ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 11 of 50 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 30 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 5:34 pm

தமிழநம்பி wrote:அடுத்து, நாம் எழுதும் பாட்டு வெண்தாழிசை

1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.

2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.

3. கடைசிச் சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச்சீர்கள்.

(அசை பற்றிப் பயிலரங்கின் 2ஆம் பகுதியிலும், அசைபிரித்தல் பற்றி 3ஆம் பகுதியிலும் சீர் பற்றி 4ஆம் பகுதியிலும், ஓரசைச்சீர் பற்றி 6ஆம் பகுதியிலும் விளக்கியுள்ளதை மறுபடியும் ஒருமுறை படித்துக் கொண்டால் எழுதல் எளிது)

எடுத்துக்காட்டுப் பாடல்:

கண்ட கண்ட உணவை உண்டால்
கொண்ட உடலில் நோய்கள் தாக்க
மண்டும் துன்பம் மிகும். - புதுவைப் பாவலர் அரங்க.நடராசன்.

இன்னொன்று :

தன்னின் நலமும் தானுறு குடும்ப
இன்னலந் தமையுமே எண்ணி இயங்குவார்
என்னினத் தலைவரா? ஏய்ப்பு!

அன்பார்ந்த தமிழ்நெஞ்சங்களே, தயக்கமின்றி எழுதுங்கள் பிழை இருப்பின் திருத்திக் கொள்ளலாம். உங்கள் எண்ணங்களைப் பாட்டாக்கி மகிழுங்கள்!
எழுத்த் தொடங்குங்கள்!

நம்பிக்கை ஊட்டும் வரிகள் மிகவும் அருமை ஐயா உங்கள் இந்த சிறந்த பணிக்கு என் வணக்கங்களோடு வாழ்த்துக்கள்
அன்புடன்
அப்புகுட்டி. அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி


மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா Fri May 28, 2010 9:25 pm

வழிப்போக்கன் wrote:மிக அருமையான பாடம் ஐயா மிக்க நன்றிகள் எனது முயற்சி

மண்ணில் உயிர்கள் மரிக்கவே யெண்ணி
பண்ணியே வைத்திடும் ஆயுதம் பாராய்
மனிதம் தொலைந்த உலகு!

(ஆயுதத் தொழிசாலைத் திரி பார்த்ததால் மனதில் எழுந்த தாக்கத்தில் உருவானது)

ஐயாவின் பதிவுகளைப் பின்பற்றி சிறந்த வரிகளுடன் பாடல் எழுதியமைக்கு நன்றி! மரபுப் பா பயிலரங்கம் - Page 11 154550


மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Sun May 30, 2010 9:01 am

வழிப்போக்கன் wrote:மிக அருமையான பாடம் ஐயா மிக்க நன்றிகள் எனது முயற்சி

மண்ணில் உயிர்கள் மரிக்கவே யெண்ணி
பண்ணியே வைத்திடும் ஆயுதம் பாராய்
மனிதம் தொலைந்த உலகு!


அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வழிப்போக்கன்!
பாராட்டுகிறேன்.
இனி, மற்றவர்களும் எழுதலாமே!
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty நாற்சீர் வெண்செந்துறையிலும் வெண்தாழிசையிலும் என் முதல் முயற்சி

Post by யாதுமானவள் Sun May 30, 2010 4:26 pm

முதலில் ஈகரைக்கு என் வாழ்த்துக்கள்!

யாப்பிலக்கணம் பயிற்றுவிக்கும் திரு. தமிழ நம்பி அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்!

யாப்பிலக்கணம் பயிலவேண்டும் என்று எத்தனையோ வருடங்களாகளாக யான் கொண்டிருந்த அவா எங்கே நிறைவேறாமலே போய்விடுமோ என்று நான் பட்ட இலக்கண வேதனைகள் சொல்லும் தரமில்லாதது. எதேச்சையாக நேற்றிரவு இந்தத் திரி என் கண்ணில் பட பதினோரு பக்கங்களையும் நான் படித்து அடைந்த மகிழ்ச்சி சொல்லும் எல்லைக்கு உட்படாதது.

ஆசான் தமிழ நம்பி அவர்களின் இந்த தமிழ்த் தொண்டு வெற்றிபெற நாங்கள் எழுதப்போகும் கவிதைகளை அன்னைத் தமிழாளுக்கு அர்ப்பணித்துத் தொடங்குகிறோம் எம் பயிற்சியை...
மறைந்திருந்து ஏகலைவன் கற்ற வித்தையை கோபம் கொண்டு அழித்தொழித்த "குரு" எங்கே? இங்கு மறைந்திருந்து தமிழ் கற்பிக்கும் நம் தமிழ் ஆசான் நம்பி எங்கே? "குரு" என்ற வார்த்தையின் இலக்கணம் தான் ஐயா நீங்கள். இதுதான் தமிழின் பெருமை. மீண்டும் ஏற்க எம் நன்றிகளை!

எத்தணையோ அகப்பொருள் நூல் எத்தணையோ புறப்பொருள் நூல் எத்தணையோ இலக்கண நூல் எத்தனையோ இலக்கிய நூல்- படிக்கிறோம் - புரிகிறது - ஆனால் நம்மால் அது போல் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைப்போல் உணர்ந்தவர்கள் எத்தைனைபேர் இங்குள்ளனர் என்று எமக்குத் தெரியாது. தமிழை வாழவைக்க தமிழறிஞர்கள் நாளும் சிந்தித்துக்கொண்டிருக்க, இச் சிறந்த வழியைத் தாங்கள் கொண்டது யாம் பெற்ற பேறு. தாங்கள் எல்லா வளமும் பெற்று சிறந்து வாழ்ந்து பல்லாண்டு காலம் தமிழ்ப்பணி செய்திட துணைசெய்வது நின்கடன் தானென தமிழன்னையிடம் கூறிவிட்டு என் பயிற்சியைத் தொடர்கிறேன்.

நாற்சீர் வெண்செந்துறையில் என் முதல் முயற்சி:

ஒன்று:

ஆசான் தாங்கள் ஆற்றும் பணியால்
மாசற தமிழை மாண்புற கற்போம்

இரண்டு:

பழகப் பழக பக்குவம் பெறுவோம்
அழகுத் தமிழில் அனைத்தும் யாப்போம்

வெண்தாழிசையில் முயன்றது:


ஒன்று:

சொல்லிக் கொடுக்க ஆசான் இருக்கையில்
வெல்லக் கட்டியாய் கவிதை தோன்றும்
சொல்லில் தூய்மை மிகும்!

இரண்டு:

நன்றி சொல்வேன் தமிழ் நம்பி
வென்று வருவேன் தமிழால் எம்பி
நன்றாய் நானும் எழுதி

தவறுகள் திருத்துவீர் நான் திருத்தமாய் தமிழெழுத ! நன்றி ஆசிரியர் தமிழநம்பி அவர்களே!!

அன்பு வணக்கங்களுடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by balakarthik Sun May 30, 2010 4:30 pm

வாங்க தோழி நலமா ஈகரை சார்பாக தங்களை வரவேற்கிறேன்
தங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் மரபுப் பா பயிலரங்கம் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty திருத்தம்

Post by யாதுமானவள் Sun May 30, 2010 5:17 pm

கீழ்கண்ட வெண்தாழிசையில்...எழுத்துப் பிழை ஏற்பட்டு விட்டது. பதிவு செய்தபின் தான் கண்டேன்.

தமிழ நம்பி .... தமிழ் நம்பி அல்ல....

நன்றி சொல்வேன் தமிழ நம்பி
வென்று வருவேன் தமிழால் எம்பி
நன்றாய் நானும் எழுதி

- யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty இன்னும் சில ...(முயற்சிகள்)

Post by யாதுமானவள் Mon May 31, 2010 8:46 pm

முயற்சி:1

புதிய கவிதை புனைய நினைக்க
அதிக வார்த்தை அழகாய் வந்து
உதிர்ந்த விந்தை காணீர்


முயற்சி:2

கண்கள் திறந்து கருத்தை கொண்டு
எண்ணம் எல்லாம் எதிரே கொண்டு
பண்ணும் பாடல் இனிமை

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Jun 01, 2010 8:54 am

Yaadhumanaval wrote:முதலில் ஈகரைக்கு என் வாழ்த்துக்கள்!

யாப்பிலக்கணம் பயிற்றுவிக்கும் திரு. தமிழ நம்பி அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்!

நாற்சீர் வெண்செந்துறையில் என் முதல் முயற்சி:

ஒன்று:

ஆசான் தாங்கள் ஆற்றும் பணியால்
மாசற தமிழை மாண்புறக் கற்போம்!

இரண்டு:

பழகப் பழகப் பக்குவம் பெறுவோம்
அழகுத் தமிழில் அனைத்தும் யாப்போம்

வெண்தாழிசையில் முயன்றது:


ஒன்று:

சொல்லிக் கொடுக்க ஆசான் இருக்கையில்
வெல்லக் கட்டியாய் கவிதை தோன்றும்
சொல்லில் தூய்மை மிகும்!

இரண்டு:

நன்றி சொல்வேன் தமிழ நம்பி
வென்று வருவேன் தமிழால் எம்பி
நன்றாய் எழுதி நான்.


புதிய கவிதை புனைய நினைக்க
அதிக சொற்கள் அழகாய் வந்து
உதிர்ந்த விந்தை காண்.

கண்கள் திறந்து கருத்தைக் கொண்டு
எண்ணம் எல்லாம் எதிரே கொண்டு
பண்ணும் பாடல் இனிது.

அன்பு வணக்கங்களுடன்
யாதுமானவள்

யாதுமானவள் என்ற பெயரில் வந்த இனிய உள்ளமே,

உங்களின் மதிப்பும் அன்பும் கெழுமிய உரைகண்டு நெகிழ்ந்தேன்.

மனங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

நீங்கள் எழுதிய வெண்செந்துறையும் வெண்டாழிசையும் தந்த மகிழ்ச்சிக்கு ஈடேதுமில்லை.

அருமை, மிக அருமை!

தொடர்ந்து படித்து எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Jun 01, 2010 8:57 am

அப்புக்குட்டியார்க்கு அகங்கனிந்த நன்றி!

நீங்களும் கூட எழுத முயற்சி செய்யலாமே!

எதையும் திருத்திக் கொள்ளலாம். முயன்று பாருங்கள்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty வெண்தாழிசையில் தொடரும் என் முயற்சி

Post by யாதுமானவள் Thu Jun 03, 2010 4:21 pm

ஐயா தமிழ நம்பி என் அன்பின் வணக்கம் ஏற்பீர்!
தங்கள் கரத்தால் திருத்தப் பெற்று என் இலக்கியக் குழந்தைகள் வளரத்தொடங்குகிறது குறித்து யாம் பெறும் ஆனந்ததிற்கு எல்லையொன்றில்லை.


எம்முயற்சி தொடர எம்மை ஆசித்து தொடர்ந்து எமக்குப் பயிற்றுவிப்பீர்!

இன்னும் சில முயற்சிகள் இன்றும் செய்துள்ளேன். கண்டு அதனையும் கரை சேர்ப்பீர்!

இன்னொரு வேண்டுகோள்:

பாடம் - எதுகை 2 எனக்கு சரியாகப் புரியவில்லை. , வல்லின வருக்க எதுகை, மெல்லின எதுகை, ...என்ற பகுதியை இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறினீரென்றால் நான் சரியாக விளங்கிக் கொள்வேன்.


வெண்தாழிசையில் தொடரும் என் முயற்சிகள்


நாரோடு முல்லையாய் நறுமணம் வீசியபோல்

ஏரோடும் தேரோடும் எம்மினம் வாழ்ந்ததை

யாரோடு சொல்வோம் யாம்?

----------------

தனித்து நின்று தமிழினை உண்டு

இனித்த இன்சுவை பருகிப் பருகியே

கனைத்து மகிழ்ந்தேன் யான்.

-----------------



ஐந்து விரலில் ஆர்வம் மேலிட

பைந்தமிழ் ஓசை பாட்டினில் கொடுக்க

உந்திக் கற்றேன் நான்

------------------

ஊணின்றி உறக்கமின்றி ஓயாமல் சிந்தித்து

கணினியின் முன்னமர்ந் தெழுதி யெழுதி

நானின்று பயந்தேன் தமிழ்

---------------

காதோரம் ஒலித்த கைவளை கழற்றி

சேதாரம் ஆகாமல் சிந்தையை செலுத்தி

ஆதாரம் செய்தேன் நான்

------------------



சொன்னது கேட்டது சொற்களாய் வந்தது

இன்னதாய் நானெழுதி இனிதாய்க் கற்றிட

அன்னைத் தமிழ் அதனை!

----------------------

தங்கள் அடுத்த பயிற்சியினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

நலம் காப்பீர்!

அன்புகலந்த நன்றிகளுடன்,
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 11 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 50 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 30 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum