ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

+4
யாதுமானவள்
சரவணன்
krishnaamma
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by சிவா Fri Feb 19, 2010 2:08 am



காகத்திற்கு அன்னமிடுவதை பெரும்பாலான மக்கள் இன்றளவிலும் கடைப்பிடித்து வருகின்றனர். அமாவாசை மற்றும் முன்னோரின் திதி நாட்களில் காகத்திற்கு படையல் வைத்த பின்னரே குடும்பத்தினர் உட்கொள்கின்றனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத முக்கியத்துவம் காகத்திற்கு கொடுக்கப்படுவது ஏன்? இது பற்றி ஜோதிடத்தில் ஏதாவது கூறப்பட்டுள்ளதா?


பதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாகனம் கூறப்பட்டுள்ளது. அதன்படி சனி பகவானின் வாகனமாக காகம் உள்ளது. ஆனால், ஆதிகால ஜோதிட நூல்களில் கழுகுதான் சனியின் வாகனம் எனக் கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் கழுகு என்பது காகமாக (அண்டங் காக்கை அல்லது கருங்காக்கை) மாற்றப்பட்டு விட்டது.


உலகில் உள்ள பெரும்பாலான மதங்களில் பின்பற்றப்படும் தெய்வ வழிபாடு, விரதம், நோன்பு ஆகியவை ஜீவகாருண்யத்தை (பிற உயிர்களுக்கு உதவுதல்) வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக விரதம் கடைப்பிடித்து அதனை நிறைவு செய்யும் போது நாம் உண்ணும் உணவை சிறிது தானம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.


விரத காலத்தில் பசி அதிகமாக இருக்கும். ஆனாலும், பசியின் போது கூட பிற உயிர்களுக்கு தானம் செய்வதை மனிதன் மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே மேற்கூறிய சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது.


காகம் என்பது பரவலாக அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடிய ஒரு பட்சி. சனி பகவானின் ஆசி பெற்ற பறவை என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. காகத்திற்கு அன்னமிட்டால், அது சனி பகவானுக்கே தானம் வழங்கியது போலாகும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.


மேலும், பிற பறவைகளை விட சற்று தைரியமாகவும், அழைத்தவுடன் தனது சுற்றத்துடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுச் செல்வதால், காகத்துடன் மனிதர்களின் நட்புறவு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.


பல வீடுகளில் முன்னோர்களுக்கு திதி படைத்த பின்னர் அந்த உணவை காகத்திற்கு முதலில் தானம் செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆண்டுதோறும் திதி படைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஆண்டில் எந்தக் காகமும் அந்த வீட்டில் வைத்த அன்னதான உணவை சாப்பிடவில்லை. அந்தக் குடும்பத்தினரும் எத்தனை முறை கூப்பிட்டுப் பார்த்தும், காகம் அன்னத்தை தொடவில்லை.


பின்னர் அந்த வீட்டின் மருமகள், படையலின் போது தனது மாமனாருக்கு வேஷ்டி வைக்க மறந்து விட்டதாக வருத்தத்துடன் பிறரிடம் கூறினார். எனவே, விரதத்தின் தன்மையையும் சோதிக்கும் வல்லமை காகத்திற்கு உண்டு என்பதை இந்த நிகழ்வின் மூலம் வாசகர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.


விரத காலங்களில் காகத்திற்கு அன்னமிட்டு, அடியார் ஒருவருக்கு உணவளித்த பின்னரே மனிதர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என சில நூல்களில் கூறப்பட்டு உள்ளது.


காகத்தின் ரூபத்தில் முன்னோர்கள் நம்மிடம் இருக்கிறார்கள், பேசுகிறார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இன்றளவிலும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தவறானது அல்ல. சனி பகவானின் வாகனமான காகம், கர்ம வினைகளை மனிதர்களுக்கு நினைவூட்டுகிறது.


காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by krishnaamma Mon May 31, 2010 9:32 pm

நன்றி சிவா அவர்களே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by சரவணன் Mon May 31, 2010 9:36 pm

பொதுவாக எல்லா உயிர்களுக்கும் அன்னமிடுவது நல்லதே! காகத்திற்கு அன்னமிடுவது நல்லது 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty காகத்திற்கு உணவிடுவது

Post by யாதுமானவள் Mon May 31, 2010 11:14 pm

காகத்திற்கு உணவிடுவது குறித்து நண்பர் சிவா அவர்கள் எழுதியது நன்று.

அதில் மக்கள் அறியாத அறிவியல் பூர்வமான உண்மை ஒன்றுண்டு.

பொதுவாக பழங்காலத்தில் அமாவாசை, கிருத்திகை, மற்றும் பண்டிகை நாட்களில் தான் உறவினர்களுடன் ஒன்று கூடி விதவிதமான காய்கறிகள் சமைத்து கடவுளுக்குப் படைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது வழக்கம். அப்படி எல்லா உறவுகளும் சேர்ந்து உண்ண சமைத்த உணவில், ஏதாவது விஷம் கலந்து(விஷப்பூச்சிகள் பல்லி போன்றவை.... உணவில் விழுவது சகஜம் அந்நாட்களில்) விட்டிருந்தால் விருந்துண்ட அத்தனை பேருக்குமல்லவா ஆபத்து? நம் முன்னோர்கள் அறிவாளிகள். அதனால் முதலில் சமைத்த உணவை படைத்தவுடன் அன்று சமைத்த எல்லா உணவு வகைகளிலும் ஒரு பிடி எடுத்து காகத்திற்கு வைத்து அதையெல்லாம் காகம் உண்டபின், எந்தவித அபயமும் இல்லை என்று உறுதியாய் தெரிந்தபின் தான் அனைவரும் உண்பர். அப்படி விஷம் கலந்த உணவு உண்டால்... காகம் ஒரு நிமிடத்திற்குள் இறந்துவிடும். ஏனென்றால் காகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிக குறைவு. அடுத்த நிமிடமே இறந்துவிடும் காகம்.

அதனால் தான் விசேஷ நாட்களில் முதலில் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால், எந்த காகமும் தனித்து உணவு உட்கொள்ளாது. ஒரு காகம் வந்தாலும் அது கரைந்து மற்ற காகங்களை அழைத்துவிட்டு, முதலில் வந்த காகம் தாம் முதலில் உணவு கொத்தும். அது உண்ட பின் தான் மற்ற காகங்கள் அவ்வுணவை உண்ணும். ஏனென்றால் தனித்து உணவு உட்கொண்டால் தான் இறக்க நேரிட்டால் தன் இனத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்றுதான் மற்ற காகங்களை அழைத்தபின் உண்ணும். குறைந்த பட்சம் இரண்டாவது காகமாவது வந்த பின் தான் அவ்வுணவினை காகம் கொள்ளும். இனி கவனித்துப் பாருங்கள்... எத்தனை நேரம் தான் காத்திருந்தாலும் ஒற்றைக் காகம் நாம் வைக்கும் உணவினை உண்ணாது.

நாம் அழைக்கும் போது வருவது தனக்கும் தன் இனத்திற்கும் உணவு வேண்டும் என்றுதான் அதே சமயம் ஆபத்து நேரிடின் தன் இனத்தவர் அறியவேண்டும் என்பதயும் காகம் கடைபிடிக்கிறது.

காகத்திற்கு அன்னமிடுவதன் முக்கிய நோக்கம் இதுதான்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by சிவா Tue Jun 01, 2010 2:02 am

விளக்கத்திற்கு நன்றி யாதுமானவள்!


காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by சபீர் Tue Jun 01, 2010 9:47 am

அப்போ நமது பிச்சைக்கு அன்னமிடனும் என்று சொல்ல வாரிங்க அண்ணா அப்படித்தானே.....ஆனால் அவர் மட்டன்புரியாணி சாப்பிடமாட்டார் என்றாரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 01, 2010 10:00 am

மிக மிக அருமையான விளக்கங்கள் சிவா, யாதுமானவள்....

இந்தியாவில் எங்கள் பாட்டி தினமும் காகத்திற்கு அன்னமிட்ட பின்னே தான் எங்களுக்கு அன்னம் வைப்பார்....

இங்க குவைத்லயோ காக்காவே இல்லப்பா சோகம்

ஆனாலும் இங்க நாங்கள் குருவி புறாவிற்கு வைப்போம் தானியம் அரிசி அன்னம் என்று.... அதுவும் வந்து ஆசையாக சாப்பிட்டு செல்லும்....

ஒரே ஒரு நாள் வைக்க நேரமானாலும் கத்தி கலாட்டா செய்துவிடும் புன்னகை

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா யாதுமானவள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by ரிபாஸ் Tue Jun 01, 2010 10:02 am

சபீர் wrote:அப்போ நமது பிச்சைக்கு அன்னமிடனும் என்று சொல்ல வாரிங்க அண்ணா அப்படித்தானே.....ஆனால் அவர் மட்டன்புரியாணி சாப்பிடமாட்டார் என்றாரே

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by krishnaamma Tue Jun 01, 2010 9:47 pm

Yaadhumanaval wrote:காகத்திற்கு உணவிடுவது குறித்து நண்பர் சிவா அவர்கள் எழுதியது நன்று.

அதில் மக்கள் அறியாத அறிவியல் பூர்வமான உண்மை ஒன்றுண்டு.

பொதுவாக பழங்காலத்தில் அமாவாசை, கிருத்திகை, மற்றும் பண்டிகை நாட்களில் தான் உறவினர்களுடன் ஒன்று கூடி விதவிதமான காய்கறிகள் சமைத்து கடவுளுக்குப் படைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது வழக்கம். அப்படி எல்லா உறவுகளும் சேர்ந்து உண்ண சமைத்த உணவில், ஏதாவது விஷம் கலந்து(விஷப்பூச்சிகள் பல்லி போன்றவை.... உணவில் விழுவது சகஜம் அந்நாட்களில்) விட்டிருந்தால் விருந்துண்ட அத்தனை பேருக்குமல்லவா ஆபத்து? நம் முன்னோர்கள் அறிவாளிகள். அதனால் முதலில் சமைத்த உணவை படைத்தவுடன் அன்று சமைத்த எல்லா உணவு வகைகளிலும் ஒரு பிடி எடுத்து காகத்திற்கு வைத்து அதையெல்லாம் காகம் உண்டபின், எந்தவித அபயமும் இல்லை என்று உறுதியாய் தெரிந்தபின் தான் அனைவரும் உண்பர். அப்படி விஷம் கலந்த உணவு உண்டால்... காகம் ஒரு நிமிடத்திற்குள் இறந்துவிடும். ஏனென்றால் காகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிக குறைவு. அடுத்த நிமிடமே இறந்துவிடும் காகம்.

அதனால் தான் விசேஷ நாட்களில் முதலில் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால், எந்த காகமும் தனித்து உணவு உட்கொள்ளாது. ஒரு காகம் வந்தாலும் அது கரைந்து மற்ற காகங்களை அழைத்துவிட்டு, முதலில் வந்த காகம் தாம் முதலில் உணவு கொத்தும். அது உண்ட பின் தான் மற்ற காகங்கள் அவ்வுணவை உண்ணும். ஏனென்றால் தனித்து உணவு உட்கொண்டால் தான் இறக்க நேரிட்டால் தன் இனத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்றுதான் மற்ற காகங்களை அழைத்தபின் உண்ணும். குறைந்த பட்சம் இரண்டாவது காகமாவது வந்த பின் தான் அவ்வுணவினை காகம் கொள்ளும். இனி கவனித்துப் பாருங்கள்... எத்தனை நேரம் தான் காத்திருந்தாலும் ஒற்றைக் காகம் நாம் வைக்கும் உணவினை உண்ணாது.

நாம் அழைக்கும் போது வருவது தனக்கும் தன் இனத்திற்கும் உணவு வேண்டும் என்றுதான் அதே சமயம் ஆபத்து நேரிடின் தன் இனத்தவர் அறியவேண்டும் என்பதயும் காகம் கடைபிடிக்கிறது.

காகத்திற்கு அன்னமிடுவதன் முக்கிய நோக்கம் இதுதான்.

அன்புடன்
யாதுமானவள்

உங்க பேரும் அழகு உங்க விளக்கமும் அழகு ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தகவலுக்கு மிக்க நன்றி !! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by சரவணன் Tue Jun 01, 2010 10:08 pm

Yaadhumanaval wrote:காகத்திற்கு உணவிடுவது குறித்து நண்பர் சிவா அவர்கள் எழுதியது நன்று.

அதில் மக்கள் அறியாத அறிவியல் பூர்வமான உண்மை ஒன்றுண்டு.

பொதுவாக பழங்காலத்தில் அமாவாசை, கிருத்திகை, மற்றும் பண்டிகை நாட்களில் தான் உறவினர்களுடன் ஒன்று கூடி விதவிதமான காய்கறிகள் சமைத்து கடவுளுக்குப் படைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது வழக்கம். அப்படி எல்லா உறவுகளும் சேர்ந்து உண்ண சமைத்த உணவில், ஏதாவது விஷம் கலந்து(விஷப்பூச்சிகள் பல்லி போன்றவை.... உணவில் விழுவது சகஜம் அந்நாட்களில்) விட்டிருந்தால் விருந்துண்ட அத்தனை பேருக்குமல்லவா ஆபத்து? நம் முன்னோர்கள் அறிவாளிகள். அதனால் முதலில் சமைத்த உணவை படைத்தவுடன் அன்று சமைத்த எல்லா உணவு வகைகளிலும் ஒரு பிடி எடுத்து காகத்திற்கு வைத்து அதையெல்லாம் காகம் உண்டபின், எந்தவித அபயமும் இல்லை என்று உறுதியாய் தெரிந்தபின் தான் அனைவரும் உண்பர். அப்படி விஷம் கலந்த உணவு உண்டால்... காகம் ஒரு நிமிடத்திற்குள் இறந்துவிடும். ஏனென்றால் காகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிக குறைவு. அடுத்த நிமிடமே இறந்துவிடும் காகம்.

அதனால் தான் விசேஷ நாட்களில் முதலில் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால், எந்த காகமும் தனித்து உணவு உட்கொள்ளாது. ஒரு காகம் வந்தாலும் அது கரைந்து மற்ற காகங்களை அழைத்துவிட்டு, முதலில் வந்த காகம் தாம் முதலில் உணவு கொத்தும். அது உண்ட பின் தான் மற்ற காகங்கள் அவ்வுணவை உண்ணும். ஏனென்றால் தனித்து உணவு உட்கொண்டால் தான் இறக்க நேரிட்டால் தன் இனத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்றுதான் மற்ற காகங்களை அழைத்தபின் உண்ணும். குறைந்த பட்சம் இரண்டாவது காகமாவது வந்த பின் தான் அவ்வுணவினை காகம் கொள்ளும். இனி கவனித்துப் பாருங்கள்... எத்தனை நேரம் தான் காத்திருந்தாலும் ஒற்றைக் காகம் நாம் வைக்கும் உணவினை உண்ணாது.

நாம் அழைக்கும் போது வருவது தனக்கும் தன் இனத்திற்கும் உணவு வேண்டும் என்றுதான் அதே சமயம் ஆபத்து நேரிடின் தன் இனத்தவர் அறியவேண்டும் என்பதயும் காகம் கடைபிடிக்கிறது.

காகத்திற்கு அன்னமிடுவதன் முக்கிய நோக்கம் இதுதான்.

அன்புடன்
யாதுமானவள்
அருமையான விளக்கம்,
நன்றி!!!
காகத்திற்கு அன்னமிடுவது நல்லது 677196 காகத்திற்கு அன்னமிடுவது நல்லது 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காகத்திற்கு அன்னமிடுவது நல்லது Empty Re: காகத்திற்கு அன்னமிடுவது நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum