Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!
Page 1 of 1
மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!
Mohd Najib bin Tun Abdul Razak
Prime Minister of Malaysia
Prime Minister of Malaysia
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் பிரதமராக வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். இப்போது பிரதமர் ஆகிவிட்டீர்கள். விரும்பாவிட்டாலும், உங்களுக்கு வாழ்த்து கூறிக்கொள்கிறேன். அதே நேரத்தில் நான் விரும்பும் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சில கருத்துகளையும் முன்வைக்கிறேன்.
நான் ஒரு சாமானியன்தான். என்றாலும் கருத்து, யார் சொன்னாலும், முக்கியமானதுதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
இப்போதைய நமது அரசாங்கத்தில் சில பண்புகள் இல்லை. அதைத்தான் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சட்டம்போட்டு பண்புகளை வரவழைக்க முடியாது. அதற்காக அது பற்றிப் பேசக்கூடாது என்பதுமில்லை. நன்நடத்தையை நான் எப்போதுமே வரவேற்பேன்.”மன்னிக்க”,”தயவு செய்து”,”நன்றி” போன்ற சொற்களை யாராவது சொல்லக்கேட்டால் இந்த உலகம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை என்னுள்ளத்தில் பொங்கும்.
நன் நடத்தையைச் சட்டமியற்றிச் செயல்படுத்த முடியாது. ஆனால், மக்களுக்குப் பணி செய்யும் அரசாங்க ஊழியரிடையே, நல்ல நடத்தைகளை அரசாங்கம் ஊக்குவிக்க முடியும். செய்யும் வேலையில் பெருமிதம் கொள்பவர்களாக, பிரச்னைகளுக்குத் தீர்வுகாண கூடுதல் முயற்சிகளை மேற்கொள்பவர்களாக அரசாங்க ஊழியர்கள் இருந்தால், மக்களுக்கு அந்தச் சேவையின்மீது மிகுந்த நம்பிக்கை பெருகும்.
அவப்பேறாக, அரசாங்கச் சேவையில் இந்தப் பண்பைக் காண முடிவதில்லை. இதை உணராமல், பிரதமர் அவர்களே, நீங்கள் செயல்திறன் பற்றிப் பேசி வருகிறீர்கள். தயவு செய்து, இந்தப் பண்பை நமது அரசாங்க அமைப்புகளுக்குத் திரும்பவும் கொண்டுவர சற்று முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
இன்னொன்று அமைச்சர்களும் நீங்களும் மற்றவர்களின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். இது கருணை வேண்டி அல்லது இரக்கம் வேண்டி விடுக்கப்படும் கோரிக்கை அல்ல. அதற்கும் மேலானது. எதுவானாலும் அதை மற்றவர்களின் நிலையிலிருந்து அவர்களின் கண்கொண்டு பார்க்க வேண்டும்.
1. ஆள்குறைப்பு செய்யப்பட்டதால் வேலை இழந்த ஒருவரின் மனைவியின் நிலையிலிருந்து பாருங்கள். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு அவர் படும் சிரமங்களும் இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தால் ஏழைகளுக்கும் வேலை இழந்தவர் குடும்பத்துக்கும் பயனில்லை என்று அவர் நினைக்கிறாரே அது ஏன் என்பது புரியும்.
2. நீங்கள் விடுதலை செய்த இசா கைதிகளில் தங்களின் அன்புக்குரியவர்கள் இல்லையே என்பதை நினைத்து ஏமாற்றமடைந்த இசா கைதிகளின் குடும்பத்தாரின் நிலையிலிருந்து பாருங்கள். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றும் அது, உங்களைப் பற்றி மக்கள் கொண்டுள்ள எதிர்மறை கருத்தைப் போக்குவதற்கு கைக்கொள்ளப்பட்ட அரசியல் தந்திரம் என்றும் அவர்கள் நினைப்பது ஏன் என்பது புரியும்.
3. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாத ஓர் ஆசிரியர், தங்களின் பிள்ளைகளுக்கு கணிதத்தையும் அறிவியலையும் கற்பிக்க முனைவதைக் காணும் பெற்றோரின் நிலையில் இருந்து பாருங்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அவர்கள் பிபிஎஸ்எம்ஐ- திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பது புரியும்.
4. நேரத்துடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும்போது, அந்த நிலையிலும் போலீஸ் துணையுடன் பவனி வரும் அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடம் கொடுத்து ஒதுங்க வேண்டியிருக்கும் ஒருவரின் நிலையில் உங்களைச் சற்று நிறுத்திப்பாருங்கள். அவர்களின் மனநிலை உங்களுக்குப் புரியும்.
Last edited by சிவா on Sun Apr 26, 2009 8:41 am; edited 1 time in total
Re: மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!
5. சுயேச்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் உங்களிடம் ஒரு விதமாகவம் மாற்றுக்கட்சிகளிடம் வேறு விதமாகவும் நடந்துகொள்வதைக் கண்டு வெறுப்படையும் பொதுமக்களின் நிலையில் இருந்து பாருங்கள். அவர்களின் பெரும்பாலோர் ஏன் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புரியும்.
6. வழிப்பறி கொள்ளையனிடம் பொருளைப் பறிகொடுத்த ஒருவரின் நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையின் பெற்றோரின் நிலையில், கொலையுண்டவரின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பாருங்கள். அவர்களுக்கு, அரசாங்கமும் போலீசும் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை இல்லாதிருப்பது ஏன் என்பது புரியும்.
7. சின்ன சின்ன காரியங்களுக்காக அரசாங்க அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கிறார்களே அவர்களின் நிலையிலிருந்து பாருங்கள். அரசாங்கம், திறமைக்குறைந்தவர்களை வேலைக்கு வைத்து மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குவதாக அவர்கள் நினைப்பது ஏன் என்பது புரியும்.
8. தேர்தலில் தங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படுவதைக் கண்டு, மலேசிய ஜனநாயகத்தில் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்று நினைக்கும் வாக்காளர்களின் நிலையிலிருந்து பாருங்கள். தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள் என்று கருதும் தலைவர்களைப் புறந்தள்ளும் முதல்நிலை - வடிதட்டுப்போன்றவர்கள் மக்கள் என்பதை உணர வேண்டும். ஆனால்,பிரதமர் அவர்களே, யாரையெல்லாம் வேண்டாம் என்று மக்கள் ஒதுக்கினார்களோ அவர்களை நீங்களே திரும்பவும் அமைச்சர்களாக்கியுள்ளீர்கள். பிறகு, அமைச்சரவை பற்றி மக்கள் நல்லதாக நினைக்கவில்லையே ஏன் என்று குழம்புகிறீர்கள்?
9. இங்கு தொழிலில் முதலீடு செய்ய வரும்போது சிவப்பு நாடா கெடுபிடியை எதிர்நோக்கும் அந்நிய முதலீட்டாளர் ஒருவரின் நிலையிலிருந்து பாருங்கள். அவர்கள் கூறும் குறைகளைக் காடு கொடுத்துக் கேளுங்கள்.
10. இபிஎப் சந்தாதாரர்களின் நிலையிலிருந்து பாருங்கள். பொதுப்பணம் பொறுப்பற்ற முறையில் விரயமாக்கப்படுவதைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்து போயிருப்பது ஏன் என்பது புரியும்.(ValueCap நிறுவனத்துக்கு ரிம 5 பில்லியன் கடன் வழங்கப்பட்டது. (கடந்த ஆண்டில் வருமானம் கூடியபோதும் இபிஎப், 4.5% லாப ஈவை மட்டுமே வழங்கியது ஏன் என்பது புரியவில்லை).
உங்களின் முதல் பத்து நாள்கள், மக்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. ஒரு வேளை, உங்களைச் சுற்றியிருப்பவர்கள், மக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவர்களாக இருப்பார்கள் போலும். அரசு நிர்வாகத்தில் உங்களின் முக்கிய கோட்பாடு என்ன என்பதை மக்களால் கண்டுகொள்ள முடியவில்லை. அமைச்சரவையின் அமைப்பு, “எல்லாரையும் திருப்திப்படுத்துவதைத்தான்” நீங்கள் உங்களின் முக்கிய கோட்பாடாகக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இது வேலைக்கு ஆகாது. உங்களுக்கென்று சில கோட்பாடுகளும் அமைச்சரவையின் செயல்பாட்டை அளவிடும் வழிமுறைகளும் வேண்டும்.
ஒரு நாளில் 10 நிமிடம், மலேசியாவில் உள்ள ஒரு சாதாரண குடிமகனை அழைத்துப் பேசுங்கள் (அவர்கள் ஏழைகளாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களாக, தலைமை செயல் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, போலீஸ்காரராக, ராணுவத்தினராக, சமயவாதியாக, வணிகராக-யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்).
அவர்களுடன் பேசுங்கள்.தொலைபேசியின் அந்தப் பக்கம் இருப்பவர் பிரதமர் என்று அறிந்தால் மக்கள் மிகவும் விருப்பதுடன் பேசுவார்கள். அவர்களின் கருத்துகளை, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை, அரசாங்கம் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடன் நடத்திய உரையாடலை உங்கள் வலைப்பதிவிலும் இடலாம்.
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு புதிய கொள்கைக்கான அடிப்படையை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அக்கொள்கை மலேசியர் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கும்.
6. வழிப்பறி கொள்ளையனிடம் பொருளைப் பறிகொடுத்த ஒருவரின் நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையின் பெற்றோரின் நிலையில், கொலையுண்டவரின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பாருங்கள். அவர்களுக்கு, அரசாங்கமும் போலீசும் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை இல்லாதிருப்பது ஏன் என்பது புரியும்.
7. சின்ன சின்ன காரியங்களுக்காக அரசாங்க அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கிறார்களே அவர்களின் நிலையிலிருந்து பாருங்கள். அரசாங்கம், திறமைக்குறைந்தவர்களை வேலைக்கு வைத்து மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குவதாக அவர்கள் நினைப்பது ஏன் என்பது புரியும்.
8. தேர்தலில் தங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படுவதைக் கண்டு, மலேசிய ஜனநாயகத்தில் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்று நினைக்கும் வாக்காளர்களின் நிலையிலிருந்து பாருங்கள். தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள் என்று கருதும் தலைவர்களைப் புறந்தள்ளும் முதல்நிலை - வடிதட்டுப்போன்றவர்கள் மக்கள் என்பதை உணர வேண்டும். ஆனால்,பிரதமர் அவர்களே, யாரையெல்லாம் வேண்டாம் என்று மக்கள் ஒதுக்கினார்களோ அவர்களை நீங்களே திரும்பவும் அமைச்சர்களாக்கியுள்ளீர்கள். பிறகு, அமைச்சரவை பற்றி மக்கள் நல்லதாக நினைக்கவில்லையே ஏன் என்று குழம்புகிறீர்கள்?
9. இங்கு தொழிலில் முதலீடு செய்ய வரும்போது சிவப்பு நாடா கெடுபிடியை எதிர்நோக்கும் அந்நிய முதலீட்டாளர் ஒருவரின் நிலையிலிருந்து பாருங்கள். அவர்கள் கூறும் குறைகளைக் காடு கொடுத்துக் கேளுங்கள்.
10. இபிஎப் சந்தாதாரர்களின் நிலையிலிருந்து பாருங்கள். பொதுப்பணம் பொறுப்பற்ற முறையில் விரயமாக்கப்படுவதைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்து போயிருப்பது ஏன் என்பது புரியும்.(ValueCap நிறுவனத்துக்கு ரிம 5 பில்லியன் கடன் வழங்கப்பட்டது. (கடந்த ஆண்டில் வருமானம் கூடியபோதும் இபிஎப், 4.5% லாப ஈவை மட்டுமே வழங்கியது ஏன் என்பது புரியவில்லை).
உங்களின் முதல் பத்து நாள்கள், மக்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. ஒரு வேளை, உங்களைச் சுற்றியிருப்பவர்கள், மக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவர்களாக இருப்பார்கள் போலும். அரசு நிர்வாகத்தில் உங்களின் முக்கிய கோட்பாடு என்ன என்பதை மக்களால் கண்டுகொள்ள முடியவில்லை. அமைச்சரவையின் அமைப்பு, “எல்லாரையும் திருப்திப்படுத்துவதைத்தான்” நீங்கள் உங்களின் முக்கிய கோட்பாடாகக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இது வேலைக்கு ஆகாது. உங்களுக்கென்று சில கோட்பாடுகளும் அமைச்சரவையின் செயல்பாட்டை அளவிடும் வழிமுறைகளும் வேண்டும்.
ஒரு நாளில் 10 நிமிடம், மலேசியாவில் உள்ள ஒரு சாதாரண குடிமகனை அழைத்துப் பேசுங்கள் (அவர்கள் ஏழைகளாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களாக, தலைமை செயல் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, போலீஸ்காரராக, ராணுவத்தினராக, சமயவாதியாக, வணிகராக-யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்).
அவர்களுடன் பேசுங்கள்.தொலைபேசியின் அந்தப் பக்கம் இருப்பவர் பிரதமர் என்று அறிந்தால் மக்கள் மிகவும் விருப்பதுடன் பேசுவார்கள். அவர்களின் கருத்துகளை, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை, அரசாங்கம் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடன் நடத்திய உரையாடலை உங்கள் வலைப்பதிவிலும் இடலாம்.
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு புதிய கொள்கைக்கான அடிப்படையை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அக்கொள்கை மலேசியர் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கும்.
மலேசியாஇன்று
- டிம்மி சேய்
- டிம்மி சேய்
Similar topics
» டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
» நான் டைவ் அடிச்சுருக்கணும்: மனம் திறந்த தோனி
» என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
» நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
» நான் டைவ் அடிச்சுருக்கணும்: மனம் திறந்த தோனி
» என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
» நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|