Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் காதலி
Page 1 of 1
கணவனின் காதலி
கடந்த ஒரு வாரமாகவே சிந்துஜா கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள். வழக்கமாக அலுவலகம் செல்லும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி மாலையிலும் நேரம் கழித்தே வீடு திரும்புகிறான், அவள் கணவன் திவாகர்.
கேட்டால் அலுவலகத்தில் `ஆடிட்' என்கிறான்.
அவனது பொய் இரண்டே நாளில் வெளுத்து விட்டது.
தன் கணவருடன் வேலை பார்க்கும் தனபாலை சிந்துஜா தற்செயலாக சந்தித்தபோது "ஆடிட்டா... அப்படியொன்றும் இல்லையே'' என்று உண்மையைக் கூறி விட்டார், அவர்.
தனக்கும் திவாகருக்கும் கல்யாணமாகி கடந்த ஓராண்டில் நுழையாத இந்த பொய் இப்போது எதற்கு? எதற்காக இந்த ஆடிட் நாடகம்?
போதாக் குறைக்கு சிந்துஜாவிடம் எதுவும் சொல்லாமலேயே இரண்டு நாள் முன்பு வங்கியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் வேறு எடுத்திருந்தான், திவாகர்.
அவள் கேட்டதற்கு, நண்பன் ஒருவனுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது என்று ஏதேதோ கூறிச் சமாளித்து விட்டான்.
"ஒன்றன் பின் ஒன்றாக இது மற்றொரு பொய். ஆனால் ஏன்... எதற்கு?''
ஒன்றும் புரியாமல் சிந்துஜா குழம்பித் தவித்த வேளையில், அவளின் நெருங்கிய கல்லூரித் தோழி கல்பனா எதிர்பாராமல் அவளைத் தேடி வந்து சொன்ன ஒரு சேதி அவளை அதிரப் பண்ணி விடடது.
"அடையாறு காந்திநகர் ரோட்டிலே போய்க் கிட்டிருந்தேன் சிந்து. அப்ப உன் வீட்டுக் காரரும், நல்ல சிவப்பா அழகான ஒரு பொண் ணும் ஒரு வீட்டு முன்னால பைக்ல வந்து இறங்கினாங்க. அவங்க பேசிக்கிட்டதிலிருந்து அந்தப் பொண்ணு பேரு திவ்யான்னு தெரிஞ்சது. ஏதோ பேசிக்கிட்டே ரெண்டு பேரும் அந்த வீட்டுக்குள்ளே போயிட்டாங்க''.
சட்டென்று ஏதோ பொறி தட்டினாற் போலிருந்தது, சிந்துஜாவுக்கு. "அந்தப் பொண்ணோட பேர் என்ன சொன்னே?'' என்று கேட்டாள்.
"திவ்யா''
இப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. `ஒருவேளை அந்தப் பெண்தானோ இவள்?' ஒரு கணம் திகைத்தவள், அந்த திவ்யா வீட்டின் கதவு எண், அடையாளத்தைத் தோழியிடம் நன்கு கேட்டு தெரிந்து கொண்டாள்.
"இந்தக் காலத்தில் எந்த ஆம்பிளையையும் நம்ப முடியாது சிந்து. கொஞ்சம் கவனமாயிரு'' என்று எச்சரிப்பது போல் சொல்லிவிட்டு கிளம்பினாள், தோழி கல்பனா.
அவள் சென்று வெகு நேரமான பின்பும், வேறு எந்த சிந்தனையும் ஓடவில்லை, சிந்துஜாவுக்கு.
`அந்த திவ்யா சேலத்திலிருந்து சென்னைக்கு எப்போது வந்தாள்? அவளை என் கணவர், எங்கு எப்போது சந்தித்தார்? ஒருவேளை நேரத்தோடு இவர் ஆபீஸ் கிளம்பியது அவளை சந்திக்கத்தானா? அந்த பத்தாயிரம் ரூபாயைக் கூட அவளுக்குத்தான் இவர் கொடுத்திருப்பாரா?'
எல்லாமே சந்தேகத்தைத் தூண்டும் கேள்விகள் தான்! எனினும் தன் கணவர் தனக்குத் துரோகம் செய்து விடுவார் என்று சிந்துஜாவால் நினைக்க இயலவில்லை. அதேசமயம் திவ்யாவின் விஷயத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் சரியென்று தோன்றவில்லை.
அப்படியென்றால் இதில் என்ன முடிவு எடுப்பது? அவளுக்குள் குழப்பம்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
வழக்கமாக விடுமுறை தினமென்றால் வீட்டை விட்டு எங்கும் செல்லாத திவாகர் அன்று காலை பதினொரு மணிக்கெல்லாம் நண்பன் ஒருவனைப் பார்த்து வருவதாக வெளியே கிளம்பி விட்டான்.
சிந்துஜாவுக்கு சந்தேகம். `திவ்யாவைச் சந்திக்கத்தான் அவன் செல்கிறானா?'
கணவன் பைக்கில் கிளம்பிய சிறிது நேரத்தில் வீட்டைப் பூட்டி ஆட்டோ ஒன்றைப் பிடித்து நேராக அடையாறு காந்திநகர் போகச் சொன்னாள்.
அங்கே கல்பனா குறிப்பிட்ட அந்த வீட்டின் எதிரே இறங்கி முகவரி சரி பார்த்தவள், மெல்ல வாயிற்படியேறி கதவருகே சென்றாள்.
அப்போது உள்ளேயிருந்து ஒரு குரல். சந்தேகமேயில்லை. அது அவள் கணவன் திவாகரின் குரலே தான்!
"வேண்டாம் திவ்யா. ஆஸ்பத்திரியிலே நீ இருந்தப்ப சீக்கிரமா ஆபீசுக்கு கிளம்பி உன்னைப் பார்க்க வந்ததிலே ஏற்கனவே என் மனைவி சந்தேகத்தோட இருக்கா. அவ சந்தேகம் மேலும் அதிகரிக்கும்படியா நாம எதையும் இப்ப அவகிட்ட சொல்லக் கூடாது''.
"ஏங்க... எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்து எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க. உங்க குடும்பத்திலே என்னால குழப்பம் வரக்கூடாதுங்க. உங்க மனைவி கிட்ட உண்மையைச் சொல்லிட்டா அவங்க ஏன் சந்தேகப்படப் போறாங்க?''
இப்போது பேசியதுதான் திவ்யாவோ? பதிலுக்கு மீண்டும் திவாகரின் குரல்.
"இல்லே திவ்யா. நீயும், நானும் முந்தி காதலிச்ச விஷயம் ஏற்கனவே என் மனைவிக்குத் தெரியும். நானே அவகிட்ட சொல்லியிருக்கேன். நாம எதையாவது சொல்லி நீதான் திவ்யான்னு தெரிஞ்சா அவ்வளவுதான்... நம்ம பழைய காதல் மீண்டும் தொடருதுன்னு நிச்சயம் அவ நம்பிடுவா. பிறகு அவ என்ன முடிவு எடுப்பான்னு சொல்ல முடியாது. ஒண்ணு மட்டும் நிச்சயம். என் சிந்துவை விட்டு ஒருநாள் கூட என்னால வாழ முடியாது.''
கணவன் தன்மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்துப் பூரித்துப் போனாள், சிந்துஜா. அதற்கு மேலும் வெளியே நிற்காமல் கதவைத்தட்டி, "நான் உள்ளே வரலாமா?'' குரல் கொடுத்தாள். சற்றும் எதிர்பாராமல் அந்த இடத்தில் தன் மனைவியைக் கண்டு திகைத்துப் போனான் திவாகர். "வா சிந்து. நீ எப்படி இங்கே'' தடுமாறினான்.
இனி அவளிடம் அவன் எதை மறைக்க முடியும்?
"இந்த திவ்யாவுக்கும், எனக்குமிருந்த காதல் நிறைவேறாம இவ தாய்மாமன் ரங்கத் துரையை இவ கல்யாணம் செய்து கிட்டதை ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கேன் சிந்து. ஆனா அந்த ரங்கத்துரை ஒரு மோசடிக் குற்றத்திலே அரெஸ்ட்டாகி இப்ப ஜெயில்லே இருக்கான். அஞ்சு வருஷ சிறைவாசம்''.
திகைப்புடன் சிந்துஜா திவ்யாவைப் பார்க்க, "ஆமாங்க. என் கணவர் இப்ப ஜெயில்லேதான் இருக்கார். வேலூர் ஜெயில்லே'' என்றாள், திவ்யா சோகத்தை மூடி மறைத்து.
தொடர்ந்து அவளே பேசினாள்.
"அவர் ஜெயிலுக்குப் போன அவமானம் தாங்காம நானும் அம்மாவும் ஒரு மாசம் முந்தி இங்கே சென்னைக்கு வந்தோங்க. சேலத்தில் இருந்து வேலை மாறுதலாகி நீங்களும் இங்கே சென்னைக்கு வந்தது எனக்கும் தெரியாது. பொழப்புக்காக வேலை தேடி அலைஞ் சப்ப போனவாரம் தற்செயலா உங்க கணவர் என்னைப் பார்த்தார். ஜ×ரத்தோட அனிமிக்கா இருந்த என்னை நர்ஸிங் ஹோமில் சேர்த்து காலையும், சாயங்காலமும் வந்து பார்த்துக் கிட்டார். ஆஸ்பத்திரி பில் பத்தாயிரம் கட்டி சுகமான பின் ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார். சந்தர்ப்பம் பார்த்து இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லக் காத்திருந்தோம். அதுக்குள்ள சர்ப்ரைசா நீங்களே வந்து எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டீங்க''.
திவ்யா நிறுத்த "எங்கே எங்க பழைய காதல் மீண்டும் தொடருதுன்னு நீ தப்பா புரிஞ்சுக்கிடுவியோன்னுதான் எங்களுக்குப் பயம் என்று தயங்கியபடியே சொன்னான், திவாகர்''.
"நீங்க முதல்லேயே உண்மையைச் சொல்லியிருந்தா நான் ஏங்க தப்பா நினைக்கப் போறேன்? உங்க பொய்தான் உங்க மேலே சந்தேகப்பட வச்சது'' என்றாள், சிந்துஜா.
"ஆமாங்க. நீங்க வந்ததும் ஒரு பிரளயமே வெடிக்கப் போகுதுன்னு நினைச்சேன். உங்களுக்குப் பெரிய மனசு'' திவ்யாவும் நெகிழ்ந்தாள்.
பைக்கில் அவர்கள் விடைபெற்று புறப்பட்டபோது கணவனின் இடுப்பை சற்று அழுத்தமாகவே பிடித்துக் கொண்டாள் சிந்துஜா.
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கனவே காதலி! கனவை காதலி!
» ஒரு கணவனின் வாக்குமூலம்
» கணவனின் கடைசி ஆசை!!
» ஒரு கணவனின் புலம்பல்!
» கணவனின் பார்வையில்
» ஒரு கணவனின் வாக்குமூலம்
» கணவனின் கடைசி ஆசை!!
» ஒரு கணவனின் புலம்பல்!
» கணவனின் பார்வையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|