புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
53 Posts - 42%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
304 Posts - 50%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
21 Posts - 3%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Sat Feb 06, 2010 2:34 pm





ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை
வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து
வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து
கொள்கிறதாம்.

இது நிச்சயம்
கண்டிக்கத்தக்கது தான்...அதில் மாற்றுக்கருத்து இல்லை...

இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறம்
நடந்துகொண்டிருக்க....தனது காரை ஆஸ்திரேலியர்கள் இனவெறி காரணமாக எரித்துவிட்டார்கள்
என்று புகார் கொடுத்த இந்தியர் ஒருவரின் மோசடி புலன் விசாரணையில் அவர் இன்சூரன்ஸ்
தொகைகு நடத்திய நாடகம் என தெரியவந்திருக்கிறது...சில இந்தியர்கள் சாராயக்கடையில்[
நாகரிகமாக (Bar) ] ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஆனால் இந்த தாக்குதல்களுக்கே ”இனவெறி” என்று
கூச்சல் போட்டால்..…. கணக்கிலடங்கா மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த
இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

அதற்கே
குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின்
எச்சரிக்கை….

உள்துறை,
வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின்
கண்டனம்….

வட இந்திய
தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும்
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று
குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத்
திறக்கவில்லை பிரதமர்.

வாயைத்
திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத்
திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.



தமிழகத்தின்
சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின்
தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு என் தலைவனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின்
கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள்
கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில்
மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

தேவ ஆலயங்களில்
அழுது புலம்பினர்…


மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.



எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும்
எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும்
தமிழன்.

ஆனால்….
ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக்
கூட கேலி செய்தது வட இந்திய‌ மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும்
தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது
கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.



ஆனால் நாம்
அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம்.
கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும்
கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில்
போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள்
அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று
நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை.
என்றும்தான்.

வளைகுடாப்
போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது
குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில்
இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே
பற்றி எரிந்தது.

அடுத்த கணமே
”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது
இந்தியப் பிரதமருக்கு.

அன்றிலிருந்து
இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா”
நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”
இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது
“அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும்
சரி…..

அன்றிலிருந்து
இன்றுவரை தமிழனுக்கு இதுதான் கதி..


ஆக,

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.





நன்றி - நண்பரே.


darulchand
darulchand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010

Postdarulchand Sat Feb 06, 2010 2:53 pm

நன்றாகச் சொன்னீர்கள்.இங்குதான் தன்மானத்தமிழனென்று சொல்லிக் கொண்டு, வடஇந்தியன் சொல்படி ஆடுகிறதே தமிழன் தலை.இதிலெங்கே நிமிர்ந்து நிற்பது?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 06, 2010 2:57 pm

சொரணை உள்ளவர்களாக இருக்கிறோமா என யோசிக்கவேண்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 06, 2010 3:09 pm

இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.இலங்கை தமிழர்கள் அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள்.அவர்களால் இந்திய நாட்டுக்கு எந்த பலனும் இல்லை.அதுவும் ஒரு காரணம்.
ஆஸ்திரேலியா இனவெறிக்கு குரல் கொடுப்பதன் காரணம் இந்தியாவில் இருந்து
அடிபட்டவர்கள் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்கள்.வேலைக்கு சென்றவர்கள் என்றால் அன்னிய செலாவணி கிடைக்கும்.படிப்பதற்கு சென்றவர்கள் என்றால் எதிர்காலத்தில் அன்னிய செலாவணி கிடைக்கும்.

எங்கு இருந்தாலும், அவர்களால் பயன் இருந்தாலும்,இல்லை என்றாலும் நம் மக்கள் என்ற எண்ணம் வராத வரை இலங்கை தமிழர்களுக்கு யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை.



[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 06, 2010 3:24 pm

UDAYASUDHA wrote:இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்கிறானே சிங்களப்படை, இதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லையே, அவர்கள் இந்தியநாட்டு குடிமக்கள் இல்லையா?



[You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 06, 2010 3:29 pm

இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 06, 2010 3:40 pm

"இந்தியா எங்கள் நாடு" என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படும் தமிழர்கள், இந்த நியாயமான கேழ்விக்கு பதில் சொல்லட்டும். பதிவிற்கு நன்றி BPL



[You must be registered and logged in to see this image.]
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 06, 2010 3:43 pm

நிலாசகி wrote:இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது

அது மட்டும் அல்ல தமிழர்கள் என்றோ ஊமைகளாகவும் சுயனலர்கலாகவும் மாறிவிட்டது தான் காரணம்



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Sat Feb 06, 2010 4:31 pm

ஒவ்வொரு இந்தியனும் ஊமைதான்.................
இலங்கை தமிழனின் அவலம் அடங்கும்வரை..............

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 06, 2010 4:57 pm

என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

இந்திய மேலாண்மையின் கேவலமான செய்கை எம்மை இந்தியர் என்று சொல்லவே வெட்கப்பட வைக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை.

இந்த சமயம் என் கவிதை ஒன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

அறிவாரோ எண்ணற்ற அழிவுகளும் எம்மினத்தின்
விழிதிறவா மழலைகளின் மவுனமான மரணந்தனை
ஒளிகிடைக்குமென்றெண்ணி ஏற்றிவைத்த தீபங்களே
அழிவதற்கும் காரணமாய் குடிலெரித்த சோகம்தனை...

ஒருபக்கம் பாலூட்டிய கொங்கைகளின் குவியல்கள்
மறுதிசையில் மழலைகளின் வாய்திறந்த பசிக்கோலம்
அண்ணன்மார் காப்பாரென்று ஆசுவசித்த தங்கைகளும்
கண்ணீரால் குளிப்பாட்டி குழிபுதைந்த சோதரரும்...

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
உரிமைகளை வேண்டிநின்றால் அழிந்திடுமோ மனிதரினம்?
விரிவிழிகள் குத்திநிற்க நரப்பலிகள் சம்மதமோ?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக