Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புற இலக்கியம் - பாலின வேறுபாடு
2 posters
Page 1 of 1
நாட்டுப்புற இலக்கியம் - பாலின வேறுபாடு
இயற்கையின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று மனித இனமாகும். பன்னெடுங்காலமாகப் பரிணமித்துச் செழித்து வளர்ந்ததன் விளைவாக இன்றைய வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். இயற்கைப் பொருட்கள் அனைத்தும் இணை எதிர்த் தன்மை உடையனவாக அமைந்துள்ளதாகவும் அவற்றிற்கு இடையிலான உறவுகளும் முரண்களும் இயக்கத்திற்குக் காரணமாகின்றன என்றும் அறிவியல் கட்டமைக்கிறது. ஆண் பெண் என்பது இணைஎதிர் தன்மை உடையது என்ற புரிதலின் அடிப்படையில் மனித சமூகம் சார்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் இணை எதிர் என்பதனை சமமான எதிரெதிர் குணமும் பண்பும் அமைப்பும் உடையது எனக் கொள்ளலாம். அந்தச் சமமான தன்மை வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் இன்றைய நிலையில் மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டடுள்ளது என்பதைக் கருதுகோளாகக் கொண்டு இச்சிறு ஆய்வு அமைகிறது.
ஆண், பெண் என்பதை பால், பாலினம் என்கிறோம். சமுதாயத்தில் பாலினம் பண்பாட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் ஆண், பெண் என்று உருவாக்கப்பட்டாலும் உயர்வு, தாழ்வு என்ற முரண்களிலேயே இருக்கின்றதை - இயங்குகின்றதை காணலாம். ''நாட்டுப்புறவியலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ, அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்'' என்பர் ஒளரலியா எம். எஸ்பினோசா (மேற்கோள்: சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப.3) இக்கூற்றுக்கு ஏற்ப மனித இனித சிலவற்றைப் பொதுவாக அனுபவித்து, கற்று, பயிற்சியால் பெற்றிருந்தாலும் கூட, ஆண் பாலினம் உடல் வலிமை உடையது என்ற கருத்தாக்கமே நாட்டுப்புறவியலிலும், பெண் பாலினம் வலிமையால் குன்றியது எனவுமே வழங்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு சிதைந்து தந்தை வழிச் சமூக அமைப்பு உருவான சூழலின் பாலின மரபிலும் மாற்றமும் வேறுபாடும் ஏற்படத் தொடங்கின எனலாம். இம்மாற்றம் பொது வாழ்க்கை முறையில் மட்டுமில்லாமல் கலை இலக்கியங்களிலும் காலூன்றியது எனலாம்.
இதற்குச் சான்றாக பெண்களின் கற்பு, மாத விலக்கு தொடர்பான மதிப்பீடுகள் நாட்டார் கலை இலக்கிய நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள விதத்தினையும் அறிய முடிகிறது.
கலைகள் என்பவை மனித சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் ஊடகங்களாக அமைபவையாகும். சமூக பண்பாட்டினை வெளிக்காட்டி நிற்பவை கலைகள் எனலாம். இவற்றுள் நிகழ்த்து கலை உடல்மொழி மற்றும் உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. உடல் அமைப்பில் வலுவுள்ளவர்களாக ஆண்கள் சித்தரிக்கப்பட்டதாலேயே உடல் உழைப்பை செலுத்தி நிகழ்த்தும் கலைகளிலும் நெடுநேரம் நிகழ்த்தும் கலைகளிலும் பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர். இன்னும் சில கலைகளில் பெண்கள் தவிர்த்து ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பதையும் காண முடியும்.
இவ்வாறு சமுதாயத்தில் நிகழ்த்து கலைகளில் மட்டுமில்லாது வாழ்க்கை முறையிலும் பாலின வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தபொழுது தாலாட்டுப் பாடப்பெறுகின்றன. பெண்களே இதனை செய்கின்றனர். பாடலுடன் கூடிய நிகழ்த்து கலையாகவே நடத்தப்பெறும் இவை பெண்களுக்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது. பாடப்பெறும் சூழலும் பாடல் பொருளும் பாலின வேறுபாட்டைக் காட்டுவதாகவே அமைகின்றன.
''கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை''
எனும் தொல்காப்பிய நூற்பா இறந்தோருக்காக அழுதுபுலம்பும் வழக்கத்தை (ஒப்பாரியை)ச் சுட்டுகின்றது. ஆனால் இதை யார் பாடவேண்டும் (ஆண்/பெண்) என்ற வரையறை தொல்காப்பியத்தில் இல்லை. பொதுவான வழக்காகவே இது காட்டப்படுகிறது. ஆனால் இன்று ஒப்பாரி வழக்கம் பெண்மீதே சுமத்தப்படுகின்றது.
கணவனை இழந்த பெண் விதவை. கைம்பெண் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் மனதின் ஆசைகளையும் உணர்வுகளையும் தவிர்க்கவியலாது என்பது உடற்கூறு இயல் உண்மையாகும்.
தச்சன் உலை நெருப்பு
தணியும் ஒரு சாமம் - என்
தங்க மடி நெருப்பு
தணிவது எக்காலம்?
என ஒரு பெண் புலம்புவதாக அமையும் இப்பாடல் பெண்ணின் மன உணர்வு (காமம்) வெளிப்படுகிறது.
ஆண், பெண் என்பதை பால், பாலினம் என்கிறோம். சமுதாயத்தில் பாலினம் பண்பாட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் ஆண், பெண் என்று உருவாக்கப்பட்டாலும் உயர்வு, தாழ்வு என்ற முரண்களிலேயே இருக்கின்றதை - இயங்குகின்றதை காணலாம். ''நாட்டுப்புறவியலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ, அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்'' என்பர் ஒளரலியா எம். எஸ்பினோசா (மேற்கோள்: சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப.3) இக்கூற்றுக்கு ஏற்ப மனித இனித சிலவற்றைப் பொதுவாக அனுபவித்து, கற்று, பயிற்சியால் பெற்றிருந்தாலும் கூட, ஆண் பாலினம் உடல் வலிமை உடையது என்ற கருத்தாக்கமே நாட்டுப்புறவியலிலும், பெண் பாலினம் வலிமையால் குன்றியது எனவுமே வழங்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு சிதைந்து தந்தை வழிச் சமூக அமைப்பு உருவான சூழலின் பாலின மரபிலும் மாற்றமும் வேறுபாடும் ஏற்படத் தொடங்கின எனலாம். இம்மாற்றம் பொது வாழ்க்கை முறையில் மட்டுமில்லாமல் கலை இலக்கியங்களிலும் காலூன்றியது எனலாம்.
இதற்குச் சான்றாக பெண்களின் கற்பு, மாத விலக்கு தொடர்பான மதிப்பீடுகள் நாட்டார் கலை இலக்கிய நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள விதத்தினையும் அறிய முடிகிறது.
கலைகள் என்பவை மனித சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் ஊடகங்களாக அமைபவையாகும். சமூக பண்பாட்டினை வெளிக்காட்டி நிற்பவை கலைகள் எனலாம். இவற்றுள் நிகழ்த்து கலை உடல்மொழி மற்றும் உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. உடல் அமைப்பில் வலுவுள்ளவர்களாக ஆண்கள் சித்தரிக்கப்பட்டதாலேயே உடல் உழைப்பை செலுத்தி நிகழ்த்தும் கலைகளிலும் நெடுநேரம் நிகழ்த்தும் கலைகளிலும் பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர். இன்னும் சில கலைகளில் பெண்கள் தவிர்த்து ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பதையும் காண முடியும்.
இவ்வாறு சமுதாயத்தில் நிகழ்த்து கலைகளில் மட்டுமில்லாது வாழ்க்கை முறையிலும் பாலின வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தபொழுது தாலாட்டுப் பாடப்பெறுகின்றன. பெண்களே இதனை செய்கின்றனர். பாடலுடன் கூடிய நிகழ்த்து கலையாகவே நடத்தப்பெறும் இவை பெண்களுக்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது. பாடப்பெறும் சூழலும் பாடல் பொருளும் பாலின வேறுபாட்டைக் காட்டுவதாகவே அமைகின்றன.
''கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை''
எனும் தொல்காப்பிய நூற்பா இறந்தோருக்காக அழுதுபுலம்பும் வழக்கத்தை (ஒப்பாரியை)ச் சுட்டுகின்றது. ஆனால் இதை யார் பாடவேண்டும் (ஆண்/பெண்) என்ற வரையறை தொல்காப்பியத்தில் இல்லை. பொதுவான வழக்காகவே இது காட்டப்படுகிறது. ஆனால் இன்று ஒப்பாரி வழக்கம் பெண்மீதே சுமத்தப்படுகின்றது.
கணவனை இழந்த பெண் விதவை. கைம்பெண் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் மனதின் ஆசைகளையும் உணர்வுகளையும் தவிர்க்கவியலாது என்பது உடற்கூறு இயல் உண்மையாகும்.
தச்சன் உலை நெருப்பு
தணியும் ஒரு சாமம் - என்
தங்க மடி நெருப்பு
தணிவது எக்காலம்?
என ஒரு பெண் புலம்புவதாக அமையும் இப்பாடல் பெண்ணின் மன உணர்வு (காமம்) வெளிப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாட்டுப்புற இலக்கியம் - பாலின வேறுபாடு
இன்றைய சூழலில் ஒரு பெண் தன் காதல் உணர்வினை உடல் தேவையை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் வாய்ப்பும் சூழலும் இருக்கின்றனவா என்பது ஆராயத் தக்கதாகும் இதுபோன்று தான் கற்பு கோட்பாடும் ஆகும்.
பெண்ணின் கற்பு தீக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதை சமூக இலக்கிய வரலாற்றின் வழி அறியக் கிடைக்கிறது. தீயின் தன்மையினை பெண் கற்புக்கு ஏற்பக் கூறும் விதமும் பாலின ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
இதனோடு கூட ஆணின் வழியாகத் துன்பங்கள் அனுபவிப்பது ஒருபுறமாகவும் மற்றொரு புறமாக பெண் வழியாகவும் துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. கணவன் இறந்தபின்பு பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலாமலும், புகுந்த வீட்டில் மாமியாரின் கொடுமைக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இவ்வாறு கருவறை தொடங்கி கல்லறை வரையிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன.
''ஆத்தோட போற அத்த
அரிசிக் கணக்கச் சொல்லிப் போங்க''
என்பது மாதிரியாக அமையும் வரிகளுள் பெண் தன் சக பாலினத்திற்குள்ளேயே முரண்பட்டு நிற்பதைக் காண முடிகிறது.
பெண், தன் இழிநிலைக்குக் காரணமாக அமையும் பெற்றோரையும் சுற்றத்தாரையும் பழி தூற்றுவதாக அதிகமான பாடல்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் தன்னைச் சார்ந்த ஆணினத்தையே பழி தூற்றுகின்றனர்.
தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானும் கண் குருடோ........?
சேலைக்கு நூலெடுத்த
சேனியனும் கண் குருடோ.....?
பஞ்சாங்கம் பார்த்துக் சொன்ன
பார்ப்பானும் கண் குருடோ.....?
எனத் தன்னுடைய நிலைக்கு ஆணாதிக்கமே காரணம் என்னும் கருத்து நிலை பாடலின் வரிகள் மூலம் வெளிப்படுவதை அறிய முடிகிறது. குறி, கோடங்கி, சோதிடம், நல்லநேரம், சகுனம் போன்ற நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் ஆணின் மூலமாகப் பெண்ணுக்கு வலுவில் திணிக்கப்பட்டு, அதைக் கட்டாயம் பெண் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் மரபினையும் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிக் கொணர்கின்றன.
நாட்டுப்புற மக்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வில் நிகழ்வில் பாலின வேறுபாடுகள் மிகுந்தே காணப்படுகின்றன. இவ்வேறுபாட்டினைப் போக்கும் தன்மை உடைய பாலின சமத்துவம் அல்லது மாற்று பாலின மரபு தோன்ற வேண்டும்.
இன்றைய தமிழகச் சூழலில் பண்பாட்டு படையெடுப்புகள் தொடர்கிற நிலையிலும் நாட்டுப்புற கலைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காணமுடியும். தப்பாட்டம் என்பது சாதிய அடிப்படையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பின்பற்றப்படுவதால் இழிவாகக் கருதப்படுகிறது. இதற்கு அந்த கருவியின் செய்முறையும் அதை இசைக் கருவியாகப் பயன்படுத்தும் சடங்கும் (சாவு) பயன்படுத்தும் மக்களின் பிறப்பு குறித்து கூறப்பட்ட கருத்துக்களும் காரணமாகின்றன. மாறாக, இக்காலத்தில் நிகழ்த்து கலை இசைக்கருவி எனும் நிலையில் இதர சாதியினரும் பழகி வருகின்றனர். குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளர்இனத்தவர் பறையர்களிடமிருந்து இக்கலையினைக் கற்றுக்கொள்கின்றனர். அதுபோலச் சில சாதியரிடம் மட்டுமே காணப்படும் ஆட்டம், பாடல்கள், ஒப்பனைகள், கலைகள் எனும் நிலைக்கு வரும்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையினைக் காணமுடிகிறது. காட்டாக தேவராட்டம் என்பது குறிப்பிட்ட சாதியார் (கம்பளத்து நாயக்கர்) ஆடுகிற ஆட்டமாக இருந்தாலும் கலை என்ற நிலையில் பிறரும் அதை பயின்று ஆடுவதைக் காணலாம். ஆனால் இவ்வாட்டங்களில் பெண்களின் பங்கெடுப்பு இல்லை. அதாவது இங்கு ஆண் பெண் பாலின வேறுபாடே பின்பற்றப்படுகிறது.
கலைகள் எனும் நிலையில் நாட்டுப்புற ஆடல்கள், பாடல்கள் பொதுமைத் தன்மை உடையனவாயிருந்தாலும் கலைஞர்கள் என்ற நிலைக்கு வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ஆண் பெண் வேறுபாடு காணப்படுகிறது. இன்றும் கூட நாடகம், கரகம் போன்ற கலைகளில் பறையர், சக்கிலியர் போன்ற இனத்தைச் சேர்ந்த பெண்களே கலைஞர்களாக உள்ளனர். காரணம் சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் இதுபோன்ற கலைகள் செவ்வியல் தன்மை உடையதாகப் பார்க்கப்படுவதில்லை. மேலும் இரண்டாம்பட்சமான பாலினமாக பார்க்கும் நிலையாகும் ( ஊதியம் பெண் கலைஞர்களே அதிகமாக பெறுகின்றனர் என்றபோதிலும் கூட இவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுகிறார்கள்.
இன்று கலை இரவுகளில் தப்பாட்டம் அனைத்துச் சாதியினரும் ஆடுவது போலவே பெண்களும் ஆடும் நிலை தோன்றியுள்ளது. அதாவது சாதி மற்றும் பாலின வேறுபாடு மறைந்து அனைவரும் நிகழ்த்து கலையாக இது மாறியுள்ளது. பாலின மாற்று மரபு, நிகழ்த்து கலைகளின் சில அம்சங்களை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றது என புரிந்து கொள்ள வேண்டும்.
காலந்தோறும் பெண் பாலினம் தாம் கற்றுக்கொண்டவைகளை பாடமாக்கிக் கொண்டு வந்து இன்றைய சூழலில் மாற்று மரபினை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது எனலாம். இன்று நம்மிடம் உள்ள கலை வடிவங்களில் உள்ள ஆண் பாலின மரபினை மறுப்பதாக வேலி மீறுவதாகவோ பெண் பாலின மரபு தோற்றுவிக்கப்பட்டாலும் வரவேற்கத்தக்கதுதான். ''இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்'' என்ற கருத்தை எல்லா தளங்களிலும் முன் வைத்து படைப்பையும் ஆய்வையும் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது.
பெண்ணின் கற்பு தீக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதை சமூக இலக்கிய வரலாற்றின் வழி அறியக் கிடைக்கிறது. தீயின் தன்மையினை பெண் கற்புக்கு ஏற்பக் கூறும் விதமும் பாலின ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
இதனோடு கூட ஆணின் வழியாகத் துன்பங்கள் அனுபவிப்பது ஒருபுறமாகவும் மற்றொரு புறமாக பெண் வழியாகவும் துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. கணவன் இறந்தபின்பு பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலாமலும், புகுந்த வீட்டில் மாமியாரின் கொடுமைக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இவ்வாறு கருவறை தொடங்கி கல்லறை வரையிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன.
''ஆத்தோட போற அத்த
அரிசிக் கணக்கச் சொல்லிப் போங்க''
என்பது மாதிரியாக அமையும் வரிகளுள் பெண் தன் சக பாலினத்திற்குள்ளேயே முரண்பட்டு நிற்பதைக் காண முடிகிறது.
பெண், தன் இழிநிலைக்குக் காரணமாக அமையும் பெற்றோரையும் சுற்றத்தாரையும் பழி தூற்றுவதாக அதிகமான பாடல்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் தன்னைச் சார்ந்த ஆணினத்தையே பழி தூற்றுகின்றனர்.
தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானும் கண் குருடோ........?
சேலைக்கு நூலெடுத்த
சேனியனும் கண் குருடோ.....?
பஞ்சாங்கம் பார்த்துக் சொன்ன
பார்ப்பானும் கண் குருடோ.....?
எனத் தன்னுடைய நிலைக்கு ஆணாதிக்கமே காரணம் என்னும் கருத்து நிலை பாடலின் வரிகள் மூலம் வெளிப்படுவதை அறிய முடிகிறது. குறி, கோடங்கி, சோதிடம், நல்லநேரம், சகுனம் போன்ற நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் ஆணின் மூலமாகப் பெண்ணுக்கு வலுவில் திணிக்கப்பட்டு, அதைக் கட்டாயம் பெண் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் மரபினையும் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிக் கொணர்கின்றன.
நாட்டுப்புற மக்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வில் நிகழ்வில் பாலின வேறுபாடுகள் மிகுந்தே காணப்படுகின்றன. இவ்வேறுபாட்டினைப் போக்கும் தன்மை உடைய பாலின சமத்துவம் அல்லது மாற்று பாலின மரபு தோன்ற வேண்டும்.
இன்றைய தமிழகச் சூழலில் பண்பாட்டு படையெடுப்புகள் தொடர்கிற நிலையிலும் நாட்டுப்புற கலைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காணமுடியும். தப்பாட்டம் என்பது சாதிய அடிப்படையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பின்பற்றப்படுவதால் இழிவாகக் கருதப்படுகிறது. இதற்கு அந்த கருவியின் செய்முறையும் அதை இசைக் கருவியாகப் பயன்படுத்தும் சடங்கும் (சாவு) பயன்படுத்தும் மக்களின் பிறப்பு குறித்து கூறப்பட்ட கருத்துக்களும் காரணமாகின்றன. மாறாக, இக்காலத்தில் நிகழ்த்து கலை இசைக்கருவி எனும் நிலையில் இதர சாதியினரும் பழகி வருகின்றனர். குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளர்இனத்தவர் பறையர்களிடமிருந்து இக்கலையினைக் கற்றுக்கொள்கின்றனர். அதுபோலச் சில சாதியரிடம் மட்டுமே காணப்படும் ஆட்டம், பாடல்கள், ஒப்பனைகள், கலைகள் எனும் நிலைக்கு வரும்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையினைக் காணமுடிகிறது. காட்டாக தேவராட்டம் என்பது குறிப்பிட்ட சாதியார் (கம்பளத்து நாயக்கர்) ஆடுகிற ஆட்டமாக இருந்தாலும் கலை என்ற நிலையில் பிறரும் அதை பயின்று ஆடுவதைக் காணலாம். ஆனால் இவ்வாட்டங்களில் பெண்களின் பங்கெடுப்பு இல்லை. அதாவது இங்கு ஆண் பெண் பாலின வேறுபாடே பின்பற்றப்படுகிறது.
கலைகள் எனும் நிலையில் நாட்டுப்புற ஆடல்கள், பாடல்கள் பொதுமைத் தன்மை உடையனவாயிருந்தாலும் கலைஞர்கள் என்ற நிலைக்கு வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ஆண் பெண் வேறுபாடு காணப்படுகிறது. இன்றும் கூட நாடகம், கரகம் போன்ற கலைகளில் பறையர், சக்கிலியர் போன்ற இனத்தைச் சேர்ந்த பெண்களே கலைஞர்களாக உள்ளனர். காரணம் சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் இதுபோன்ற கலைகள் செவ்வியல் தன்மை உடையதாகப் பார்க்கப்படுவதில்லை. மேலும் இரண்டாம்பட்சமான பாலினமாக பார்க்கும் நிலையாகும் ( ஊதியம் பெண் கலைஞர்களே அதிகமாக பெறுகின்றனர் என்றபோதிலும் கூட இவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுகிறார்கள்.
இன்று கலை இரவுகளில் தப்பாட்டம் அனைத்துச் சாதியினரும் ஆடுவது போலவே பெண்களும் ஆடும் நிலை தோன்றியுள்ளது. அதாவது சாதி மற்றும் பாலின வேறுபாடு மறைந்து அனைவரும் நிகழ்த்து கலையாக இது மாறியுள்ளது. பாலின மாற்று மரபு, நிகழ்த்து கலைகளின் சில அம்சங்களை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றது என புரிந்து கொள்ள வேண்டும்.
காலந்தோறும் பெண் பாலினம் தாம் கற்றுக்கொண்டவைகளை பாடமாக்கிக் கொண்டு வந்து இன்றைய சூழலில் மாற்று மரபினை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது எனலாம். இன்று நம்மிடம் உள்ள கலை வடிவங்களில் உள்ள ஆண் பாலின மரபினை மறுப்பதாக வேலி மீறுவதாகவோ பெண் பாலின மரபு தோற்றுவிக்கப்பட்டாலும் வரவேற்கத்தக்கதுதான். ''இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்'' என்ற கருத்தை எல்லா தளங்களிலும் முன் வைத்து படைப்பையும் ஆய்வையும் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது.
வே. சிவக்குமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாட்டுப்புற இலக்கியம் - பாலின வேறுபாடு
இது எல்லாம் நம் ஆசியாவில மட்டும் தான் சிவா...
காலம் எவ்வளவோ மாறிபோச்சு
சொல்றேனு தப்பா எடுத்துகாதீங்க...
இப்போ எல்லாம் பெண்களை சுற்றி தான் ஆண்கள் வாழ்க்கை அமைந்து வருகிறது என்பதே என் கருத்து.. ஏனென்றால் அவர்களும் வேலைக்கு போறாங்க படிக்கிறாங்க.. நல்ல வேலை செய்யுறாங்க... ஆண்களை பின் தள்ளிவிட்டு இப்போ அவங்க தான் முன்னிலை வகிங்கிறாங்க
காலம் எவ்வளவோ மாறிபோச்சு
சொல்றேனு தப்பா எடுத்துகாதீங்க...
இப்போ எல்லாம் பெண்களை சுற்றி தான் ஆண்கள் வாழ்க்கை அமைந்து வருகிறது என்பதே என் கருத்து.. ஏனென்றால் அவர்களும் வேலைக்கு போறாங்க படிக்கிறாங்க.. நல்ல வேலை செய்யுறாங்க... ஆண்களை பின் தள்ளிவிட்டு இப்போ அவங்க தான் முன்னிலை வகிங்கிறாங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்
» நாட்டுப்புற வழிபாடுகள்
» நாட்டுப்புற பாட்டு
» நாட்டுப்புற பாடல் MP3
» "நாட்டுப்புற நம்பிக்கைகள்"
» நாட்டுப்புற வழிபாடுகள்
» நாட்டுப்புற பாட்டு
» நாட்டுப்புற பாடல் MP3
» "நாட்டுப்புற நம்பிக்கைகள்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|