Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
2 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
First topic message reminder :
1. அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2
1. அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
1. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
2.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
3.
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
4.
எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
5.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
6.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
7.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
8.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழிய வாழிய வே!
2.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
3.
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
4.
எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
5.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
6.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
7.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
8.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
24. தமிழச் சாதி
எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே, விதியே, தமிழச் சாதியை 5
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? 10
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? 15
விதியே தமிழச் சாதியை,எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்!
ஏனெனில்,
"சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும், 20
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரியும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் 25
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது"என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருத்தேன். 30
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுடத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும், 35
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் 40
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
தெய்வம் மறவார்;செயுங்கடன் பிழையார்;
ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்’ 45
என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்,
எனினும்,
இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த ஏனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்டாய்; 50
ஊனமற் றெவைதாம் உறினுமே பொறுத்து,
வானம் பொய்ககின் மடிந்திடும் உலகுபோல்,
தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து,
ஞானமும் பொய்கக நசிக்குமோர் சாதி,
சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்; 55
சாத்திர மின்றேற் சாதி யில்லை.
பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மையாகிப் புழுவென மடிவர்;
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர்- 60
மற்றிவர் வகுப்பதே சாத்திர மாகும்-
இவர் தாம்.
உடலும் உள்ளமும் தம்வச மிலராய்
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிதிலை;பின்னும் மருந்திதற் குண்டு; 65
செய்கையுஞ் சீலமுங் குன்றிய பின்னரும்
உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
மற்றிவர்,
சாத்திரம்-(அதாவது,மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்:- 70
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமகெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்; 75
ஒரு சார்,
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும், நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின், அவற்றை 80
முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது,
பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும்.
நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ. 85
‘ஏ எ!அஃதுமக் கிசையா’ தென்பர்;
‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை
பல, அனைவ நீங்கும் பான்மைய வல்ல’
என்றருள் புரிவர். இதன்பொருள்’சீமை 90
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்
என்பதே யாகும்;இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர்(நாற்பதிற் றாண்டின் 95
முன்னிருந் தவரோ முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரேநாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ? 100
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதல்கடவுள்
என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதும தாதைய தென்பதிங் கெவர்கொல்?) 105
நமதுமூ தாதையர் நயமறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுடின் வாழ்னவ தமிழர்க் குண்டு;
எனில், அது தழுவல் இயன்றிடா வண்ணம் 110
கலிதடை புரிவன், கலியின் வலியை
வெல்லலாகாதென விளம்புகின் றனரால்,
நாசங் கூறும்‘நாட்டு வைத்தியர்’
இவராம், இங்கிவ் விருதலைக் கொள்ளியி
னிடையே நம்மவர் எப்படி உய்வர்? 115
விதியே! விதியே!தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
விதி
மேலேநீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்
எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே, விதியே, தமிழச் சாதியை 5
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? 10
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? 15
விதியே தமிழச் சாதியை,எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்!
ஏனெனில்,
"சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும், 20
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரியும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் 25
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது"என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருத்தேன். 30
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுடத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும், 35
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் 40
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
தெய்வம் மறவார்;செயுங்கடன் பிழையார்;
ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்’ 45
என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்,
எனினும்,
இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த ஏனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்டாய்; 50
ஊனமற் றெவைதாம் உறினுமே பொறுத்து,
வானம் பொய்ககின் மடிந்திடும் உலகுபோல்,
தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து,
ஞானமும் பொய்கக நசிக்குமோர் சாதி,
சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்; 55
சாத்திர மின்றேற் சாதி யில்லை.
பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மையாகிப் புழுவென மடிவர்;
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர்- 60
மற்றிவர் வகுப்பதே சாத்திர மாகும்-
இவர் தாம்.
உடலும் உள்ளமும் தம்வச மிலராய்
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிதிலை;பின்னும் மருந்திதற் குண்டு; 65
செய்கையுஞ் சீலமுங் குன்றிய பின்னரும்
உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
மற்றிவர்,
சாத்திரம்-(அதாவது,மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்:- 70
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமகெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்; 75
ஒரு சார்,
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும், நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின், அவற்றை 80
முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது,
பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும்.
நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ. 85
‘ஏ எ!அஃதுமக் கிசையா’ தென்பர்;
‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை
பல, அனைவ நீங்கும் பான்மைய வல்ல’
என்றருள் புரிவர். இதன்பொருள்’சீமை 90
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்
என்பதே யாகும்;இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர்(நாற்பதிற் றாண்டின் 95
முன்னிருந் தவரோ முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரேநாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ? 100
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதல்கடவுள்
என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதும தாதைய தென்பதிங் கெவர்கொல்?) 105
நமதுமூ தாதையர் நயமறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுடின் வாழ்னவ தமிழர்க் குண்டு;
எனில், அது தழுவல் இயன்றிடா வண்ணம் 110
கலிதடை புரிவன், கலியின் வலியை
வெல்லலாகாதென விளம்புகின் றனரால்,
நாசங் கூறும்‘நாட்டு வைத்தியர்’
இவராம், இங்கிவ் விருதலைக் கொள்ளியி
னிடையே நம்மவர் எப்படி உய்வர்? 115
விதியே! விதியே!தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
விதி
மேலேநீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
சுதந்திரப் பெருமை
"தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்
திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு
1. வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?-என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ? (வீர)
2.
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்
கொய்யென்று கண்டா ரேல்-அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ? (வீர)
3.
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தா ரேல்-மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? (வீர)
4.
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ? (வீர)
5.
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)
6.
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ! (வீர)
7.
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?
"தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்
திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு
1. வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?-என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ? (வீர)
2.
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்
கொய்யென்று கண்டா ரேல்-அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ? (வீர)
3.
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தா ரேல்-மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? (வீர)
4.
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ? (வீர)
5.
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)
6.
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ! (வீர)
7.
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
சுதந்திரப் பயிர்
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ? 1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? 2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? 4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 6
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? 7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? 8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? 9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? 11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே? 13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ? 1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? 2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ? 4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 6
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? 7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? 8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? 9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? 11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே? 13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
28.சுதந்திர தாகம்
ராகம்-கமாஸ் தாளம்-ஆதி
என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி!ஆரியர் கோனே!
ராகம்-கமாஸ் தாளம்-ஆதி
என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி!ஆரியர் கோனே!
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
29. சுதந்திர தேவியின் துதி
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே. 1
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி,
படைத்துயர்ந் திட்டா ரேனும்,
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்,
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். 2
தேவி!நின் னொளிபெ றாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ?ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ!
பாவிய ரன்றோ நின்தன்
பாலனம் படைத்தி லாதார்? 3
ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்;
கழிவறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;
இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவினும் இன்பங் காணார்;
அழிவறு பெருமை நல்கும்
அன்னை!நின் அருள்பெ றாதார். 4
வேறு
தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யும்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே 5
அம்மை உன்தன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்;
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. 6
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர். 7
அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். 8
பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன்
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே. 1
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி,
படைத்துயர்ந் திட்டா ரேனும்,
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்,
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். 2
தேவி!நின் னொளிபெ றாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ?ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ!
பாவிய ரன்றோ நின்தன்
பாலனம் படைத்தி லாதார்? 3
ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்;
கழிவறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;
இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவினும் இன்பங் காணார்;
அழிவறு பெருமை நல்கும்
அன்னை!நின் அருள்பெ றாதார். 4
வேறு
தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யும்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே 5
அம்மை உன்தன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்;
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. 6
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர். 7
அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். 8
பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன்
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
30.விடுதலை
ராகம்-பிலகரி
விடுதலை! விடுதலை! விடுதலை!
1.
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)
2.
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே! (விடுதலை)
3.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே!
ராகம்-பிலகரி
விடுதலை! விடுதலை! விடுதலை!
1.
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)
2.
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே! (விடுதலை)
3.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே!
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Re: பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்
31. சுதந்திரப் பள்ளு
பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி தாளம்-ஆதி
பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே)
சரணங்கள்
1.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)
2.
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)
3.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)
4.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் (ஆடுவோமே)
5.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி தாளம்-ஆதி
பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே)
சரணங்கள்
1.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)
2.
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)
3.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)
4.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் (ஆடுவோமே)
5.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பாரதியார் கவிதைகள் - பல்வகைப் பாடல்கள்
» பாரதியார் பாடல்கள்
» பாரதியார் கவிதைகள் - சுயசரிதை
» < < < பாரதியார் பாடல்கள் தேவை > > >
» கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்
» பாரதியார் பாடல்கள்
» பாரதியார் கவிதைகள் - சுயசரிதை
» < < < பாரதியார் பாடல்கள் தேவை > > >
» கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|