ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

Top posting users this week
ayyasamy ram
தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_c10தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_m10தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_c10 
heezulia
தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_c10தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_m10தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சியின் நகைச்சுவை விருந்து

2 posters

Go down

தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Empty தென்கச்சியின் நகைச்சுவை விருந்து

Post by சிவா Thu Feb 04, 2010 2:59 am

அது அப்படித்தான்!

ஒருத்தர் தன்னுடைய நண்பர் வீட்டுக்குப் போயிருந்தார்.

அன்பாக உபசரித்தார்கள்.


அவசியம் எங்க வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள்.

சரி - என்று உட்கார்ந்தார்.

சாப்பாடு போட்டார்கள்.

சாப்பிட்டார்.

அவர்கள் வீட்டிலே கட்டிக்கிடந்த நாய்க்குட்டி இவர் சாப்பிடுவதை முறைத்துப் பார்த்தது.

''ஏன் இப்ப என்னை முறைக்குது உங்க நாய்க்குட்டி?''

அவர்கள்கள் சொன்னார்கள்:

''அதுகிட்டே ஒரு கெட்ட பழக்கம்ங்க... தன்னோட தட்டுலே யார் சாப்பிட்டாலும் அது அப்படித்தான் முறைக்கும்!''


வரிசையில் வா!

ஒரு ரேஷன் கடை வாசல்.

கடை திறக்கறதுக்கு முன்னாடியே எல்லாரும் வந்து வரிசையாய் நின்னுட்டாங்க.

கடைசியா வந்த ஒருத்தர் கியூவிலே முன்னாடி போறதுக்கு முயற்சி பண்ணினார்.

ஏற்கனவே நின்னக்கிட்டிருக்கிறவங்க... அவரை முன்னாடி போறதுக்கு விடலே.

'கடைசியா போயி நில்லுய்யா!' என்று கத்தினார்கள்.

அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

முண்டியடித்துக் கொண்டு முன்னால் போக முயற்சி பண்ணினார். எல்லாரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுவந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.

''இதோ பாருப்பா! நாங்க இருக்கிற வரைக்கும் நீங்க முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது.... தெரிஞ்சிக்கோ!''

''நான் இங்கே பின்னாடி நிற்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்க முடியாது!''

''ஏன்?''

''நான்தான் கடையைத் திறக்க வேண்டிய ஆள்!''



நேரம் சரியில்லை


ஒருத்தன் வாய்க்காலைத் தாண்டறேன்னு பந்தயம் கட்டி... தாண்ட முடியாமே வாய்க்கால்லே விழுந்த காலை உடைச்சிக்கிட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்தான்.

''ஏன்டா இப்படி?''ன்னு கேட்டாங்க.

''நான் பந்தயம் கட்டின நேரம் சரியில்லே!''-ன்னான்.

''எப்படி?''

''வாய்க்கால்லே தண்ணி இருக்கிற நேரமா பார்த்துப் பந்தயம் கட்டியிருக்கணும்!''


சுத்தம் சுகம் தரும்!


ஓர் அம்மா டாக்டரைத் தேடி வந்தாங்க.

''டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி... ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''

''சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?'''

''ஒரு வாரமா இப்படி இருக்கு!''

''இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?''

''வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''


ஆபத்தில் உதவி!


நமக்கு வேண்டிய ஆள் ஒருத்தர்.

கொஞ்சம் வயசானவர். எழுந்து நடக்கவே சிரமப்படுவார். எப்பவும் சாய்வு நாற்காலியிலேயே உட்கார்ந்திருப்பார். அவர் தனக்குத் துணையாக ஒரு நாயைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்.

அதுவும் வயதான நாய். எழுந்து நடக்கவே சிரமப்படும். இவர் பக்கத்திலே எப்பவும் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும். அந்தப் பெரியவரைப் பார்க்க வந்த ஒருத்தர் கேட்டார்:

''ஏங்க... ஒரு சின்ன பையனை உங்களுக்குத் துணையா வச்சிக்கப்புடாதா? இந்த நாயை உங்களுக்குப் பாதுகாப்பா வச்சிருக்கீங்களே...! உங்களுக்கு ஓர் ஆபத்துன்னா இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்?''

''எனக்கு ஓர் ஆபத்து-ன்னா அந்த சமயத்துலே இந்த நாய் என்னை தனியா விட்டுட்டு ஓடிப் போகாமே இருக்கும் இல்லையா? அதனாலேதான் இதை வச்சிருக்கேன்!''


மனைவி தேவை!


ஓர் ஆள்.

தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் கிட்டே யோசனை கேட்டான்:

''வரப்போகிற மனைவி சிவப்பா இருக்கணும்... நான் ஏதாவது சொன்னா அதைச் செய்யணும். துணிமணிகளையெல்லாம் சுத்தமா துவைக்கணும்... அப்படிப்பட்ட மனைவி தேவை...!'' கம்ப்யூட்டர் உடனே பதில் தந்தது:

''சிவப்பு கலர்லே ஒரு வாஷிங் மிஷினை கல்யாணம் பண்ணிக்கோ!''


மறதி நோய்!


அல்செமீர் - என்பது ஒருவித மறதி நோய்.

ஒரு குடும்பத்தலைவர்... தன் மனைவியைப் பார்த்து...

''யார் நீ... உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே....!'' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் எனக்கு சந்தேகமாக இருந்தது.

''வாங்க... டாக்டர்கிட்டே போகலாம்!'' என்றேன்.

அவர் உடனே என்னைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்க் காதோடு காதாக மெதுவாகச் சொன்னார்:

''என் கையிலே பணம் இல்லாத போதெல்லாம் அப்படி... மறதி நோய் வந்தது மாதிரி நடிப்பேன்....! அவ்வளவுதான்... அதைக் கண்டுக்காதீங்க....!''


ஏன் வரவில்லை?


ஒருவன் நண்பனிடன் கேட்டான்:

''கல்யாணப் பத்திரிகை அனுப்பியிருந்தேனே... ஏன்டா வரலை?''

''வந்திருந்தேனே!''

''ஏய்...! ஏன்டா பொய் சொல்றே? நான் உனக்குப் பத்திரிகையே அனுப்பலையே...!''

''பத்திரிகை அனுப்பினேன்னு நீ பொய் சொல்றப்போ கல்யாணத்துக்கு வந்தேன்-னு நான் பொய் சொல்லப்படாதா?''



ஏன் ஓடறாங்க?


ஒரு ராஜா.

அவர் தன் பெண்ணுக்குச் சுயம்வரம் நடத்தினார்.

பலநாட்டு அரசகுமாரர்கள் வந்தார்கள்.

சுயம்வரம் நடைபெறுகிற நாள்.

அரண்மனைக்குள்ளே இருந்து அரசகுமாரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.

ஒரு பெரியவர் இதைப் பார்த்துவிட்டு அமைச்சரிடம் கேட்டார்:

''ஏங்க... அந்நிய தேசத்து இளவரசர்கள் எல்லாம் நம்ம இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்ங்கற ஆர்வத்துலேதானே வந்தாங்க... ஏன் இப்படி ஓடறாங்க... நம்ம இளவரசியை அவங்க பார்க்கலையா...?''

''பார்த்ததுக்கு அப்புறம்தான் இப்படி ஓடறாங்க!''

புத்தக விமர்சனம்!

ஒருத்தரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதற்கு விமர்சனம் எழுதச் சொல்லியிருந்தார்கள். கொஞ்ச நாள் கழித்து அவரைப் போய் பார்த்து, ''என்னங்க... புத்தகத்தைப் படிச்சிப் பார்த்தீங்களா?'' என்று கேட்டார்கள். அவர் சொன்னார்:

''இன்னும் இல்லீங்க... இப்பத்தானே விமர்சனமே எழுதி முடிச்சிருக்கேன்!''

கார் பயணம்

ஒருநாள் நள்ளிரவு நேரம்.

இரண்டு நண்பர்கள் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவன் சொன்னான்: ''டேய்! ராத்திரி நேரம்... காரைப் பார்த்து ஓட்டு!''

அடுத்தவன் சொன்னான் பதற்றத்தோடு:

''அடப்பாவி! இப்ப காரை ஓட்டிக்கிட்டுருக்கறது நீதானே....!''



ரொம்ப அடக்கம்!

ஓர் அப்பா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

''என் பையன்... செய்யற காரியத்துலே கருத்தா இருப்பான். அவன் செய்யறதை விளம்பரத் படுத்திக்கறதில்லை! ரொம்ப அடக்கமா செய்வான்!''

''அப்படி என்னதான் செய்யறான்?''

''பணத்தை எங்கே வச்சாலும் எடுத்துடறான்!''


தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தென்கச்சியின் நகைச்சுவை விருந்து Empty Re: தென்கச்சியின் நகைச்சுவை விருந்து

Post by அப்புகுட்டி Thu Feb 04, 2010 3:06 am

ஓர் அப்பா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

''என் பையன்... செய்யற காரியத்துலே கருத்தா இருப்பான். அவன் செய்யறதை விளம்பரத் படுத்திக்கறதில்லை! ரொம்ப அடக்கமா செய்வான்!''

''அப்படி என்னதான் செய்யறான்?''

''பணத்தை எங்கே வச்சாலும் எடுத்துடறான்!''
[b]ரசிக்கும் படி உள்ளது நன்றி அண்ணா[b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum