ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை கொண்ட சோழபுரம்

Go down

கங்கை கொண்ட சோழபுரம் Empty கங்கை கொண்ட சோழபுரம்

Post by சம்சுதீன் Fri Feb 12, 2010 3:07 pm

கங்கை கொண்ட சோழபுரம்


கங்கை கொண்ட சோழபுரம் Picture+4+013




தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.

அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.



கங்கை கொண்ட சோழபுரம் Picture+4+008

இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.

கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.

கூர்க் - மழையை எதிர் நோக்கி ஒரு மதிய வேளை....



கங்கை கொண்ட சோழபுரம் Coorg+%26+yercaud+trip+001கங்கை கொண்ட சோழபுரம் Coorg+%26+yercaud+trip+005

கங்கை கொண்ட சோழபுரம் Coorg+%26+yercaud+trip+006



கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......


கங்கை கொண்ட சோழபுரம் Coorg+%26+yercaud+trip+093

கங்கை கொண்ட சோழபுரம் Coorg+%26+yercaud+trip+094


கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்

இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளும் , மாணவச் செல்வங்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. மாடியிலிருந்து குதிப்பதும் , மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வது அதிகமாக உள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது எங்கே செல்கிறது நம் வருங்கால சந்ததியினரின் பாதை என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏன் இந்த அவசர முடிவு ? எது அவர்களை இந்த பாதைக்கு தூண்டியது?

இளைய தலைமுறையினரின் இந்த அவசர முடிவு மிகவும் வருந்தத்தக்க , கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகிவிட்டது. எதையும் தாங்கக் கூடிய மனப்பக்குவமும் , தைரியமும் இல்லாததே இவர்களின் இந்த அவசர முடிவுக்கு காரணம் என்பது மட்டும் புரிகிறது.

போன தலைமுறையிடம் இருந்த பக்குவம், தைரியம் போன்றவை இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் உணர்ச்சி வசப்படுவதும் , எதற்கு எடுத்தாலும் கோபப் படுவது என்று இவர்களின் இந்த போக்கு ஒரு வித அச்சத்தை உண்டு பண்ணுகிறது.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் போது , பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோரும் , குழந்தைகளும் தனித்து உள்ளார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதில்லை. அதோடு பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தக் குழந்தை தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. எனவே அக்குழந்தை தொலைக்காட்சியின் துணையை நாடுவதால் , அதன் மூலம் அக்குழந்தையின் மனதில் விதவிதமான எண்ணங்கள் உருவாகிறது. அது அந்த குழந்தையின் மனதில் ஒரு சில நல்ல விஷயங்களை பதித்தாலும் பெரும்பாலான நேரங்களில் விஷ விதைகளைத் தூவுகிறது.

அது மட்டும் இல்லாமல் இப்போது அநேக இல்லங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை என்பது இப்போது அனேக வீடுகளில் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தை தனக்கு தேவை என்று நினைக்கும் ஒரு பொருள் , அதற்கு கேட்பதற்கு முன்பே கிடைத்து விடுகிறது. முந்தைய நாட்களில் அனேக வீடுகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். வருமானமும் கம்மியாக இருந்ததால் அக்குழந்தைகள் கேட்கும் அனைத்தும் கிடைப்பதில்லை . எனவே அதற்கு இல்லை, கிடையாது என்ற வார்த்தைகள் பழகிப் போன ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது எல்லாமே உடனுக்குடன் கிடைப்பதால் அக்குழந்தைகள் சற்றே வளர்ந்த பின் இல்லை என்ற வார்த்தையை விரும்புவதில்லை . அப்படி இருப்பதால் எந்த ஒரு சிறு ஏமாற்றத்தையும் அதற்கு தாங்கும் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பி தற்கொலை என்ற அவசர முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.

எனவே பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு எதையுமே கேட்டவுடன் வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கு சற்றே கசப்பையும் காட்டுங்கள். வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் நிறைந்தது என்பது நம் கண்மணிகளுக்கு தெரிய வேண்டும். அதை சரியான விதத்தில் புரிய வைக்க வேண்டிய மிகப் பெரிய கடமை பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது. இன்றே செயல்படுத்தலாமா !!!!!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum