ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கறை

3 posters

Go down

அக்கறை Empty அக்கறை

Post by சிவா Tue Feb 23, 2010 12:47 am

அக்கறை Scan0009

மாதவனை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுச் சென்றது. புழுதி அடங்கியதும் அவன் கண்ணில் பட்டது அந்த டீக்கடை. கசாப்பு வெட்டுபவன் போல் பெரிய மீசையுடன், தாட்டிகமான ஒரு ஆள் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அருகே சென்ற மாதவன் தயங்கிக் கேட்டான்.

மணமங்கலம் பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகணும்?''

இப்படி நேராப் போய் வலது கைப்பக்கம் திரும்பினா கோயில். அதுக்கு நேர் எதிர்லதான் ஸ்கூல்!'' அவனின் தோற்றம் கொடூரமாயிருந்தது, என்றால் குரலோ கர்ண கடூரம்.

நன்றி சொல்லிவிட்டு மாதவன் நடந்தான். பள்ளி வந்தது. புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான். மொத்தம் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட கிராமப்புற தொடக்கப்பள்ளி அது. முதல் நாளே நான்காம் வகுப்பைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.

வகுப்பினுள் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். ஒருவன் மட்டும் சர்வ அலட்சியமாக கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கடைக் கண்ணால் அவனை கவனித்த மாதவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரையும் அமரச் சொன்னான்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அட்டென்டன்ஸ் எடுத்தான். ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் விசாரித்தான். கேள்விகள் கேட்டான். எழுதச் சொன்னான்.

எல்லா மாணவர்களும் சொன்னதைச் செய்தனர். அந்த ஒருவனைத் தவிர. அவன் எதற்கும் அலட்டிக் கொள்ள வில்லை. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன. முறைத்துப் பார்ப்பான். அலட்சியமாக தலை கோதிக் கொள்ளுவான். காலை ஆட்டிக் கொண்டு உட்காருவான்.

பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. முதல் நாள் அடிக்க வேண்டாம் என்று சகித்துக் கொண்டான்.

அவனது பொறுமையும் எல்லை மீறும் சம்பவம் மறுநாள் மதியம் நடந்தது. வகுப்பறையிலேயே, மற்ற மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, சிகரெட்டை இழுத்து புகையை மூக்கு வழியாய் விட்டுக் கொண்டிருந்தான்.

மாதவனுக்கு தாங்க முடியவில்லை. முதுகில் நாலு சாத்து சாத்தினான். அப்போதும் அவன் கலங்கவில்லை. மாதவனை ஒருமுறை முறைத்து விட்டு, ``என்னையா அடிச்ச, மவனே! இரு எங்க அப்பனை அழைச்சு வந்து உன்னை வகுந்துடறேன் வகுந்து! யாருன்னு நினைச்ச?'' என்று வேகமாய் ஓடினான்.

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது பையன் பேசும் பேச்சா இது?'' என மாதவன் விக்கித்து நிற்கும் போதே தலைமை ஆசிரியர் வந்து விட்டார். நடந்ததைக் கேட்டார். பின் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

என்ன காரியம் பண்ணினீங்க? வந்ததும் வம்பை விலை குடுத்து வாங்கிட்டீங்களே? அவன் அப்பன் யாரு தெரியுமா? சரியான ரவுடி. கொலைகாரன், படிக்காதவன். முரடன். ஆ, ஊன்னா வெட்டு குத்து தான். அதுவும் இந்த தறுதலை, அவனுக்கு ஒரே பிள்ளை. என்ன ரகளை ஆகப் போகுதோ தெரியலையே! நாங்க யாரும் அந்த பையனை ஒன்றும் கண்டுக்கவே மாட்டோம்; கண்டிக்கவும் மாட்டோம், எதற்கு வம்பு? இப்பப்பாருங்க பெரிய அவஸ்தையில் மாட்டிக்கிட்டீங்க! வந்த மறுநாளே, தேவைதானா இது? அட ஈஸ்வரா!'' தலைமை ஆசிரியர் சொல்லச் சொல்ல, மாதவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பையன் தன் தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். பையனின் தந்தையைப் பார்த்ததும் மாதவனுக்கு மீதி உயிரும் போய் விடும் போல் இருந்தது. நேற்று டீக்கடையில் பார்த்த அதே முரட்டு மீசைக்காரன்.

யார் எம்புள்ளையை அடிச்சது?'' என்றான் இடியாய். குரலில் இந்த கர்ண கடூரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியை தயார்நிலையில் வைத்திருந்தது

நான்தான். புதுசு. ஏதோ தெரியாமல்...'' என்றான் மாதவன், பூனைக்குட்டியாய் பம்மியபடி.

சபாஷ் சார். நான்தான் படிக்காத முட்டாள். அடி, உதை, வெட்டு, கொலைன்னு போயிட்டேன். நாலு எழுத்து படிச்சிருந்தா, நல்ல புத்தி வந்திருக்கும். அல்லது புத்தி சொல்ல ஆளாவது இருந்திருக்கும். எதுவும் இல்லாம நான் தான் வீணாப் போயிட்டேன்.அதுனாலதான் இவனையாச்சும் படிக்க வைக்கணும்னு பள்ளிக்கு அனுப்பினேன். ஆனா கொலை

காரன் பிள்ளைன்னு, என் மேல் உள்ள பயத்துனால இவனை யாரும் கண்டிக்கறது இல்லை. என்னை மாதிரி இவன் ஆகப்படாது சார். நல்லா சவட்டி எடுங்க; படிக்கணும், முன்னுக்கு வரணும். சொல் பேச்சு கேக்கலைன்னா, தோலை உரிங்க! ஏன்னு கேட்டு நான் வர மாட்டேன். இவனையாச்சும் ஒரு மனுஷனா ஆக்குங்க சார். கேளுடா மன்னிப்பு சார்ட்ட, விழுடா அவுங்க கால்ல!'' என்று பிள்ளையை எட்டித் தள்ளினான்.

தன் காலில் விழுந்த புது மாணவனை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டான் மாதவன்.

***
நடராஜன்


அக்கறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்கறை Empty Re: அக்கறை

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 12:59 am



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அக்கறை Empty Re: அக்கறை

Post by சபீர் Tue Feb 23, 2010 2:25 am

அனுபவமா அண்னே..




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அக்கறை Empty Re: அக்கறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum