Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters
Page 12 of 50
Page 12 of 50 • 1 ... 7 ... 11, 12, 13 ... 31 ... 50
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
Yaadhumanaval wrote: ஐயா தமிழ நம்பி என் அன்பின் வணக்கம் ஏற்பீர்!
தங்கள் கரத்தால் திருத்தப் பெற்று என் இலக்கியக் குழந்தைகள் வளரத்தொடங்குகிறது குறித்து யாம் பெறும் ஆனந்ததிற்கு எல்லையொன்றில்லை.
எம்முயற்சி தொடர எம்மை ஆசித்து தொடர்ந்து எமக்குப் பயிற்றுவிப்பீர்!
இன்னும் சில முயற்சிகள் இன்றும் செய்துள்ளேன். கண்டு அதனையும் கரை சேர்ப்பீர்!
இன்னொரு வேண்டுகோள்:
பாடம் - எதுகை 2 எனக்கு சரியாகப் புரியவில்லை. , வல்லின வருக்க எதுகை, மெல்லின எதுகை, ...என்ற பகுதியை இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறினீரென்றால் நான் சரியாக விளங்கிக் கொள்வேன்.
வெண்தாழிசையில் தொடரும் என் முயற்சிகள்
நாரொடும் முல்லையின் நறுமணம் போன்றே
ஏரொடும் தேரொடும் எம்மினம் வாழ்ந்ததை
யாரொடு சொல்வோம் யாம்?
----------------
தனித்து நின்று தமிழினை உண்டு
இனித்த இன்சுவை பருகிப் பருகியே
கனைத்து மகிழ்ந்தேன் யான்.
-----------------
ஐந்து விரலில் ஆர்வம் மேலிட
பைந்தமிழ் ஓசை பாட்டினில் கொடுக்க
உந்திக் கற்றேன் நான்
------------------
காதில் ஒலித்த கைவளை கழற்றி
கோதில் குறிப்பில் சிந்தையைச் செலுத்தி
தீதிலா தெழுதினேன் நான்
------------------
சொன்னது கேட்டது சொற்களாய் வந்தது
இன்னதாய் எழுதி இனிதாய்க் கற்றிட
அன்னைத் தமிழே துணை!
----------------------
தங்கள் அடுத்த பயிற்சியினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
நலம் காப்பீர்!
அன்புகலந்த நன்றிகளுடன்,
யாதுமானவள்
பாராட்டுகிறேன்!
தயக்கமின்றி எழுதி, முதல் இரண்டு வகையையும் நன்கு எழுதப் பயின்றுவிட்டீர்கள்.
சிறு திருத்தங்கள்...
1, 5ஆம் பாடல்களில், ஈரசையில் சீர்கள் அமையுமாறு திருத்தியுள்ளதைக் கவனிக்க!
கடைசிப் பாடலில்,
கடைசிச் சீர் - மூன்றாம் அடியில் மூன்றாம் சீர்-
ஓரசைச் சீராக வரவேண்டு மென்பதற்காக, 'அதனை' என்பது 'துணை' என்று வருமாறு மாற்றப்பட்டுள்ளது.
ஓரசைச்சீர் பற்றிய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்க.
ஐயம் எழுந்தால் கேளுங்கள், விளக்குகிறேன்.
நான்காம் பாடலைக் கீழ் உள்ளவாறு திருத்தி உள்ளேன். காரணம் உங்களுக்குப் புரியும். ஐயமாயிருந்தால் கேளுங்கள்.
உணவுறக் கம்தவிர்த் தோயா தெண்ணி
கணினியின் முன்னமர்ந் தெழுதி யெழுதி
இனிதே பயந்தேன் தமிழ்.
---------------
நீங்கள் கேட்டவாறு,
எதுகை - 2 பகுதியை விளக்கிக் கூறுகிறேன்.
தொடர்ந்து பாட்டெழுதும் உங்கள் ஈடுபாட்டுக்கு நன்றி.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
11. எதுகை– 2 -சில விளக்கங்களுடன்!
அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.
அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருத்தல் என்றால் -
முதல் அடியின் முதல் எழுத்து குறிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் குறிலாக இருக்க வேண்டும்;
முதல் அடியின் முதல் எழுத்து நெடிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் நெடிலாக இருக்க வேண்டும்.
முதல்அடியின் முதலெழுத்தும் இரண்டாமடியின் முதலெழுத்தும் ஒன்று குறிலாகவும் மற்றொன்று நெடிலாகவும் இருந்தால் (இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும்) எதுகை அமையாது.
எடுத்துக்காட்டு :
கற்றவர் ------ ----- -------
போற்றுவார் ---- ----- ------
இதில் இரண்டடியிலும் இரண்டாம் எழுத்து 'ற்' ஒன்றி வந்தது என்றாலும், முதலடியின் முதல் எழுத்து 'க' குறிலாகவும், இரண்டாம் அடியின் முதலெழுத்து 'போ' நெடிலாகவும் உள்ளதால் எதுகை அமையாது.
இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.
( முதலடியின் முதலெழுத்து க - குறிலாக உள்ளது. இரண்டாம் அடியின் முதலெழுத்து ந -வும் குறிலாக உள்ளதைக் காண்க.)
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை. (க், ச், ட், த், ப், ற் -வல்லின எழுத்துக்கள்)
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை. (ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லின எழுத்துக்கள்)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை. ( ய், ர், ல், வ், ழ், ள் - இடையின எழுத்துக்கள்)
நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)
(ட, டா, டி, டீ, டு, டூ, டெ, டே, டை, டொ, டோ, டெள - டகரவரிசை எழுத்துக்கள்)
ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.
மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன அல்ல. அவற்றை அவ்வப்போது பின்னர்த் தெரிந்து கொள்ளலாம்.
ஓரளவு விளக்கம் அளித்துள்ளேன்.
எந்தப் பகுதியாவது புரியவில்லையானால், அதைக் குறிப்பிட்டால், விளக்கமளிக்கக் காத்திருக்கிறேன்.
.
அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருக்க இரண்டாமெழுத்து ஒத்து வருவது எதுகை என்று அறிந்தோம்.
அடிகளின் முதலெழுத்துக்கள் மாத்திரை அளவொத்து இருத்தல் என்றால் -
முதல் அடியின் முதல் எழுத்து குறிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் குறிலாக இருக்க வேண்டும்;
முதல் அடியின் முதல் எழுத்து நெடிலாக இருந்தால், இரண்டாமடியின் முதலெழுத்தும் நெடிலாக இருக்க வேண்டும்.
முதல்அடியின் முதலெழுத்தும் இரண்டாமடியின் முதலெழுத்தும் ஒன்று குறிலாகவும் மற்றொன்று நெடிலாகவும் இருந்தால் (இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும்) எதுகை அமையாது.
எடுத்துக்காட்டு :
கற்றவர் ------ ----- -------
போற்றுவார் ---- ----- ------
இதில் இரண்டடியிலும் இரண்டாம் எழுத்து 'ற்' ஒன்றி வந்தது என்றாலும், முதலடியின் முதல் எழுத்து 'க' குறிலாகவும், இரண்டாம் அடியின் முதலெழுத்து 'போ' நெடிலாகவும் உள்ளதால் எதுகை அமையாது.
இனி, சில எதுகை வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் பார்ப்போம் :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- இது ஒரே எழுத்து (ற்) அடி எதுகையாக வந்துள்ளது.
( முதலடியின் முதலெழுத்து க - குறிலாக உள்ளது. இரண்டாம் அடியின் முதலெழுத்து ந -வும் குறிலாக உள்ளதைக் காண்க.)
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
- இது வல்லின வருக்க எதுகை. (க், ச், ட், த், ப், ற் -வல்லின எழுத்துக்கள்)
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
- இது மெல்லின எதுகை. (ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லின எழுத்துக்கள்)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
- இது இடையின எதுகை. ( ய், ர், ல், வ், ழ், ள் - இடையின எழுத்துக்கள்)
நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
- இது இன எதுகை ( இங்கு டகர வரிசை எதுகையாக வந்துள்ளது)
(ட, டா, டி, டீ, டு, டூ, டெ, டே, டை, டொ, டோ, டெள - டகரவரிசை எழுத்துக்கள்)
ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூவென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை ஆயிற்று.
மற்றும் சில எதுகைகள் உளவாயினும், அவை அத்துணைச் சிறப்புடையன அல்ல. அவற்றை அவ்வப்போது பின்னர்த் தெரிந்து கொள்ளலாம்.
ஓரளவு விளக்கம் அளித்துள்ளேன்.
எந்தப் பகுதியாவது புரியவில்லையானால், அதைக் குறிப்பிட்டால், விளக்கமளிக்கக் காத்திருக்கிறேன்.
.
Last edited by தமிழநம்பி on Mon Jun 07, 2010 9:38 am; edited 3 times in total
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மரபுப் பா பயிற்சி
நன்றி ஐயா,
ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே சரியாக உள்ளது கண்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பழகி எழுதுவேன் தங்கள் ஆசியுடன்.
இந்த வெண்தாழிசை சரியா என கூறுங்கள்
ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே சரியாக உள்ளது கண்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பழகி எழுதுவேன் தங்கள் ஆசியுடன்.
இந்த வெண்தாழிசை சரியா என கூறுங்கள்
ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
இது சரியென நினைக்கிறேன்
தவறு தவறு..இது சரியென நினைக்கிறேன்
ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தழகாய் யெழுதிட
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தழகாய் யெழுதிட
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
Yaadhumanaval wrote:நன்றி ஐயா,
ஐந்து பாடல்களில் ஒன்று மட்டுமே சரியாக உள்ளது கண்டு எனக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது. தொடர்ந்து பழகி எழுதுவேன் தங்கள் ஆசியுடன்.
இந்த வெண்தாழிசை சரியா என கூறுங்கள்
ஐந்தில் நான்கும் அறுகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
நீங்கள் எழுதியவை சரியே!
அவற்றுக்கு மேலும் செப்பம் தரவே சில திருத்தங்கள் எழுதினேன்.
கவலற்க.
ஐந்தில் நான்கும் அருகி கைவிட
ஐந்தும் பிழையிலா தெழுதிட துணையாய்
பைந்தமி ழேயிங்கு வா!
சரியாக உள்ளது. பாராட்டு.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
Yaadhumanaval wrote:தவறு தவறு..இது சரியென நினைக்கிறேன்
ஐந்தில் நான்கும் அருகிக் கைவிட
ஐந்தும் பிழையிலா தழகா யெழுதிட
பைந்தமி ழேயிங்கு வா!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
உங்கள் திருத்தம் இன்னும் அழகூட்டி உள்ளது.
நீங்கள் முன்பு எழுதியதும் சரியே!
பாராட்டுகிறேன்.
தமிழநம்பி- பண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
Re: மரபுப் பா பயிலரங்கம்
வணக்கம் ஏற்பீர்!
மிகத் தெளிவான விளக்கங்களுடன் தாங்கள் தந்த எதுகை- 2 ஆம் பாடம் நன்றாக விளங்கிக் கொண்டேன்.
இங்கு எதுகைகளமைத்து சில முயற்சிகள் செய்துள்ளேன் அதனைக் காண்க!
வல்லின எதுகையில் சில:
ஒப்புமை யில்லா வுயிர்மொழி தமிழினை
இச்சக மெங்கும் காண்!
அட்சரம் பிசகாமல் ஐம்புலன் பதறாமல்
பக்குவ மாய்த்தமிழ் படி.
எத்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்(மா)
பற்றுதல் கொண்டத னால்.
(இவ் உலகில் வாழ ஆலம் மா பற்றுதல் கொண்டதினால் எத்துணை விழுதுகள் கொண்டது..... என வரவேண்டுமென நினைத்து எழுதினேன். தவறாயிருப்பின் திருத்தம் செய்வீர்)
மெல்லின எதுகையில் சில:
கொஞ்சும் கிளியாய் வந்து கொஞ்சும்
எங்கும் பரந்த மொழி
மண்ணின் நறுமண மகில முழுதும்
நன்னிய விதமாய் சொல்
இவ்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
இடையின எதுகையில் சில:
ஆர்ப்பரித்த கடலினுட் புகுந்து நாடிய(து)
தாய்ந்தெடுத் து(உ)வந்தேன் நான்.
அல்லும் பகலும் உழைத்துக் களைத்தும்
பவ்வம் கொளாது துயில்.
அழகிய பண்ணொடு பழகிடும் தமிழினை
அள்ளிப் பருகிட வாரீர்.
ஐயா, மேலுள்ள என் எதுகை அமைவு முயற்சிக்குப் பின் எனக்கு ஒரு குழப்பம். இவ்வெதுகை நாற்சீர் வெண்செந்துறை, வெண்தாழிசையிலும் கொள்ளலாமா அன்றி இது போன்றே 7 சீர் கொண்ட ஈரடிப் பாடலில் மட்டும் தான் வருமா?
அன்புடன் என்றும்,
யாதுமானவள்
மிகத் தெளிவான விளக்கங்களுடன் தாங்கள் தந்த எதுகை- 2 ஆம் பாடம் நன்றாக விளங்கிக் கொண்டேன்.
இங்கு எதுகைகளமைத்து சில முயற்சிகள் செய்துள்ளேன் அதனைக் காண்க!
வல்லின எதுகையில் சில:
ஒப்புமை யில்லா வுயிர்மொழி தமிழினை
இச்சக மெங்கும் காண்!
அட்சரம் பிசகாமல் ஐம்புலன் பதறாமல்
பக்குவ மாய்த்தமிழ் படி.
எத்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்(மா)
பற்றுதல் கொண்டத னால்.
(இவ் உலகில் வாழ ஆலம் மா பற்றுதல் கொண்டதினால் எத்துணை விழுதுகள் கொண்டது..... என வரவேண்டுமென நினைத்து எழுதினேன். தவறாயிருப்பின் திருத்தம் செய்வீர்)
மெல்லின எதுகையில் சில:
கொஞ்சும் கிளியாய் வந்து கொஞ்சும்
எங்கும் பரந்த மொழி
மண்ணின் நறுமண மகில முழுதும்
நன்னிய விதமாய் சொல்
இவ்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
இடையின எதுகையில் சில:
ஆர்ப்பரித்த கடலினுட் புகுந்து நாடிய(து)
தாய்ந்தெடுத் து(உ)வந்தேன் நான்.
அல்லும் பகலும் உழைத்துக் களைத்தும்
பவ்வம் கொளாது துயில்.
அழகிய பண்ணொடு பழகிடும் தமிழினை
அள்ளிப் பருகிட வாரீர்.
ஐயா, மேலுள்ள என் எதுகை அமைவு முயற்சிக்குப் பின் எனக்கு ஒரு குழப்பம். இவ்வெதுகை நாற்சீர் வெண்செந்துறை, வெண்தாழிசையிலும் கொள்ளலாமா அன்றி இது போன்றே 7 சீர் கொண்ட ஈரடிப் பாடலில் மட்டும் தான் வருமா?
அன்புடன் என்றும்,
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஓரின எதுகையில் முயன்றது:
அலையி லமர்ந்து கால்நனைத் துக்கடல்
சிலும்பும் அழகைப் பார்.
உலக முழுதும் கதிர்பரப் பிஅதி
வலிமையா கப்பாயு மொளி
அன்புடன்
யாதுமானவள்
அலையி லமர்ந்து கால்நனைத் துக்கடல்
சிலும்பும் அழகைப் பார்.
உலக முழுதும் கதிர்பரப் பிஅதி
வலிமையா கப்பாயு மொளி
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
மெல்லின எதுகையிலேற்பட்ட பிழையுணர்ந்தேனஇது சரி
இது தவறு:
இவ்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
இது சரி(?):
இன்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
இது தவறு:
இவ்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
இது சரி(?):
இன்விருந் துபடைத் ததெங்கன மோவென
பொங்கி நான்பூரித் தேனே!
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: மரபுப் பா பயிலரங்கம்
வல்லின எதுகையில் அமைத்த பாடலொன்றின் திருத்தம்
எத்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்மிகப்
பற்றுதல் கொண்டதி னால்
எத்துணை விழுதுகள் கொண்டதவ் வாலம்மிகப்
பற்றுதல் கொண்டதி னால்
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Page 12 of 50 • 1 ... 7 ... 11, 12, 13 ... 31 ... 50
Similar topics
» சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
» மரபுப் பா அரங்கம்
» கோவையில் பெரியார்களம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம்
» மரபுப் பாமணி 2012 - பட்டம் பெற்ற அன்பு அண்ணன் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!
Page 12 of 50
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|