புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
53 Posts - 40%
heezulia
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_m10உயிர்த்தெழுவோம்... உருவாவோம்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்த்தெழுவோம்... உருவாவோம்....


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2009 3:10 pm

அன்பான எம் தமிழ் உறவுகளே…






அலை அலையாய் பறந்து வந்த ஊடகச் சதிகளினால் சிக்குண்டு …எதுவும் செய்ய இயலா குற்ற உணர்ச்சியில் ..தன்னை தானே உளவியலாய் சிதைத்துக் கொண்டிருக்கும் எம் இனமே…


தூர எறியுங்கள் துக்கங்களை…

கண்ணீர் துளிகள் எதையும் நமக்கு பெற்று தரப் போவதில்லை.

இதுவரை நாம் நிலைக் கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்கு நாமே மறுபரிசீலனை செய்வதற்கான காலமும் …தீர்க்க விழிகளுடன்…நமக்கான இலக்கை நோக்கை நடக்க வேண்டிய நேரமும் நமக்கு ஒருங்கே அமைந்து
வந்திருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள்
ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை.அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல..



அப்பழுக்கற்ற
தியாகமும், நேர்மையும் , வீரம் செறிந்த அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன்
நம் தேசிய தலைவர் அவர்கள். கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய
நம் இனத்து ஒட்டு மொத்த வரலாற்றின் பெருமை மிகு அடையாளமும் அவரே. மாறாத
புகழ் அடையாளமாய் நம் நெஞ்சில் தரித்திருக்கும் நம் தலைவருக்கு ஊடக
வியாபாரிகள் மரண வேடம் புனைய முயன்று வருகின்றார்கள். எவ்வித
அடக்குமுறைகளுக்கும் அஞ்சாது..துயிலாது இன்று கனன்று கொண்டிருக்கும் நம்
இனத்திற்கான விடுதலை வேட்கையை நம்முள் விதைத்து…உலகத் தமிழினத்தை இன்று
ஒரே இழையில் கோர்த்திருக்கும் நம் தேசிய தலைவருக்கு…எக்காலத்திலும்
மரணமில்லை. எம் இனம் உள்ளளவும்… தமிழ் பேசும் இறுதி உதடுகள் உள்ளளவு
தலைவர் இருப்பார்..இருந்துதான் ஆக வேண்டும்.



ஊடக
வியாபாரிகள் சிங்கள இன வெறியாட்ட கூட்டத்திடம் காசு வாங்கிக்
கொண்டு..அவர்கள் நடத்தும் தோல் பாவை கூத்தினை ஒளிபரப்பி நம் கவனத்தை திசை
திருப்புவதில் ஒரளவு வெற்றி பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த 4 தினங்களாக நம் தேசிய தலைவர் குறித்தான செய்திகளிலேயே நம் கவனம்
நிலைக் கொத்தி நின்றதே ஒழிய …அங்கே இன்னமும் அல்லலுற்று , அவதியுற்று
காயம் பட்டு குற்றுயிரும், கொலையுயிருமாய் சிக்கிக் கிடக்கும் நம்
சகோதர,சகோதரிகளின் பால் திரும்பியதா என்றால்…வெட்கத்தோடு ஒப்புக்
கொள்வோம். இல்லை.



இதைத்தான்
சிங்கள அரசும்., இந்திய உளவுத் துறையும், பார்ப்பன ஊடக வியாபாரிகளும்
எதிர்பார்த்தனர். எதிரிகள் நினைப்பது போலவே வீழ்கிற நம் மனநிலையை நம்
தேசிய தலைவர் விரும்புவாரா,,,? . இப்படி நித்தமும் வரும் செய்திகளில்
சிக்கிக் கொண்டு உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு…கலங்கி நிற்கும் வலுவிழந்த
மனநிலை ஒரு தேசத்தை கட்டி எழுப்பக் கூடியதா…?



யோசித்துப்
பார்ப்போம் உறவுகளே… நம் தேசிய தலைவர் பிரபாகரன் என்ற தனிமனிதனால் கட்டப்
பட்டது தான் நம் விடுதலை இயக்கம், தமிழீழ நாடு என்ற அனைத்துமே… நம்
இனத்தில் உதித்த அந்த உத்தமருக்கு இருக்கும் உழைப்பும், மனநிலையும்
நமக்கேன் இல்லாமல் போனது…? தலைவரும்,இயக்கம் மட்டுமே களத்தில் நின்று
போராடி தேசம் பெற்று தருவார்கள் என்ற எண்ணம் நமக்குள் ஊறி கிடப்பது
தவறுதானே…? . நம் இனம் விடுதலை இரண்டாம் பட்சம்..நம் மனநிலைக்கான
விடுதலைதான் முதல் கட்டம். இதை தான் நம் தலைவர் நமக்கு இந்த நொடி வரை
போதித்து வருகிறார்.இப்படி ஒரே ஒரு தனிமனிதனை சார்ந்து …அவரின் தலையில்
அனைத்து சுமைகளையும் சுமத்தி விட்டு…எதையும் செய்யாமல்..நமக்கான நாடு
அமையும் என கனவில் முழ்கிக் கிடப்பது நியாயம் தானா..?



ஒரு
செய்தி வருகிறது. கலங்கி அழுகிறோம்..துவண்டு விழுகிறோம்…மது குடித்து
திரிகிறோம்.கும்பல் கும்பலாக பேசி களைக்கிறோம் . அலைபேசி குறுஞ்செய்திகளை
அனுப்பி மேலும் குழம்பி…குழப்புகிறோம்…இதை தவிர கடந்த நாட்களில் நாம்
சாதித்தது என்ன…? .



இப்படி
புலம்பி..அழுது திரிவதன் மூலமாக நாட்களை கரைப்பது யாருக்கு லாபமாக அமையும்
என்பதனை சற்று யோசித்துப் பாருங்கள். உலக வல்லாதிக்க நாடுகள் அதிகார
,பொருளாதார நோக்குகளுடன் ஈழ இனப் பிரச்சனையை கையாண்டு வருகிறார்கள்..
சிங்கள அரசு தமிழனை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்… உலக
வல்லாதிக்கத்தின் பிடிகளுக்குள் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டது. ராஜபக்சே
என்ற மூர்க்க முட்டாளுக்கு ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை கனரக ஆயுதங்கள்
மூலமாக களைய முடியாது என்ற அறிவிருக்காது என்பது உண்மைதான்.ஆனால்
எதிரிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு உளவியலாய் நம்மை பலிக் கொடுப்பது
என்பது எதிரியின் கனரக ஆயுதங்களை விட நமக்கு எதிரானது இல்லையா..?



கோடிக்கணக்கான
மக்களை இழந்த பிறகும் …யூதர்களால் ஒரு இஸ்ரேலை எழுப்ப முடியும் போது
நம்மால் முடியாதா…என்ன..? ..முடியும்..நிச்சயம் முடியும்.



தாயகத் தமிழகத்தில் அறியாமையினாலும்..சுயநல வாழ்க்கை முறையினாலும் உணர்வற்று திரிகிற நம் சகத் தமிழனை அறிவு வயப்படுத்தி…மக்கள் போராட்டமாக …புரட்சியாக ஈழ ஆதரவு உணர்வினை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்..


ராஜபக்சேவும்,
அவனது படைகளும் செய்த போர்க்குற்றங்களை…இனப் படுகொலை நடவடிக்கைகளை, மனித
உரிமை மீறல்களை உலக சமூகத்திற்கு அம்பலப் படுத்தி தீரவேண்டிய அவசியத்தில்
நாம் இருக்கிறோம்.






ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2009 3:11 pm

இந்த
நொடி அளவிலும் ..சிங்கள பேரினவாத அரசின் முகாம்களில் சிக்கித் தவிக்கும்
மக்களையும்..இன்னமும் போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கிற ,காயம்
பட்டு கதறிக் கொண்டிருக்கிற தமிழர்களையும்….மீட்க வேண்டிய பொறுப்பு சர்வ
தேச சமூகத்திற்கு இருக்கிறது என உணர்த்த வேண்டிய பொறுப்பில் நாம்
இருக்கிறோம்.



மரணக்குழிகளுக்குள்
போன மாவீரர்களின் கனவான தமிழர்களுக்கு என்று ஒரு நாடு..தமிழீழ நாடு என்ற
இலட்சியத்தினை மெய்பிக்க அனைத்து வல்லாதிக்க சக்திகளையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்..



இதையெல்லாம்
செய்யாமல்…இன எதிரிகளின் ஊடக சதிகளுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டு, தேங்கி
நின்றோமானால்… இது வரை நடந்த பேரழிவினை மிஞ்சிய அழிவு நிகழும் அபாயம்
இருக்கிறது.



எத்தனை
முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.
இந்த முறையும் அதுவே நடக்கும். அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம்
என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.



எந்த செய்தி வேண்டுமானாலும் வரட்டும் . படங்கள்..வீடியோ…என நாடகங்கள் நடக்கட்டும். அவற்றில் நம் மனநிலையை தவற
விட்டு நம் கனவினை நாமே சிதைத்துக் கொண்ட அவலத்திற்கு ஆளாக
வேண்டாம்.உறுதியோடு நிற்போம். உயிர் உள்ள வரை போராடுவோம்.இறுதித் தமிழன்
இருக்கும் வரை கனவு மலர களம் காண்போம்.



ஏற்கனவே
புலம் பெயர்ந்த நம் உறவுகளின் கடுமையான போராட்டம் உலக நாடுகளின்
மனசாட்சியினை உலுக்கி வருகிறது. நாமும் உலகமே உற்று நோக்கக் கூடிய வகையில்
மிகப் பெரிய போராட்டங்களை,எழுச்சிகளை தாயக தமிழகத்தில் உருவாக்க வேண்டியது
அவசியம். நம் இனத்திற்கு நேர்ந்த அழிவினை எதிர்த்து மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடும்…அளவற்ற உத்வேகத்துடன் போராட துவங்க வேண்டும்.



நம்
மத்திய அரசு சிங்கள பேரினவாத அரசிற்கு செய்து வருகின்ற உதவிகளை உடனடியாக
தடுத்து நிறுத்தும் வகையில்…..வலிமையான போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக
நடத்த வேண்டும்.



தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கும் விதமான நிர்பந்தங்களை சிங்கள
அரசிற்கும், நம் மத்திய அரசிற்கும் நாம் ஏற்படுத்த வேண்டும்.



அதற்கான
போராட்டங்களை…நிகழ்த்துவோம். மக்கள் சக்தியை திரட்டுவோம். நிகழ்ந்து
முடிந்திருக்கும் இன பேரவலத்தினை உலகக் கண்களுக்கு திரையிட்டு காட்டுவோம்.



பிழைப்பு
வாத அரசியல் தேர்தலில் இன எதிரிகளுக்கு வலுவில்லாத பின்னடைவினை
ஏற்படுத்தியது போல …இந்த முறையும் நாம் ஏமாறக் கூடாது.ஊருக்கு ஊர்
இருக்கும் தமிழுணர்வாளர் அமைப்புகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி நாடு
தழுவிய மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக சாத்தியப் படுத்துவதன் மூலமே
…நமக்கான தீர்வு அடங்கியுள்ளது.



ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம்…

துவண்டு கிடக்கும் நாமும்..விழிகளை துடைத்துக்கொண்டு…

ஒரு தேசம் உருவாக… களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..

உயிர்த்தெழுவோம். உருவாவோம்.

தமிழர்களின் தாகம்…. தமிழீழ தாயகம்.

இணையத்
தமிழர் இயக்கம் சார்பாக வரும் வாரத்தில் கும்பகோணம் அல்லது
சென்னையில் இனவாத சிங்கள அரசின் இனஅழிப்பு
நடவடிக்கையை வெளிக்குனரும் முகமாக, சிங்கள ஆதரவு ஊடகங்களின் பொய்
பிரச்சார முறியடிப்பு பரப்புரையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டம் மற்றும்
மாபெரும் வீரவணக்க நிகழ்வும் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
தமிழின உணர்வாளர்கள்
அனைவரையும் கைகோர்க்க அழைக்கிறோம், இல்லை உங்களுடன் கைகோர்க்கவும் தயாராய்
இருக்கிறோம். தற்போதைய நமது அமைதி மாபெரும் வரலாற்று குற்றத்திற்கு
துணைபோவதாய் அர்த்தப்படும்... அகவே துக்கம் களைந்து, தூக்கம் களைந்து,
கண்ணீர் துடைத்து களம் காண்போம்... நம் இனத்தை நாம் காப்பாற்றாமல் யார்
காப்பற்றுவார்..



If We Don't do, Who Will ?

If not now, When ??


If Jews can do, if Cubans can do, Why can't we ???

இணையத் தமிழர் இயக்கத்தின் சார்பாக..

மணி.செந்தில்,
பாக்கியராசன் சேதுராமலிங்கம், யுவன்பிரபாகரன், , விஷ்ணுபுரம்
சரவணன்,இளவரசன்,பிரபாகரன், நாசர், பாலா,செந்தில்,ஜெயக்குமார்.



தொடர்புக்கு - tamileelam@itamilsm.org

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக