ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்

Go down

நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Empty நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்

Post by kalaimoon70 Sun Feb 07, 2010 5:05 am

எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்த ஆசிய _ஆப்பிரிக்க படவிழாவில், சிவாஜியின் "கட்டபொம்மன்" படம் கலந்து கொண்டது. அதில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.

சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.

இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.

சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.

கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.

கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.

எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.

மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.

16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.

எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!

ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.

சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.

"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.


ஆனால் இந்தியாவில்?
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum