புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
10 Posts - 48%
heezulia
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
10 Posts - 48%
heezulia
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_m10பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:33 pm

இஸ்லாத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதற்காக அடிப்படையோடு அவர்களை வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்க்கப்படும் பொழுது தான் அவர்கள் முதுமையான நிலையில் இருக்கின்ற பெற்றோர்களின் மீது கருணை காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.





இன்றைய உலகு தாய்க்கு ஒரு திருநாள், தந்தைக்கு ஒரு திருநாள் என்று பெற்றோர்களைக் கௌரவிக்கின்றோம் என்ற போர்வையில், அவர்களை நினைவு கூர்வதற்கென்று ஒருநாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றது. அந்த நாளில் தான் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லம் சென்று சந்தித்து வரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற நாட்களில்.., அவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பார்கள். எனவே, தான் ஒரு முஸ்லிம் தாயோ அல்லது தந்தையோ தனது அந்திமக் காலத்தில் முதியோர் இல்லத்தில் உறைந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயும், தந்தையும் தங்களது இளமைக் காலத்தில் பொடுபோக்காகச் செயல்படாமல், உலகக் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மார்க்கக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.





பெற்றோர்களாகிய நீங்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களது பிள்ளைகளுக்கு கீழ்க்கண்ட இறைவசனத்தைக் கற்பித்துக் கொடுத்திருப்பது அவசியமாகும். இறைவன் கூறுகின்றான் :





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:33 pm

(உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்"" என்று உறுதிமொழியை வாங்கினோம்.





தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (4:36)





பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;. வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (6:151)



இந்த உலகத்தில் உள்ள ஏனைய சமுதாய மக்களைக் காட்டிலும், ஒரு முஸ்லிம் தனது பெற்றோர்களுக்கு எந்தளவு கடமையுணர்வுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட குர்ஆனின் வசனங்களும், ஏனைய நபிமொழிகளும் உணர்த்தியிருப்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:33 pm

அப+ ஹ{ரைரா(ரலி) அறிவித்தார் :



இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்" என்றார்கள். அவர், 'பிறகு யார்?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்" என்றார்கள். அவர், 'பிறகு யார்?" என்றார். 'உன் தாய்" என்றார்கள். அவர், 'பிறகு யார்?" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை" என்றார்கள். (புகாரீ 5971)





பெற்றோர்களில் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் இன்னும் அதனை வளர்த்தெடுப்பதற்கும் எந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கின்றாள் என்பதை அறிந்தவனான அல்லாஹ், பெற்றோர்கள் மீது குறிப்பாக தாயின் மீது அதிகளவு இரக்கத்தைக் காட்டி, அவர்களோடு கருணையோடு நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றான். குறிப்பாக அவர்கள் முதுமை அடைந்து விட்ட காலத்தில், இயலாமையோடு அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் அவர்களது தேவைகளை முகச்சுழிப்பில்லாமல் நிறைவேற்றிட வேண்டும், அவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகின்றான்.





பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:23-24)





நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடையதாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன். ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக் என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."" ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."" (31:14-15)







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:34 pm

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்;. (46:15)





குழந்தைகளே..! உண்மையிலேயே நீங்கள் உங்களது இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால், உங்களது தாய் தந்தையருக்கு பணிவிடை செய்யுங்;கள். அவர்கள் இறைவனுக்கு மாறு செய்யும்படி உங்களை ஏவாதவரைக்கும் அவர்களோடு நீங்கள் கண்ணியத்துடனேயே நடந்து கொள்ளுங்கள். அவர்களை எந்தளவு கண்ணித்துடன் நடத்துகின்றோமோ, அதேபோன்றதொரு கண்ணியத்தை அல்லாஹ் நமக்கு வழங்குவான். அதாவது, பெற்றோர்களைப் பேணுவதன் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.





வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார் :





அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அப+ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), '(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று கூறினார்கள்:





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:34 pm

நான் நபி(ஸல்) அவர்களிடம் ''கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது"" என்றார்கள். 'பிறகு எது?" என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள். (நான் தொடர்ந்து) 'பிறகு எது?" என்றேன். அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுதல்"" என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.(புகாரீ 5970)





இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''அவன் மண்ணோடு மண்ணா(கி நாசமா)கட்டும்"" என்று (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், யார் அவர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''வயதான காலத்தில் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து (அவர்களை முறையாகப் பேணிக் கவனித்துக் கொள்ளாதவன்), அதன் மூலம் சுவனம் செல்லாதவன்"" என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம் 6189)





உங்களுக்கு வயதான பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்களைச் சரியான முறையில் கவனித்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அல்லாஹ்வினுடைய கட்டளைகளைப் பேணி நடந்து கொள்வதன் மூலமாக அவன் இறைவனுடைய வெகுமதியாக சுவனத்தின் சிறந்த பகுதியினைப் பெற்றுக் கொள்ளலாம்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:34 pm

இன்றைய உலகு பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த முதியோர் பராமரிப்பு இல்லங்கள், இப்பொழுது ஊருக்கு ஊர் முளைத்து விட்டது. இன்னும் அதுவும் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகின்றது. எனவே, முதுமையடைந்த நாளில் நாமும் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்று விடக் கூடாது என்று விரும்புகின்ற ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டட்டும் அல்லது இஸ்லாமியக் கல்வியை வழங்கட்டும்.





அப்பொழுது தான் இயலாத அந்த நாளில் நம்முடைய உதவிக்கு குழந்தைகள் முன்வரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை விட, அதனை ஒரு இறைக்கடமையாகக் கருதிச் செயல்படுவார்கள். இன்னும் ஒவ்வொரு நேரத் தொழுகைகளிலும் நம்மை நினைவு கூரக் கூடியவர்களாக இருப்பார்கள். மரணத்தை எய்தி விட்டு, நன்மை தீமைகளுக்கான கணக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது பிரார்த்தனைகள் மூலமாக நாம் மேலதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக ஆகலாம். எனவே, இந்த உலக வாழ்க்கையில் மட்டுமல்ல மறுமையிலும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், இறையச்சமுள்ள குழந்தைகளை வளர்ப்பதில் தான் இருக்கின்றது. அத்தகைய நல்லடியார்களான குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்காகப் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் இவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் நமக்கு தனது திருமறையின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகின்றான் :





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:35 pm

(''என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"" ''எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக"" (என்று பிரார்த்தித்தார்). (14:40-41)





இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)





''என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே"" (என்றும் கூறினார்). (71:28)





இஸ்லாமிய நெறிமுறைகளின்படி நமது குழந்தைகளை வளர்க்கும் பொழுது, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக மாறி தொழுகையை முறையாகக் கடைபிடிக்கக் கூடியவர்களாக ஆகி விடுவார்கள், இது அல்லாஹ்விடம் நற்பேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகும், இன்னும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நற்பேறுகள் அந்தக் குழந்தையைப் பெற்றவரின் மரணத்திற்குப் பின்பும் தொடரக் கூடியவைகளாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது நபிமொழி ஒன்றில்,





''ஒரு மனிதர் சில உயர்தரங்களுடன் சுவனத்தில் உயர்த்தப்படுவார், (அப்பொழுது) அவர்கள் கூறுவார், ''என்ன காரணத்திற்காக இதனை நான் பெற்றுக் கொண்டேன்?"" அதற்கு, ''உங்களது மகன் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கின்றார்"" என்று கூறப்படும். (புகாரீ 1613)





அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், மனிதர்கள் இறந்த பின்பும் தொடரக் கூடிய நன்மைகள் மூன்று இருக்கின்றன, அவை : ''1. அவர் செய்த தருமங்கள் மூலமாகத் தொடரக் கூடிய நன்மைகள், 2. மனிதர்கள் பயனடைவதற்காக விட்டுச் செல்லும் கல்வியின் மூலமாக, 3. அவருக்காகப் பிரார்த்திக்கக் கூடிய பிள்ளைகள் மூலமாக."" (முஸ்லிம் 4005)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:35 pm

இஸ்லாமிய கல்வியை அறிந்து கொள்வதன் அவசியம் பற்றியும், அதற்காக நேரத்தைச் செலவிடுவது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். இறைநம்பிக்கையாளர்களின் மிகச் சிறந்த பண்பு என்னவென்றால், கல்வியைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வதாகும். கீழ்க்கண்ட நபிமொழியானது ஒரு மனிதர் தொடர்ந்தும் கல்வியைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.





அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''பயன்தரத்தக்க கல்வியைத் தேடுவதில் ஒரு இறைநம்பிக்கையாளர் (போதும் என்ற நிலையில்) திருப்தி அடைந்து விட மாட்டார், அவர் மரணமடையும் வரைக்கும் அதனைத் தேடிக் கொண்டே இருப்பார், இன்னும் (அதன் காரணமாக) அவர் சுவனத்தில் நுழைந்திடுவார். (திர்மிதி 222)





நல்லறங்கள் செய்வதற்கும் நம் குழந்தைகளை ஆர்வப்படுத்த வேண்டும், அது அவர்களது இறைநம்பிக்கையை வளர்க்கும், அதேநேரத்தில் இறைவனுடைய திருப்பொருத்தத்தையும், இன்னும் கருணையையும் அவர்களுக்குப் பெற்றுத் தரும். மரணித்த பின் உயிர்கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளில் நாம் நம்முடைய வாழ்வை எவ்வாறு கழித்தோம் என்று வினவப்படுவோம், நமது செல்வங்களை, நமது அறிவை எவ்வாறு செலவழித்தோம் என்றும் வினவப்படுவோம். அதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள் அனைத்தைப் பற்றியும், அதில் நாம் செலவழிக்கின்ற அனைத்தைப் பற்றியும் இறைவனால் கேள்வி கேட்கப்பட இருக்கின்றோம் என்பதைக் கீழ்க்காணும் நபிமொழி நமக்கு விவரிக்கின்றது :







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:36 pm

அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''ஐந்து விசயங்கள் குறித்து ஒருமனிதனிடம் மறுமைநாளில் வினவப்படும் : 1. அவனது வாழ்க்கை, அதனை எவ்வாறு செலவழித்தான், 2. அவனது இளமை, 3. அவன் எவ்வாறு முதுமைப் பருவத்தை அடைந்தான், 4. அவனது செல்வம், அதனை எவ்வாறு பெற்றான், இன்னும் அதனை எவ்வாறு செலவழித்தான், 5. இன்னும் அவன் பெற்றிருந்த அறிவை வைத்து அவன் என்ன செய்தான் என்பது குறித்தும் வினவப்படுவான். (திர்மிதி 5197)





அபூ பர்ஸா நத்லா இப்னு உபைத் அல் அஸ்லமி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''மறுமை நாளிலே இந்தக் கேள்விகளைக் கேட்கப்படும் வரை ஒருஅடியான் நின்று கொண்டிருப்பான் : அவனது வயது, அதனை அவன் எவ்வாறு செலவழித்தான் என்பது பற்றியும், அவனது கல்வி அதனை அவன் எவ்வாறு பயன்படுத்தினான் என்பது பற்றியும், அவனது செல்வம் அதனை அவன் எவ்வாறு பெற்றான், எவ்வாறு செலவழித்தான் என்பது பற்றியும், இன்னும் அவனது உடம்பு, அதனை எவ்வாறு பயன்படுத்தினான் என்பது பற்றியும் வினவப்படும் (வரைக்கும் அவன் நின்று கொண்டிருப்பான்)"" என்று கூறினார்கள். (திர்மிதி 407)







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 2:38 pm

நாமும் இஸ்லாமியக் கல்வியைக் கற்பதோடு,அதனை நம்முடைய பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் பெற்ற கல்வியினை பயனுள்ள முறையில் கழித்ததற்காக இறைவனிடம் நாம் பதில் சொல்லக் கூடிய நற்பாக்கியத்திற்குள்ளாவோம். இன்னும் நாமும், நம்முடைய பிள்ளைச் செல்வங்களும் மறுமை நாளிலே ஏற்படவிருக்கின்ற சோதனையான கட்டங்களில் வெற்றி பெறும் கூட்டத்தினராவோம். இத்தகையோர்களுக்குத் தான் சுவனம் சித்தப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்று இறைவன் நல்லடியார்களுக்குச் சுபச் செய்தி வழங்கியிருக்கின்றான். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :





மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (4:122)







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக