புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
5 Posts - 3%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
4 Posts - 0%
ayyamperumal
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_lcapஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_voting_barஅறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 10 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 16, 2010 8:21 pm

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:08 pm

"நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்... ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர யோசித்து முடிவு செய்!" என்று என் நண்பன் கூறினான். உண்மைதான்! உலகம் என்னென்னவோ பேசும்! ஆனால் நாம் நமது மனத்திற்குச் சரி என்று பட்டதைச் செய்யும்போது, பயமும் கவலையும் ஏன் ஏற்பட வேண்டும்? என்று எண்ணினேன் - மேலும், தங்கையின் பொருட்டு என் நண்பன் தடை பல வரினும் எதிர்த்து நின்று எனக்குத் துணை புரிவானல்லவா என்ற தைரியம் வேறு எனக்கு! எனவே, "அச்சம் வேண்டாம். ராதாவுக்காக நான் எதையும் ஏற்கத் தயார்" என்றேன். "மகிழ்ச்சி - நண்பா! - மட்டற்ற மகிழ்ச்சி - என் இதயத்தைக் குத்திக் கொண்டிருந்த 'முள்' எடுபடும், உன் தீரச் செயலால்" என்று நாகசுந்தரம் மன எழுச்சியுடன் கூறினான்.

அவனிடம் அவ்வளவு தைரியமாகப் பேசிவிட்டேனல்லவா - தனியாக இருக்கும்போதும் திகில் ஏற்படத்தான் செய்தது. பர்மா நாயுடு ஒருவர் - அவருடைய மகள் இந்த ராதா - என்ற பொய்யைத்தான் கூறியாக வேண்டும். உண்மையைக் கூறுவது என்றால், கோட்டையூரார் குடும்ப இரகசியங்கள் அம்பலம் வரும். நண்பன் நாகசுந்தரத்துக்குத் தாங்கமுடியாத அவமானம் ஏற்படும்.

விபசாரியின் மகள் என்று தெரிந்திருந்தும், நான், ராதாவை என் குடும்ப விளக்காக்கிக் கொள்ளச் சம்மதிக்கும்போது - சூழ்நிலையால், ஒரு முதியவரின் பேராசையால், விபசாரப் படுகுழியில் தள்ளப்பட்ட அம்மையை - தன் "தாய்" என்று தைரியமாகக் கூறி, அதனால் ஏற்படும் இழிவையும் ஏசலையும், ஏன் என் நண்பன் தாங்கிக் கொள்ளக்கூடாது! - என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு. ஆனால் நேரடியாக, நாகனைக் கேட்கத் தைரியம் வருவதில்லை.

தக்க சமயம் வந்ததும் திருமணம் நடத்திக்கொள்வது என்பதற்காக அல்ல நான் காத்துக் கொண்டிருந்தது. என் மனதிலே காதல் அரும்பு மலராகிவிட்டது - எனினும் ராதாவின் மனம் எப்படியோ, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகவே காலம் கடத்தி வந்தேன். என் நண்பன், ஜாடைமாடையாகக் கூறிவிட்டிருப்பான் போலிருக்கு தன் தாயாருக்கு. அந்த அம்மை, என்னைத் தனி அன்புடன் உபசரிக்கத் தொடங்கினார்கள். பர்மா நாயுடுவும் எனக்குப் பழக்கமாகிவிட்டார். நெருங்கிப் பழகப் பழக, அவரும் சூழ்நிலையால் கெட்டுப் போனவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். சூது தெரியாதவர். வாழும் வகையறியாதவர். யாரையும் சுலபத்தில் நம்பிவிடுவார் - திடீரென்று விரோதம் பாராட்டுவார் - காரணமே இருக்காது.

ஒரு நாள் என் நண்பன் நாகசுந்தரம், "ஏன் ஏதாவது சிறு தொழிலோ, வியாபாரமோ செய்யக்கூடாது? குடும்பம் கொந்தளித்தபடியே இருக்கலாமா? நாலு பேர் பார்த்து மெச்சும்படியான நிலையில் இருக்கவேண்டாமா?" என்று புத்தி கூறினான் - வந்துவிட்டது கோபம், பர்மா நாயுடுவுக்கு. "தம்பி! ஏதோ நீ கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்கிற காரணத்தாலேயே என்ன பேசினாலும் கேட்டுக் கொள்வேன் என்று எண்ணிக் கொள்ளாதே. நான் மகா ரோஷக்காரன். மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன். என்னைக் கேவலம் உன் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் என்று எண்ணிவிட்டாய் - இதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். பார்! இன்னும் இரண்டே மாதங்களில், பவுன் பவுனாகக் குவித்துக் காட்டுகிறேன். பணம் சேகரிக்கும் வித்தை எனக்கும் தெரியும்" என்று படபடவெனப் பேசிவிட்டார். என் நண்பன் மிகவும் வேதனைப் பட்டான். நான் தான் தக்க சமாதானம் கூறினேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:08 pm

கோபத்தின் காரணமாக, என் நண்பனிடம், பர்மா நாயுடு, பிறகு பணமே கேட்பதை நிறுத்திக் கொண்டார் என்று எண்ணுகிறீர்களா? அதுதான் கிடையாது! நாலு நாட்களிலே கோபம் போய்விட்டது. "தம்பி! உன்னைத் தவிர வேறு யார் எனக்குக் குலதெய்வம்" என்று பேச ஆரம்பித்தார். என் நண்பன் மிகுந்த சிரமப்பட்டு பர்மா நாயுடுவை 'வியாபாரி'யாக்கினான். அதிக இலாபம் வரக்கூடியது அல்ல என்ற போதிலும், ஏதோ கௌரவமாகக் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது.

ராதாவுக்கும் எனக்கும் காதல் எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்ததோ, அதைவிட வேகமாக நாகசுந்தரத்துக்கும் அவன் தகப்பனாருக்கும் மனபேதம் வளரலாயிற்று.

காசி யாத்திரைக்குப் பிறகு, கோட்டையூரார், பூச்சும் பஜனையும் அதிகமாக்கிக் கொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும், வீட்டிலே சத்கதா காலட்சேபம்! சிறு சிறு கோயில்களிலே எல்லாம், உற்சவங்கள்! கோட்டையூரார் பெரிய 'பக்திமான்' ஆகிவிட்டார் என்று பலரும் பேசிக் கொண்டனர்; புகழ்ந்தனர்.

நாகசுந்தரம், கோட்டையூராரின் கொடுஞ் செயலைத் தெரிந்து கொண்டதால், அவனுக்கு அவரிடம் இருந்து வந்த பயம், பாசம், மதிப்பு யாவும் பறந்துவிட்டன. அவருடன் சரியாகப் பேசுவதுமில்லை - பேச நேரிட்டாலும், கண்டிப்புக் குரலிலே தான்! அவர் திடுக்கிட்டுப் போனார், தன் மகனின் குணம் மாறிவிட்டது கண்டு. அவர் என்ன கண்டார், மகன், தந்தையின் 'திருக்கலியாண' குணத்தைத் தெரிந்து கொண்டதன் விளைவு இது என்று.

கோட்டையூரார் கணக்கேட்டைப் புரட்டிப் பார்த்து, "நாகா! இதென்ன 300 உன் பேரில் எழுதியிருக்கிறாயே?" என்று கேட்பார். "ஆமாம், என் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்" என்று தயக்கமின்றி நாகசுந்தரம் பதில் கூறுவான். கோபம், கோட்டையூராருக்கு. எனினும் அடக்கிக் கொண்டு, "என்னடா செலவு 300-க்கு? மோட்டார் சைக்கிள் வாங்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே அதற்கா?" என்று விளக்கம் கேட்பார். "அதெல்லாம் இல்லை. என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்" என்று கூறுவான், நாகசுந்தரம். கோட்டையூரார் மிரள மிரள விழிப்பார்.

அதட்டிப் பார்த்தார். அவன் முறைத்திடலானான்.

புத்தி கூறிப் பார்த்தார், அவன் அலட்சியப்படுத்தினான்.

சலித்துக் கொண்டார், அவன் சட்டை செய்வதாக இல்லை.

"மகனா இவன்! என்னை உயிரோடு வேகவைக்கும் மகாபாதகன். என்ன பாபமெல்லாம் உருண்டு திரண்டு, இவன் உருவாகி வந்து என்னை வாட்டுகிறது" என்று கலக்கத்துடன் பேசலானார்.

ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இருக்கும், நாகசுந்தரம், 'சொந்த செலவு'க்கு என்று கணக்கு எழுதி எடுத்திருந்த தொகை.

"சொந்த செலவு! ஐந்து அல்ல! பத்து அல்ல! நூறு இருநூறு அல்ல - 5 ஆயிரம். இவருக்குச் சொந்தச் செலவு - கவர்னர் பிரபு!" என்று மனம் கொதித்துக் கூறுவார் கோட்டையூரார் - காதில் வாங்கிக் கொள்வதில்லை நாகசுந்தரம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:09 pm

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் - முடியாத நிலையில் கோட்டையூரார், என்னைக் கூப்பிட்டனுப்பி, தன் மகனைப் பற்றிக் கூறலானார்.

"போடா அப்பா. போய், அந்த சத்யசுந்தர், என்ன கூறி அழுகிறாரோ அதைக் கேட்டு, அவருக்குச் சாந்தியும் சாமதானமும் ஏற்படும்படி செய்துவிட்டு வா" என்று நாகசுந்தரம் கேலி செய்தான், நான் கோட்டையூராரைப் பார்க்கப் போவது தெரிந்து.


"தாகத்துக்குச் சாப்பிடுகிறாயா தம்பி! இளநீர்" என்ற அட்டவணையுடன் கோட்டையூரார் பேச்சைத் துவக்கினார். பைத்தியக்காரர்! அவர், உலகினர் கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த "இரகசியங்கள்" யாவும் எனக்கும் நாகனுக்கும் தெரியும் என்பதை அவர் என்ன கண்டார். கைலாயத்துக்கு அப்போதுதான் போய்ப் பார்த்துவிட்டு, பரமன் அருள் பெற்றுக் கொண்டு வந்த பரம பக்தர் போலப் பேசலானார். இடையிடையே 'சங்கரனை'ச் சாட்சிக்கு இழுத்தபடி! "தம்பி! கோட்டையூரார் குடும்பம் என்றால் சகலரும் மதிக்கக் கூடிய நிலைமைக்கு, ஏதோ நான் பாடுபட்டுப் பகலென்றும் இரவென்றும் பாராமல் உழைத்துக் கொண்டு வந்தேன். என் சுபாவம் எல்லோருக்கும் தெரியும். கஞ்சன் அல்ல! ஆனால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரி இறைப்பவனுமல்ல! பழமொழி சொல்வார்களல்லவா, ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு, என்று - அதுபோல எதற்கும் ஒரு அளவு, காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன். கஷ்டப்பட்டு, யாரையும் மோசம் செய்யாமல் சேர்த்த சொத்து - அதனாலே தான் எனக்குக் கொஞ்சம் அக்கறை, சொத்து பாழாகக்கூடாது என்பதிலே. ஊருக்கு உபகாரியாக, இவ்வளவு காலம், மதிப்போடு வாழ்ந்துவிட்டேன்.

இப்போது வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலும் வைத்துக்கொண்டு இருக்கிற சமயம். இந்தச் சமயத்திலே, நாகசுந்தரம், என்னை இம்சிக்கிறான். அவனுடைய பேச்சும் போக்கும் எனக்குத் தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது. வாலிபப் பருவம் - பொறுப்பு தெரியாது. அதனால் கொஞ்சம் ஆடுகிறான் என்று நானாகச் சமாதானம் செய்து கொண்டேன் - முதலில். என்னால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விஷயம் வளர்ந்துவிட்டது. தம்பி! நீயும் ஏதோ நாலு காசு உள்ள இடத்திலேதான் வளருகிறாய். நீயே சொல்லு, சொந்தச் செலவுக்கென்று ஆறு மாதத்திலே ஐயாயிரம் எடுத்துக் கொள்ளலாமா? இந்த அக்ரமத்தை எப்படிச் சகித்துக் கொள்வது? யார் சகித்துக் கொள்ள முடியும்? உன்னைப் போன்ற நல்லவர்களோடு பழகியும், இவன் இப்படியா கெட்டுக் கீரை வழியாவது? ஐயாயிரம் ஏனடா எடுத்தே என்று கேட்டால், ஏதாவது அடக்கமான பதில் கூறவேண்டுமே! கிடையாது! ஆமாம் - என் சொந்தச் செலவு! என்று கூறுகிறான். ஊரிலே, இது வரையிலே எவனும் என்னிடம் பேசினதில்லை இதுபோல! இவன் பேசுகிறான்! ஐயாயிரம் சொந்தச் செலவாம் - கேட்டாயடா தம்பி! சொந்தச் செலவு ஐயாயிரம் - வயிறு எரியாதா எனக்கு. இதைவிட நான் தூங்குகிற போது என் தலைமேலே கல்லைப் போட்டுச் சாகடித்து விடலாமே. போக்கிரி சாக்கிரி - குடியன் வெறியனெல்லாம் கூட, கோட்டையூராரிடம் வாலாட்டக் கூடாது, ஒட்ட நறுக்கி விடுவார் என்று பயந்து பேசும் - இந்தப் பய, ஒரு காசுக்குப் பயன் கிடையாது.

இவனாலே, ஒழுங்கா கையேடு குறிக்கத் தெரியாது, பேரேடு பதியத் தெரியாது, எந்த மாதம் விதை போடணும், எந்த மாதம் அறுவடைக்குப் போகவேணும் என்கிறது தெரியாது. இப்படிப்பட்ட பயலுக்கு, ஐயாயிரம் தேவைப்படுதாம் தம்பி! சொந்தச் செலவுக்கு!! விவரம் கேட்டா, "ரௌடி" போல முறைத்துப் பார்க்கிறான் என்னை! கோபத்தாலே, எதாவது இரண்டு வார்த்தை நான் கடுமையாகச் சொல்லி விட்டால், என்னை அடித்துவிடுவான் போலிருக்கு! இவ்வளவு கெட்டுப் போயிருக்கிறான்! நான் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. கடைசியாக உன்னிடம் சொல்லி விட்டேன். நீ அவனுக்கு தகுந்த புத்திமதி சொல்லு - திருந்திக் கொள்ளப் போகிறானா இல்லையா என்று தீர்மானமாகக் கேட்டுவிடு பிறகு நான் என்னாலானதைப் பார்த்துக் கொள்கிறேன் - அவனும் அவனுடைய கைவரிசையைக் காட்டிப் பார்க்கட்டும். கோட்டையூராரோடு மோதிக் கொண்டு நாசமாகிப் போனவர்கள் பல பேர்! இவன், பொடிப்பய - இவனும் வேண்டுமானால் பார்க்கட்டும். இவ்வளவுதான் நான் சொல்லக் கூடியது; நீ, புத்தியுள்ளவன் - பொறுப்பு அறிந்தவன் - உன்னாலேதான் அவனைத் திருத்த முடியும்" என்று கோட்டையூரார் கூறி, "தம்பி! தாகத்துக்கு ஏதேனும் வேண்டுமா?" என்ற முடிவுரையுடன், தமது பேச்சை முடித்துக் கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:10 pm

கோட்டையூராரின் கோபத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை - யாருக்கும் ஏற்படத்தானே செய்யும் தன் மகன், பணத்தைப் பாழாக்குவது தெரிந்தால். கொடுமை பல செய்து, அட்டூழியங்கள் அநேகம் செய்து, கட்டினவளைத் துரோகம் செய்து, பராரியாக்கி, விபசாரியாகும்படி துரத்திய ஆசாமி, எவ்வளவு யோக்யர் போல, கண்ணியவான் போலப் பேசுகிறார் - எப்படி முடிகிறது இப்படிப் பகல் வேஷமிட என்பதை எண்ணித்தான் ஆச்சரியப்பட்டேன்.

"போடா, முட்டாளே! மளமளவென்று உண்மையை எடுத்து வீசி, வாயை அடக்காமல், அவர் கூறிக்கொண்டிருந்த கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வருகிறாயே!" என்று நாகசுந்தரம் என்மீது கோபித்துக் கொண்டான், நான் தூது போய்வந்த விவரம் கூறினதும். கோட்டையூரார் என்னிடம் முறையிட்டும் பயனில்லை என்பதைக் கண்டுகொண்டான பிறகு, சில நாட்கள் நேரடியாகவே, நாகசுந்தரத்தைத் தாறுமாறாகத் 'திட்டி'ப் பார்த்தார் - அதிலும் பலன் ஏற்படவில்லை. பிறகு, கடைசி பாணத்தைப் பிரயோகித்தார் - வக்கீல் விருத்தாசல ஐயர் அந்தப் பாணத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அது இது:


நோட்டீஸ்

இதனால், சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில், என் மகன் நாகசுந்தரம், சிலருடைய துர்ப்போதனையால், குடி, கூத்தி, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்களில் ஈடுபட்டு, சொத்தைப் பாழாக்குவதால், அவனை நான், குடும்பத்திலிருந்து வெளியேற்றிவிட்டேன். அவனிடம் 'விடுதலை'ப் பத்திரமும், எழுதி வாங்கியாகி விட்டது. அவனுக்கும், என் குடும்பச் சொத்துக்கும் இனி ஒரு சம்பந்தமும் கிடையாது. இதை அறியாது, யாராவது அவனுக்குக் கடன் கொடுத்தால், அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

கோட்டையூர் - தர்மலிங்க முதலியார்.

இந்த 'நோட்டீஸ்' தயாரித்து என்னிடம் கொடுத்தனுப்பினார் கோட்டையூரார். இது அடுத்த வெள்ளிக்கிழமை எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடப் போகிறேன் - கடைசி முறையாக நீ கூறியும், திருந்தப் போகிறானா, அல்லது ஊர் சிரிக்க வைக்கட்டுமா என்று கேட்டுச் சொல்லிவிடு - என்றெல்லாம் 'சேதியும்' சொல்லி அனுப்பினார். நாகசுந்தரத்தின் நற்பெயருக்கு இந்த 'நோட்டீஸ்' எவ்வளவு கேவலத்தை உண்டாக்கும் என்பதை எண்ணி நான் பதைத்துப் போனேன் - நாகசுந்தரத்திடம் இதைக் கூறினேன் - அவன் விழுந்து விழுந்து சிரித்தான் - சிரித்துவிட்டு, ஒரு காகிதத்தில், ஏதோ எழுதி என்னிடம் கொடுத்துவிட்டு, "சொல்லு அவரிடம், வக்கீல் நோட்டீஸ் வெளிவந்த மறுதினம் இந்த விளம்பரமும் வெளிவரும் என்று" எனக்குக் கூறினான். தந்த விளம்பரம் இது:



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:10 pm

ஒரே ஸ்பெஷல் நாடகம்

தமக்கையை மணம் செய்துகொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு, தங்கையை மணம் செய்துகொள்ள எண்ணி மனைவியைச் சித்திரவதை செய்த மகானுபாவர் யார்?

*
உயிரோடு இருப்பவரைச் செத்ததாகக் கதை கட்டிய கண்ணியன் யார்?

*
பிச்சைக்கு வந்த கிழவி பிணமான மர்மம் என்ன?
*
பேய்பிடித்ததாகப் பொய் சொன்ன பேயன் யார்?
*
முதலிய அதி அற்புத மர்மங்களை விளக்கிடும்

"கோட்டையூர்க் கொலைகாரன்"

என்ற அற்புதமான நாடகத்தைச் சீர்திருத்த நாடக சபையார் விரைவில் நடத்திக் காட்டுவார்கள்.
நாகசுந்தரம்,
காண்ட்ராக்டர்.

என் நண்பனின் சாமர்த்தியம் தக்க பலன் தந்தது. கோட்டையூரார், இடிகேட்ட நாகமானார், இந்தக் காகிதக் கணையை நான் வீசினதும். கண்களிலே மிரட்சி - வாய் குளறலாயிற்று - உடல் நடுங்கிற்று.

"ஐயாயிரம் - கூத்திக்கும் குடிக்கும் போகவில்லை - தங்களால் சித்திரவதை செய்யப்பட்ட ரங்கம்மாளின் குடும்பத்துக்குத்தான் போயிருக்கிறது" என்று விளக்கலானேன்.

"ரங்கம்! ரங்கம், இங்கா இருக்கிறாள்? என் மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா - ஐயையோ!" என்று அலறினார் - படுத்தார் - அவருக்கு நெடுநாட்களாக இருந்து வந்த பச்சைவாத நோய் தாக்கிற்று - கை கால் வரவில்லை - சரியாகப் பேச முடியவில்லையே தவிர, அவர் மனதிலே, என்னென்ன எண்ணங்கள் தோன்றின என்பதை - அவர் பொழிந்த கண்ணீர் காட்டிற்று.

நாகசுந்தரம் கோட்டையூராருக்கு வந்துள்ள கொடிய வியாதியைப் போக்கப் பல மருத்துவர்களை ஏற்பாடு செய்தான் - பலன் இல்லை.

ரங்கம்மாளுக்குச் சகல விஷயமும் கூறப்பட்டது - வருந்தினார்கள்; ஒருமுறையாவது அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று கூறினார்கள் - நாகசுந்தரம் "வேண்டாம், அம்மா! உங்களைப் பார்த்தால், ஏற்படக்கூடிய மன அதிர்ச்சியாலே, அவர் இறந்துவிடக் கூடும்" என்று கூறித் தடுத்தான். 'தொடர் தொடராகத் துன்பங்களைத் தாங்கித் தாங்கிப் பழக்கமாகிவிட்டது நாகு! - இதையும் தாங்கிக் கொள்கிறேன் - வேறென்ன செய்ய முடியும்" என்று ரங்கம்மாள் சோகமாகக் கூறினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:13 pm

ராதாவின் 'அன்பை' நான் பெற்றுவிட்டேன் - இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் 'தூது'. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் 'நாயுடு' குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் பரந்தாமன் என்று சொன்னதும், அப்பா சம்மதித்துவிட்டார். திருமண நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடைசியில், தன் மகள் சுகப்பட, கௌரவப்பட, வழி கிடைத்ததே என்ற மகிழ்ச்சி ரங்கம்மாளுக்கு! தன் தங்கைக்குத் தகுந்த 'வரன்' கிடைத்ததுபற்றி நாகசுந்தரத்துக்குக் களிப்பு! எனக்கும் ஆனந்தம்! ராதா? ஒரே குதூகல மயம்!

இவ்வளவையும் 'பாழ்' செய்யக் கிளம்பினான், பர்மா நாயுடு! கலியாணத்துக்கு இரண்டே நாட்கள் உள்ளன. நேரே என் வீடு வந்தான். மாடியில், என் தனி அறையில் நான் இருந்தேன்... புதிதாகத் தைத்து வந்த, கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு, 'கண்ணாடியில்' பார்த்தபடி.

"மாப்பிள்ளையாகப் போகிறாயோ, மாப்பிள்ளை!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலிலே கேட்டான் - கதவை, உட்புறம் தாளிட்டுக் கொண்டான்.

"இதோ பார்! எனக்கு இப்போதே ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். இல்லையானால் இந்தக் கலியாணம் நடைபெறாது - கண்டிப்பாக நடைபெறாது" என்று கூறினான்.

எனக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது.

"ஆயிரம் ரூபாயா? ஏன்? பெண்ணை விற்கிறாயா அந்த விலைக்கு?" என்று நான் கேட்டேன், கோபமாகத்தான்.

"பெண்ணை விற்பது அல்ல! அந்த "இளித்தவாய்ச் சிறுக்கி" யார் தடுத்தாலும், உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வாள். நான் கேட்கும் ஆயிரம், ராதாவுக்காக அல்ல! இரகசியத்தை வெளியிடாமலிருக்க! உன் அப்பாவுக்கு, ரங்கத்தின் "பூர்வீகம் தெரியாதிருக்கவேண்டுமே, அதற்காக! தெரிந்தால், ஊர் சிரிக்குமே. ஒப்புக்கொள்வாரா, உன் தந்தை. அதற்காக, நான் வாயை மூடிக் கொண்டிருப்பதற்காக. 'ஆயிரம்' தரவேண்டும் என்றான். எனக்கு வந்த கோபத்தில், அப்படியே அந்தக் குடிகாரனின் கழுத்தைப் பிடித்து நெரித்து விடலாமா என்று கூடத் தோன்றிற்று. அடக்கிக் கொண்டு, சாந்தமாக ஆனால் உறுதியுடன் கூறினேன் - அரை ரூபாய்கூடக் கொடுக்க முடியாது என்று. "கலியாணத்தைத் தடுக்க, உன்னால் முடியாது. ஊரிலே ஒரு சமயம், உன் உளறல் கேட்டுச் சில பேர் இழிவாகப் பேசக்கூடும். அதுதான் நடைபெறுமேயொழிய, கலியாணம் நின்றுவிடாது" என்று நான் சொன்னேன்.

"கோட்டையூராரின் முதல் மனைவிதான் ரங்கம் என்பது தெரிந்தால் கூடவா, உன் அப்பா சம்மதிப்பார் இந்தக் கலியாணத்துக்கு?" என்று முடுக்குடன் கேட்டான் பர்மா நாயுடு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:13 pm

"கலியாணம் எனக்கு! அப்பாவுக்கு அல்ல" - என்று நான் வெடுக்கெனப் பதில் சொன்னேன். பர்மா நாயுடு, ஆயிரத்தை ஐந்நூறு ஆக்கினான் - நான் முறைத்துப் பார்த்தேன், இருநூறுக்கு இறங்கினான் - எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "மிரட்டிப் பணம் வாங்குவது முடியாது, மாமா! ஆயிரம் கூடத் தந்துவிடுவேன், அன்புடன் கேட்டால்" என்று சொன்னேன் - இளித்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன். அவைகளை வாங்கிக்கொண்ட பிறகு சொன்னான். "தம்பி! ஏன் தெரியுமா இது! கலியாணத்தின் போது, உன் அந்தஸ்துக்கு ஏற்றபடி நான் உனக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதற்காகத்தான்!"

திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

பர்மா நாயுடு, நானூறு ரூபாயில் எனக்கு 'ரிஸ்ட் வாட்ச்' வாங்கித் தந்தார்!

கோட்டையூரார் 'ராதாவுக்கு' ஆசீர்வாதமும், அழகான வைர நெக்லெசும் பரிசளித்தார் - பகிரங்கமாக அல்ல.

எப்படியோ பெரியதோர் 'பொய்' சொல்லி, என் தகப்பனாரை ஏமாற்றியாகிவிட்டது.

அந்தப் பொய் சொல்லாவிட்டால், உண்மையைக் கூறி இருந்தால், ராதாவை நான் மனைவியாகக் கொள்வதை எப்படி என் அப்பா சம்மதிப்பார்!

நானும் நாகுவும், இதைப் பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தோம், ஒரு நாள் மாலையில், என் மாடி அறையில்.

"அண்ணா! அப்பாவை ஏமாற்றிவிட்டதாகத்தானே அத்தான், 'கித்தாப்பு'ப் பேசுகிறார்" என்றாள் ராதா.

"ஆமாம் - சாமர்த்தியமாக நான் காரியத்தைச் சாதித்துக் கொண்டேன் - அப்பா, கர்நாடகப் பேர்வழி - கலப்பு மணத்துக்குத் துளியும் சம்மதிக்கமாட்டார்" என்றேன்.

"தங்களைவிடத் தங்கள் அப்பாதான் சாமர்த்தியசாலி" என்றாள் ராதா.

"எப்படி?" என்று நாகு கேட்டான்.

"அண்ணா! இவர் அவருடைய மகன் அல்ல! இவர் மனித குலம் - செட்டியாரோ, நாயுடுவோ, முதலியாரோ, பிள்ளையோ, என்னவோ தெரியாது" என்றாள் ராதா.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"விளங்காது, நானாக விளக்கினாலொழிய! எனக்கும் உங்கள் அப்பா சொன்னதால்தான் தெரிந்தது" என்றாள்.

என் உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது.

"பரமா, பயப்படாதே! பழங்கதை - இனிக் கூறித்தான் தீரவேண்டும், அதை" என்று கூறிக்கொண்டே என் அப்பா, அறைக்குள் வந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 18, 2010 11:14 pm

"எனக்குக் கல்யாணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை - கவலைப்பட்டேன் - பிறகு, 'கர்ப்பம்' தரித்தது - அதாவது கர்ப்பம் தரித்ததாக, என் மனைவி 'பாசாங்கு' செய்தாள். தாய் வீடு சென்றாள் - அங்கு ஒரு லேடி டாக்டரின் உதவியால், என்னை நம்பவும் வைத்தாள். லேடி டாக்டர் ஏழைகளுக்காக ஒரு பிரசவ விடுதி நடத்தி வந்தார்கள் - அங்கு பிறந்த ஒரு குழந்தையின் தாய் இறந்துவிடவே, அந்தக் குழந்தையை என் மனைவியுடையதாக்கினார்கள் - நீதான் அந்தக் குழந்தை!" என்றார்.

எனக்கு பேச்சு எழவில்லை.

"அந்தக் குழந்தைதான் தாங்கள். அந்த லேடி டாக்டர்தான், கல்லூரியில் நாடகமாடினேனே, 'தாரா' நாடகம், அப்போது தலைமை வகித்த திலகவதி" என்று ராதா விளக்கம் கூறினாள்.

"கொஞ்சம் துப்பறியும் வேலை செய்தேன் - திலகவதியும் துணை செய்தார்கள் - கண்டுபிடித்தேன் உண்மையை" என்று ராதா கூறினாள்.

"எனக்குத் தெரியாது, இந்த ரகசியம் ராதாவுக்குத் தெரியும் என்று. கலியாணத்துக்குப் பிறகு, ராதாவே என்னிடம் ஆதாரத்துடன் கேட்கவே, நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்" என்று மேலும் விளக்கம் கூறலானார் என் தகப்பனார்.

எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றித் தோன்றிக் கலைந்தன.

நாகசுந்தரம், சாமர்த்தியமாகப் பேச்சை வேறு பக்கம் திரும்பினான்.

பல நாட்களாயின, என் மனம் ஒரு நிலையை அடைய.

"இப்போது கூறுங்கள், யார் சாமர்த்தியசாலி? உங்கள் அப்பாதானே! நீங்கள், நான் யார் என்பதை அவர் அறிந்து கொள்ளாதபடி சாமர்த்தியமாகக் காரியம் செய்தீர். அவரோ நீங்கள் யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியாதபடி, இவ்வளவு வருஷங்களாக மறைத்து வைத்தார். அவர்தானே உண்மையில் சாமர்த்தியசாலி" என்று ராதா கேட்டாள்.

அவளை என் அருகே இழுத்து முத்தமிட்டுக் கூறவேண்டும் என்று எண்ணினேன் - அதை எப்படித்தான் என் ராதை தெரிந்து கொண்டாளோ தெரியவில்லை; தளிர்போலச் சாய்ந்தாள் என் மீது. அவளுடைய கன்னங்களில் - ஆமாம் - என் கரம்தான் முதலில் விளையாடிற்று - பிறகு அதரம்.

"கிளியே! மறைந்துபோயிருந்த 'இரகசியத்தைக்' கண்டறிந்த, நீதான் எங்களிருவரை விடச் சாமர்த்தியசாலி" என்றேன் நான்.

"சந்தேகமென்ன அதிலே! பொதுவாகவே, ஆண்களை விடப் பெண்கள்தான் சாமர்த்தியசாலிகள்" என்றாள் என் ராதா.

'எப்படி?' என்று நான் கேட்கவில்லை. நான் அவள் கூந்தலைக் கோதினேன் - களித்தேன்.

"எப்படி என்று கேட்கிறீர்களா கண்ணாளா! எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலியான ஆடவனாக இருப்பினும் அவனைப் பெற்றெடுத்தவள் ஒரு பெண்தானே! அவள் தானே சிறப்புக்குக் காரணம்" என்றாள்.

"இன்பமே" என்றேன் நான்.

கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தாள் - செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று!

புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்!

முற்றும்!




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக