புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 36 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 36 of 50 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 43 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Dec 02, 2010 11:09 pm

kirikasan wrote:கூடுமிவர் தீரநடை கொண்டதிடி மேகமென
ஆடும்மழை யெண்ணிமயில் காண்

இப்படி எழுதுவது சரியானதோ ஐயா. முன்னையதில் கருத்து தெளிவற்றதோ?இப்படிவந்தால்பிழைத்துவிடுமே ஒரு நிமிடம் திருத்துகிறேன்

திருத்தம்
கூடுமிவர் தீரநடை கொண்டதிடி மேகமென
ஆடுமயி லெண்ணிமழை காண்
ஆடும்மழை - நேர் நேர் நிரை -தேமாங்கனி; ஆடுமழை - கூவிளங்காய்; எனவே, ஆடுமழை என்று எழுதினால் தளை தட்டாது. கருத்துத் தெளிவிற்கு நீங்கள் திருத்தியது சரியே.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Dec 02, 2010 11:15 pm

nandhtiha wrote:பெருமதிப்புக்குரிய ஐயா
வணக்கம்
நான் எழுதியதில் குறை உளதாகத் தோன்றுகிறது, காசினியில் உள்ளநாள் என்று தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சீர் தட்டுகிறது ஐயா.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
உள்ளநாள் – கூவிளம்; எனவே நான் அதை உள்ளநாளில் (கூவிளங்காய்) என்று மாற்றியதைக் கவனித்திருப்பீர்கள். எனவே, தளை தட்டாது.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 02, 2010 11:23 pm

பெருமதிப்புக்குரிய ஐயா
ஆம் தவறு என்னுடையது தான் .வருந்துகிறேன் இனி திருந்துகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 06, 2010 5:49 pm

அன்புடன் ஐயா இங்கே மீண்டும் என் ஆக்கம். தங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்



கொன்றவனைக் கொற்றவனாய் கொள்ளுவது குற்றமென
நின்றுலக நீதிதனைக் கேள்

ஓர்நிலமும் தாராமல் ஊர்பறிக்க வந்தவனை
நேரெதிர்த்து நின்றுதடை போடு

பெண்மகவு பேதமிலாப் பேரழிவு செய்துமுடி
கொண்டவனும் மன்னவனோ கூறு

ஆவென்று நாமலற ஆட்கொன்ற பேய்களையும்
கோவென்று கூறுவதோ கொள்

தேரசையும் ஊர்வலமும் தீந்தமிழாம் காணுமுலா
பேரரசென் றீழமெழும் பார்

நீதியெமைச் சேருமொரு நேர்மைவென்ற தாகவரும்
சேதியுடன் ஈழமெழு மாம்

சூழுமிருள் போயொளியும் சோதியென ஈழமொளிர்ந்
தாளுவதும் நேருமிதைக் காண்

ஆழமனம் கொண்டதொரு ஆசைநிறை வேறத்தமிழ்
ஈழமெழ ஏற்றசெயல் தேர்

ஈனமனம் கொண்டவரோ இவ்வுலகின் முன்குறுகித்
தானழிய செய்தபிழை கூறு

வென்றிடவே ஈழமதை வீறெழுந்து தாய்நிலத்தே
நின்றபகை வென்றதனை மீள்

வந்ததேசு தந்திரமும் வாழ்வுமென ஈழமதைச்
செந்தமிழில் போற்றுவதென் நாள்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Dec 06, 2010 7:57 pm

kirikasan wrote:அன்புடன் ஐயா இங்கே மீண்டும் என் ஆக்கம். தங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்



கொன்றவனைக் கொற்றவனாய்க் கொள்ளுவது குற்றமென
நின்றுலக நீதிதனைக் கேள்

ஓர்நிலமும் தாராமல் ஊர்பறிக்க வந்தவனை
நேரெதிர்த்து நின்றுதடை போடு

பெண்மகவு பேதமிலாப் பேரழிவு செய்துமுடி
கொண்டவனும் மன்னவனோ கூறு

ஆவென்று நாமலற ஆட்கொன்ற பேய்களையும்
கோவென்று கூறுவதோ கொள்

தேரசையும் ஊர்வலமும் தீந்தமிழாம் காணுமுலா
பேரரசென் றீழமெழும் பார்

நீதியெமைச் சேருமொரு நேர்மைவென்ற தாகவரும்
சேதியுடன் ஈழமெழு மாம்

சூழுமிருள் போயொளியும் சோதியென ஈழமொளிர்ந்
தாளுவதும் நேருமிதைக் காண்

ஆழமனம் கொண்டதொரு ஆசைநிறை வேறிடவே
ஈழமெழ ஏற்றசெயல் தேர்

ஈனமனம் கொண்டவரோ இவ்வுலகின் முன்குறுகித்
தானழிய செய்தபிழை கூறு

வென்றிடவே ஈழமதை வீறெழுந்து தாய்நிலத்தே
நின்றபகை வென்றதனை மீள்

வந்ததேசு தந்திரமும் வாழ்வுமென ஈழமதைச்
செந்தமிழில் போற்றுவதெந் நாள்?

அன்புடன் கிரிகாசன்
அருமை! நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கிரி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Dec 06, 2010 8:14 pm

யாதுமானவர், வழிப்போக்கனார் முதலானோர் குறள்களைக் காணவில்லையே! வந்து எழுதினீர்களானால் அடுத்தவகைக் குறள் எழுதும் பயிற்சிக்குப் போகலாம்! பிழையாகும் என்று தயங்க வேண்டா! திருத்திக்கொண்டு சிறப்பாக எழுதப் பயிலலாம். தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறி நடக்கும் குழந்தையே பின்னர் நடைசிறக்கும் மாந்தனாகவும் ஓட்டப்பந்தய வீரனாகவும் வளருவதைக் காணலாம். தயங்காது வந்து எழுதுக. எந்த ஐயமெழுந்தாலும் கேளுங்கள். ஐயந்தீர்த்து எழுதத் துணையிருக்கிறேன். வருக, வந்து எழுதுக.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 06, 2010 8:18 pm

மகிழ்கிறேன் ஐயா,
தவறின்றி எழுதியமைக்கும் தங்களிடம் பாராட்டை பெற்றமைக்கும். தொடர்ந்து மகிழ்வோடு நண்பர்கள் வரும்வரை காத்திருப்பேன்

அன்புடன் கிரிகாசன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 09, 2010 3:23 pm

நண்பர்களே,
கீழே தரப்பட்டுள்ளது எனது நண்பர் எனக்கனுப்பிய மின்னஞ்சல்..இதற்கு எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் விளக்கம் தரவும். நன்றி.


எனக்கு தமிழில் சிறு சந்தேகம் உள்ளது..
தாங்கள் தான் தீர்க வேண்டும்..
சமீபத்தில் வெண்பா பற்றி கேட்டு. படிக்க முயன்றேன்..
அப்பொழுது திருக்குறளை எடுத்து விதிகளை பரிசோதித்து பார்த்தேன்..

முக்கிய விதியில் குழப்பம் வந்தது..
காய் முன் நேர்
விளம் முன் நேர்
மா முன் நிரை
கீழ் உள்ள குறளில் தளை தட்டுகிறது..
எதில் தவறு என்று விளக்கவும்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இதில் வேண்டாமை -- கூவிளங்காய்
இலானடி -- நிரை நிரை -- கருவிளம்

ஆகையால் விளம் முன் நிரை ஆகி தளை தட்டுகிறது.. உதவிடுக.. விளக்கிடுக


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Fri Dec 10, 2010 8:44 am

அன்பரே,

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில.

இப்போது அலகிட்டு தளை காணுங்கள்!


Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 14, 2010 4:07 pm

மிக்க நன்றி குணமதி அவர்களே. மரபுப் பா பயிலரங்கம் - Page 36 678642

Sponsored content

PostSponsored content



Page 36 of 50 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 43 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக