்த்தத்தை நீட்டித்துவிட்டது. சரி, பாடல்களைப் பார்ப்போம்.

இயற்கை:

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
யாரங்கு வைத்தவள் சக்தி

ஈற்றுச்சீர் ஓரசைச்சீராக அமைக்க.

தென்னை இளங்காற்று திங்கள் மதுமலரும்
என்னதோர் சுகமென்று எண்ணஇடி காற்றுமழை
மின்னலையும் பின்வைத்த தேன்

என்னதோர் சுகமென்று – விளம் முன் நிரை வந்துள்ளது. திருத்துக.

வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றரசுமென
பூமிக்குப் போட்டவிதி யேன்?

யாப்பு சரி. இரண்டாம் அடியின் கருத்து- எனக்கு விளங்கவில்லை.
விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.
சிறு திருத்தம்! நீங்களே வேறு வண்ணமாகவும் திருத்தலாம்.

தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மானிடமொன் றில்லாமை யாம்

சரியாக உள்ளது. மூன்றாம் அடியின் பொருத்தத்தை விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

அழகு:

ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமெழில் அரவமென ஆற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.

ஆடுமெழில் அரவமென – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்துக.


வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனழைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்

தேனழைந்த – தேனமைந்த என்றிருக்க வேண்டுமா?

திருதங்கள் செய்து பாடல்களை மறுபடியும் தருக.
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 08, 2011 6:40 pm

kirikasan wrote:ஐயா அவசரத்தில் மேலே யுள்ளவை பல பிழைகளுடன் செய்துவிட்டேன்
மன்னிக்கவும் திருத்துகிறேன்


திருத்தம்:

செந்தமிழ் சொல்சேர்த்து சிந்தியல்வெண் பாசெய்து
தந்தனன் முன்னே தருவினிலை பின்கனியாய்
நின்றநிலை கண்டனன் இங்கு

அன்புடனே நோக்கி அமைந்தகுறை தான்களைய
இன்பமுற வேண்டி இறைஞ்சினேன் இங்கிவன்
சிந்தியல் வெண்பாவும் செய்து
அருமை. இரண்டு பாக்களும் சரியாக உள்ளன.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 08, 2011 6:44 pm

nandhtiha wrote:ஐயா அவர்களுக்கு வணக்கம்


எந்த னிதயம்தான் எஃகா யிருந்திடினும்
சொந்தங்கள் தீயிற் சுருண்டதனை எங்ஙனம்யான்
சிந்தியலில் பாப்புனைவேன் செப்பு?

என்றும் மாறா அன்புடன்

நந்திதா
அருமை. சரியாக உள்ளது.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Wed Feb 09, 2011 12:27 am

வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க!

எங்கள் பதிவிற்குப் பின் பயிலரங்கில் சிறு அமைதி நிலவுவதாக உணர்ந்ததால், அவ்விறுக்கத்தைத் தளர்த்த வேகமாய் நானிட்ட பதிவுதான் நேற்றைய இரு வெண்பா முயற்சிகள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருமுன் ஐந்து நிமிடத்தில் எழுதி தவறுகள் இருக்கிறதா என்று சோதிக்கும் நிலையில் கூட இல்லாமல் இட்ட பதிவு. தாங்கள் திருத்திய வெண்பாக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நன்றிகள் பல.

அந்த எண்ணத்தை இங்கு சிந்தியல் வெண்பாவில் முயன்றுள்ளேன்.

நேற்றைய என்பதிவு பாவரங்கில் நீடித்த
மாற்றத்தைச் சீராக்க மாணாக்கி நானிட்ட
குற்றமற்ற உற்ற செயல்.

இலக்கணத்தில் ஏதும்பிழை இல்லையென் றேதான்
சிலகணப் பொழுதிற்குள் சிந்தனைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்

பனையோலை கேட்டுநா னெழுதிய பாடலின்
வினைதிருத்தி சீராக்கி வோதும்வித் தைகண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

சகோதரி நந்திதாவிற்கு,

தண்டனை ஏதும் இல்லை தமிழிடம் கோபம் இல்லை
கண்ணின் மணியைப் போலநாம் காப்போம் தமிழின் எல்லை
தண்ணொளி வீசும் நம்தமிழை தாகம் தீரப் பருகவந்த
பெண்டிர் நமக்குள்ளே கருத்து பகிர்வதில் தடையும் இல்லை

அன்புடன்
யாதுமானவள்


Last edited by Yaadhumanaval on Wed Feb 09, 2011 12:36 am; edited 1 time in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Wed Feb 09, 2011 12:33 am

வணக்கம் அய்யா,

முந்தைய பாடலின் திருத்தம்.

நற்குணமும் நல்மதியும் நல்லனவாய்ச் சேர்ந்ததினால்
சொற்சிதற வாழ்த்தஎமை சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

மிக்க அன்புடன்,
யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Feb 09, 2011 1:41 pm

நேற்றைய என்பதிவு பாவரங்கில் நீடித்த
மாற்றத்தைச் சீராக்க மாணாக்கி நானிட்ட
குற்றமற்ற உற்ற செயல்.

இலக்கணத்தில் ஏதும்பிழை இல்லையென் றேதான்
சிலகணப் பொழுதிற்குள் சிந்தனைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்

பனையோலை கேட்டுநா னெழுதிய பாடலின்
வினைதிருத்திச் சீராக்கி வோதும்வித் தைகண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

முதல் பாடல் சரியாக உள்ளது.

இரண்டாம் பாடலில் –
ஏதும்பிழை – கனிச்சீராக உள்ளது.
சிலகணப் பொழுதிற்குள் – விளம் முன் நிரை உள்ளது.
திருத்துக.

மூன்றாம் பாடலில் –
பாடலின் வினைதிருத்தி – விளம் முன் நிரை வந்துள்ளது.
தைகண்டு வியந்து – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்துக.

தொடர்ந்து எழுதிப் பழகின் எளிமையாக இருக்கும்.
சிறப்பாகவும் அமையும்.
நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Feb 09, 2011 1:43 pm

நற்குணமும் நல்மதியும் நல்லனவாய்ச் சேர்ந்ததினால்
சொற்சிதற வாழ்த்தஎமை சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

சரியாக அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Wed Feb 09, 2011 2:14 pm

எனது பயிற்சியின் திருத்தம் ஐயா!

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
ஈந்தவள் சக்தியெம் தாய்


தென்னை ஒளிமதியம் தென்றல் மலர்வாசம்
இன்பமென் றாக்கினாய் ஈசனே காற்றுமிடி
மின்னலைப் பின்தந்த தேன்



வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றாட்சியென
பூமிக்குப் போட்டவிதி யேன்?


(பேய்க்குணம் கொண்டவர் கையில் செங்கோலும், நோய் கொண்ட மனம் படைத்தவரும் அநீதியான அரசை செலுத்துபவருமே
அரசனாக வேண்டுமென்றும் பூமிக்கு(இலங்கையை எண்ணி) சட்டம் போட்டது யார்?)


மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.


தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மானிடமொன் றில்லாமை யாம்

(தாரகைகள் நிலவு சூரியன் இவைகள் ஒளி வீசுகின்றன. அதற்குக் காரணம் அங்கெல்லாம்
மனிதர் இல்லாததால் போலும். இருந்தால் அதன் தூய்மை கெட்டு
ஒளியின்றிப்போயிருக்குமோ (பூமியைப்போல) என்று கற்பனை செய்தேன்)

அழகு:
ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமொரு நாகமென் றாற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.


வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனமைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்


Last edited by kirikasan on Wed Feb 09, 2011 6:58 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Fri Feb 11, 2011 10:20 pm

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!

திருத்தங்கள் செய்திருக்கின்றேன். சரியாக உள்ளனவா என அறியத்தருவீர்.

இலக்கணத்தில் இல்லைபிழை என்றெண்ணி யேதான்
சிலகண நேரத்தில் சிந்தைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்.

பனையோலை கேட்டுநா னெழுதிய பாவின்
வினைதிருத்திச் சீராக்கி ஓதும்வி தம்கண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.


அய்யா எனக்கு இங்கு ஒரு சந்தேகம். நான் முதலில் எழுதிய பாவில் "ஓதும்வித் தைகண்டு" என்று எழுதியிருந்தேன். இப்போது எனக்கு ஒரு குழப்பம். சீரின் தொடகத்தில் வரும் "ஐ" எழுத்து நெடிலாகக் கொள்ளப்படும் என்று கூறினீர் அல்லவா? தைகண்டு இதில் தை/கண்/டு = நேர்/நேர்/நேர் - தேமாங்கனி என பிரித்தல் தவறா? அன்புகூர்ந்து என் ஐயத்தை நீக்குக.

[quote="தமிழநம்பி"][size=18]3. அசை பிரித்தல்

சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் கை நெடில் > நேரசை.(சீரின் முதலில் வரிசைச் சொல்)

போகையில் கையில் குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் வரிசைச் சொல்)

புன்னகை னகை குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் வரிசைச்சொல்)

மிக்க நன்றி.
அன்புடன் யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sat Feb 12, 2011 5:50 pm

kirikasan wrote:எனது பயிற்சியின் திருத்தம் ஐயா!

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
ஈந்தவள் சக்தியெம் தாய்


தென்னை ஒளிமதியம் தென்றல் மலர்வாசம்
இன்பமென் றாக்கினாய் ஈசனே காற்றுமிடி
மின்னலைப் பின்தந்த தேன்



வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றாட்சியென
பூமிக்குப் போட்டவிதி யேன்?


(பேய்க்குணம் கொண்டவர் கையில் செங்கோலும், நோய் கொண்ட மனம் படைத்தவரும் அநீதியான அரசை செலுத்துபவருமே
அரசனாக வேண்டுமென்றும் பூமிக்கு(இலங்கையை எண்ணி) சட்டம் போட்டது யார்?)


மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.


தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மாந்தரங் கில்லாமை யால்.

(தாரகைகள் நிலவு சூரியன் இவைகள் ஒளி வீசுகின்றன. அதற்குக் காரணம் அங்கெல்லாம்
மனிதர் இல்லாததால் போலும். இருந்தால் அதன் தூய்மை கெட்டு
ஒளியின்றிப்போயிருக்குமோ (பூமியைப்போல) என்று கற்பனை செய்தேன்)

அழகு:
ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமொரு நாகமென் றாற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.


வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனமைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்
அருமை, கிரி. தொடர்ந்து எழுதுங்கள்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 44 of 50 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum