Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
4 posters
Page 1 of 1
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
20 ரூபாயில் இரண்டு மணி
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
kalaimoon70 wrote:தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .
Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
» 600 ரூபாயில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு பறக்கலாம் !
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முன்வந்திருக்கிறது ரஷ்யா!
» பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
» 600 ரூபாயில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு பறக்கலாம் !
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முன்வந்திருக்கிறது ரஷ்யா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|