Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 16 of 50
Page 16 of 50 • 1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.
உங்கள் (முதல்) பாடலில் இரண்டிற்கு மேல் அசைகளை உடைய சீர்களைக் கீழே காண்க.
இளங்/கா/லை - மூவசைச் சீர்
நே/ரம்/பா/யு - நான்கசைச் சீர்
கா/ணுவ/தால் - மூவசைச் சீர்
டா/னந்/தமும் - மூவசைச் சீர்
பெரும்/பே/றும் - மூவசைச் சீர்
பெறு/வா/யே - மூவசைச் சீர்
வா/ழும்/போ/தே - நான்கசைச்சீர்
நாம் இப்போது எழுதும் பாடலில் நிரைநிரை என்ற வாய்பாட்டில் இரண்டசைச் சீர்கள் மட்டுமே வரவேண்டும்,
கடைசியில் ஓரசைச்சீர் அமைய வேண்டும்.
நீங்கள் முன்பு எழுதிய பாடல்-
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
மிகச்சரியாக அமைந்திருந்தது.
அன்பு கூர்ந்து இதைப்போலவே இரண்டசையில் எழுதுங்கள்.
தவறிருப்பின் நானே சரியாக அமைக்க உதவுகிறேன்.
கவலைப்படாமல் எழுதுங்கள். சரியாக வரும்.
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.
உங்கள் (முதல்) பாடலில் இரண்டிற்கு மேல் அசைகளை உடைய சீர்களைக் கீழே காண்க.
இளங்/கா/லை - மூவசைச் சீர்
நே/ரம்/பா/யு - நான்கசைச் சீர்
கா/ணுவ/தால் - மூவசைச் சீர்
டா/னந்/தமும் - மூவசைச் சீர்
பெரும்/பே/றும் - மூவசைச் சீர்
பெறு/வா/யே - மூவசைச் சீர்
வா/ழும்/போ/தே - நான்கசைச்சீர்
நாம் இப்போது எழுதும் பாடலில் நிரைநிரை என்ற வாய்பாட்டில் இரண்டசைச் சீர்கள் மட்டுமே வரவேண்டும்,
கடைசியில் ஓரசைச்சீர் அமைய வேண்டும்.
நீங்கள் முன்பு எழுதிய பாடல்-
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
மிகச்சரியாக அமைந்திருந்தது.
அன்பு கூர்ந்து இதைப்போலவே இரண்டசையில் எழுதுங்கள்.
தவறிருப்பின் நானே சரியாக அமைக்க உதவுகிறேன்.
கவலைப்படாமல் எழுதுங்கள். சரியாக வரும்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
வழிப்போக்கனார்க்கு,
உங்கள் பாடல்...
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.
அருமை!
அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.
தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.
.
உங்கள் பாடல்...
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.
அருமை!
அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.
தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.
.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
குணமதியார்க்கு,
வரவேற்கிறேன்.
உங்கள் பாடல்...
பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுக. நண்பர்களையும் எழுத ஊக்கம் தருக.
வரவேற்கிறேன்.
உங்கள் பாடல்...
பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுக. நண்பர்களையும் எழுத ஊக்கம் தருக.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
குணமதி wrote:பாலன்,
உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.
பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி குணமதி அவர்களே
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
தமிழநம்பி wrote:வழிப்போக்கனார்க்கு,
உங்கள் பாடல்...
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.
அருமை!
அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.
தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.
.
மிக்க நன்றி ஐயா தொடர்ந்திடுவேன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மறுபடி முயன்றது.... :)
வணக்கம் அய்யா! தங்கள் நலம் காப்பீர்!
பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்
இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்ததிவ்
இளமக ளெனைப்பொறுப் பாய்!
********
உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை
உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்
நிலவுமிழ் ஒளியிலும் இல்லை.
***********
நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட
நிலவினை படைத்தது இருளினில் எவரென
பலவித வியப்பொடு நான்.
************
மனமொடு நினைவென நினைவொடு சுகமென
தனமொடு வளமென வளமொடு மகிழ்வென
உனக்கொரு வழிவரும் காண்!
*********
அன்புடன்
யாதுமானவள்
(சகோதரர் வழிப்போக்கனார்க்கு,
தனிமடலில் என் தவறுகள் சுட்டிக்காட்டிய தங்கள் கண்ணிய முறைக்கு என் நன்றிகள்.)
பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்
இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்ததிவ்
இளமக ளெனைப்பொறுப் பாய்!
********
உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை
உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்
நிலவுமிழ் ஒளியிலும் இல்லை.
***********
நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட
நிலவினை படைத்தது இருளினில் எவரென
பலவித வியப்பொடு நான்.
************
மனமொடு நினைவென நினைவொடு சுகமென
தனமொடு வளமென வளமொடு மகிழ்வென
உனக்கொரு வழிவரும் காண்!
*********
அன்புடன்
யாதுமானவள்
(சகோதரர் வழிப்போக்கனார்க்கு,
தனிமடலில் என் தவறுகள் சுட்டிக்காட்டிய தங்கள் கண்ணிய முறைக்கு என் நன்றிகள்.)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புற புகழுவன் யான்.
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புற புகழுவன் யான்.
குணமதி- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
அருமை! மிக மகிழ்ச்சி!
சரியாகப் புரிந்து கொண்டுத் திருத்தமாக, அதுவும் விடைகூறும் கருத்தமைத்து எழுதி வியப்பிலாழ்த்தி விட்டீர்கள். மற்ற மூன்று பாடல்களும் கருத்தொடு அமைந்து பொலிகின்றன.
பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்
இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்தயிவ்
இளமக ளெனைப்பொறுப் பாய்!
********
உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை
உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்
நிலவுமிழ் ஒளியிலும் இல்.
***********
நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட
நிலவினை படைத்தது இருளினில் எவரென
பலவித வியப்பொடு நான்.
************
மனமொடு நினைவென நினைவொடு சுகமென
தனமொடு வளமென வளமொடு மகிழ்வென
உனக்கொரு வழிவரும் காண்!
மிக்க மகிழ்ச்சி!
நன்றி.
அருமை! மிக மகிழ்ச்சி!
சரியாகப் புரிந்து கொண்டுத் திருத்தமாக, அதுவும் விடைகூறும் கருத்தமைத்து எழுதி வியப்பிலாழ்த்தி விட்டீர்கள். மற்ற மூன்று பாடல்களும் கருத்தொடு அமைந்து பொலிகின்றன.
பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்
இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்தயிவ்
இளமக ளெனைப்பொறுப் பாய்!
********
உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை
உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்
நிலவுமிழ் ஒளியிலும் இல்.
***********
நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட
நிலவினை படைத்தது இருளினில் எவரென
பலவித வியப்பொடு நான்.
************
மனமொடு நினைவென நினைவொடு சுகமென
தனமொடு வளமென வளமொடு மகிழ்வென
உனக்கொரு வழிவரும் காண்!
மிக்க மகிழ்ச்சி!
நன்றி.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
குணமதியார்க்கு, * எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புறப் புகழுவன் யான்.
அழகுற கருத்தமைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புறப் புகழுவன் யான்.
அழகுற கருத்தமைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Page 16 of 50 • 1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50
Similar topics
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 16 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|