ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்

Go down

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் Empty மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்

Post by ஈழமகன் Sat 9 May 2009 - 18:51

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் KiliHospital2
வன்னியில் கடந்த (15.12.2008 - 02.05.2009) காலங்களில் மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்களும், ஏற்பட்ட சேதங்களும்

வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது.

விபரங்கள்
15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.

19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு,
மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமை விடுதி என்பன சேதம். 02 பணியாளர்கள் காயம்.

20.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் உட்புற
வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேத விபரம் தெரியவரவில்லை.

22.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது காலை 06.20 மணிக்கு விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மதிற்புறம் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

25.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை வளாகத்தில் எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரசவ விடுதி, வெளிநோயாளர் பிரிவு, வரவேற்பறை என்பன சேதம்.
தெய்வாதீனமாக பணியாளர் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

30.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது மாலை 4.00 மணியளவில் எறிகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்டிடங்கள் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
08.01.2009ல் தர்மபுரம் மருத்துவமனை மீது பிற்பகல் 01.20 மணியளவில் மருத்துவமனையிலிருந்து 75 மீற்றர் தூரத்திலுள்ள தர்மபுரம் சந்தியில் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. 07 பொதுமக்கள் பலியாகினர்.

13.01.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்குவைத்து முற்பகல் 10.00மணியளவில் எறிகணைகள் வீசப்பட்டன. எறிகணைகள் நோயாளர் விடுதியின் மேல் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி. மேலும் 06 பேர் காயம்.

19.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனைக்கு அருகில் வீழந்த எறிகணை தாக்குதலில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த 06 பொதுமக்கள் காயத்திற்குள்ளாகி விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

21.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனை முன்னிரவு 07.00 மணியளவில் மருத்துவமனை மீது எறிகணை ஒன்று வெடித்துள்ளது. இதில் கட்டிடம் சேதம்.

22.01.2009ல் வள்ளிபுனம் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் எறிகணைகள் வீசப்பட்டன. இதில் 05 பொதுமக்கள் பலி். 22 பேர் காயம்.

26.01.2009ல் உடையார்கட்டு மருத்துவமனை மீது வீழ்ந்த எறிகணை வீச்சில் 12 பொதுமக்கள் பலி. 40 பேர் காயம்.

31.01.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. உயிரிழப்பு இல்லை. கட்டிடங்கள் பகுதியளவில் சேதம்.

01.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது மூன்று
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது, மருத்துவமனை மீது எறிகணை வீசியதில் ஒருவர் காயம். இரண்டாவது, ஒரு எறிகணை மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி, 4பேர்காயம். மூன்றாவது, பெண்கள்,சிறுவர் விடுதியில் ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததில் எவருக்கும் பாதிப்பில்லை.

02.02.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: மருத்துவ தாதி ஒருவர் உட்பட 07 பேர் பலி, 15 பேர் காயம்.

03.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இரண்டு
தாக்குதல்களில் மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ பணியாளர்கள் பிரதான விடுதி மற்றும் பெண்கள்
விடுதி என்பன சேதமடைந்தன. 02 பேர் பலி, பலர் காயமடைந்தனர்.

05.02.2009 ல் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் 60 பொதுமக்கள் பலி.

09.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு சுமார் 10.00 மணியளவில் மருத்துவமனைக்கு 10 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்த எறிகணையில் மருத்துவமனை கட்டிட சுவர்கள் சேதமடைந்தன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

10.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குலில் 16 பொதுமக்கள் பலி.

16.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனை வளாகத்திற்குள் முற்பகல் 11.00 மணியளவில் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் 02 பொதுமக்கள் பலி.

23.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு முன்னால் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் ஒரு குழந்தை பலி, மூடியிருந்த மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்த இரண்டு எறிகணைகளில் சுமார் 15 பொதுமக்கள் படுகாயம்.

09.04.2009 புதுமாத்தளன் மருத்துவமனை, புதுமாத்தளன் தாய்,சேய் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது பெரும் எண்ணிக்கையான எறிகணைகள் வீசப்பட்டன. 22 பொதுமக்கள் பலி, சுமார் 300 பேர் காயம்.

20.04.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு முழுவதும் கடுமையான எறிகணை வீச்சு, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன. 13 பொதுமக்கள் பலி, இரண்டு மருத்துவ பணியாளர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயம். மருத்துவமனையின் கூரை, சத்திர சிகிச்சைக்கூடம் என்பன முற்றாக அழிவடைந்தன.

21.04.2009 ல் வலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 04 அல்லது 05 பொதுமக்கள் பலி, ஒரு மருத்துவரும் பலி, 30 பொதுமக்கள் படுகாயம்.

23.04.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது மூன்று எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேதங்கள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை.

28.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மீது கடுமையான எறிகணை, வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே காயமடைந்திருந்த 06பேர் பலி மருத்துவ பணியாளர் ஒருவர் காயம்.

29.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை மீது வீழ்ந்த ஒரு எறிகணையில் 06 நோயாளிகள் பலி.

29.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை தாக்குதல்: மருத்துவமனையின் சிறப்பு விடுதி கூரை பாரிய சேதம். 05 பேர் பலி, 15 பேர் காயம்.

30.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சில் 09 பொதுமக்கள் பலி, 15 பேர் காயம். 02.05.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இரண்டு தடவை நடைபெற்ற எறிகணை தாக்குதல்களில் (காலை 09.00, காலை 10.30) 68 பொதுமக்கள் பலி, மருத்துவமனை
பணியாளர் உட்பட 87 பேர் காயம்.

இவ்வாறு மனித உரிமைகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வன்னியில் கடந்தகாலங்களில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
» சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்;3 டாங்கிகள் அழிப்பு!
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum