புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_m10செட்டிநாட்டுப் பழமொழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டுப் பழமொழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:17 pm

முன்னுரை

வாழ்க்கையில் கண்ட அனுபவ உண்மைகளின் வெளிப்பாடே பழமொழிகள். அவைகள் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள். சொல்லில் சுருக்கத்தையும், பொருளில் ஆழத்தையும், விளக்கத்தில் தெளிவையும் உடையன. இப்பழமொழிகள் பண்பாடு, பழக்க வழக்கம், சுற்றுச்சார்பு, தொழில் இவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை,

''அறிவு வளர்ச்சியிலே பிறந்து சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய பண்புகளால் என்றும் இறவாமல் இவ்வுலகில் வாழ்கின்றன'' என்று அரிஸ்டாட்டில் கூறுவார். ''பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்து விட்டன. பழமொழி மூலம் மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம்'' என்றும் கூறுவர். (சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு ப.105)

இவைகளுக்கேற்ப ஒவ்வொரு வட்டாரத்திலும் வழங்கும் பழமொழிகள் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. வட்டாரப் பழமொழிகள் என்று இவற்றைக் கூறலாம். அவ்வகையில் செட்டிநாட்டுப் வட்டாரப் பழமொழிகள் குறித்துச் சில கருத்துக்களை நோக்கலாம்.

வட்டாரப்படி பழமொழிகள்

ஒரே கருத்தைத் தரும் பழமொழிகள் பல வட்டாரங்களில் வழங்கப்பட்டலும் அவை சொற்களால் வேறுபடுகின்றன. அந்தந்த வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவை அந்த வட்டாரப் பழமொழிகளாகின்றன. அந்தச் சொற்களே அவ்வட்டாரத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. அதுபோல செட்டிநாட்டுப் பகுதிக்கு மட்டுமே உரிய சொற்களால் வழங்கப்படும் பழமொழிகளிலும் வட்டாரத் தனித்தன்மை மிளிர்வதைச் சிறப்பாகக் காணமுடிகிறது. பொட்டல், ஒய்யாரம், ஒக்கல், பனியாரம், நாளி, கெத்தா, ஒசத்தி, சமத்தி, காடிக்கஞ்சி, மாராப்பு, வரையோடு போன்றவை வட்டாரச் சொற்களுக்குச் சிலசான்றுகள். இவைகள் பழமொழிகளில் பயன்படுத்தப்பட்டவை.

செட்டிநாடும் சிக்கனமும்

செட்டிநாட்டைச் சிக்கனத்தின் இருப்பிடம் என்றும் கூறுவர். இதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். சிக்கனமாக வாழும் செட்டி நாட்டார் கஞ்சத் தனமாக வாழ்வதில்லை என்பதைத் திருமணச் செலவும், கோயில் திருப்பணிகளும் தெளிவாகக் காட்டும் கஞ்சத்தனம் என்றால் தேவைக்குக் கூடச் செலவு செய்யாமை. சிக்கனம் என்றால் தேவைக்கு மட்டுமே செலவு செய்து ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்துவது. வீண் ஆடம்பரம் அவர்கள் என்றும் விரும்பாத ஒன்று. இவர்கள் இறைபக்தியும், தர்ம சிந்தனையும், கலையுணர்வும், தமிழ்ப்பற்றும் மிக்கவர்கள். குழந்தைகளுக்குச் சிக்கனமாக வாழக் கற்றுக் கொடுப்பவர்கள் எதையும் வீணாக்காமை அவர்களின் பழக்கங்களில் தலையாயது. எனவே அவர்களின் பழமொழிகளில் ''வீண் ஆடம்பரம் வேண்டாமே'' என்ற கருத்து குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

வீண் ஆடம்பரம்


வாழ்க்கையில் வீண் ஆடம்பரத்தை விரும்பி வாழ்ந்தவர்கள் கடன்காரர்களாய், கடமையைச் செய்ய முடியாதவர்களாய் வாழும் நிலையை அனுபவத்தில் கண்ட முன்னோர்கள் வீண் ஆடம்பரம் தேவையில்லை என்பதை வலியுருத்தும் பழமொழிகளைக் கூறினர். பழமொழிகள் கிண்டல் நிறைந்தவனாகவும், வறுமையின் வெளிப்பாடாகவும், எப்படி வாழ வேண்டும் என்பதைச் சுட்டுவனவாகவும், இயல்பு வாழ்க்கை வாழ வழிகாட்டுவனவாகவும் அமைந்து சிறக்கின்றன.

''குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்''


என்பது பழமொழி. தேவைக்குத் துன்பப்பட்டுக் கொண்டு, ஆனால் வெளிப்பெருமைக்காகச் செயற்படும் தன்மையினை இது உணர்த்துகிறது. அடிப்படைத் தேவையை அறியாமல் செய்யும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.


வாழும்முறை


இந்தமாதிரியான நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்றால் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே,

''ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்''

என்ற பழமொழி. ஆறு பெரிதாக இருக்கிறதே என்பதற்காக அதிகமாகக் கொட்ட வேண்டியதில்லை. கொட்டுவதை அளந்தே கொட்டவேண்டும். எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும். யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும். அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

ஆளும் முறை

''குந்தித்தின்றால் குன்றும் மாளும்'', என்பது பொதுவான பழமொழி. முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை உழைத்துப் பெருக்காமல் உட்கார்ந்து தின்றால் அது குன்றளவு இருந்தாலும் குறைவுபடும். இதைச் சிலப்பதிகாரம் வணிக குலப் பிறப்பான கோவலன் வழிச் செம்மையாய்ச் சொல்லும்.

''சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும்'' என்பது சிலப்பதிகாரம்.


உழைக்காமல் கரைத்ததால், குலத்தில் முன்னோர்கள் சேர்த்ததைத் தான் இருந்து ஆளமுடியாமல், இலம்பாட்டைப் பெற்றான். எனவே முன்னோர்கள் வைத்து ஆண்டவற்றை வீண் ஆடம்பாரத்தால் அழித்துவிடாமல் பின்னோர்கள் வைத்து ஆளவேண்டும். இதை ''முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்'' என்ற செட்டிநாட்டுப் பழமொழி கூறும்.

சிறு குழந்தைகளுக்குச் செட்டி நாட்டில் கூறும் பல அறிவுரைகளுள் ஒன்று ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டுத் தொணக்காத'' அல்லது ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டு அழாதே'' என்பது. இது சிறுபிள்ளை முதல் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து. இல்லாததைக் கேட்டு அழுதால் அழுகைக்குப் பயந்து கடன்பட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும். தேவையற்ற கடன் தொல்லை வந்துசேரும். எனவே இருப்பதைக் கேட்டு அழுவதால் கொடுப்பவர்க்கும் துன்பமில்லை. பொருளைத் தேவைக்குத்தான் கேட்கவேண்டுமே தவிர வீணாகக் கேட்பது தவறு. இருப்பதை இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இதே கருத்து வேறுவிதமாகக் கூறப்படுவதும் உண்டு.

''இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு'' உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வு இன்பமாக இருக்கும். இல்லாததற்கு ஏங்கி அழக்கூடாது என்பதை இப்பழமொழி தெளிவாகச் சுட்டுகிறது. வசதிக்குத் தக்கபடி வாழ வேண்டும் என்பதன் வெளிப்பாடே இப்பழமொழி.

வெளிப்பகட்டு

''ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்'' என்ற பழமொழி வெளிப்பகட்டைக் காட்டுகிறது. வெளியே தாழம்பூ மணக்க இருக்கும் கொண்டை தன்னகத்தே பல அழுக்குகளைக் கொண்டிருக்கும். வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும், பேச்சளவிலும் நிற்பவர்களை இப்பழமொழி சுட்டிக்காட்டும், ''மதிப்புமசால் வடை பிச்சுப்பாத்தா ஊசவடை'' என்ற பழமொழியும் இக்கருத்திலேயே வழங்குகின்றது.

தகுதி வாழ்க்கை

பிறரைப்பார்த்து நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இயலாததை அவனைப் போல் செய்ய முயலக்கூடாது. அவனவன் தகுதிக்கேற்ப வாழும் வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை. செல்வந்தனின் வாழ்வுபோல் இல்லாதவனின் வாழ்வு அமைவதில்லை. இயன்றவன் செயல்களைப் போல் இயலாதவன் செயற்பட முடியாது. தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நல்லபாம்பைப் போல் மண்புழு ஆடமுடியாது. இதை, ''நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா'' என்று கூறுவர் (நாக்களாம்பூச்சி - மண்புழு)

முடிவுரை

''பழமொழி பொய்யின்னாப் பழயதும் சுடும்'' என்ற பழமொழி. மக்களுக்குப் பழமொழியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. சமுதாயத்தில், இதனைச் செய், இதனைச் செய்யாதே எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வில் அனுபவித்த சாரம் என்பதால் மக்களிடையே அதற்கொரு செல்வாக்கு உண்டு. அம்முறையில் செட்டியார்கள் என்று அழைக்கப்பெறும். தன வணிகர்களாகிய நகரத்தார்கள் எதையும் எண்ணித் திட்டமிட்டுச் செய்பவர்கள்.

''எண்ணிச் செய்கிறவன் செட்டி
எண்ணாமல் செய்கிறவன் மட்டி''


என்ற பழமொழி அவர்களின் திட்டமிட்டுச் செயலாற்றும் திறனை வெளிப்படுத்தும்.

''காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி''
சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்
செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?


என்ற வழக்கு செட்டியார்களின் கெட்டிக்காரத் தனத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

நன்றி:வேர்களைத் தேடி
முனைவர் மு.வள்ளியம்மை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:27 pm

செட்டிநாடு என்றவுடன் உணவின் ருசிதான் மனதில் தோன்றியது, பழமொழிகளும் இருக்கிறதா, அவையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது பதிவிற்கு நன்றி சிவா



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:37 pm

kirupairajah wrote:செட்டிநாடு என்றவுடன் உணவின் ருசிதான் மனதில் தோன்றியது, பழமொழிகளும் இருக்கிறதா, அவையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது பதிவிற்கு நன்றி சிவா

மற்றொரு சிறப்பும் செட்டிநாட்டுக்கு உண்டு கிருபா!! செட்டிநாட்டு வீடுகள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 25, 2010 4:22 am

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 25, 2010 4:44 am

பழமொழியும் மற்றும் கருத்துகளும் பயன்தரும் வகையில்... நன்றிகள்...

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Thu Feb 25, 2010 8:18 am

அருமையான பதிவு..
நன்றி சிவா..

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Feb 25, 2010 8:25 am

[You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 9:32 am

சிவா wrote:
kirupairajah wrote:செட்டிநாடு என்றவுடன் உணவின் ருசிதான் மனதில் தோன்றியது, பழமொழிகளும் இருக்கிறதா, அவையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது பதிவிற்கு நன்றி சிவா

மற்றொரு சிறப்பும் செட்டிநாட்டுக்கு உண்டு கிருபா!! செட்டிநாட்டு வீடுகள்.


[You must be registered and logged in to see this link.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 9:33 am

[You must be registered and logged in to see this link.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 9:33 am

[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக