புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 19 of 50 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Jul 18, 2010 10:02 pm

வழிப்போக்கனாரும் மற்றவர்களும் வருக. நீங்கள் எழுதிய பாடல்களைத் தருக. நாம் அடுத்தவகைப் பாடல் எழுதப் போகலாம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Jul 19, 2010 9:19 am

காலை வணக்கம் அய்யா,
முயன்றுள்ளேன் மறுபடி. மறுபடி தவறாக இருந்தால் எனைப் பொறுத்து பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்திவிடுங்கள். மிக்க நன்றி.

வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததனால் விரிந்ததுவோ
என்னென்று அறிந்தவரிங் கெவர்?

********************

யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் னகைக்குமிளங் குமரியாகி
யாப்பொதிபா படிக்கின்றேன் முயன்று.

அன்புடன்
யாதுமனவள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 5:07 pm

ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்

மரபுக்கவிதையென்றுகூறி ஏதோவெல்லாம் எழுதுவேன். தலைவிதி என்று எல்லோரும் வாசிக்க தந்துவிடுவேன். ஆனால் மரபிலக்கணம் எங்கு கற்பது என தெரியாமல் இருந்தேன். இந்த இழை சில நாட்களுக்கு முன்னர்தான் கண்டேன் மிக மகிழ்ச்சி. இதில் நானும் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது என் முயற்சி. சரியோ தெரியவில்லை. பிழைஇருக்கும்போல் தெரிகிறது. உங்கள் உதவி தேவை. கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.


தேன்தமிழைக் கோவையிடுந் திறமையினைப் பயிலவென
நான்குதிசை தேடியுமே நான்சோர்ந்து போயிருக்க
பூந்தமிழோ பூத்திருந்த திங்கு


நல்லகவி கூறுமொரு நயனறிய உள்ளதொரு
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வந்தவனை
நல்லறிவு ஊட்டுவீர் நயந்து

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 19, 2010 6:26 pm

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா,
முயன்றுள்ளேன் மறுபடி. மறுபடி தவறாக இருந்தால் எனைப் பொறுத்து பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்திவிடுங்கள். மிக்க நன்றி.

வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததனால் விரிந்ததுவோ
என்னென்று அறிந்தவரிங் கெவர்?

********************

யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் னகைக்குமிளங் குமரியாகி
யாப்பொதிபா படிக்கின்றேன் முயன்று.

அன்புடன்
யாதுமனவள்
அருமையாக உள்ளன. நெஞ்சார்ந்த பாராட்டு. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 19, 2010 7:02 pm

kirikasan wrote:ஐயா தமிழநம்பி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்

மரபுக்கவிதையென்றுகூறி ஏதோவெல்லாம் எழுதுவேன். தலைவிதி என்று எல்லோரும் வாசிக்க தந்துவிடுவேன். ஆனால் மரபிலக்கணம் எங்கு கற்பது என தெரியாமல் இருந்தேன். இந்த இழை சில நாட்களுக்கு முன்னர்தான் கண்டேன் மிக மகிழ்ச்சி. இதில் நானும் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது என் முயற்சி. சரியோ தெரியவில்லை. பிழைஇருக்கும்போல் தெரிகிறது. உங்கள் உதவி தேவை. கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.


தேன்தமிழைக் கோவையிடுந் திறமையினைப் பயிலவென
நான்குதிசை தேடியுமே நான்சோர்ந்து போயிருக்க
பூந்தமிழோ பூத்திருந்த திங்கு


நல்லகவி கூறுமொரு நயனறிய உள்ளதொரு
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வந்தவனை
நல்லறிவு ஊட்டுவீர் நயந்து


வருக, வருக கிரி!

உங்கள் ஆர்வமும் ஊக்கமும் உங்களை நல்ல பாவலராக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கு முன் எழுதிய பயிலரங்கப் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
வெண்தாழிசை – 4 என்ற தலைப்பில் இப்போது பாடல் எழுதுகிறோம். எப்படி எழுத வேண்டும் என்பதைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

சில திருத்தங்களோடு உங்கள் பாடல்களைக் கீழே தருகின்றேன்.
அந்தத் திருத்தங்கள் ஏன் செய்யப்பட்டன என்பது புரியாவிட்டால் தயங்காது கேளுங்கள். விளக்கிக் கூறுகின்றேன்.

தேன்தமிழைக் குழைத்தெழுதும் திறமையினைப் பயிலவென
நான்குதிசை அலைந்துதிரிந் தயர்ந்தநிலை அழகுறவே
பூந்தமிழோ மலர்ந்ததிங்கேப் பொலிந்து.



நல்லகவி இயற்றுமொரு நயனறிய உளமேங்கச்
சொல்லரிய இடம்மேவி துணிவுடனே வருகின்றேன்
நல்லறிவு தருவீரே நயந்து.


மீண்டும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். தொடர்ந்து படித்துக் கவனத்தோடு எழுதுங்கள்.

எளிதில் நம் தமிழில் எவ்வகைப் பாக்களையும் நம்மால் எழுத முடியும். நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 7:11 pm

ஆகா அற்புதம்!! கண்ணீர் வருகிறது!

இவ்வளவு அழகாக மாற்றிவிட்டீர்கள் ஐயா! தமிழின் சுவை தேனாக கொட்டுகிறது தங்கள் மாற்றத்தில். இதைபோலத்தான் நான் எழுதவேண்டும். முடியுமா? முயற்சிப்பேன். நிறையப் படிக்கவேண்டும் போலிருக்கிறது.
பார்ப்போம். உங்களை ஆசானாக கிடைத்தது நாம் செய்த பாக்கியமே. தொடர்வேன்.

என்ன வித்தியாசமென இனித்தான் பார்க்கப்போகிறேன். ஆனால் என் தமிழ் வரி தடக்கிறது. தங்கள் வரி மென்மையாக இருக்கிறது. இலக்கண பாடத்தை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு பின்னர் வருகிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 7:25 pm

மரபுப்பா பயிலரங்கில் கவிஞர்தம் உள்ளமது
உரமேற பாமடல்கள் மணம்பரப்பி மலர்கின்ற
தருணமதில் ஈகரையின் எழில்கூடும்- வான்முகிலாய்
வந்துதித்த தமிழ்நம்பியே வாழி!

......கா.ந.கல்யாணசுந்தரம்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 7:54 pm

கொஞ்சம் புரிகிறது ஐயா,

3 வது விதியில் கூறிய அடுத்துவரும் காய்சீர்கள் நிரையில் தொடங்கவேண்டுமென்ற விதி தவறியிருக்கிறது.
சில சீர்கள் காய்ச்சீரல்ல (தேடியுமே) இவைதான் புரிந்தது.
கவனமாக மீண்டும் பார்க்கிறேன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jul 20, 2010 8:56 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!

தங்களிடம் தமிழ்த்தேன் பருக வந்துள்ள சகோதரர்கள் கண்டு மிக ஆனந்தம் கொள்கிறேன்.

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்து உளரேயிக்(ஈ) ரையில்.

சகோதரர் கிரி அவர்களே!

எம்மைப்போல் தமிழார்வம் உளமுழுதும் பரவியவோர்
செம்மார்ந்த தமையனுனை மனமார்ந்து வழுத்துகிறேன்
உம்மெழுத்து பொலிவுற்று சிறக்க!

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jul 20, 2010 8:58 am

விழியாகிய மொழிபோற்றும் எமதாசான் தமிழநம்பி
தமிழென்ற அமுதூட்டி நமையிங்கு வளர்த்திடவே
வழிதிறந்து உளரே(ஈ)க ரையில்

Sponsored content

PostSponsored content



Page 19 of 50 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 34 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக