ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 40 of 50 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 45 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Sun Jan 30, 2011 1:45 am

மிக்க நன்றி அய்யா,

தமிழ் மீது பற்றுதல் தினம் தினம் கூடுகிறது.

அறியாத முகங்களுக்கு அருந்தமிழ் வளர்த்திடத் தாங்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணமும்
தமிழ்மேல் தீராக் காதல் கொண்டு தமிழ் பயில வேண்டுமென்ற எங்கள் முயற்சியும்
திண்ணமாக நிறைவேற இம்மாபெரும் ஊடகம் துணையிருப்பது அதிசயமே. என்னே ஒரு விந்தை. அறிவியலின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

தங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழன்னைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 01, 2011 12:29 am

28. சிந்தியல் வெண்பா

இவ்வகைப் பாடல்களில், வெண்பாவின் பொது இலக்கணம் பின்பற்றப்படும். இன்னிசை வெண்பாக்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று இன்னிசைச் சிந்தியல் வெண்பா இன்னொன்று நேரிசைச் சிந்தியல் வெண்பா.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

1. இது மூன்றடிப்பாடல்.

2. முதல் அடியிலும் மூன்றாம் அடியிலும் நான்கு சீர்கள் இருக்கவேண்டும். மூன்றாம் அடியில் மூன்றுசீர் மட்டும் இருக்கவேண்டும்.

3. மூன்றாம் அடியின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்கவேண்டும்.

4. வெண்டளை பெற்றிருக்கவேண்டும். (நினைவுக்கு: மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்)

5. முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.

6. மூன்றடிகளும் ஓர் எதுகை பெற்று வரலாம்; முதலிரண்டடிகளும் ஓர் எதுகையாகவும் மூன்றாமடி வேறு எதுகையாகவும் வரலாம்; மூன்றடிகளும் வெவ்வேறு எதுகை பெற்றும் வரலாம். (எதுகை: இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது)

இவ்வாறு அமைவதே இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

எடுத்துக்காட்டு
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
– சிலப்பதிகாரம்.

மூன்றடிகளிலும் ஒரே எதுகை பெற்று வந்துள்ளது.

இன்னொரு எடுத்துக்காட்டு
உணர்வற்றாய்! பீடழிந்தாய்! ஓஒ தமிழா!
வணர்மரமாய் ஆனாய்! வளர்ந்தென் பயனே!
இழிவேந்தி நிற்கின்றாய் இன்று.
– த.ந.

முதலிரண்டடியிலும் ஓர் எதுகையும் மூன்றாமடியில் வேறு எதுகையும் பெற்று வந்துள்ளது.

பிறிதொரு எடுத்துக்காட்டு
பிச்சை எடுத்தே பிழைப்பாரும் மிச்சமின்றி
உண்ட உணவு செரிக்கமருந் துண்பாரும்
உள்ளதடா இந்த உலகு.
– அரங்க. நடராசனார்


உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒன்றை ஏதேனும் ஒருவகை எதுகையுடன் எழுதுக.
ஐயமிருப்பின் தயங்காது வினவுக.
எழுதத் தொடங்குக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Tue Feb 01, 2011 11:09 am

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காத்திடுவீர்!

சிந்தியல் வெண்பாவில் எனது முயற்சியைக் கொடுத்துள்ளேன். தவறுகள் திருத்துக.

ஒன்று :
கற்றைகற்றை யாயெதிலும் கையூட்டு பெற்றுதினம்
முற்றும் நமைமூடர் ஆக்கியேதான் ஆள்கின்றான்
நல்லதொன்றும் எண்ணா தவன்.


இரண்டு:
உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கம் எனஒன்று இல்.



அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 01, 2011 10:14 pm

ஒன்று :
கற்றைகற்றை யாயெதிலும் கையூட்டுப் பெற்றுதினம்
முற்றும் நமைமூடர் ஆக்கியே ஆள்கின்றான்
நல்லதொன்றும் எண்ணா தவன்
.


இரண்டு:
உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கம் எனஒன்று இல்
.


இரண்டு பாடல்களும் சரி.
எனஒன்று இல் – இதைச் சேர்த்தெழுதினால்
எனவொன் றில் என்றாகும்.
எனவொன் றில் – புளிமா நேர் - மா முன் நேர் ஆக வருகிறது.
வெண்டளை அமைய, மா முன் நிரையாக அமைக்கவேண்டும்.
அதாவது, மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் ஓரசைச்சீர்
வருமாறு அமையுங்கள்.
நான் கூறுவது புரியவில்லை என்றால் மீண்டும் கேளுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Tue Feb 01, 2011 10:32 pm

வணக்கம் ஐயா
செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் திறந்திடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 01, 2011 10:42 pm

நந்திதா, வணக்கம். வருக!

செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் திறந்திடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்


னினமீழத் திறந்திடுதல் – காய் முன் நிரை வருகிறது.
கலித்தளையாகிவிடும்.

காய் முன் நேர் வரும்படி அமைத்து எழுதிக் காட்டுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Tue Feb 01, 2011 10:49 pm

வணக்கம் ஐயா




செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே


எந்த னினமீழத் தேங்கிடுதல் காண்கிலையோ


வந்திங்கு வாய்திறந்தா லென்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Feb 01, 2011 11:15 pm

nandhtiha wrote:வணக்கம் ஐயா




செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் தேங்கிடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்

அருமை! தொடர்ந்து எழுதுக!
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha Tue Feb 01, 2011 11:30 pm

மிக்க
நன்றி ஐயா



குறுமுனியும் காப்பியனும் குன்றெறிந்த செவ்வேள்
முறுவலோ டென்முன்னே நின்றனரோ என்னெபேன்
நறுந்தமிழ நம்பியை நான்


என்றும்
மாறா அன்புடன்



நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Wed Feb 02, 2011 12:04 am

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!

திருத்தமும் அதைத் தொடர்ந்து இன்னொரு முயற்சியும் கொடுத்துள்ளேன்

உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கந் தனைக்களைந்தான் பார்.
----------------
பகைவிலக்கி ஓர்குலமாய் பாரிலுள்ளோர் வாழ்ந்திட
வகைசெய்து பாங்குடனே வேண்டும்வளம் பெற்றிட
நகையுடனே நற்காரியம் செய்.


அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 50 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 45 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum