புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 10, 2010 7:30 pm

படுக்கைக்குச் செல்லும் முன்…


“உங்களில் ஒருவர் படுக்கைக்கு வந்தால் அவர் தமது ஆடையின் ஒரு ஓரத்தால் தமது படுக்கையைத் தட்டிக் கொள்ளட்டும். ஏனெனில் அவர் போன பின் அதில் என்ன வந்தது என அறிய மாட்டார். பின்பு,
‘பிஸ்மிகல்லாஹூம்ம வழஃத்து ஜன்பீ வபிஸ்மிக அர்ஃபவுஹூ இன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வஇன் அர்ஸல் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்’
என்று கூறவும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள் : இறைவா! உன் பெயரால் எனது விலாப்புறத்தைக் கீழே வைக்கிறேன். மேலும் உன் பெயரால் எழுவேன். (தூக்கத்தில்) என் உயிரைக் கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ அருள் புரிந்திடு. அதை விட்டுவிட்டால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போலப் பாதுகாப்பாயாக! (ஆதாரம் : புகாரி)
ஆயத்துல் குர்ஸியின் மகத்துவம்!
‘நீங்கள் படுக்கைக்கு சென்றால் ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொள்ளுங்கள்.அவ்வாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குத் தொடர்ந்து ஒரு பாதுகாவலர் இருந்துக் கொண்டேயிருக்கிறார். மறுநாள் காலை வரை உங்களை ஷைத்தான் நெருங்கவே மாட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :புகாரி)
ஆயத்துல் குர்ஸி : -
‘அல்லாஹூ லாஇலாஹ இல்லாஹூவல் ஹய்யுல் கய்யூம், லாதஃகுதுஹூ ஸினதுவ் வலா நவ்ம், லஹூ மாஃபிஸ்ஸமா வாத்தி வமாஃபில் அர்ழ், மன்தல்லதீ யஷ்ஃபவு இன்தஹூ இல்லா பிஇத்னிஹ், யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்ஃபஹூம் வலா யுஹீதூன பிஷையிம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹூஸ் ஸமாவாத்தி வல் அர்ழ வலா யஊதுஹூ ஹிஃப்ழுஹூமா வஹூவல் அலிய்யுல் அழீம்’ (2:255)
ஆயத்துல் குர்ஸியின் பொருள் : -
அல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவனும் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவனும் ஆவான். தூக்கமும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை. வானங்களிலும் பூமியிலுனுள்ள அனைத்தும் அவனுடையவையே. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னாள் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்னாள் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் அறிந்துக் கொள்ள முடியாது. அவனது அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவ மிக்கவன்.
அல்-குர்ஆனின் இறுதி மூன்று அத்தியாயங்களை ஓதுதல்!
நபி (ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி.
பணியாளைவிடச் சிறந்தவைகள்: -
ஒரு பணியாள் இருந்து உங்களுக்குப் பணிவிடை செய்வதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? நீங்கள் படுக்கச் செல்லும் போது ‘சுப்ஹானல்லாஹ் 33 முறை, அல்ஹம்துலில்லாஹ் 33 முறை, அல்லாஹூ அக்பர் 34 முறை ஓதிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒரு பணியாளை விடச் சிறப்பானது என்று நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரிடமும் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
தூக்கத்திற்குச் செல்லுமுன் : -
‘பிஸ்மிகல்லாஹூம்ம அமூத்து வஅஹ்யா’
பொருள் : இறைவா உன் பெயராலேயே நான் மரணிக்கிறேன், வாழ்கிறேன்.’
இறுதியாக ஓதும் துஆ!
பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நீ தூங்குவதற்காக உனது படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளூச் செய்வது போல உளூச் செய்துகொள். பின்பு ஒருக்களித்துப்படுத்துக் கொண்டு,
‘அல்லாஹூம்ம அஸ்லம்து நஃப்ஸி இலைக வவஜ்ஜஹ்த்து இலைக வஃபவ்வழ்து அம்ரீ இலைக வஅல்ஜஃது ழஹ்ரீ இலைக ரஃக்பதன் வரஹ்பதன் இலைக லாமல்ஜஅவலா மன்ஜஅ மின்க இல்லா இலைக ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த வநபிய்யிகல்லதீ அர்ஸல்த’
என்று ஓது. அன்றிரவு நீ இறந்து விட்டால் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மீதே நீ இறந்தவனாவாய். அன்று காலையில் நீ எழுந்தால் நலமாக எழுவாய். இவற்றை உனது பேச்சுக்களில் இறுதியாக ஆக்கிக் கொள் (அதன்பின் பேசாமல் உறங்கிவிடு) என நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
பொருள் : இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன். எனது காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும் என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உன்னையன்றி எனக்கு ஒதுங்குமிடமோ தப்பிக்குமிடமோ வேறில்லை. இன்னும் நீ இறக்கியருளிய உனது வேதத்தின் மீதும் நீ அனுப்பிய உன் நபியின் மீதும் நான் விசுவாசம் கொண்டேன்.
தூக்கத்தில் கணவு கண்டால்…
“நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானின் புறத்தில் இருந்து வருவதாகும். உங்களில் யாரேனும் தனக்குப் பிரியமான கனவு கண்டால் தமக்குப் பிரியமானவரிடம் மட்டுமே
அதைச் சொல்ல வேண்டும். தாம் வெறுக்கின்ற கெட்ட கனவைக் கண்டால் இடது புறம் மூன்று முறை துப்பவும். ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். அவர் படுத்திருந்த நிலையிலிருந்து மாறிப் படுக்கவும். அதை அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம். அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (ஆதாரம் : முஸ்லிம்)
தூக்கத்திலிருந்து விழித்ததும் ஓதும் துஆ: -
‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் நுஷூர்’
பொருள் : ‘எம்மை மரணிக்கச் செய்தபின் உயிர்பித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அவனிடமே மீண்டும் எழுப்பப்படல் உள்ளது. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 10, 2010 8:01 pm

நல்ல விசயம்தான் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 8:03 pm

Manik wrote:நல்ல விசயம்தான் இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்! 677196


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 8:27 pm

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்! 677196 இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்! 677196

எனக்கொரு ச்ந்தேகம் சபீர்
ஏன் அல்லாவிடம் அரபிக் மொழியில் மட்டும் தான் பேச வேண்டும் தாய் மொழி தமிழில் பேச கூடாதா ??

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 10, 2010 8:28 pm

அல்லாவின் தாய் மொழி அரபி தானே இளா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 8:30 pm

Manik wrote:அல்லாவின் தாய் மொழி அரபி தானே இளா

தவறாக சொல்ல கூடாது ... அவருக்கு எல்லா மொழியும் தெரியும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 10, 2010 8:34 pm

மன்னிக்கவும் அந்த விசயம் எனக்கு தெரியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 10, 2010 8:44 pm

Manik wrote:மன்னிக்கவும் அந்த விசயம் எனக்கு தெரியாது

கடவுளின் மொழி மௌனம் நண்பர்களே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 10, 2010 8:45 pm

நண்பா நல்லா தெரிந்தாதான் இங்க போடனும் இல்லைனா இளா கோவிச்சுக்குவாரு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 10, 2010 8:46 pm

அப்படின்னா தமிழ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக