ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கண்ணதாசன் 25 Poll_c10கண்ணதாசன் 25 Poll_m10கண்ணதாசன் 25 Poll_c10 
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் 25 Poll_c10கண்ணதாசன் 25 Poll_m10கண்ணதாசன் 25 Poll_c10 
heezulia
கண்ணதாசன் 25 Poll_c10கண்ணதாசன் 25 Poll_m10கண்ணதாசன் 25 Poll_c10 
i6appar
கண்ணதாசன் 25 Poll_c10கண்ணதாசன் 25 Poll_m10கண்ணதாசன் 25 Poll_c10 
Jenila
கண்ணதாசன் 25 Poll_c10கண்ணதாசன் 25 Poll_m10கண்ணதாசன் 25 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் 25

Go down

கண்ணதாசன் 25 Empty கண்ணதாசன் 25

Post by தண்டாயுதபாணி Thu Feb 11, 2010 12:44 pm

கண்ணதாசன் 25



கண்ணதாசன் 25 Ananthavikadannews_17101687193












காட்டுக்கு
ராஜா. சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு
இது. நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிசரத்தின் சில துளிகள்.

* கண்ணதாசன் என்றால்
கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல். அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும்,
வர்ணிக்கப்பட்டதை படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்த பெயரை
வைத்துக்கொண்டேன் என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர்
முத்தையா.

*
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு
தத்துக்கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்கள் பெயர் நாராயணன்.

* கலங்காதிரு மனமே,
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று கன்னியின் காதலியில் எழுதிய
முதல்பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த கண்ணே கலை மானே கவிஞரின்
கடைசிப்பாட்டு.

*
எப்போதும் மஞ்சள் பட்டுச்சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று
கழுத்து, கைகளில் நகைகள் மின்னும், திடீரென்று காணாமல் போய்விடும்.
பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கு என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை
சொல்வார்.

*
மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும்
தான் கவிஞருக்கு பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு
தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

* வேட்டியின் ஓரத்தை
பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளை சொல்வார். நடந்து
கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது
செருப்பு அணிய மாட்டார்.

* கொஞ்சம் மது அருந்தி விட்டால் என் சிந்தனைகள் சுறு
சுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு அசை
உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க
மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.

* கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல்,
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா, தனக்கு பிடித்த பாடல்களாக
என்னா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டையும்
சொல்லியிருக்கிறார்.

* காமரசர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க
விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை.

* கண்ணதாசனுக்கு
பிடித்த இலக்கியம் கம்பராமயணம். நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதில்
இருந்து தான் என்பார்.

* ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்
சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு
கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் பராசக்தி, ரத்தத் திலகம், கறுப்புபணம்,
சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

* முதல் மனைவி பெயர்
பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள். 50 வயதில் வள்ளியம்மையை
திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15
பிள்ளைகள்.

* படுக்கை
அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால்,
சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்கு போய் அவர் பூஜை அறையில் இருக்கும்
முருகனை வணங்கி விட்டு தான் செல்வார்.

* கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே
பலருக்கும் போன் போட்டு வதந்தியை கிளப்பி, வீடு தேடி பலரும் அழுது கூடிவிட,
பிறகு இவரே முன்னால் தோன்றி சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

* உங்கள் புத்தகங்கள்
அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று
கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தகங்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை
பின்பற்றாதீர்கள்.

* தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு
சுயவரலாறு எழுதியவர். வணவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதற்கான உதாரணங்கள் என்றார்.

* திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை
இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றலா, தென்றல் திரை, முல்லை, கடிதம்,
கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

* திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார்.
தோற்றார். அதன்பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. இது எனக்கு சரிவராது
என்றார்.

* குடிப்பதும்,
தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொண்டுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு
தனி மனிதன் தன் உடல்நிலைக்கும், வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர,
அதனால் சமுதாயத்தில் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை என்று தனது
தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

* இறப்புக்கு 11
ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன்
கடைசி வரி இப்படி முடியும்....



ஏற்றிய
செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு.


கண்ணதாசன் 25 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum