புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
69 Posts - 40%
heezulia
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
3 Posts - 2%
manikavi
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
320 Posts - 50%
heezulia
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
22 Posts - 3%
prajai
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
3 Posts - 0%
Barushree
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எண்ணம்போல் நடக்கும் Poll_c10எண்ணம்போல் நடக்கும் Poll_m10எண்ணம்போல் நடக்கும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணம்போல் நடக்கும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:13 am

கிளாம்பாக்கம் என்னும் கிராமத்தில் கந்தன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவன். அவன் ஏழையாக பிறந்தது தான் பரிதாபம்.

முனுசாமி என்பவன் அந்த கிராமத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் கெட்டவன். ஊர் மக்கள் அனைவரும் தன்னைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்று முனுசாமி நினைப்பான். அதற்காக அவன் பல சூழ்ச்சிகளையும் செய்வான்.

இவனைப் பற்றி கந்தனுக்கு நன்றாக தெரியும். முனுசாமி சூழ்ச்சி செய்தாலும் கந்தன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.

இல்லை என்று வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்து நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்புவான் கந்தன். அதனால் ஊர் மக்கள் அவனை மனமார வாழ்த்துவார்கள். அதேபோல் முனுசாமியிடம் `இல்லை' என்று சென்றால் அவன், `என்னிடம் எதுவும் இல்லை, உங்களுக்குக் கொடுத்தால் நானும் உங்களைப் போன்றே ஆகிவிடுவேன்' என்று அவர்களை அடித்து விரட்டுவான். இதனால் அவர்கள் மிகவும் வேதனையுடன் திரும்புவார்கள்.

"நம்மிடம் பணம் இருக்கு. அதனால் நம்மை யாரும் ஒன்று செய்துவிட முடியாது. எதையும் பணத்தால் சரி செய்துவிட முடியும்'' என்ற எண்ணம் முனுசாமியிடம் இருந்தது. அதனால் அவன் தன் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும் கூட மிகவும் உதாசினப்படுத்தினான். ஆனால் கந்தன் ஏழையாக இருந்தாலும் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் உறவு வைத்து இருந்தான்.

கந்தனை எப்படியாவது இந்த ஊரைவிட்டு விரட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று முனுசாமி நினைப்பான். அதனால் கந்தனுக்கு பல இடைஞ்சல்கள் செய்து வந்தான். ஆனால் அவனது திட்டங்கள் தோல்வியில்தான் முடிந்தது.

ஒருநாள் கந்தனின் வீட்டுக்கு மிகவும் வயதான முனிவர் ஒருவர் வந்தார். அவர் பசியால் மிகவும் வாடிப் போயிருந்தார். கந்தன் வீட்டு முன்வந்து நின்று, "ஐயா எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள், பசி உயிர் போகுது!'' என்றார். அந்த முனிவரின் குரல் கேட்டதும் கந்தன் அதிர்ச்சியடைந்தான். உடனே முனிவரை தன் வீட்டிற்குள் அழைத்து அமர வைத்து அவருக்கு மிகவும் அன்பாக அறுசுவை உணவுகளைப் பரிமாறி உபசரித்தான். முனிவரின் வயிறும் மனமும் குளிர்ந்தன.

உடனே அந்த முனிவர் கந்தனைப் பார்த்து, "என் பசியைப் போக்கினாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று கூறினார்.

அதற்குக் கந்தன், "எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. இல்லை என்று என்னிடம் வருபவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறும் நிலை எனக்கு வராமலிருந்தால் போதும்'' என்றான்.

அதற்கு அந்த முனிவர், "உன் எண்ணம்போல நடக்கும்'' என்று கூறி அங்கு இருந்து புறப்பட்டார். பிறகு கந்தனின் எண்ணம்போல எல்லாம் நடந்தது. வருவோருக் கு எல்லாம் சாப்பாடு போடும் வகையில் அவன் வீட்டில் வளமை பொங்கியது.

அதைக் கேள்விப்பட்ட முனுசாமி அந்த முனிவரை தேடிப்பிடித்து அவரை வலுக் கட்டாயமாக உணவு உண்ணவைத்து உபசரித்தான். முனுசாமியின் எண்ணம் முனிவருக்குப் புரிந்தது. முனிவர் சாப்பிட்ட பிறகு முனுசாமி, " கந்தனுக்கு வரம் கொடுத்தது போல எனக்கும் நீங்கள் வரம் தர வேண்டும் சாமி'' என்றான். அதற்கு அந்த முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். அதற்கு முனுசாமி, "இந்த ஊரில் நானே பெரிய செல்வந்தன் ஆக வேண்டும்'' என்றான். அதற்கு முனிவர் "உன் எண்ணம்போல நடக்கும்'' என்றார்.

பிறகு முனுசாமியின் எண்ணம் முழுவதும் செல்வம் சேர்க்கும் நோக்கத்துக்கு மாறியது. அதனால் உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டான். முனுசாமி தனிமைக்கு ஆளானான். ஊரில் ஏற்கனவே அவனை வெறுத்த மக்கள் அனைவரும் மேலும் ஒதுக்க ஆரம்பித்தனர்.

பிறகு அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வாடினான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தும் நிம்மதியின்றித் தவித்தான்.

கந்தன் நல்லதே நினைத்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தான். அவனைச் சுற்றியும் நல்ல உறவுமுறைகள் இருந்தன. அதனால் கந்தன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

மீண்டும் ஒருநாள் அந்த முனிவர் அந்த கிராமத்திற்கு சென்றார். அப்போதும் கந்தன் அவரை வணங்கி வரவேற்றான். உணவு அளித்து உபசரித்தான். அப்போது முனிவர், "என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

அதற்கு கந்தன், ``எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்'' என்றான். உடனே முனிவர்,
"நல்லதே நடக்கும்'' என்று புறப்பட்டார். பிறகு முனுசாமியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவனின் நிலையைக் கண்டு வருத்தம் கொண்டார்.

அவரிடம் முனுசாமி, "ஐயா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என்றான். முனிவர் "எல்லாம் அவரவர் எண்ணப்படிதான் நடக்கும்'' என்றார்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, "நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்'' என்று. அன்றிலிருந்து அவன் தன்னிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தான். பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து சேர்ந்தன. முனுசாமியும் நிம்மதியாக வாழத் தொடங்கினான்.

***
எம். ராதிகா




எண்ணம்போல் நடக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக