ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 18 of 50 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 34 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty இன்றைய வெண்டாழிசை முயற்சி

Post by யாதுமானவள் Mon Jul 12, 2010 3:31 pm

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் அறியத்தருவீர்.


இன்றும் ஒரு வெண்டாழிசை முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.


காய்ந்தஒரு நிலமதனுள் நுழைந்தஒரு செம்மறியும்
மேய்ந்திடஅங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்த(து)அது களைத்தவிதம் கொடிது!





அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிப்பீர்!

Post by யாதுமானவள் Mon Jul 12, 2010 4:48 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.

*************

காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.

அன்புடன்
யாதுமானவள்





வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க

தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிப்பீர்



எப்பொழுதும் பிழைகளுடன் கவிதைகளை எழுதியபின்

இப்படியேன் எழுதுகிறாய் எனச்சொல்லி நான்வைத்தேன்

தப்பாமலென் தலையில்ஓர் குட்டு!

*************

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்

எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்

எந்தனது வணக்கமது உமக்கு!

*************

காப்பகத்தில் முதிர்தாயவள் தனியமர்ந்து அருமகனைக்

காப்பதுஉன் கடனென்று மனமுருகித் தொழுகின்றாள்

ஒப்பில்லா துயரன்பில் தினம்.

(***********

இப்போது சரியாக எழுதியுள்ளேன் என நினைக்கின்றேன்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Jul 12, 2010 10:04 pm

யாதுமானவர்க்கு,
உங்கள் ஈடுபாடும் ஆர்வமும் போற்றற்குரியன.


எப்பொழுதும் பிழைகளுடன் கவிதைகளை எழுதியபின்

இப்படியேன் எழுதுகிறாய் எனச்சொல்லி நான்வைத்தேன்

தப்பாமல் தலையினில்ஓர் குட்டு!


*************

சொந்தமெனத் தமிழில்பா சுவையாக எழுதுதற்கே

எந்தையினும் பலமடங்கு எமைப்பயிற்றி வருகின்றீர்

எந்தனது வணக்கமதே உமக்கு!


*************

காப்பகத்தில் முதியதாயள் தனியமர்ந்து அரும்மகனைக்

காப்பதும்உன் கடனென்று மனமுருகித் தொழுகின்றாள்

ஒப்பில்லாத் துயரன்பில் தினம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் பாடலில்...
தப்பாமலென் - தப்/பா/மலென் – கனிச்சீராக உள்ளது.
‘தப்பாமல்’ என்பதே காய்ச்சீராக அமைகிறது.

தலையில்ஓர் – சேர்த்தெழுதினால் தலையிலோர் என்றாகும்.
தலையிலோர் – நிரைநிரை என்று ஈரசைச் சீர் ஆகும். காய்ச்சீராக அமைக்க, ‘தலையினிலோர்’ என்று எழுதலாம்.

இரண்டாம் பாடலில்...
பாடலை யாப்பின்படிச் சரியாக அமைத்து எழுதி இருந்தீர்கள். பொருள் பொருத்தத்திற்காகச் சிறு மாற்றம் செய்தேன். நீங்களே கூட இதைவிட நன்றாக மாற்றி எழுதலாம்.

மூன்றாம் பாடலில்...
முதிர்தாயவள் – முதிர்/தா/யவள் – கனிச்சீராக உள்ளது.
‘முதியதாயள்’ என்பது செப்பச் சொல்லாகவும் காய்ச்சீராகவும் அமையும்.
காப்பதுஉன் – சேர்த்தெழுதினால் காப்பதுன் (காப்/பதுன் – ஈரசைச்சீர்) ஆகும்.
காப்பதும்உன் – காய்ச்சீராகும்.

மூன்று பாடல்களை முழு ஊக்கத்தோடு எழுதியமைக்குப் பாராட்டு! தொடர்ந்து எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty இன்னொரு முயற்சி

Post by யாதுமானவள் Tue Jul 13, 2010 12:47 am

மிக்க நன்றி அய்யா

தாங்கள் திருத்தியமைத்த பாடல்கள் மூலம் தவறுகள் உணர்கிறேன். தவறுகள் அறவே தவிர்த்திட வேண்டுமென்ற எண்ணம் அதிகம் உள்ளதால்தான் நிறைய எழுதுகிறேன். பிழைகள் ஏற்படும்போதுதான் தெளிவாகிறேன். பழகப் பழக தவறுகள் எனைவிட்டு விலகும் என்ற நம்பிக்கைதான் என்னை அதிகம் எழுதத்தூண்டுகிறது. பொறுமைகாத்து என் தவறுகளைத் திருத்தியமைக்கும் தங்களுக்கு என்றும் எனது நன்றிகள்.

இன்னொரு முயற்சி:

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனதாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பை
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Tue Jul 13, 2010 8:42 am

காலை வணக்கம் அய்யா,

கீழுள்ள இக்கவிதையை நான் திருத்தியமைத்தேன்,

காய்ந்தபுல் வெளியினிலே புகுந்திட்ட செம்மறியும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty :(

Post by யாதுமானவள் Tue Jul 13, 2010 9:21 pm

காய்ந்திருந்த நிலவெளியில் நுழைந்திட்ட செம்மறியும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துதிரிந் துவருந்தி
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 67637
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Fri Jul 16, 2010 9:20 am




காய்ந்தபுல் வெளியினிலே புகுந்திட்ட மறியதற்கே
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துமிகத் திரிந்தயர்ந்தே
ஓய்ந்திட்ட விதமந்தோ கொடிது!


அருமை. சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு. ( சிறு மாற்றத்தைக் கவனிக்க)


Last edited by தமிழநம்பி on Fri Jul 16, 2010 9:37 am; edited 3 times in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Fri Jul 16, 2010 9:23 am

காய்ந்தநில வொளியினிலே கடுகியசெம் மறிதானும்
மேய்ந்திடவங் கெதுவுமின்றி யலைந்துமிகத் திரிந்தயர்ந்தே
ஓய்ந்திட்ட வகையந்தோ கொடிது!


இதுவும் சரியாகவே உள்ளது. (சிறு திருத்தத்தைக் கவனிக்க)
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty அடுத்த முயற்சி

Post by யாதுமானவள் Sun Jul 18, 2010 12:22 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க அன்னைத் தமிழாளிடம் வேண்டுகிறேன்.


வண்டூதும் ஒலியாலம் மலரதுவும் மலர்ந்ததுவோ
வெண்கதிரோன் தொடும்வெப்பம் உணர்ந்ததினால் விரிந்ததுவோ
என்னவென்று தெரிந்தவரிங் கெவரோ?


****
யாப்பறிந்த புலவரவர் எழுதியபா கிடைத்தவுடன்
பூப்பறித்தார்ப் பரித்துப்புன் நகைக்குமிளங் குமரியாகி
பாப்பொதிந்த புதுஏட்டால் மலர்ந்தேன்.


************
அடுத்து,கீழுள்ள இக்கவிதை சரியா எனத் தெரியவில்லை. தாங்கள் இது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அன்போடு இக்கவிதையையும் சரிபார்க்கவும்.

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனதாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பை
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.


*********

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sun Jul 18, 2010 9:57 pm

மூன்றாம் பாடல்…

அலுக்காமல் பெற்றெடுத்து அனைத்திற்கும் ஒருமனமாய்
முலைப்பாலைத் தருமந்தத் தெருநாய்தன் உயரன்பைச்
சலிக்காமல் ரசிக்கின்றேன் தினம்.


சரியாக இருக்கிறது.

முதல் இரண்டு பாடல்களிலும் ஈற்றுச்சீர் ‘மலர்’ அல்லது ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் அமைக்கவும்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 18 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 50 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 34 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum