ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 17 of 50 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty வெண்டாழிசை – 4.

Post by தமிழநம்பி Wed Jul 07, 2010 11:09 pm

17. வெண்டாழிசை – 4.

நாம் அடுத்து எழுத இருக்கும் வெண்தாழிசை...

1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகை அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; 'மலர்' அல்லது 'பிறப்பு' என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.


எடுத்துக்காட்டு :

பெற்றவளின் உரிமைகளைப் பிடுங்கிவிட்டு விரட்டியவன்
மற்றவரின் குறையுரையை மறைப்பதற்கு முயலுவதால்
உற்றபழி ஒழிந்திடுமோ ஒருங்கு.
- அரங்க.நடராசனார்

இப் பாடலில், முதல் அடியில் முதல்சீர் – பெற்றவளின் > கூவிளங்காய்; முதல் சீர் நிரையில் தொடங்கவேண்டிய கட்டாயம் இல்லை.
இரண்டாம் சீர் – உரிமைகளைப் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
மூன்றாம் சீர் – பிடுங்கிவிட்டு > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
நான்காம் சீர் – விரட்டியவன் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
இவ்வாறே, மற்ற அடிகளிலும் உள்ளதைக் காண்க.

கடைசிச் சீர், ஒருங்கு > ஓரசைச் சீர் ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் உள்ளது.

இன்னொரு எடுத்துக்காட்டு :

செந்தமிழ இனந்தன்னைச் சிறுமதியர் அழித்தொழிக்கப்
பந்தமிலா திவண்இருந்தே பழிசேரத் துணைபோனார்
எந்தமிழர் தலைவரெனல் இழிவு.


இவ்வாறமைந்த வெண்டாழிசைப் பாடலை எழுதுங்கள்.
எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள்.
நீங்கள் விரும்பும் நல்ல கருத்தமைத்து எழுதுங்கள்.


(உதவியாக இருந்த ‘நற்றமிழ்’ மாத இதழுக்கு நன்றி.)


Last edited by தமிழநம்பி on Thu Jul 08, 2010 6:46 pm; edited 5 times in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by குணமதி Wed Jul 07, 2010 11:37 pm

asdf
avatar
குணமதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty வெண்தாழிசை- 4 ல் முதல் முயற்சி

Post by யாதுமானவள் Thu Jul 08, 2010 8:00 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க! வெண்தாழிசை- 4 ல் முதல் முயற்சி

தூங்குகின்ற அறிவிலியை நாகப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்.

(குணமதி அவர்களுக்கு, தங்கள் வாழ்த்திற்கு நன்றி)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty திருத்தம்

Post by யாதுமானவள் Thu Jul 08, 2010 9:05 am

திருத்தம்: அய்யா மன்னிக்க! எழுதும்போது சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது.பிறகுதான் தவறுகள் புரிகிறது,


தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் விட்டுவிடு
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்.
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Thu Jul 08, 2010 1:29 pm

தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty இன்னொரு முயற்சி

Post by யாதுமானவள் Thu Jul 08, 2010 6:16 pm

வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!


எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?


நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Jul 08, 2010 6:39 pm

Yaadhumanaval wrote:தூங்குகின்ற அறிவிலியை விஷப்பாம்பை எழுப்புவதால்
ஈங்கொருபயன் வருவதில்லை உறங்கட்டும் எழுப்பாதே
ஆங்கனுமே குடிகாக்கும் அரசன்.

அன்புடன்
யாதுமானவள்

உங்கள் ஆர்வமும் முயற்சியும் பாராட்டிற்குரியன!
தூங்குகின்ற அறிவிலியைக் கொடும்பாம்பை எழுப்புவதால்
ஈங்குபயன் விளைவதில்லை எழுப்பாதே உறங்கட்டும்
தீங்கதனால் வருமென்றே தெரிந்து.

ஈங்கொருபயன் - கூவிளங்கனி அல்லவா? காய்ச்சீர் தானே வரவேண்டும்.
இறுதிச்சீர் அரசன் - மலர், பிறப்பு வாய்பாட்டில் அமையாமல் ஈரசைச்சீராக இருந்ததால் மாற்றி உள்ளேன்.

ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் பாராட்டு.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Thu Jul 08, 2010 6:54 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, எப்போதும் தங்கள் நலம் காக்க!


எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது தமிழன்னை வருவாள்?

நான் எழுதும் கவிதைகளில் நிறய தவறுகள் ஏற்படுவது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்
அன்புடன்
யாதுமானவள்
எப்போதும் பிழையில்லாக் கவியெழுத முயல்கின்றேன்
தப்பாமல் தொடர்கின்ற தவறுகளைத் தடுத்திடவே
எப்போது துணைத்தமிழாம் எனக்கு?


பாடல் சிறப்பாக உள்ளது.

பாராட்டு.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Fri Jul 09, 2010 11:20 am

காலை வணக்கம் அய்யா. தங்கள் நலன் காப்பீர்!

தங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றிகள் பல


எந்தையினும் பலமடங்கு எனைநடத்தி வருகின்றீர்
சொந்தமென தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தனது வணக்கமது உமக்கே!

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Sat Jul 10, 2010 3:55 am

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

சொந்தமெனத் தமிழ்மொழியை இறையவனும் அருளியதால்
எந்தையினும் பலமடங்கு எமைநடத்தி வருகின்றீர்
எந்தனது பிறவிப்பயன் இது.

*************

காப்பகநிழ லிலிருக்கும் முதிர்தாயவள் அருமகனைக்
காப்பதுமது கடனெனமன முருகியுருகி தொழுகின்றாள்
முப்பெருந்தே விகளைத்தினந் தினம்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 17 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 50 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 33 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum