Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவையான வரலாற்று சம்பவங்கள்
+7
நிலாசகி
settumurugaiyan
kalaimoon70
இளமாறன்
Aathira
nandhtiha
snehiti
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுவையான வரலாற்று சம்பவங்கள்
பணத்தின் உண்மையான மதிப்பு
காந்தியடிகள் ஒரு பொதுக்கூட்டத்தில் படுகாரசாரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார். கூட்ட முடிவில் இயக்கத்திற்கு தொண்டர்கள் தம்மாலான நிதியுதவியை அளிக்கத் தொடங்கினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு பாட்டி தன்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டார் காந்தி. உடனே தனது உதவியாளரைக் கூப்பிட்டு அவரை தம்மிடம் அழைத்து வருமாறு கூறினார் காந்தி. பாட்டி அருகில் வந்து தனது சுருக்குப்பையை
அவிழ்த்து அதனுள் இருந்த பழைய சிற்பக்காசு ஒன்றை காந்தியிடம் அளித்தார். அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட காந்தி அவரை அன்போடு விசாரித்து அனுப்பி வைத்தார். அவர் சென்றதும் உதவியாளர் காந்தியிடம், "நமக்கு இங்கே சில பணக்காரர்கள் கோடி
கோடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்குக்கூட கொடுக்காத மரியாதையை ஒரே ஒரு செல்லாக்காசைக் கொடுத்த பாட்டிக்குக் கொடுக்கிறீர்களே?" என்று கேட்டார்.
உடனே காந்தி சொன்னார், "அவர்களிடம் பணம் நிறைய இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நமக்கு நிதியாக தந்தார்கள். ஆனால் இருந்த ஒரே ஒரு காசையும் நமக்குக் கொடுத்துவிட்டு அடுத்தவேளை உணவைப்பற்றிக்கூட கவலைப்படாமல் சென்றாரே...
அவர் கொடுத்ததுதான் உண்மையான நிதியுதவி!" என்றார்.
பணம் நிறைய இருப்பவனிடம் இருந்து பெறப்படும் பணத்திற்கும் பணம் இல்லாதவர்களிடம் இருந்து பெறப்படும் பணத்திற்கும் உள்ள உண்மையான மதிப்பை இங்கே காந்தியடிகள் வெகு அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார்.
காந்தியடிகள் ஒரு பொதுக்கூட்டத்தில் படுகாரசாரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார். கூட்ட முடிவில் இயக்கத்திற்கு தொண்டர்கள் தம்மாலான நிதியுதவியை அளிக்கத் தொடங்கினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு பாட்டி தன்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டார் காந்தி. உடனே தனது உதவியாளரைக் கூப்பிட்டு அவரை தம்மிடம் அழைத்து வருமாறு கூறினார் காந்தி. பாட்டி அருகில் வந்து தனது சுருக்குப்பையை
அவிழ்த்து அதனுள் இருந்த பழைய சிற்பக்காசு ஒன்றை காந்தியிடம் அளித்தார். அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட காந்தி அவரை அன்போடு விசாரித்து அனுப்பி வைத்தார். அவர் சென்றதும் உதவியாளர் காந்தியிடம், "நமக்கு இங்கே சில பணக்காரர்கள் கோடி
கோடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்குக்கூட கொடுக்காத மரியாதையை ஒரே ஒரு செல்லாக்காசைக் கொடுத்த பாட்டிக்குக் கொடுக்கிறீர்களே?" என்று கேட்டார்.
உடனே காந்தி சொன்னார், "அவர்களிடம் பணம் நிறைய இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நமக்கு நிதியாக தந்தார்கள். ஆனால் இருந்த ஒரே ஒரு காசையும் நமக்குக் கொடுத்துவிட்டு அடுத்தவேளை உணவைப்பற்றிக்கூட கவலைப்படாமல் சென்றாரே...
அவர் கொடுத்ததுதான் உண்மையான நிதியுதவி!" என்றார்.
பணம் நிறைய இருப்பவனிடம் இருந்து பெறப்படும் பணத்திற்கும் பணம் இல்லாதவர்களிடம் இருந்து பெறப்படும் பணத்திற்கும் உள்ள உண்மையான மதிப்பை இங்கே காந்தியடிகள் வெகு அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார்.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
ஆங்கிலேய ஆணவம்
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தற்போது சுதந்திரமாக இருக்கும் நாடுகளை ஆங்கிலத்தில் (commonwealth countries)காமன்வெல்த் நாடுகள் என்று கூறுவார்கள். இந்த காமன்வெல்த் தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள் (கூடி என்ன பேசுவார்கள் என்பது வேறு விஷயம், ஏதோ ஒரு நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பது தான் உண்மை!). 1975ம் ஆண்டு ஜமைகா நாட்டில் இந்த கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை 'இரும்பு பெண் (Iron Lady) என்று அப்போதைய ஆங்கிலேய பத்திரிகைகள் பட்ட பெயர் வைத்திருந்தனர். இந்த பெயருக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது.
மாநாடு நடந்து முடிந்த அன்று இங்கிலாந்து ராணி எலிஸபெத்* எல்லா தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னாள் தலைவர்களெல்லாம் ஒரு காலத்தில் தனது நாட்டுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்ற எண்ணம் எலிஸபெத் ராணிக்கு இருந்திருக்கும் போல. எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் இருந்த வாக்கியம் என்னவென்றால் "Her Majesty will be pleased to grant an audience to you" என்று இருந்தது. அதாவது மற்ற தலைவர்கள் ஏதோ எலிஸபெத்தை பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பது போலவும் ராணியார் 'தரிசனம்' தருவதற்கு சம்மதிப்பது போலவும் அந்த கடிதத்தின் தொனி இருந்தது. சிறிய வயது முதலே இந்திரா நேருவின் சத்யாகிரஹ போராட்டத்தை அருகிலேயே பார்த்தவர். அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா? பதிலுக்கு தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு லெட்டர் பேடை கிழித்து "The Prime Minister of India will be pleased to meet you" (இந்திய பிரதமர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்) என்று எழுதி அனுப்பினார்.
மற்ற தலைவர்கள் மத்தியில் இது மிகவும் பரபரப்பாக
பேசப்பட்டது. தவறை உணர்ந்த எலிஸபெத், முதலில் எழுதிய கடிதத்தை வாபஸ் வாங்கி கொண்டு "Her Majesty will be pleased to meet you" என்று திருத்தி அனுப்பினார்.
அது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடந்த எல்லா காமன்வெல்த் மாநாடுகளிலும் எந்த நாட்டில் மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்தான் மற்ற தலைவர்களூக்கு அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்தனர், எலிஸபெத் ராணி அல்ல*. 'ஒரு காலத்தில்
நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தோம், இப்போது இல்லை' என்று சொல்லாமல் சொல்லி ஆங்கிலேயர்களின் ஆணவத்தை அடக்கிய* இந்த கடிதம் உண்மையில் சரித்திரம் படைத்து விட்டது என்றே கூறலாம் அல்லவா?
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தற்போது சுதந்திரமாக இருக்கும் நாடுகளை ஆங்கிலத்தில் (commonwealth countries)காமன்வெல்த் நாடுகள் என்று கூறுவார்கள். இந்த காமன்வெல்த் தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள் (கூடி என்ன பேசுவார்கள் என்பது வேறு விஷயம், ஏதோ ஒரு நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பது தான் உண்மை!). 1975ம் ஆண்டு ஜமைகா நாட்டில் இந்த கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை 'இரும்பு பெண் (Iron Lady) என்று அப்போதைய ஆங்கிலேய பத்திரிகைகள் பட்ட பெயர் வைத்திருந்தனர். இந்த பெயருக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது.
மாநாடு நடந்து முடிந்த அன்று இங்கிலாந்து ராணி எலிஸபெத்* எல்லா தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னாள் தலைவர்களெல்லாம் ஒரு காலத்தில் தனது நாட்டுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்ற எண்ணம் எலிஸபெத் ராணிக்கு இருந்திருக்கும் போல. எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் இருந்த வாக்கியம் என்னவென்றால் "Her Majesty will be pleased to grant an audience to you" என்று இருந்தது. அதாவது மற்ற தலைவர்கள் ஏதோ எலிஸபெத்தை பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பது போலவும் ராணியார் 'தரிசனம்' தருவதற்கு சம்மதிப்பது போலவும் அந்த கடிதத்தின் தொனி இருந்தது. சிறிய வயது முதலே இந்திரா நேருவின் சத்யாகிரஹ போராட்டத்தை அருகிலேயே பார்த்தவர். அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா? பதிலுக்கு தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு லெட்டர் பேடை கிழித்து "The Prime Minister of India will be pleased to meet you" (இந்திய பிரதமர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்) என்று எழுதி அனுப்பினார்.
மற்ற தலைவர்கள் மத்தியில் இது மிகவும் பரபரப்பாக
பேசப்பட்டது. தவறை உணர்ந்த எலிஸபெத், முதலில் எழுதிய கடிதத்தை வாபஸ் வாங்கி கொண்டு "Her Majesty will be pleased to meet you" என்று திருத்தி அனுப்பினார்.
அது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடந்த எல்லா காமன்வெல்த் மாநாடுகளிலும் எந்த நாட்டில் மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்தான் மற்ற தலைவர்களூக்கு அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்தனர், எலிஸபெத் ராணி அல்ல*. 'ஒரு காலத்தில்
நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தோம், இப்போது இல்லை' என்று சொல்லாமல் சொல்லி ஆங்கிலேயர்களின் ஆணவத்தை அடக்கிய* இந்த கடிதம் உண்மையில் சரித்திரம் படைத்து விட்டது என்றே கூறலாம் அல்லவா?
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
அமெரிக்க சூழ்ச்சி
1960களில் நடந்த சம்பவம் இது. சீனாவுடன் ஆன போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது. அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு
அனுப்பியது. என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம்.
அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும்
ஆச்சர்யமும் அடைந்தார். அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார்.
அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது.
இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த
ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியாக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் ஐக்கியமாக்கி விட்டார்.
தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார். அமெரிக்காவின் இந்த* சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்த*து. அத*ற்கு பிற*கு சிறிது சிறிதாக* இந்தியா அப்போதைய* சோவிய*த் யூனிய*னுட*ன் நெருங்கி செல்ல* ஆர*ம்பித்த*து. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்.
1960களில் நடந்த சம்பவம் இது. சீனாவுடன் ஆன போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது. அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு
அனுப்பியது. என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம்.
அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும்
ஆச்சர்யமும் அடைந்தார். அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார்.
அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது.
இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த
ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியாக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் ஐக்கியமாக்கி விட்டார்.
தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார். அமெரிக்காவின் இந்த* சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்த*து. அத*ற்கு பிற*கு சிறிது சிறிதாக* இந்தியா அப்போதைய* சோவிய*த் யூனிய*னுட*ன் நெருங்கி செல்ல* ஆர*ம்பித்த*து. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
நேருவின் தீரம்
எல்லோரும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ம் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஆனால், இந்தியாவின் ஒரு பகுதி 1961ம் ஆண்டு வரை அன்னிய ஆட்சியின் கீழ் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை அது தான். ஆங்கிலேயர்கள் தான் 1947ல் இந்தியாவை விட்டு வெளியேரினர். ஆனால் கோவா, தமன், தியு என்று மூன்று இடங்களில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டை இன்னும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இவை மூன்றும் சிறிய இடங்கள்தான். இருந்தாலும் நம் நாட்டினுடைய ஒரு பகுதிகள் தானே?
போரினை வெறுத்த நேரு பல முறை போர்த்துகீசியர்களிடம் நம் நாட்டை விட்டு வெளியேற கோரிக்கை விடுத்தார். ஒரு கட்டத்தில் 'உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என்று இந்தியாவுக்கே சவால் விட்டனர் போர்த்துகீசியர். இனி இவர்களுடன் பேசி பயன் இல்லை என்பதை நேரு உணர்ந்தார். போர் செய்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை. ஆனால் அதற்கான பண பலம் இல்லை. ஒரு பக்கம் நாட்டில் தலை விரித்தாடிய உணவு பஞ்சம், வறுமை. மற்றொரு பக்கம் நம்மை அடிமை படுத்திக்கொண்டு நகர மறுக்கும் சக்தி வாய்ந்த ஒரு நாடு. உண்மையிலேயே ஒரு பெரிய சவால் தான். ஆனால் 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற முடிவுக்கு வந்த பின் நேரடி தாக்குதலுக்கு நேரு தயாரானார்.
முதலில் போர்த்துகீசியரிடம் எவ்வளவு விமானங்கள் உள்ளன, அவை உஷார் (alertness) நிலையில் உள்ளனவா என்பதை அறிவதற்காக நமது விமானப்படை ஒரு தந்திரம் செய்தனர். டிசம்பர் 9, 1961 அன்று இந்த நாடகம் நடந்தது. கோவாவின் முக்கிய இடங்களுக்கு மேல் இந்திய விமானப்படையின் Vampire விமானங்கள் ரோந்து வந்தனர். இவற்றை விரட்டி அடிக்க போர்த்துகீசிய விமானங்கள் வரும் அல்லவா? அப்போது அவர்களிடம் எத்தனை விமானங்கள் உள்ளன, எவ்வளவு உஷார் நிலையில் உள்ளார்கள் என்று தெரிய வருமே! ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. எதிர்ப்பே இல்லாததால் பெரிய தாக்குதலுக்கு தயாராகிவிட்டார் நேரு.
டிசம்பர் 18ம் தேதி. நமது விமானப்படை வீரர்களுக்கு தெளிவான ஒரு உத்தரவை இட்டார் நேரு. கோவா, தமன், தியு ஆகிய மூன்று இடங்களிலும் சரமாரியாக குன்டு வீசி இந்த இடங்களில் உள்ள விமான ஓடுபாதைகளை தகர்த்தி விட வேண்டும். ஆனால் ஒரு குண்டு கூட மக்கள் மீதோ விமான நிலையத்தின் மீதோ அல்லது அங்கு இருக்கும் போர்த்துகீசிய விமானங்கள் மீதோ விழக்கூடாது என்று உத்தரவிட்டார்(போரில் கிடைக்கும் எதிரி நாட்டு விமானங்கள் யாரிடம் கிடைக்கிறதோ அது அவர்களுக்கே சொந்தம் என்று ஒரு மரபு உள்ளது). விமான ஓடுதளத்தை சேதப்படுத்தி விட்டால் வெளியிலிருந்து விமானங்கள் அங்கே இறங்க முடியாது அல்லவா? அதே சமயத்தில் தரை வழியாக இராணுவ தாக்குதல் நடைபெற வேண்டும் என்று ஏற்பாடு.
அதற்கு முன்னால் முக்கியமாக ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் தொடர்பு கொண்ட நபர் எகிப்து நாட்டின் அதிபர் நாசர். அந்த நாட்களில் போர்த்துகீசிய கப்பற்படை உலகிலேயே மிக அதி நவீன மற்றும் பெரிய கப்பற்படைகளில் ஒன்றாக இருந்தது. போர்சுகல் நாட்டிலிருந்து கப்பற்படை இந்தியா வந்து விட்டால் அதை எதிர் கொள்வதற்கு நம்மிடம் போதிய பலம் இல்லை. இதை நேரு அறிந்திருந்தார். தனது நண்பர் நாசருக்கு தொலைபேசி மூலம் ஒரு கோரிக்கை விடுத்தார். 'எப்படியாவது போர்துகீசிய கப்பல்களை சூயஸ் கால்வாய் மூலம் இந்தியா செல்வதற்கு தடை விதித்து விடுங்கள்' என்றார் நேரு. தனது தேசம் அடிமை வாழ்விலிருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்றார் நேரு. (போர்ச்சுகலிலிருந்து கப்பல் மூலம் இந்தியா வருவதற்கு வேறு வழியே கிடையாது). நாசர் நெகிழ்ந்து விட்டார். "நேரு அவர்களே, உலக நாடுகள் அனைவரும் மெளனமாக இருக்கும்போது பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் நாடு இந்தியா தான். அந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன். எங்களது நண்பன் இந்தியாவுக்காக செய்யும் ஒரு சிறிய கைம்மாறு இது தான்" என்றார்
நாசர்.
அவ்வளவுதான். அடுத்த நிமிடம் நமது விமானப்படை தாக்குதலை ஆரம்பித்தது. ஒரே நாளில் கோவா, தமன், தியு ஆகிய இடங்களில் சரமாரியான தாக்குதல் நடந்தது. சமாளிக்க முடியாத போர்த்துகீசியர் அவசரம் அவசரமாக கம்பியில்லா வானொலி மூலம் தங்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். சமயோசிதமாக நமது
விமானப்படையினர் கம்பியில்லா நிலையத்தை தகர்த்து எறிந்து விட்டிருந்தனர். நாசரும் சூயஸ் கால்வாய் மூலம் போர்த்துகீசிய கப்பல்கள் செல்வதை தடுத்து விட்டார். வேறு வழியில்லாமல் டிசம்பர் 19ம் தேதி போர்த்துகீசிய கவர்னர் டிசவுசா சரணடைந்தார். இந்திய மூவர்ண கொடி கோவாவில் முதன் முறையாக* பறந்தது.
எல்லோரும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ம் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஆனால், இந்தியாவின் ஒரு பகுதி 1961ம் ஆண்டு வரை அன்னிய ஆட்சியின் கீழ் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை அது தான். ஆங்கிலேயர்கள் தான் 1947ல் இந்தியாவை விட்டு வெளியேரினர். ஆனால் கோவா, தமன், தியு என்று மூன்று இடங்களில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டை இன்னும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இவை மூன்றும் சிறிய இடங்கள்தான். இருந்தாலும் நம் நாட்டினுடைய ஒரு பகுதிகள் தானே?
போரினை வெறுத்த நேரு பல முறை போர்த்துகீசியர்களிடம் நம் நாட்டை விட்டு வெளியேற கோரிக்கை விடுத்தார். ஒரு கட்டத்தில் 'உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என்று இந்தியாவுக்கே சவால் விட்டனர் போர்த்துகீசியர். இனி இவர்களுடன் பேசி பயன் இல்லை என்பதை நேரு உணர்ந்தார். போர் செய்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை. ஆனால் அதற்கான பண பலம் இல்லை. ஒரு பக்கம் நாட்டில் தலை விரித்தாடிய உணவு பஞ்சம், வறுமை. மற்றொரு பக்கம் நம்மை அடிமை படுத்திக்கொண்டு நகர மறுக்கும் சக்தி வாய்ந்த ஒரு நாடு. உண்மையிலேயே ஒரு பெரிய சவால் தான். ஆனால் 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற முடிவுக்கு வந்த பின் நேரடி தாக்குதலுக்கு நேரு தயாரானார்.
முதலில் போர்த்துகீசியரிடம் எவ்வளவு விமானங்கள் உள்ளன, அவை உஷார் (alertness) நிலையில் உள்ளனவா என்பதை அறிவதற்காக நமது விமானப்படை ஒரு தந்திரம் செய்தனர். டிசம்பர் 9, 1961 அன்று இந்த நாடகம் நடந்தது. கோவாவின் முக்கிய இடங்களுக்கு மேல் இந்திய விமானப்படையின் Vampire விமானங்கள் ரோந்து வந்தனர். இவற்றை விரட்டி அடிக்க போர்த்துகீசிய விமானங்கள் வரும் அல்லவா? அப்போது அவர்களிடம் எத்தனை விமானங்கள் உள்ளன, எவ்வளவு உஷார் நிலையில் உள்ளார்கள் என்று தெரிய வருமே! ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. எதிர்ப்பே இல்லாததால் பெரிய தாக்குதலுக்கு தயாராகிவிட்டார் நேரு.
டிசம்பர் 18ம் தேதி. நமது விமானப்படை வீரர்களுக்கு தெளிவான ஒரு உத்தரவை இட்டார் நேரு. கோவா, தமன், தியு ஆகிய மூன்று இடங்களிலும் சரமாரியாக குன்டு வீசி இந்த இடங்களில் உள்ள விமான ஓடுபாதைகளை தகர்த்தி விட வேண்டும். ஆனால் ஒரு குண்டு கூட மக்கள் மீதோ விமான நிலையத்தின் மீதோ அல்லது அங்கு இருக்கும் போர்த்துகீசிய விமானங்கள் மீதோ விழக்கூடாது என்று உத்தரவிட்டார்(போரில் கிடைக்கும் எதிரி நாட்டு விமானங்கள் யாரிடம் கிடைக்கிறதோ அது அவர்களுக்கே சொந்தம் என்று ஒரு மரபு உள்ளது). விமான ஓடுதளத்தை சேதப்படுத்தி விட்டால் வெளியிலிருந்து விமானங்கள் அங்கே இறங்க முடியாது அல்லவா? அதே சமயத்தில் தரை வழியாக இராணுவ தாக்குதல் நடைபெற வேண்டும் என்று ஏற்பாடு.
அதற்கு முன்னால் முக்கியமாக ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் தொடர்பு கொண்ட நபர் எகிப்து நாட்டின் அதிபர் நாசர். அந்த நாட்களில் போர்த்துகீசிய கப்பற்படை உலகிலேயே மிக அதி நவீன மற்றும் பெரிய கப்பற்படைகளில் ஒன்றாக இருந்தது. போர்சுகல் நாட்டிலிருந்து கப்பற்படை இந்தியா வந்து விட்டால் அதை எதிர் கொள்வதற்கு நம்மிடம் போதிய பலம் இல்லை. இதை நேரு அறிந்திருந்தார். தனது நண்பர் நாசருக்கு தொலைபேசி மூலம் ஒரு கோரிக்கை விடுத்தார். 'எப்படியாவது போர்துகீசிய கப்பல்களை சூயஸ் கால்வாய் மூலம் இந்தியா செல்வதற்கு தடை விதித்து விடுங்கள்' என்றார் நேரு. தனது தேசம் அடிமை வாழ்விலிருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்றார் நேரு. (போர்ச்சுகலிலிருந்து கப்பல் மூலம் இந்தியா வருவதற்கு வேறு வழியே கிடையாது). நாசர் நெகிழ்ந்து விட்டார். "நேரு அவர்களே, உலக நாடுகள் அனைவரும் மெளனமாக இருக்கும்போது பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் நாடு இந்தியா தான். அந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன். எங்களது நண்பன் இந்தியாவுக்காக செய்யும் ஒரு சிறிய கைம்மாறு இது தான்" என்றார்
நாசர்.
அவ்வளவுதான். அடுத்த நிமிடம் நமது விமானப்படை தாக்குதலை ஆரம்பித்தது. ஒரே நாளில் கோவா, தமன், தியு ஆகிய இடங்களில் சரமாரியான தாக்குதல் நடந்தது. சமாளிக்க முடியாத போர்த்துகீசியர் அவசரம் அவசரமாக கம்பியில்லா வானொலி மூலம் தங்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். சமயோசிதமாக நமது
விமானப்படையினர் கம்பியில்லா நிலையத்தை தகர்த்து எறிந்து விட்டிருந்தனர். நாசரும் சூயஸ் கால்வாய் மூலம் போர்த்துகீசிய கப்பல்கள் செல்வதை தடுத்து விட்டார். வேறு வழியில்லாமல் டிசம்பர் 19ம் தேதி போர்த்துகீசிய கவர்னர் டிசவுசா சரணடைந்தார். இந்திய மூவர்ண கொடி கோவாவில் முதன் முறையாக* பறந்தது.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
பாஷ்யம் செய்த சாகசம்
1941ம் வருடம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை இயக்கம் ஆங்காங்கே வெடித்து கொண்டிருந்தது. சென்னையில் தற்போது சட்டசபை இயங்கும் ஜார்ஜ் கோட்டை எனப்படும் Fort St. George ல் தான் வெள்ளையர்களின் இராணுவம் இருந்தது. கோட்டையின் மேலே பிரிட்டனின் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தது.
தினமும் அந்த வழியே சாலையில் மிதிவண்டியில் பாஷ்யம் என்றொரு வாலிபர் செல்வது வழக்கம். அப்படி போகும்போது மேலே பறந்து கொண்டிருக்கும் பிரிட்டனின் தேசியக்கொடியை அண்ணாந்து பார்ப்பார். மனதுக்குள் ஒரு வெறி உண்டாகும். நம்முடைய நாட்டில் நம்முடைய ஊரிலேயெ வந்து நம்மை அடிமையாக்கி இருக்கும் இந்த வெள்ளைக்காரர்களுக்கு ஒரு தக்க பாடம் புகட்ட வேண்டும்
என்று கறுவிக்கொண்டிருந்தார். எப்படியாவது இந்த கொடியை இறக்கி இந்திய தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் நாலா பக்கமும் கடுமையான காவல் இருந்தது. அகழி வேறு. யாருமே யோசிக்காத அளவுக்கு பிரமாதமாக ஒரு திட்டம் தீட்டினார் பாஷ்யம். சரியான சமயத்துக்காக காத்திருந்தார் இந்த இளைஞர்.
அந்த நாளும் வந்தது. இரவு சுமார் எட்டு மணி. தனது பனியனுக்குள் இந்திய கொடியை பதுக்கி கொண்டு கோட்டை அருகே சென்றார் பாஷ்யம். அப்போதெல்லாம் இரவில் அவ்வளவு ஜன நடமாட்டம் கிடையாது. அகழிக்குள் மெல்ல இறங்கி தண்ணீருக்குள் நீந்தி மறு பக்கம் உள்ள கோட்டையின் மதில் சுவரை அடைந்தார். அக்கம் பக்கம் பார்த்தார். யாரும் இல்லாத சமயத்தில் பரபரவென்று மதில் சுவரை ஏற ஆரம்பித்தார். சுவற்றின் மேல் ஏறி அங்கிருந்து கீழே நோட்டம் விட்டார்.
பல மணி நேரம் குளிரில் சுவற்றின் மேலே காத்திருந்தார். இரவில்
காவலாளிகளும் ஆள் நடமாட்டம் இல்லாததால் உஷார் நிலையில் இல்லாமல் மிகவும் relaxed ஆக இருந்தார்கள். மதில் சுவரை ஏறியதில் கை எல்லாம் இரத்தம். ஆனால் எதை பற்றியும் கவலைப்படவில்லை பாஷ்யம். பூனை போல பதுங்கி பதுங்கி சரியான நேரம் பார்த்து கோட்டைக்குள் கீழே இருந்த புதரில் குதித்தார். நேராக கொடிமரத்தின் அருகில் சென்று அதன் மேல் விடுவிடுவென்று ஏறினார் அந்த மாவீரர். உச்சிக்கு சென்று அங்கிருந்த பிரிட்டிஷ் கொடியை கிழித்தெறிந்தார். தன் பனியனுள் வைத்திருந்த இந்திய கொடியை கம்பத்தில் மாட்டினார். தான் நினைத்த காரியத்தை சாதித்து விட்டார்!
சத்தத்தை கேட்டு கொடி மரத்தின் கீழே இராணுவத்தினர் திரண்டு விட்டனர். எதற்கும் கவலைப்படவில்லை பாஷ்யம். 'வந்தே மாதரம்' என்று மனம் விட்டு கத்தினார். மறக்காமல் கொடிக்கயிறை கையில் கொண்டு சென்றிருந்த கத்தியால் அறுத்தார். பிறகு சறுக்கி கொண்டே கீழே இறங்கினார். அதிர்ச்சியில் இருந்த காவலர்கள் அவரை உடனே கைது செய்தனர். அதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
கொடிக்கயிறை அறுத்து விட்டு மேலேயே முடிச்சு போட்டிருந்ததால்
காவலர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. காலையில் வந்த ஆங்கிலேயர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. விஷயம் அறிந்து வெளியே மக்கள் கூட்டம் கூடி கை தட்டி ஆரவாரம் செய்த*ன*ர்.
தீயணைப்பு படையின் உதவி கொண்டு கடைசியில் கொடி மரத்தின் மேல் ஏறி மீண்டும் பிரிட்டிஷ் கொடியை வெள்ளையர்கள் ஏற்றினர். கைதான பாஷ்யம் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரம் அடைந்து பல வருடங்களுக்கு பிறகு தமிழக அரசு இவர் செய்த சாதனையை கெளரவிக்க நினைத்தது. ஆனால் சுதந்திர வீரர்களுக்கான ஓய்வூதியத்தை கூட வாங்க மறுத்து விட்டார் பாஷ்யம். இந்திய* சுத*ந்திர*த்துக்காக* சிறை சென்ற பாஷ்யம் போன்ற ப*ல்லாயிர*க்க*ண*க்கான தியாகிக*ளுக்கு மக்கள் நினைவில் இருந்து மறைந்தாலும் நாம் என்றென்றும் க*ட*மை ப*ட்டுள்ளோம்.
1941ம் வருடம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை இயக்கம் ஆங்காங்கே வெடித்து கொண்டிருந்தது. சென்னையில் தற்போது சட்டசபை இயங்கும் ஜார்ஜ் கோட்டை எனப்படும் Fort St. George ல் தான் வெள்ளையர்களின் இராணுவம் இருந்தது. கோட்டையின் மேலே பிரிட்டனின் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தது.
தினமும் அந்த வழியே சாலையில் மிதிவண்டியில் பாஷ்யம் என்றொரு வாலிபர் செல்வது வழக்கம். அப்படி போகும்போது மேலே பறந்து கொண்டிருக்கும் பிரிட்டனின் தேசியக்கொடியை அண்ணாந்து பார்ப்பார். மனதுக்குள் ஒரு வெறி உண்டாகும். நம்முடைய நாட்டில் நம்முடைய ஊரிலேயெ வந்து நம்மை அடிமையாக்கி இருக்கும் இந்த வெள்ளைக்காரர்களுக்கு ஒரு தக்க பாடம் புகட்ட வேண்டும்
என்று கறுவிக்கொண்டிருந்தார். எப்படியாவது இந்த கொடியை இறக்கி இந்திய தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் நாலா பக்கமும் கடுமையான காவல் இருந்தது. அகழி வேறு. யாருமே யோசிக்காத அளவுக்கு பிரமாதமாக ஒரு திட்டம் தீட்டினார் பாஷ்யம். சரியான சமயத்துக்காக காத்திருந்தார் இந்த இளைஞர்.
அந்த நாளும் வந்தது. இரவு சுமார் எட்டு மணி. தனது பனியனுக்குள் இந்திய கொடியை பதுக்கி கொண்டு கோட்டை அருகே சென்றார் பாஷ்யம். அப்போதெல்லாம் இரவில் அவ்வளவு ஜன நடமாட்டம் கிடையாது. அகழிக்குள் மெல்ல இறங்கி தண்ணீருக்குள் நீந்தி மறு பக்கம் உள்ள கோட்டையின் மதில் சுவரை அடைந்தார். அக்கம் பக்கம் பார்த்தார். யாரும் இல்லாத சமயத்தில் பரபரவென்று மதில் சுவரை ஏற ஆரம்பித்தார். சுவற்றின் மேல் ஏறி அங்கிருந்து கீழே நோட்டம் விட்டார்.
பல மணி நேரம் குளிரில் சுவற்றின் மேலே காத்திருந்தார். இரவில்
காவலாளிகளும் ஆள் நடமாட்டம் இல்லாததால் உஷார் நிலையில் இல்லாமல் மிகவும் relaxed ஆக இருந்தார்கள். மதில் சுவரை ஏறியதில் கை எல்லாம் இரத்தம். ஆனால் எதை பற்றியும் கவலைப்படவில்லை பாஷ்யம். பூனை போல பதுங்கி பதுங்கி சரியான நேரம் பார்த்து கோட்டைக்குள் கீழே இருந்த புதரில் குதித்தார். நேராக கொடிமரத்தின் அருகில் சென்று அதன் மேல் விடுவிடுவென்று ஏறினார் அந்த மாவீரர். உச்சிக்கு சென்று அங்கிருந்த பிரிட்டிஷ் கொடியை கிழித்தெறிந்தார். தன் பனியனுள் வைத்திருந்த இந்திய கொடியை கம்பத்தில் மாட்டினார். தான் நினைத்த காரியத்தை சாதித்து விட்டார்!
சத்தத்தை கேட்டு கொடி மரத்தின் கீழே இராணுவத்தினர் திரண்டு விட்டனர். எதற்கும் கவலைப்படவில்லை பாஷ்யம். 'வந்தே மாதரம்' என்று மனம் விட்டு கத்தினார். மறக்காமல் கொடிக்கயிறை கையில் கொண்டு சென்றிருந்த கத்தியால் அறுத்தார். பிறகு சறுக்கி கொண்டே கீழே இறங்கினார். அதிர்ச்சியில் இருந்த காவலர்கள் அவரை உடனே கைது செய்தனர். அதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
கொடிக்கயிறை அறுத்து விட்டு மேலேயே முடிச்சு போட்டிருந்ததால்
காவலர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. காலையில் வந்த ஆங்கிலேயர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. விஷயம் அறிந்து வெளியே மக்கள் கூட்டம் கூடி கை தட்டி ஆரவாரம் செய்த*ன*ர்.
தீயணைப்பு படையின் உதவி கொண்டு கடைசியில் கொடி மரத்தின் மேல் ஏறி மீண்டும் பிரிட்டிஷ் கொடியை வெள்ளையர்கள் ஏற்றினர். கைதான பாஷ்யம் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திரம் அடைந்து பல வருடங்களுக்கு பிறகு தமிழக அரசு இவர் செய்த சாதனையை கெளரவிக்க நினைத்தது. ஆனால் சுதந்திர வீரர்களுக்கான ஓய்வூதியத்தை கூட வாங்க மறுத்து விட்டார் பாஷ்யம். இந்திய* சுத*ந்திர*த்துக்காக* சிறை சென்ற பாஷ்யம் போன்ற ப*ல்லாயிர*க்க*ண*க்கான தியாகிக*ளுக்கு மக்கள் நினைவில் இருந்து மறைந்தாலும் நாம் என்றென்றும் க*ட*மை ப*ட்டுள்ளோம்.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
வணக்கம் அன்புச் சகோதரி சிநேகிதி அவர்களே
நல்ல தகவல்கள். நன்றியும் பாராட்டுக்களும். இது வரலாற்றின் ஒரு பகுதிதான்.
கஷ்மீர் விடயத்தில் நேரு அவர்கள் செயல்பாடு எப்படி இருந்ததெனில் பிற்காலத்தில் அவரே இது என்னுடைய இமாலயத்தவறு என்று ஒத்துக் கொள்ளும்படி ஆயிற்று.
சுதந்திரம் அடைந்த பிறகு 1990களின் கடைசி வரை வாழ்ந்த திரு பாஷ்யம் அவர்கள் மனமுடைந்து சொன்ன வார்த்தைகள் " பெற்ற சுதந்திரம் ஏமாற்றமளிக்கிறது' என்பது தான், இவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது.
அன்புடன்
நந்திதா
நல்ல தகவல்கள். நன்றியும் பாராட்டுக்களும். இது வரலாற்றின் ஒரு பகுதிதான்.
கஷ்மீர் விடயத்தில் நேரு அவர்கள் செயல்பாடு எப்படி இருந்ததெனில் பிற்காலத்தில் அவரே இது என்னுடைய இமாலயத்தவறு என்று ஒத்துக் கொள்ளும்படி ஆயிற்று.
சுதந்திரம் அடைந்த பிறகு 1990களின் கடைசி வரை வாழ்ந்த திரு பாஷ்யம் அவர்கள் மனமுடைந்து சொன்ன வார்த்தைகள் " பெற்ற சுதந்திரம் ஏமாற்றமளிக்கிறது' என்பது தான், இவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
nandhtiha wrote:வணக்கம் அன்புச் சகோதரி சிநேகிதி அவர்களே
நல்ல தகவல்கள். நன்றியும் பாராட்டுக்களும். இது வரலாற்றின் ஒரு பகுதிதான்.
கஷ்மீர் விடயத்தில் நேரு அவர்கள் செயல்பாடு எப்படி இருந்ததெனில் பிற்காலத்தில் அவரே இது என்னுடைய இமாலயத்தவறு என்று ஒத்துக் கொள்ளும்படி ஆயிற்று.
சுதந்திரம் அடைந்த பிறகு 1990களின் கடைசி வரை வாழ்ந்த திரு பாஷ்யம் அவர்கள் மனமுடைந்து சொன்ன வார்த்தைகள் " பெற்ற சுதந்திரம் ஏமாற்றமளிக்கிறது' என்பது தான், இவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது.
அன்புடன்
நந்திதா
அன்புள்ள அக்காவிற்க்கு வணக்கங்கள் முதலில்
தாங்களின் பின்னூட்டத்திற்கு முதற்கண் என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்..திரு பாஷ்யம் அவர்கள்
மனமுடைந்து சொன்னவிடயங்களை தாங்கள் வாயிலாகத்தான்
தெரிந்துக்கொண்டேன்..மிக்க நன்றி அக்கா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
வணக்கம் சகோதரி சிநேகிதி அவர்களே
வரலாற்றின் மறுபக்கமும் தெரிய வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்தேன். முன்பு ஒரு முறை நேரு ஸ்டேடியத்தில் தேசத் தியாகிகளின் படங்களைத் திறந்தார்கள், அப்படி அழைக்கப் பட்டவர்களின் ஒருவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்., அவர்கள் ஒரு தியாகியின் படத்தைத்திறந்து வைத்து விட்டு 3 நிமிடங்கள் தான் பேசினார், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை, "தியாகிகள் எல்லோரும் புண்ணிய சாலிகள். பெற்ற சுதந்திரம் பாழாகிப் போனதைப் பார்க்காமல் போய் விட்டார்கள் என்பது தான்.
இது உண்மையும் கூட
அன்புடன்
நந்திதா
வரலாற்றின் மறுபக்கமும் தெரிய வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்தேன். முன்பு ஒரு முறை நேரு ஸ்டேடியத்தில் தேசத் தியாகிகளின் படங்களைத் திறந்தார்கள், அப்படி அழைக்கப் பட்டவர்களின் ஒருவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்., அவர்கள் ஒரு தியாகியின் படத்தைத்திறந்து வைத்து விட்டு 3 நிமிடங்கள் தான் பேசினார், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை, "தியாகிகள் எல்லோரும் புண்ணிய சாலிகள். பெற்ற சுதந்திரம் பாழாகிப் போனதைப் பார்க்காமல் போய் விட்டார்கள் என்பது தான்.
இது உண்மையும் கூட
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
மெல்ல மெல்ல நினைவிலிருந்து கறைந்துகொண்டிருக்கின்ற செய்தியைத்தந்த ஸ்னேகிதிக்கு நன்றியும் பாராட்டும் உரியது. தோழி நந்திதாவுக்கும் அவ்வப்போது சில உண்மைச் சம்பவங்களை நினைவூட்டுவதற்கு நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
அன்புடன்
ஆதிரா
அன்புடன்
ஆதிரா
Re: சுவையான வரலாற்று சம்பவங்கள்
தாங்கள் சொல்வது உண்மைதான் அக்கா..
நாமெல்லாம் சுதந்திர நாட்டின் அடிமைகள்தான்
நாமெல்லாம் சுதந்திர நாட்டின் அடிமைகள்தான்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுவையான சம்பவங்கள்!!!!!!
» அறிஞர்களின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…!
» சில விளையாட்டுக்களில் கண் கலங்கும் சம்பவங்கள்
» அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
» அறிஞர்களின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…!
» சில விளையாட்டுக்களில் கண் கலங்கும் சம்பவங்கள்
» அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|