Latest topics
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதைby ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
999 வார்த்தைகள் அறிந்த கிளி
+4
சிவா
mohan-தாஸ்
Manik
சம்சுதீன்
8 posters
Page 1 of 1
999 வார்த்தைகள் அறிந்த கிளி
10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கதைகள் :
999 வார்த்தைகள் அறிந்த கிளிஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடிஅந்நகரத்தில் அலைந்துகொண்டிருந்தது.அந்த ஆயிரமாவது வார்த்தையைஅறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்துவிடும்.தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன்தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும்.ஆனால் கிளியின் கெட்ட நேரமோஎன்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒருவார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை.
999 வார்த்தைகள் அறிந்த கிளிஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடிஅந்நகரத்தில் அலைந்துகொண்டிருந்தது.அந்த ஆயிரமாவது வார்த்தையைஅறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்துவிடும்.தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன்தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும்.ஆனால் கிளியின் கெட்ட நேரமோஎன்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒருவார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை.
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
அப்படியா என்ன கொடுமை சார் இது இந்த கிளி எந்த ஊருல இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
நம்ம பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூட சரியா தெரியல இதுல வேற கிளி தெரிந்து வைத்து இருக்கு என்ன கொடும இது
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
999 வார்த்தைகள் பேசும் கிளி
999 வார்த்தைகள் அறிந்த கிளி ஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடி அந்நகரத்தில் அலைந்து கொண்டிருந்தது. அந்த ஆயிரமாவது வார்த்தையை அறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்து விடும். தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன் தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும். ஆனால் கிளியின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை.
நகரமெங்கும் சுற்றிப் பறந்த கிளி ஒரு வீட்டை கண்டுபிடித்து அங்கு தங்கியது. அவ்வீட்டில் ஒரு வேலைக்கார சிறுமி இருந்தாள். அச்சிறுமி யாரிடமும் எதையும் பேசுவதில்லை. எப்போதும் தன் வேலையிலேயே கவனமாக இருப்பாள். அவளுடைய அதிகபட்ச பதிலே ஒரு புன்னகைதான். இந்த சிறுமியிடம்தான், தான் தேடும் அந்த ஆயிரமாவது வார்த்தை இருக்கிறது என்பதை கிளி புரிந்து கொண்டது. அதனால் அவளுடன் நட்புக் கொள்ள அது துடித்தது. ஆனால் அச்சிறுமியோ அக்கிளியுடன் பேசுவதே இல்லை.
ஒரு தினம் வீட்டில் யாருமில்லாதபோது அந்த சிறுமி தனியே அழுது கொண்டிருப்பதை கிளி பார்த்தது. அவள் அருகில் சென்று அவளுடைய கண்ணீர் துளிகளைப் பொறுக்கி ஒவ்வொன்றாய் சேர்க்க ஆரம்பித்தது. ஆனால் அச்சிறுமி 999 துளிகளோடு தன் அழுகையை நிறுத்திக் கொண்டாள்.
"இதிலும் 999 தானா?" என்று தனக்குத்தானே அலுத்துக் கொண்டது கிளி.
"இந்த நகரத்திலும் இந்த வீட்டிலும் இருக்கும் வரை ஆயிரமாவது துளி எப்படி வரும்?" என்று கேட்டாள் சிறுமி.
தீடிரென அவள் பேசுவதைக் கேட்ட கிளி, "அட நீ பேசக்கூட செய்வாயா?" என்று ஆச்சரியப்பட்டது.
அதற்கு பதில் சொல்லாமால், "ஆமாம் நீ ஏன் அந்த ஆயிரமாவது வார்த்தையை தேடுகிறாய்? " என்று கேட்டாள் சிறுமி.
கிளி தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.
"நான் குஞ்சாக இருக்கும்போதே மனிதர்களால் பிடிக்கப்பட்டு இந்நகரத்திற்கு கொண்டு வரப்பட்டேன் அதிலிருந்து இம்மனித மொழியே எனக்கு கற்றுத் தரப்பட்டது. இம்மனிதர்கள் பேசும் 999 வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு விட்டேன். ஆனால் ..."
"என்ன ஆனால்?"
"அந்த ஆயிரமாவது வார்த்தையை நான் அறியவே முடியவில்லை. அதை அறிந்து
கொண்டுவிட்டால் நான் என் மொழியை அறிந்து கொண்டு விடுவேன். அதன் பிறகு என் தாயோடும் இனத்தோடும் சென்று சேர்ந்துவிடுவேன்..." என்றது.
அதை சொல்லும்போதே குரல் தளுதளுக்க அக்கிளியை சிறுமி பாசத்தோடு பார்த்தாள். பிறகு கண்களில் கருணை மிதக்க வாஞ்சையுடன் அக்கிளியை மெல்ல வருடிக் கொடுத்தாள்.
அப்போது அந்த ஆயிரமாவது வார்த்தை அவள் விரல்களின் வழியே மெல்ல தன்னுள் ஊடுருவதை கிளி உணர்ந்து கொண்டது.
கிளிக்கு தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டது. அது சந்தோசத்துடன் 'கீ ... கீ ...' என்று கத்திக்கொண்டு அறையெங்கும் சிறகடித்து பறந்தது.
பிறகு அக்கிளி புறப்பட தயாரானபோது நன்றி சொல்வதற்காக அச்சிறுமியை திரும்பி பார்த்தது. அப்போது அவள் கண்களில் அந்த ஆயிரமாவது துளி திரண்டிருந்தது.
- நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
mUikahd xU
mò¡fijia (féijia ) bfhL¤ÂU¡»wh Áth
mò¡fijia (féijia ) bfhL¤ÂU¡»wh Áth
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
அப்புக்குட்டி என்று சொல்லிகொடுங்கப்பா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
விரல் வழியாக என்ன வார்த்தை அது??
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 999 வார்த்தைகள் அறிந்த கிளி
தோழரே உங்களுக்கு பத்து வயசு என,இந்தக்கதை சொன்னது மூலம் தெரியபடுத்துவது புரியது...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» கிளி ஜோசியம்!
» மலை கிளி
» விலங்குகளை பற்றிய தகவல்கள்
» நான் அறிந்த பரிதாபாத் !
» அறிந்த ராமன், அறியாத கதை
» மலை கிளி
» விலங்குகளை பற்றிய தகவல்கள்
» நான் அறிந்த பரிதாபாத் !
» அறிந்த ராமன், அறியாத கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|