புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
81 Posts - 67%
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
5 Posts - 4%
viyasan
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
18 Posts - 3%
prajai
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்காக...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 09, 2010 4:45 am

மனைவிக்காக...! St-hea11



அது ஒரு `குக்' கிராமம். அந்த கிராமத்தில் இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம், அதனால்தான் அது `குக்' கிராமம்.

நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி சமையலில் ராஜா, முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவார். அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார்.

`பேரன் பேத்தி எடுத்தாச்சு' இன்னும் சமைக்க போகணுமாப்பா?' என்று வாரிசுகள் தடுத்தும், "இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்'' என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.

`அம்மா, நீயாவது அப்பா கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், `அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க? அவரு போக்குலயே விடுங்க..' என்ற பதில்தான் கிடைத்தது.

அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறை யாவது வந்து பார்த்து செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப் பற்றி அவர் யாரிடமும் குறை சொல்வதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்து விட்டு காலையில் தான் வீட்டுக்கு வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அனலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.

மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகி விட்டது. ``என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?'' பதறினாள்.

``அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்.''

``சுடு தண்ணி வக்கிறேன்''

``எதுக்கு... அடி போடி பைத்திய காரிச்சி... கம்மாயில போயி குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வராக்காப்பி போட்டுத் தாரியா...?''

``ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்... என்றபடி கையை ஊன்றி எழுந்த உமை யாளை பார்த்து ``கிழவிக்கு வயசாயி டுச்சு... கருப்பட்டியில காபித் தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே'' என்றார் கிண்டலாக.

``ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட... நினைப்புல இருக்கட்டும்...'' என்று கிண்டலடித்து விட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.

காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. `ஏய்... போனை எடு... பிள்ளைகளா இருக்கும்'' என்றார்.

``அலோ யாரு...? '' என்ற உமையாள், "இருக்காக.... இந்தா குடுக்கிறேன்'' என்றபடி

``இநëதாங்க உங்களுக்குத்தான்'' என்று அழைத்தாள்.

``அடடே... தம்பியா... அப்படியா... இப்பதான் வந்தேன். ஆமா, அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன்... என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துடுவேன்... ஆகட்டும் தம்பி...'' என்றபடி போனை வைத்தார்.

``யாருங்க போனுல?''

``அட நம்ம சவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விசேஷமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்.''

``பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல''

``என்ன உனக்கு பேரப்பிள்ளைங்கிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னைக்கே பஸ் ஏத்தி விடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா.. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே...''

``ம்க்கும்... கோபம் மட்டும் வந்துடும். என்னமோ செய்ங்க சாமி...''

நம் பிடியில் காலம் இல்லை. காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது நெஞ்சடைப்பில் உமையாள் இறந்து விட்டாள்.

அவரைப் போய் கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒரு புறம் அடக்கம் செய்து விட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்வரிடம் சென்று ``நான் சமைக்கிறேன்'' என்றவரிடம், ``என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்தை செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம... என்ன மாமா இதெல்லாம்...?''

``ஊருக்கே சாப்பாடு போட்டேன். ஆனா உங்க அத்தைக்கு என் கையால ஒரு நாளு கூட சமைச்சுப்போட்டதில்லை. அப்படி ஒரு ஆசையோட ஒருநாள் நான் சமையல்கட்டுப்பக்கம் போனப்ப உங்க அத்தை தடுத்திட்டாப்பா. நான் இருக்கிற வரைக்கும் என் கையால தான் உங்களுக்கு சாப்பாடுன்னு சொல்லிட்டா. இப்ப உங்க அத்தை இல்ல. அவளோட இந்த கடைசி பயணத்திலாவது என் சமையலை உங்க அத்தைக்காக செய்றதை ஒரு தவமா நினைக்கிறேன். என்னை தடுக்காதப்பா...'' -சொல்லிய கருப்பையா குலுங்கியபடியே சமையல் ஆளிடம் இருந்து கரண்டியை வாங்கிக் கொண்டார்.



மனைவிக்காக...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 6:38 am

super மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக