உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022by mohamed nizamudeen Today at 7:25 am
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 2 of 34 •
1, 2, 3 ... 18 ... 34 


மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
மிக்க நன்றி ஐயா !
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: மரபுப் பா பயிலரங்கம்
எழுத்துப் பெரிதாகத் தெரிய யாரேனும் உதவுங்கள்.
தொல்லைக்குப் பொறுத்திடுக.
தொல்லைக்குப் பொறுத்திடுக.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
- Code:
[size=x-small][color=red]small
text[/color][/size]
small/normal,large,huge
[size=18]அம்மா [/size]
திருத்து சென்று அளவு எண்ணை
மாற்றி முயற்சி செய்யவும் ஐயா

நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி நிலாசகி அவர்களே.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
பயனுள்ள தொடர் தொடர்ந்திடுங்கள் தொடர்கின்றோம். இதுவரைக்கும் ஏதும் சந்தேகம் இல்லை.



வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
Aathira wrote:யாப்பு ப்யிற்றுவிக்க வந்துள்ள் தமிழ்ப் பெருமகனார் அவ்ர்களுக்கு ஈகரை
தழிழ்க் கழஞ்சியத்தின் சார்பில் நெஞசார்ந்த நன்றி. தங்கள் தமிழ்ப் பணி
தொடர இறைவனை வேண்டுகிறோம்.![]()
![]()
அனபுடன்
ஆதிரா


Re: மரபுப் பா பயிலரங்கம்
3. அசை பிரித்தல்
சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
– இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.
அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு - இவற்றைச் சீர்கள் என்கிறோம்.
சீர் பற்றிய விளக்கம் பின்னர் காண்போம்.
அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு எனத் தெரிந்து கொள்வோம்.
அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின் இணைக்குறில் – நிரையசை.
மூன்று குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் இணைக்குறில் – எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில் ஆக – நேரசை.
நான்கு குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் – நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.
2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று) எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு :
(அ). குதிக்கும் – என்கின்ற ஒரு சீரில்,
குதிக் – என்பதை இணைக்குறில் ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;
கும் – குறில் ஒற்று எனக்கொண்டு நேரசையாகக் கருத வேண்டும்.
(ஆ) பார்க்கிறேன் – என்கின்ற ஒரு சீரில்.
பார்க் – என்பதை (இரண்டு புள்ளி எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க வேண்டும்.
கிறேன் – என்பது குறில் நெடில் ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.
3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில் ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.
காண்க : அகர என்பதில் அக - இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் ர – தனிக்குறில் அசை ஆனது.
மிகா – என்றால், குறில்நெடில் > நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி – என்று வந்தால், கா – தனி நெடில் > நேரசை;
மி – சீரின் இறுதியில் தனிக்குறில் > நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.
4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் ஐ வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.
எடுத்துக்காட்டு :
கையில் – கை – நெடில் > நேரசை.(சீரின் முதலில் ஐ வரிசைச் சொல்)
போகையில் – கையில் – குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் ஐ வரிசைச் சொல்)
புன்னகை – னகை – குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் ஐ வரிசைச்சொல்)
5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான அசைகளுக்குப் பொருளே இராது.
6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல் வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.
7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்
* * * * *** *** ***
இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப் பார்ப்போம்.
அகர என்ற சீரில்,
அக – இணைக் குறில் (ஈருயிர்) எனவே நிரையசை.
அடுத்துள்ள ர தனிக்குறில் (ஓருயிர்) எனவே நேரசை.
முதல என்ற சீரில்,
முத – இணைக்குறில் > நிரையசை
அடுத்துள்ள ல தனிக்குறில் > நேரசை
எழுத்தெல்லாம் என்ற சீரில்,
எழுத் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
தெல் – குறில்ஒற்று > நேரசை
லாம் – நெடில் ஒற்று > நேரசை
ஆதி என்ற சீரில்,
ஆ – தனிநெடில் > நேரசை
தி – தனிக்குறில் > நேரசை
பகவன் என்ற சீரில்,
பக – இணைக்குறில் > நிரையசை
வன் – குறில்ஒற்று > நேரசை
முதற்றே என்ற சீரில்,
முதற் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
றே – தனி நெடில் > நேரசை
உலகு என்ற கடைசிச் சீரை ஓரசைச் சீர் என்பர். இதைப்பற்றிப் பின்னர் அறிந்து கொள்ளப்போகிறோம்.
அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி.
இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.
தயங்காமல் கேளுங்கள்.
அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.
சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
– இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.
அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு - இவற்றைச் சீர்கள் என்கிறோம்.
சீர் பற்றிய விளக்கம் பின்னர் காண்போம்.
அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு எனத் தெரிந்து கொள்வோம்.
அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின் இணைக்குறில் – நிரையசை.
மூன்று குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் இணைக்குறில் – எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில் ஆக – நேரசை.
நான்கு குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் – நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.
2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று) எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு :
(அ). குதிக்கும் – என்கின்ற ஒரு சீரில்,
குதிக் – என்பதை இணைக்குறில் ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;
கும் – குறில் ஒற்று எனக்கொண்டு நேரசையாகக் கருத வேண்டும்.
(ஆ) பார்க்கிறேன் – என்கின்ற ஒரு சீரில்.
பார்க் – என்பதை (இரண்டு புள்ளி எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க வேண்டும்.
கிறேன் – என்பது குறில் நெடில் ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.
3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில் ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.
காண்க : அகர என்பதில் அக - இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் ர – தனிக்குறில் அசை ஆனது.
மிகா – என்றால், குறில்நெடில் > நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி – என்று வந்தால், கா – தனி நெடில் > நேரசை;
மி – சீரின் இறுதியில் தனிக்குறில் > நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.
4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் ஐ வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.
எடுத்துக்காட்டு :
கையில் – கை – நெடில் > நேரசை.(சீரின் முதலில் ஐ வரிசைச் சொல்)
போகையில் – கையில் – குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் ஐ வரிசைச் சொல்)
புன்னகை – னகை – குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் ஐ வரிசைச்சொல்)
5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான அசைகளுக்குப் பொருளே இராது.
6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல் வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.
7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்
* * * * *** *** ***
இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப் பார்ப்போம்.
அகர என்ற சீரில்,
அக – இணைக் குறில் (ஈருயிர்) எனவே நிரையசை.
அடுத்துள்ள ர தனிக்குறில் (ஓருயிர்) எனவே நேரசை.
முதல என்ற சீரில்,
முத – இணைக்குறில் > நிரையசை
அடுத்துள்ள ல தனிக்குறில் > நேரசை
எழுத்தெல்லாம் என்ற சீரில்,
எழுத் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
தெல் – குறில்ஒற்று > நேரசை
லாம் – நெடில் ஒற்று > நேரசை
ஆதி என்ற சீரில்,
ஆ – தனிநெடில் > நேரசை
தி – தனிக்குறில் > நேரசை
பகவன் என்ற சீரில்,
பக – இணைக்குறில் > நிரையசை
வன் – குறில்ஒற்று > நேரசை
முதற்றே என்ற சீரில்,
முதற் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
றே – தனி நெடில் > நேரசை
உலகு என்ற கடைசிச் சீரை ஓரசைச் சீர் என்பர். இதைப்பற்றிப் பின்னர் அறிந்து கொள்ளப்போகிறோம்.
அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி.
இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.
தயங்காமல் கேளுங்கள்.
அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.
Last edited by தமிழநம்பி on Sat Mar 13, 2010 1:07 pm; edited 2 times in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!! 

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி..பள்ளியில் தமிழ் வகுப்பு நியாபகங்கள் வருகிறது
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: மரபுப் பா பயிலரங்கம்
சிவா wrote:நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112
Re: மரபுப் பா பயிலரங்கம்
3(அ). அசை பிரித்தல் பயிற்சி
அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.
உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி.
கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம்.
அடுத்ததாக, சீர் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.
உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி.
கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம்.
அடுத்ததாக, சீர் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
Last edited by தமிழநம்பி on Thu Mar 18, 2010 8:55 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஐயா வணக்கம். தங்களின் அருமையான பா பயிற்றுவித்தலுக்கு என் மனமாரந்த நன்றி. மேலும் மேலும் இத்தமிழ்த் தொண்டாற்ற தங்களுக்கு இறைவன் நிறையருள் தர மனமாற வேண்டுகிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
1. எப் / பொருள் - - நேர் நிரை
2. யார் / யார் / வாய்க் - நேர் நேர் நேர்
3. கேட் / பினும் - - நேர் நிரை
4. அப் / பொருள் - - நேர் நிரை
5. மெய்ப் / பொருள் - - நேர் நிரை
6. காண் / ப - - நேர் நேர்
7. தறி /வு - - நிரை பூ
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
1. துப் /பார்க் / குத் - நேர் நேர் நேர்
2. துப் / பா /ய - நேர் நேர் நேர்
3. துப் / பாக் /கித் - நேர் நேர் நேர்
4. துப் / பார்க் /குத் - நேர் நேர் நேர்
5. துப் / பா / ய - நேர் நேர் நேர்
6. தூ / உம் - நேர் நேர்
7. மழை - நிரை
ஐயா சீர் பிரித்து எழுதியுள்ளேன். சரியா என்று பார்த்து சொல்லவும்.
வணக்கத்துடன்
ஆதிரா
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
1. எப் / பொருள் - - நேர் நிரை
2. யார் / யார் / வாய்க் - நேர் நேர் நேர்
3. கேட் / பினும் - - நேர் நிரை
4. அப் / பொருள் - - நேர் நிரை
5. மெய்ப் / பொருள் - - நேர் நிரை
6. காண் / ப - - நேர் நேர்
7. தறி /வு - - நிரை பூ
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
1. துப் /பார்க் / குத் - நேர் நேர் நேர்
2. துப் / பா /ய - நேர் நேர் நேர்
3. துப் / பாக் /கித் - நேர் நேர் நேர்
4. துப் / பார்க் /குத் - நேர் நேர் நேர்
5. துப் / பா / ய - நேர் நேர் நேர்
6. தூ / உம் - நேர் நேர்
7. மழை - நிரை
ஐயா சீர் பிரித்து எழுதியுள்ளேன். சரியா என்று பார்த்து சொல்லவும்.
வணக்கத்துடன்

ஆதிரா
Last edited by Aathira on Sat Mar 13, 2010 2:10 pm; edited 1 time in total
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஆதிரா,
நீங்கள் சரியாக அசை பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டு.
நிரை, நிரைபு என்பதில் இடையின ரகரமாகத் திருத்தி விடுங்கள்.
குறளில் கடைசிச் சீர் ஓரசைச் சீர் என்பர். அதைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
இன்னும் யாரேனும் வேறு ஏதாவது குறளைத் தாங்களே தேர்ந்தெடுத்து, அதை அசை பிரித்துக் காட்டினால் வரவேற்பேன்.
கடைசிச் சீர் பற்றி எதுவும் இப்போது குறிப்பிடத் தேவையில்லை.
நீங்கள் சரியாக அசை பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டு.
நிரை, நிரைபு என்பதில் இடையின ரகரமாகத் திருத்தி விடுங்கள்.
குறளில் கடைசிச் சீர் ஓரசைச் சீர் என்பர். அதைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
இன்னும் யாரேனும் வேறு ஏதாவது குறளைத் தாங்களே தேர்ந்தெடுத்து, அதை அசை பிரித்துக் காட்டினால் வரவேற்பேன்.
கடைசிச் சீர் பற்றி எதுவும் இப்போது குறிப்பிடத் தேவையில்லை.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி ஐயா




தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18
Page 2 of 34 •
1, 2, 3 ... 18 ... 34 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|