ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

+2
இளமாறன்
சபீர்
6 posters

Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by சபீர் Wed Feb 10, 2010 8:53 pm

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)
இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் இந்த செய்தி அமைந்துள்ளது.
பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு படிப்புத் தேவையில்லை; அவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கட்டும்; மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்; அவர்களை நல்ல அறைகளில் தங்க வைக்க வேண்டாம்! என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!
முதலில், இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதா? என்பதை நாம் பார்ப்போம். இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது” என்று இச்செய்தியைப் பதிவு செய்து விட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்கு விளக்கவுரை எழுதிய இமாம் தஹபீ, தனது தல்கீஸ் எனும் நூலில் “இது இட்டுக்கட்டப்பட்டது” என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச் செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்) அப்துல் வஹ்ஹாப் என்பவராவார். இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், “இவரிடம் (அடிப்படை இல்லாத) புதுமையான செய்திகள் உண்டு” என்றும் “இவர் இட்டுக்கட்டி சொல்பவர்” என்று இமாம் அபூதாவூத் அவர்களும், “இவர் விடப்பட வேண்டியவர்” என்று இமாம் உகைலீ, தாரகுத்னீ, பைஹகீ ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் நஸயீ அவர்கள் “இவர் நம்பகமானவர் இல்லை” என்றும் இவருடைய பெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 395)
எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.
இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.
இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவர் “பெரும் பொய்யர்” என்று இமாம் தாரகுத்னீ அவர்களும் “இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்று) தெளிவு படுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாது. ஏனெனில் இவர் (நபிகளார் மீது) இட்டுக்கட்டிச் சொல்பவர்” என்று இப்னுஹிப்பான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். “இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவை அல்ல” என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 33)
எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறது. மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தையே தருகிறன.
இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி (ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
“மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)
இது போன்ற செய்திகள் மூலம், நபிகளார் பெண்களை எழுதப் படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள்.
படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும்.
எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by இளமாறன் Wed Feb 10, 2010 9:05 pm

கல்வி கற்பது தவறானது இல்லையே பின் ஏன் இப்படி சொல்ல வேண்டும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by சபீர் Mon Aug 23, 2010 11:38 am

இளமாறன் wrote:கல்வி கற்பது தவறானது இல்லையே பின் ஏன் இப்படி சொல்ல வேண்டும்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? 678642 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by Aathira Mon Aug 23, 2010 11:48 am

பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.

சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Tஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Hஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Iஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Rஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by சரவணன் Mon Aug 23, 2010 11:53 am

Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.
சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
இது உண்மையா? நாங்கள் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?......................... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by Aathira Mon Aug 23, 2010 11:58 am

பிச்ச wrote:
Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.
சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
இது உண்மையா? நாங்கள் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?......................... அய்யோ, நான் இல்லை
சொல்லாதாரம் (கூறியவர்) பேராசிரியர் சேது ராமலிங்கம், ஓய்வு, மதுரை தியாகராயர் கல்லூரி. மதுரை..

எழுத்தாதாரம் தேடுகிறேன்..பழமொழிகளின் உண்மைப் பொருள்களைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டு இருப்பதாக நினைக்கிறேன் கேட்டு இருந்தால் பதிகிறேன்..


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Tஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Hஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Iஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Rஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Aஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by ரபீக் Mon Aug 23, 2010 12:01 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 12:16 pm

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by சபீர் Tue Aug 24, 2010 11:07 am

Aathira wrote:பொதுவாக இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் என்னவென்றால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பூ எதற்க்கு?

அடுப்படியில் வேலை செய்யும் போது தலை நிறைய பூ வைத்திருந்தால் அது அடுப்புச் சூட்டில் விரைவில் வாடும். சமைத்து முடித்த பின்பு அடுப்புப் புகை, வியர்வை போக முகம் கழுவி ஒப்பனை செய்து கொள்வது (பிண்ணி பூச்சூடி பொட்டிட்டு பொட்டிட்டு) மரபு.. இதனால் கூறப்பட்ட பழமொழி இடைக்காலத்தில் ஆண் ஆதிக்கத்தால் படிப்பு எதற்கு என்று மாற்றம் பெற்றது.

சபீர் நல்ல பதிவுக்கு மிக்க நன்றி..
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Icon_smile

விவரமான பின்னுாட்டம் தந்த அக்காவுக்கு எனது அன்பு நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? Empty Re: அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum