ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 13 of 50 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Mon Jun 07, 2010 8:39 am

அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?

இன்றைய சந்தேகம்.

அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.

அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.


தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Mon Jun 07, 2010 8:44 am

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Jun 07, 2010 10:08 am

யாதுமாகியார்க்கு,

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

நீங்கள் எழுதிய ஈறடி எடுத்துக்காட்டுக்களில் (திருத்தத்தைச் சேர்த்து) எதுகைகள் சரியாக உள்ளன.

அந்த ஈறடிகளைப் பாடல்களாக நோக்காமல் எதுகை அமைப்பு என்ற நோக்கில் மட்டும் பார்த்ததில் என் கருத்து இதுவாகும்.

எதுகைகளில் தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என மூன்று பிரிவுகள் உண்டு.

சீர் முழுதும் ஒன்றி வரும் (முதற் சீரின் இரண்டாம் எழுத்திலிருந்து அதே எழுத்துக்களே அமைந்து வரும்) எதுகை தலையாகு எதுகை ஆகும். இது முதற் சிறப்புடைய எதுகை எனலாம்.

எடுத்துக்காட்டு :
சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற றென்று முனிவாள் ........

ஒரே எழுத்து (முதல் அடி முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒரே எழுத்தாக) அமைந்து வரும் எதுகை, இடையாகு எதுகை ஆகும்.
இவ்வகை எதுகையின் சிறப்பு இடையாயதாகும்.

எடுத்துக்காட்டு:
ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முற்றே உலகு.

பிறவகை எதுகைகள் அனைத்தும் கடையாகு எதுகை எனப்படும்.

தொடர்ந்து கவனித்து வாருங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Jun 07, 2010 10:36 am

Yaadhumanaval wrote:அய்யா எனக்கு ஒரு உதவி தேவை. மரபுப் பயிற்சி தவிர எனக்கு இலக்கிய சம்பந்தமான சில சந்தேகங்கள் உண்டு. இங்கு அதை பதிவிட்டால், வேறு தலைப்பு கொண்டு தடம் மாறியதுபோலாகிவிடும். தங்களுக்கு சிரமமில்லையெனில் என் தனி ஈ-மெயில் க்கு பதிலனுப்ப முடியுமா?

இன்றைய சந்தேகம்.

அவ்வைப்பாட்டி "எட்டேகால் லட்சணமே....." பாடலை எந்தப் புலவருக்கு எதிராகப் பாடினார்? (இதில் குழப்பம் என்னவென்றால், ஒரு சிலர் காளமேகப் புலவர் என்கின்றனர், ஒரு சிலர் ஒட்டக்கூத்தர் என்கின்றனர் வேறு சிலரோ கம்பருக்கு எதிராக பாடியது என்கின்றனர்.) இது மட்டுமன்றி இப்பாடல் தோன்றக் காரணமான " ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி... என்னடி சொல்லடி" என்ற வரும் பாடலை முழுவதுமாக அறிய வேண்டுகிறேன்.

அதே போல் 3 அவ்வையார் இருந்ததாகக் கூறப்படுகிறது. வள்ளுவன் காலத்தில் வாழ்ந்த அவ்வை ஆதி அவ்வை என்றும், அதியமான் காலத்து அவ்வை வேறொருவரென்றும், சங்ககாலத்து அவ்வை கம்பர் காலத்து அவ்வையென்றும் சில குறிப்புக்கள் வாயிலாக அறிந்துள்ளேன். இதையும் தாங்கள் விளக்கிக் கூறினால் நலமாக இருக்கும்.


தங்கள் அன்பிற்கு நன்றி
அன்புடன் யாதுமானவள்


பொதுவான ஐயங்களுக்கு எனக்குள்ள ஓய்வு நேரத்தைப் பொறுத்து இயன்ற விரைவில் விடையளிப்பேன். அதற்குத் தனிப்பகுதி இருக்க வேண்டும்.
பயிலரங்கப் பகுதியில் பலவற்றை எழுதுவது பயில்கின்றவர்களைக் குழப்ப நேரும்.
தனிமடலில் தொடர்பு கொள்வார்க்கு இயன்ற விரைவில் விடை அளிப்பேன்.
நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Mon Jun 07, 2010 10:45 am

அன்புமிக்க வணக்கங்கள் ஐயா,

தங்கள் திருத்தம் கண்டு மனம் பூரிக்கிறது.

தலையாகு எதுகை

ள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாசித்தேன்
வெள்ளத்தில் மூழ்கிடாது நான்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் Tue Jun 08, 2010 9:07 am

காலை வணக்கம் அய்யா,

தங்கள் தனிமடல் கிடைக்கப் பெற்றால் மகிழ்வேன்.

அன்புகலந்த நன்றிகளுடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Jun 09, 2010 6:06 pm

15. வெண்டாழிசை 2.


நாம் அடுத்து எழுத இருக்கும் பாடல் வெண்தாழிசையில் இன்னொரு வகையாகும்.

பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா!

இந்தப்பெயர் ஏன் இட்டனர் என்பது பற்றிப் பிறகு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சரி, இப்பாடலை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்.


1. இதுவும் மூன்றடிப் பாடலே.

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.

3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.

4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

அவ்வளவே!


எடுத்துக்காட்டு :

நல்லார் போன்று நாட்டில் தோன்றி

தொல்லை எல்லாம் பின்னால் செய்யும்

புல்லர் இங்கே உண்டு.


இன்னொன்று :

அன்பு பண்பும் ஆழ்ந்த ஞானம்

நன்று மின்ன நாமும் வாழ

என்றும் நன்றே எண்ணு.


தயங்காமல் எழுதுங்கள். எழுத முயன்றால் எளிதில் வரும்.

பிழை நேரின் திருத்திக் கொள்ளலாம்.

எழுதத் தொடங்குக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:17 pm

தமிழில் பலவற்றைக் கற்பதற்கு உதவிடும் தங்கள் சேவைக்கு நன்றிகள் ஐயா!

எனது முயற்சி வெண்டாழிசையில்.


வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சால்
எந்தன் உள்ளம் போச்சு!
புன்னகை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா Sat Jun 12, 2010 8:55 am

வெண்டாழிசை பற்றி நான் படித்த சில பாடல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்!

மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.


நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.


அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.


அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.

ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.


மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Jun 14, 2010 9:46 pm

வழிப்போக்கன் அவர்களுக்கு,

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுகிறேன்.

பாடலின் இறுதிச்சீர் போச்சு என்பது கொச்சைச் சொல்லாக அமைந்துவிட்டதால் கீழ்க்காணும் மாற்றம் செய்யலாம்.
நீங்கள் எழுதிய பாடல் இலக்கணப்படி சரியானதே.

வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து.

முதலில் எழுதும் போதே மிகவும் நன்றாக எழுதியதற்கு மறுபடியும் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 13 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 50 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum