புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
58 Posts - 64%
heezulia
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
53 Posts - 64%
heezulia
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_m10விவேகானந்தரின் மணிமொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் மணிமொழிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:16 am

விவேகானந்தரின் மணிமொழிகள் S4u10
விவேகானந்தரின் மணிமொழிகள்


உங்களை நீங்களே நம்புங்கள்!

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

இல்லை என்று சொல்லாதே!

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ!

பசு மனிதனாகி விடாது!

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே! பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒரு போதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்;தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

விடாமுயற்சியே வெற்றி தரும்!

வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்!

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும்.



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:17 am


உன் கனவை நிறைவேற்று!


ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் - மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் - நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்!

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாயந்தோடச் செய்கிறது.

ஆற்றலை வீணாக்காதே

சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள்!

நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்த எண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடி அடிக்கும் வரையிலும், அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால், அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை.

நமது நிலைக்கு நாமே காரணம்!

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது விதியை நாமே நிர்ணயிக்கிறாம்!

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.

விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை, பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை.



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 11:51 pm

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தாதே!

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும், செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்!

துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.

தூய்மைப்படுத்திக் கொள்!

நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம், நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.

சண்டையிடுவதிலும், குறை சொல்வதும் வீண்!

சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.

தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்புதமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாக வந்து சேரும்

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம்!

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது.



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:21 am

உன் வினை உன்னைச் சுடும்!

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச் செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொண்டால், தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.

கரடு முரடான பாதை


இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடு முரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர் தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுந்தவன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

அடக்குமுறையும் எதிரப்பும் வரவேற்கத் தக்கவையே!

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளபடுவான். எனவே எதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.

சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி!

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.

கட்டளையிட விரும்பாதே கீழ்ப்படிந்து நட!

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:27 am

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.(((ஆனா இது பல சமயம் தப்பாய் போய் விடும்..இதே கல்யாணம் பண்ணிய ஒரு ஆணுக்கு பொருந்தாதே..
நல்ல கட்டுரை ஷிவா அண்ணா..விவேகானந்தர் ரொம்ப ஸ்மார்ட் அண்ட் அழகா இருக்காரு..இப்போது இவரை போல அழகானவங்க யாரும் இல்லை..போல..)))



உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும், செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 154550 விவேகானந்தரின் மணிமொழிகள் 154550 விவேகானந்தரின் மணிமொழிகள் 154550

மிக மிக தேவையான கட்டுரை..நன்றிகள் ஷிவா அண்ணா...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:32 am

இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:34 am

சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!

ஆமா ..நானும் பார்த்து இருக்கேன்..
அப்போ இதெல்லாம் நீங்களே நேரம் எடுத்து எழுதிப்பீங்களா ஷிவா அண்ணா.. ஐயோ ..எப்படி..?? விவேகானந்தரின் மணிமொழிகள் Icon_eek



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 1:35 am

சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!
விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196 விவேகானந்தரின் மணிமொழிகள் 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 1:37 am

சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு விவேகானந்தரின் மணிமொழிகள் 733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:41 am

மீனு wrote:
சிவா wrote:இது நான் விவேகானந்தரின் மணிமொழிகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதிவருகிறேன். ஏற்கனவே இணையத்தில் கிடைத்தால் இன்னும் வசதியாகப் போயிற்று! நான் பிற இணையங்களில் இருந்து எடுத்துப் பதிந்தால் இங்கு மறவாமல் இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு விடுவேன்!

ஆமா ..நானும் பார்த்து இருக்கேன்..
அப்போ இதெல்லாம் நீங்களே நேரம் எடுத்து எழுதிப்பீங்களா ஷிவா அண்ணா.. ஐயோ ..எப்படி..?? விவேகானந்தரின் மணிமொழிகள் Icon_eek

அந்த ரகசியம் ரூபனுக்கு மட்டுமே தெரியும்.



விவேகானந்தரின் மணிமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக