ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னதாய் ஒரு மரணம்

Go down

சின்னதாய் ஒரு மரணம் Empty சின்னதாய் ஒரு மரணம்

Post by சிவா Wed Feb 03, 2010 12:59 am

மெதுவாய் வெள்ளை உடையில் மிதந்து வந்தார்கள் அந்தத் தேவதைகள் இருவரும். தங்கநிற இறக்கைகள் மிதமாக அவர்களின் முதுகில் மின்னின. தென்றலெனத் தவழ்ந்து மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை நோக்கி மிதந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

ஒன்றின் முகம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. கண்ணோரத்தில் கண்ணீர் முத்து கண்ணாடியாய் மின்னியது. அதன் பக்கத்திலிருந்த அந்தத் தேவதை குழப்பத்துடன் இருந்தது.

"என் பிரியமான தோழியே! இன்று என் இவ்வளவு சோகமாயிருக்கிறாய்? காலம் காலமாய் நாம் இந்த மருத்துவமனையில் வலம் வருகிறோம். நீ எதற்காக இவ்வளவு வருத்தப்படுகிறாய் என்று எனக்குச் சொல்ல மாட்டாயா?" என்று அன்பொழுகக் கேட்டது அந்தச் சின்ன தேவதை

"இன்று எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையை நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு குழந்தையின் உயிரை எடுத்துச் செல்ல வேண்டும் அது தான் எனக்கு மிகச் சோகமாக இருக்கிறது" மெதுவாகச் சொன்னது அந்த மரண தேவதை.

"மரண தேவதையே, இதற்காக நீ ஏன் இவ்வளவு வருத்தப் படுகிறாய்? எத்தனை முறை நீ குழந்தைகளின் உயிரை எடுத்துச் சென்று இருக்கிறாய்? அதற்கெல்லாம் நீ இப்படி வருத்தப் பட்டதில்லையே!" குழப்பத்துடனே கேட்டது அடுத்த தேவதை.

"என் அன்பான சின்ன தேவதையே, உன் மனத்தை நீ திடப்படுத்திக் கொள். இன்னும் சில நிமிடங்களில் இங்கே ஒரு மரணம் நிகழப் போகிறது. அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்ட உயிரை ஆறுதல் படுத்தி வாழ வைக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது. இந்த முறை உனது வேலை மிகக் கடினம்"

"நான் அதைத்தானே தினம் தினம் செய்து வருகிறேன். இன்று அப்படி என்ன நடக்கப் போகிறது?"

பேசிய படியே இருவரும் மருத்துவ மனையின் அறை ஒன்றின் வாசலுக்கு வந்தார்கள்.

அறையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள் எட்டு மாதக் கர்ப்பிணி. ஒருத்தி. அவளுக்கு முப்பது வயது இருக்கலாம். மருந்துகளின் காரணமாக ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள் அந்தப் பெண்.

"இவள் யார் என்று எனக்குத் தெரிகிறது. இவள் கணவன் ஓட்டி வந்த வண்டி ஒரு லாரியோடு மோதி அந்த இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர். அவள் பெற்றோர், கணவன், அவனது பெற்றோர் என்று அனைவரையுமே இவள் ஒரே நிமிடத்தில் இழந்து விட்டாளே! பின்னால் படுத்துக் கொண்டு வந்ததினால் இவள் மட்டும் பிழைத்துக் கொண்டாள். இவளை ஆறுதல் படுத்த ஒரு குழந்தையிருக்கிறதே. வாழ்வில் அவளுக்கு நம்பிக்கையும் குறிக்கோளும் சீக்கிரமாய் திரும்பி விடும் என்று நான் கூடஎண்ணினேன்."
மெல்ல அந்தப் பெண்ணின் எம்பியிருந்த வயிற்றைத் தடவிக் கொடுத்தது அந்தச் சின்ன தேவதை.

மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தது மரண தேவதை.

நிமிர்ந்து பார்த்தது சின்ன தேவதை. அதற்கு ஏதோ புரிந்த மாதிரியிருந்தது. தன் தங்க இறக்கைகள் படபடக்க மரண தேவதையின் முன்னால் கை கூப்பி நின்றது. அதன் கண்களிலிருந்து மாலையாய் வழிந்தது கண்ணீர்.

"வேண்டாம், வேண்டாம்!தயவு செய்து வேண்டாம்!! இன்னும் இந்த உலகத்தில் பிறக்காத இந்த ஜீவனை நீ அழைத்துச் செல்லாதே " -கதறிக் கெஞ்சியது.

மரண தேவதை கனமான மெளனமும் கண்ணீர் தளும்பிய கண்களுமாய் அந்த பெண்ணின் தலை மாட்டில் நின்றது. ஒரு முறை சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. மெல்லமாய்க் குனிந்து அந்தப் பெண்ணின் நெற்றியில் மிக மென்மையாக முத்தமிட்டது. தேவதையின் இறகுகள் விசிறி அந்தப் பெண்ணின் தலை முடியை மெல்லக் கோதிவிட்டன. சுற்றி வந்து அந்தப் பெண்ணின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டது, தான் செய்யப் போகும் காரியத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல.

"இந்தப் பெண்ணின் குழந்தை இறக்கப் போகிறது என்பதைவிட எப்படி இறக்கிறது என்பதுதான் கொடுமை"

"மருத்துவர்கள் தான் வயிற்றிலிருக்கும் உயிரைக் காப்பாற்றி விட்டார்களே? இனி எப்படி? நாம் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டாலென்ன? இந்தப் பெண்ணுக்கும் நல்லது"-
சின்ன தேவதையின் விசும்பல்கள் காற்றாய்க் கரைந்தன.

"நான் மேலிடத்தில் எவ்வளவோ வாதாடினேன் ஆனால் பயனில்லை. என்னுடைய உத்தரவு இந்தக் குழந்தையின் உயிரை எடுத்துப் போவது, அதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன" - கவலையுடன் சொன்ன மரண தேவதை படுத்திருந்த கர்ப்பிணியைச் சுற்றிச் சுற்றிப் பட்டாம்பூச்சி போலப் பறந்தது.

"அப்படியானால் இந்தப் பெண்ணின் உயிரையும் எடுத்துச் செல். எல்லாரையும் இழந்து இவள் வாழ்வதில் பயனில்லை"

"இவள் உயிரை எடுத்துச் செல்வதற்கு எனக்கு கட்டளையிடப்படவில்லை அதற்காகத் தான் உன்னை அழைத்து வந்தேன் நான்"
இவர்கள் இருவரின் பேச்சு அந்த அறையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தாள் அந்தப் பெண். மீண்டும் புரண்டு படுத்தாள் பின் மயக்கத்திலேயே எழுந்து அவள் கழிப்பறை நோக்கி நடந்தாள். இயற்கை உபாதை எழுப்பிவிட்டிருக்கிறது போலும். மரண தேவதை. அவள் பின்னாலேயே பறந்தது. ஒரு முறை சோகமாகச் சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. பின் கழிவறைக்குள் அதுவும் நுழைந்தது. மயக்கத்திலேயே அந்தப் பெண் கழிப்பறையில் முனகும் சத்தம் கேட்டது. மெல்ல மெல்ல வந்த முனகல் மெதுவாய் அடங்கியது.

சில நிமிடங்களில் தன் கைகளில் சின்ன உயிரை ஏந்திய படி மரண தேவதை. மேலே மேலே பறந்தது. எதுவும் செய்ய முடியாமல், கழிப்பறையில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணுக்குமாய், மரண தேவ¨தைக்குப் பின்னுமாய் பறந்தது சின்ன தேவதை.

நோயாளியைப் பரிசோதிக்க அறைக்குள் உள்ளே வந்த நர்ஸ் அலறினாள் : "அடக் கடவுளே, பாத்ரூம் போனவளுக்கு பிரசவம் ஆகி தண்ணீருக்குள் குழந்தை விழுந்து இறந்துவிட்டதே!"

சாமுண்டி


சின்னதாய் ஒரு மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum