Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 26 of 50
Page 26 of 50 • 1 ... 14 ... 25, 26, 27 ... 38 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
21. தளை – 3.
3. இயற்சீர் வெண்டளை
நின்ற சீர் இயற்சீராக இருக்க, வரும் சீரின் முதலசை ஒன்றாததாக இருந்தால் இயற்சீர் வெண்டளை என்று கூறப்படுகிறது.
இயற்சீர் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கென அறிவோம்.
மா முன் நிரை வருவதும், விளம் முன் நேர் வருவதும் இயற்சீர் வெண்டளை ஆகும்.
கற்க X கசடற
கற்க என்பது தேமா(ச் சீர்); வரும்சீரின் முதலசை கச – நிரை ஆகும்.
எனவே, மா முன் நிரை இயற்சீர் வெண்டளை ஆகும்.
இவ்வாறே,
கசடறக் X கற்பவை
கசடறக் – என்பது கருவிளம்; வரும்சீரின் முதலசை
கற் – நேர் ஆகும்.
இங்கு, விளம் முன் நேர் வந்துள்ளது, இயற்சீர் வெண்டளை ஆகும்.
(இயற்சீர் வெண்டளை முன்பு பயின்ற இரண்டு ஆசிரியத் தளைககளின் மாறி வந்துள்ளதைக் காணலாம்)
4. வெண்சீர் வெண்டளை
நின்ற சீர் மூவசைக் காய்ச்சீர் ஆக இருந்து வரும் சீரின் முதலசை நேர் அசையாக அமைந்தால், அது வெண்சீர் வெண்டளை ஆகும்.
இதைச் சுருக்கமாகக் காய் முன் நேர் என்று கூறுவர்.
இல்வாழ்வான் X என்பான்
இல்வாழ்வான் – தேமாங்காய் – காய்ச்சீர்.
என் – நேர் அசை.
காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை ஆகும்.
(வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு தளைகள் மட்டுமே இடம்பெறும்)
ஐயம் எழுந்தால் தயங்காது கேட்க! தளைகளை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஏனைய தளைகளை அடுத்ததாகப் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
3. இயற்சீர் வெண்டளை
நின்ற சீர் இயற்சீராக இருக்க, வரும் சீரின் முதலசை ஒன்றாததாக இருந்தால் இயற்சீர் வெண்டளை என்று கூறப்படுகிறது.
இயற்சீர் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கென அறிவோம்.
மா முன் நிரை வருவதும், விளம் முன் நேர் வருவதும் இயற்சீர் வெண்டளை ஆகும்.
கற்க X கசடற
கற்க என்பது தேமா(ச் சீர்); வரும்சீரின் முதலசை கச – நிரை ஆகும்.
எனவே, மா முன் நிரை இயற்சீர் வெண்டளை ஆகும்.
இவ்வாறே,
கசடறக் X கற்பவை
கசடறக் – என்பது கருவிளம்; வரும்சீரின் முதலசை
கற் – நேர் ஆகும்.
இங்கு, விளம் முன் நேர் வந்துள்ளது, இயற்சீர் வெண்டளை ஆகும்.
(இயற்சீர் வெண்டளை முன்பு பயின்ற இரண்டு ஆசிரியத் தளைககளின் மாறி வந்துள்ளதைக் காணலாம்)
4. வெண்சீர் வெண்டளை
நின்ற சீர் மூவசைக் காய்ச்சீர் ஆக இருந்து வரும் சீரின் முதலசை நேர் அசையாக அமைந்தால், அது வெண்சீர் வெண்டளை ஆகும்.
இதைச் சுருக்கமாகக் காய் முன் நேர் என்று கூறுவர்.
இல்வாழ்வான் X என்பான்
இல்வாழ்வான் – தேமாங்காய் – காய்ச்சீர்.
என் – நேர் அசை.
காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை ஆகும்.
(வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு தளைகள் மட்டுமே இடம்பெறும்)
ஐயம் எழுந்தால் தயங்காது கேட்க! தளைகளை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஏனைய தளைகளை அடுத்ததாகப் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
Last edited by தமிழநம்பி on Tue Aug 31, 2010 1:15 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
22. தளை – 4.
5. கலித்தளை
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை என்று பார்த்தோம். இதற்கு மாறாக, காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.
பல்லுலகும் X பலவுயிரும்
பல்லுலகும் – கூவிளங்காய்; பல – நிரையசை
காய் முன் நிரை வந்ததால் கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நிரையசையாகவும் இருப்பின் ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.
தண்டாமரைத் X தனிமலர்மிசை
தண்டாமரைத் – தேமாங்கனி; தனி – நிரையசை
கனி முன் நிரை வந்ததால் ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நேர் அசையாகவும் இருப்பின் ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.
செந்தாமரை X நாண்மலர்மிசை
செந்தாமரை – தேமாங்கனி; நாண் – நேரசை
கனி முன் நேர் வந்ததால் ஒன்றாத வஞ்சித்தளை.
இனி, ஒரு குறளில் தளைகளைப் பார்ப்போம்:
அகர X முதல X எழுத்தெல்லா X மாதி X
பகவன் X முதற்றே X உலகு.
அகர X முதல
அகர – புளிமா; முதல என்பதில் முதல் அசை முத – நிரையசை.
எனவே, மாமுன் நிரை, இயற்சீர் வெண்டளை.
இவ்வாறே,
முதல X எழுத்தெல்லா
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
எழுத்தெல்லா X மாதி
காய் முன் நேர், வெண்சீர் வெண்டளை.
மாதி X பகவன்
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
பகவன் X முதற்றே
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
முதற்றே X உலகு
மாமுன் நிரை(பு), இயற்சீர் வண்டளை. புரிகிறதா?
சரி, கீழ்க் காண்பவற்றிற்கு நீங்களே தளை கூறுங்கள்:
1. யாதும் ஊரே
2. வளிதிரிதரு திசையும்
3. கடுந்திண்டேர் களையினோ
4. வசையில்புகழ் பெற்றே
5. நெல்லும் உயிரன்றே
6. யாவரும் உரைப்பீர்
ஐயமிருப்பின் தயங்காது கேட்க!
புரியும் வரை விளக்கக் காத்திருக்கிறேன்.
5. கலித்தளை
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை என்று பார்த்தோம். இதற்கு மாறாக, காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.
பல்லுலகும் X பலவுயிரும்
பல்லுலகும் – கூவிளங்காய்; பல – நிரையசை
காய் முன் நிரை வந்ததால் கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நிரையசையாகவும் இருப்பின் ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.
தண்டாமரைத் X தனிமலர்மிசை
தண்டாமரைத் – தேமாங்கனி; தனி – நிரையசை
கனி முன் நிரை வந்ததால் ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நேர் அசையாகவும் இருப்பின் ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.
செந்தாமரை X நாண்மலர்மிசை
செந்தாமரை – தேமாங்கனி; நாண் – நேரசை
கனி முன் நேர் வந்ததால் ஒன்றாத வஞ்சித்தளை.
இனி, ஒரு குறளில் தளைகளைப் பார்ப்போம்:
அகர X முதல X எழுத்தெல்லா X மாதி X
பகவன் X முதற்றே X உலகு.
அகர X முதல
அகர – புளிமா; முதல என்பதில் முதல் அசை முத – நிரையசை.
எனவே, மாமுன் நிரை, இயற்சீர் வெண்டளை.
இவ்வாறே,
முதல X எழுத்தெல்லா
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
எழுத்தெல்லா X மாதி
காய் முன் நேர், வெண்சீர் வெண்டளை.
மாதி X பகவன்
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
பகவன் X முதற்றே
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.
முதற்றே X உலகு
மாமுன் நிரை(பு), இயற்சீர் வண்டளை. புரிகிறதா?
சரி, கீழ்க் காண்பவற்றிற்கு நீங்களே தளை கூறுங்கள்:
1. யாதும் ஊரே
2. வளிதிரிதரு திசையும்
3. கடுந்திண்டேர் களையினோ
4. வசையில்புகழ் பெற்றே
5. நெல்லும் உயிரன்றே
6. யாவரும் உரைப்பீர்
ஐயமிருப்பின் தயங்காது கேட்க!
புரியும் வரை விளக்கக் காத்திருக்கிறேன்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஐயா,
பயிற்சிகளை தாமதித்து தந்ததுக்கு மன்னிக்கவும். மறதி தேவன் மூளையை ஆட்சி புரியத் தொடங்கி நெடுநாள் ஆகிறது. எல்லாவற்றையும் திரும்ப பார்க்க வேண்டியதாயிற்று. ஆயினும், மீண்டும் முன்னையதுபோல் கவிப் பிரவாகத்தில் நீச்சலடிக்க தயாராகிவிட்டேன்.
இங்கே நான் செய்தது சரியா என்று பாருங்கள் ஐயா!
1. யாதும் ஊரே
யாதும் - தேமா, ஊ - நேர்,
எனவே மா முன் நேர் அதனால் நேர் ஒன்று ஆசிரியத்தளை
2. வளிதிரிதரு திசையும்
கனி முன் நிரை ஒன்றிய வஞ்சித்தளை
3. கடுந்திண்டேர் களையினோ
காய் முன் நிரை கலித்தளை
4. வசையில்புகழ் பெற்றே
கனி முன் நேர் ஒன்றாத வஞ்சித்தளை
5. நெல்லும் உயிரன்றே
தேமா -- மா முன் நிரை இயற்சீர் வெண்டளை
6. யாவரும் உரைப்பீர்
கூவிளம் -- விளம் முன் நிரை நிரை ஒன்று ஆசிரியத்தளை
அன்புடன் கிரிகாசன்
பயிற்சிகளை தாமதித்து தந்ததுக்கு மன்னிக்கவும். மறதி தேவன் மூளையை ஆட்சி புரியத் தொடங்கி நெடுநாள் ஆகிறது. எல்லாவற்றையும் திரும்ப பார்க்க வேண்டியதாயிற்று. ஆயினும், மீண்டும் முன்னையதுபோல் கவிப் பிரவாகத்தில் நீச்சலடிக்க தயாராகிவிட்டேன்.
இங்கே நான் செய்தது சரியா என்று பாருங்கள் ஐயா!
1. யாதும் ஊரே
யாதும் - தேமா, ஊ - நேர்,
எனவே மா முன் நேர் அதனால் நேர் ஒன்று ஆசிரியத்தளை
2. வளிதிரிதரு திசையும்
கனி முன் நிரை ஒன்றிய வஞ்சித்தளை
3. கடுந்திண்டேர் களையினோ
காய் முன் நிரை கலித்தளை
4. வசையில்புகழ் பெற்றே
கனி முன் நேர் ஒன்றாத வஞ்சித்தளை
5. நெல்லும் உயிரன்றே
தேமா -- மா முன் நிரை இயற்சீர் வெண்டளை
6. யாவரும் உரைப்பீர்
கூவிளம் -- விளம் முன் நிரை நிரை ஒன்று ஆசிரியத்தளை
அன்புடன் கிரிகாசன்
Re: மரபுப் பா பயிலரங்கம்
கிரி, சரியான விடைகளைத் தந்திருக்கிறீர்கள். பாராட்டு -த.ந.kirikasan wrote:ஐயா,
பயிற்சிகளை தாமதித்து தந்ததுக்கு மன்னிக்கவும். மறதி தேவன் மூளையை ஆட்சி புரியத் தொடங்கி நெடுநாள் ஆகிறது. எல்லாவற்றையும் திரும்ப பார்க்க வேண்டியதாயிற்று. ஆயினும், மீண்டும் முன்னையதுபோல் கவிப் பிரவாகத்தில் நீச்சலடிக்க தயாராகிவிட்டேன்.
இங்கே நான் செய்தது சரியா என்று பாருங்கள் ஐயா!
1. யாதும் ஊரே
யாதும் - தேமா, ஊ - நேர்,
எனவே மா முன் நேர் அதனால் நேர் ஒன்று ஆசிரியத்தளை
2. வளிதிரிதரு திசையும்
கனி முன் நிரை ஒன்றிய வஞ்சித்தளை
3. கடுந்திண்டேர் களையினோ
காய் முன் நிரை கலித்தளை
4. வசையில்புகழ் பெற்றே
கனி முன் நேர் ஒன்றாத வஞ்சித்தளை
5. நெல்லும் உயிரன்றே
தேமா -- மா முன் நிரை இயற்சீர் வெண்டளை
6. யாவரும் உரைப்பீர்
கூவிளம் -- விளம் முன் நிரை நிரை ஒன்று ஆசிரியத்தளை
அன்புடன் கிரிகாசன்
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
அன்பர்களே! ஆளுக்கு ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதில் இடம் பெறும் தளைகளைக் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அதன்பின் நாம் பாட்டு எழுதுவதைத் தொடருவோம். - த.ந.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
அன்பர்கள் ஐயமிருப்பின் கேட்கலாம். தவறாக எழுதிவிடுவோம் எனத் தயங்க வேண்டா. தவற்றைத் திருத்திக் கற்றுக் கொள்ளலாம். துணிந்து எழுதுக. கறக கசடற கற்பவை ....என்று தொடங்கும் இந்தக் குறளில் அமைந்துள்ள தளைகளைக் குறிப்பிடுக.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.
பயிற்சி
கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
நண்பர்களுக்கு:
கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’
என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்
பயிற்சி
கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
நண்பர்களுக்கு:
கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’
என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்
Re: மரபுப் பா பயிலரங்கம்
வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,
தங்கள் நலன் காக்க!
இலக்கண பயிற்சி இடைவிடாது செய்யவேண்டுமென்ற பேரவா உள்ளபோதும் பலவகை இடையூறுகள் நிமித்தம் நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
மிக அற்புதமாக உள்ளது தளை. பள்ளியில் நானும் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்றேனும் நினைவிலிருத்தாமல் வெறும் மதிப்பெண் பெறவேண்டியே படித்த பிழை இப்போது புரிகிறது. அது என்பிழையென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம், அவ்வயதில் இலக்கணத்தின் அவசியம் புரிந்திருக்க நியாயமில்லை. சரிதானே? இன்று தங்கள் தயவால், பக்குவப்பட்ட இவ்வயதில மீண்டும் படித்து அப்பிழையிலிருந்து மீண்டெழ ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் நன்றிகள் ஏற்பீர்!
ஒரு ஐம்பது திருக்குறளாவது நேற்றிரவு தளை ஆய்ந்தேன்....இரண்டடி பொக்கிஷத்தில் இருதளைகளே புதைந்திருப்பது கண்டு அதிசயித்தேன். (நான் சரியா என்பது தாங்கள்தான் கூறவேண்டும்).
தமிழில் தட்டெச்சு செய்வது சற்று சிரமமாக உள்ளதால் சில குறள்கள் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
*** ***
கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
*** ***
அமிழ்தினும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
ஆற்ற - தேமா (மா முன் நிரை)- இயற்சீர் வெண்டளை
இனிதேதம் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மக்கள் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
சிறுகை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அளாவிய - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கூழ் – நாள்
*** ***
சொலல்வல்லன் -புளிமாங்காய் (காய்முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
சோர்விலன் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
அஞ்சான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அவனை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
இகல்வெல்லல் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
யார்க்கும் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அரிது - நிரைபு.
*** ***
சிறுமை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பலசெய்து - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சீரழிக்கும் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சூதின் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
வறுமை- புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
தருவதொன்று - கூவிளங்காய் ( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செய்க - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பொருளைச் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செறுநர் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செருக்கறுக்கும் - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
எக்கதனிற் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கூரியது - கூவிளங்காய்( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செல்லான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
கிழவன் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
இருப்பின் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நிலம்புலந்து - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
இல்லாளின் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஊடி - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
விடும்-மலர்
*** ***
நெருப்பினுள் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
துஞ்சலும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆகும் -தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நெருனலும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொன்றது - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
போலும் - தேமா(மா முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நிரப்பு-பிறப்பு
*** ***
ஆற்றுவார் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆற்றல்- தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பணிதல் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
அதுசான்றோர் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
மாற்றாரை - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மாற்றும் - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
படை-மலர்.
*** ***
உறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
சீர்தூக்கும் தேமாங்காய்(காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நட்பும் -தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை)
பெறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொள்வாரும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கள்வரும் -கூவிளம்(விளம் முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நேர்-நாள்
*** ***
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் நலன் காக்க!
இலக்கண பயிற்சி இடைவிடாது செய்யவேண்டுமென்ற பேரவா உள்ளபோதும் பலவகை இடையூறுகள் நிமித்தம் நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
மிக அற்புதமாக உள்ளது தளை. பள்ளியில் நானும் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்றேனும் நினைவிலிருத்தாமல் வெறும் மதிப்பெண் பெறவேண்டியே படித்த பிழை இப்போது புரிகிறது. அது என்பிழையென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம், அவ்வயதில் இலக்கணத்தின் அவசியம் புரிந்திருக்க நியாயமில்லை. சரிதானே? இன்று தங்கள் தயவால், பக்குவப்பட்ட இவ்வயதில மீண்டும் படித்து அப்பிழையிலிருந்து மீண்டெழ ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் நன்றிகள் ஏற்பீர்!
ஒரு ஐம்பது திருக்குறளாவது நேற்றிரவு தளை ஆய்ந்தேன்....இரண்டடி பொக்கிஷத்தில் இருதளைகளே புதைந்திருப்பது கண்டு அதிசயித்தேன். (நான் சரியா என்பது தாங்கள்தான் கூறவேண்டும்).
தமிழில் தட்டெச்சு செய்வது சற்று சிரமமாக உள்ளதால் சில குறள்கள் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
*** ***
கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
*** ***
அமிழ்தினும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
ஆற்ற - தேமா (மா முன் நிரை)- இயற்சீர் வெண்டளை
இனிதேதம் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மக்கள் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
சிறுகை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அளாவிய - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கூழ் – நாள்
*** ***
சொலல்வல்லன் -புளிமாங்காய் (காய்முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
சோர்விலன் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
அஞ்சான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அவனை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
இகல்வெல்லல் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
யார்க்கும் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அரிது - நிரைபு.
*** ***
சிறுமை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பலசெய்து - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சீரழிக்கும் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சூதின் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
வறுமை- புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
தருவதொன்று - கூவிளங்காய் ( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செய்க - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பொருளைச் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செறுநர் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செருக்கறுக்கும் - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
எக்கதனிற் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கூரியது - கூவிளங்காய்( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செல்லான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
கிழவன் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
இருப்பின் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நிலம்புலந்து - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
இல்லாளின் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஊடி - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
விடும்-மலர்
*** ***
நெருப்பினுள் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
துஞ்சலும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆகும் -தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நெருனலும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொன்றது - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
போலும் - தேமா(மா முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நிரப்பு-பிறப்பு
*** ***
ஆற்றுவார் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆற்றல்- தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பணிதல் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
அதுசான்றோர் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
மாற்றாரை - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மாற்றும் - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
படை-மலர்.
*** ***
உறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
சீர்தூக்கும் தேமாங்காய்(காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நட்பும் -தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை)
பெறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொள்வாரும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கள்வரும் -கூவிளம்(விளம் முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நேர்-நாள்
*** ***
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
kirikasan wrote:ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.
பயிற்சி
கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
நண்பர்களுக்கு:
கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’
என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்
கிரி, தளைகளச் சரியாகவே தந்திருக்கிறீர்கள். நீங்கள் முறையாக யாப்பறியின், நல்ல பாவலராக வரவியலும். வாழ்த்துகிறேன்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவருக்கு,
வணக்கம். வருக.
பயிலுவார் ஈடுபாடில்லாவிட்டால், பயிற்றுவார்க்கு வேலையில்லை.
உங்களைப் போலும் ஆர்வத்தோடு பயிலுவார் தொடர்ந்து பயிலரங்கில் ஈடுபட்டால்தான் என்னால் தொய்வின்றிப் பயிலரங்கைத் தொடர இயலும்.
அன்பர்கள் புரிந்துகொண்டு ஈடுபாட்டுன் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இனி, தளை பற்றிய விளக்கம்.
தளையைக் குறிக்கும் போது எந்த இரண்டு சீர்களுக்கு இடையிலானது என்று தெரியுமாறு குறிக்க வேண்டும்.
கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
இவற்றை முறையாகக் கீழ்க்காணும் வகையில் குறித்தலே மரபு. விளங்கிக்கொள்ளவும் எளிதாக இருக்கும்.
கடலோடா x கால்வல் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் x நெடுந்தேர் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் x கடலோடும் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் x நாவாயும் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் x ஓடா - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா x நிலத்து - (மா முன் நிரைபு) - இயர்சீர் வெண்டளை
நீங்கள் தளையைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், குறிக்கும் முறை இப்போது விளங்கியிருக்கும். கீழ்க்காணும் திருத்தத்தைக் கவனிக்க.
கொள்வாரும் x கள்வரும் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
உங்கள் ஈடுபாடு ஊக்கம் தருகிறது.
பயிலரங்கில் தொடர்ந்து வருக.
இனி, அடுத்ததாக ஒருவகைப்பாடல் எழுதப் பயில்வோம்.
வணக்கம். வருக.
பயிலுவார் ஈடுபாடில்லாவிட்டால், பயிற்றுவார்க்கு வேலையில்லை.
உங்களைப் போலும் ஆர்வத்தோடு பயிலுவார் தொடர்ந்து பயிலரங்கில் ஈடுபட்டால்தான் என்னால் தொய்வின்றிப் பயிலரங்கைத் தொடர இயலும்.
அன்பர்கள் புரிந்துகொண்டு ஈடுபாட்டுன் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இனி, தளை பற்றிய விளக்கம்.
தளையைக் குறிக்கும் போது எந்த இரண்டு சீர்களுக்கு இடையிலானது என்று தெரியுமாறு குறிக்க வேண்டும்.
கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
இவற்றை முறையாகக் கீழ்க்காணும் வகையில் குறித்தலே மரபு. விளங்கிக்கொள்ளவும் எளிதாக இருக்கும்.
கடலோடா x கால்வல் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் x நெடுந்தேர் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் x கடலோடும் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் x நாவாயும் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் x ஓடா - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா x நிலத்து - (மா முன் நிரைபு) - இயர்சீர் வெண்டளை
நீங்கள் தளையைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், குறிக்கும் முறை இப்போது விளங்கியிருக்கும். கீழ்க்காணும் திருத்தத்தைக் கவனிக்க.
கொள்வாரும் x கள்வரும் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
உங்கள் ஈடுபாடு ஊக்கம் தருகிறது.
பயிலரங்கில் தொடர்ந்து வருக.
இனி, அடுத்ததாக ஒருவகைப்பாடல் எழுதப் பயில்வோம்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Page 26 of 50 • 1 ... 14 ... 25, 26, 27 ... 38 ... 50
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 26 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|