ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

4 posters

Go down

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Empty அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

Post by சிவா Tue Feb 02, 2010 11:28 pm

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Crownprince_rudolf_1889

1889 சனவரியில் ஒரு நாள். சூரியன் வெளிவரத் தொடங்குவதற்கு முன் பனிபடர்ந்த காலைப் பொழுதில் மூன்று தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இடம் - வேட்டையாடும் போது தங்கும் இல்லம். அங்கேரி நாட்டில் இளவரசன் ருடால்ஃபுக்குச் சொந்தமான இல்லம். அவருடன் தங்கியிருந்த அவரின் இரண்டு நண்பர்கள் ஓடிவந்து படுக்கையறையின் கதவைத் தட்டினார்கள். திறக்கப்படவில்லை. தாழ்ப்பாளைக் கழற்றித் திறந்தார்கள். உள்ளே...

பயத்தால் கண்கள் தெறித்து விழும் நிலை. அறை முழுவதும் அலங்கோலம். எதுவுமே ஒழுங்காக இல்லை. நாற்காலிகள் கவிழ்ந்து கிடந்தன. ஷாம்பெய்ன் மதுப் போத்தல்கள், தரையில் கண்டபடி கிடந்தன.

தலையணைகள் செஞ்சிவப்பு இரத்தத்தில் உறைந்தது... சுவர்களில் இரத்தம் தெறித்தும்... ஒரே களேபரமாகக் காட்சி, பட்டத்து இளவரசர் வேட்டை பூட்சுகள் உள்பட அணிந்து முழு ஆடை அலங்காரத்துடன் படுக்கையின் குறுக்காக... தலை சிதைந்து... பக்கத்தில் ஒரு அழகுப் பெண் உடலில் துணி ஏதுமின்றி.... இளவரசர் நேசித்த பாவை... நெற்றிப் பொட்டில் பாய்ந்த துப்பாக்கி ரவைக் காயம்... பட்டுப்போன்ற அவளின் மயிர்க்கற்றைகளால் மறைந்து... இளவரசனால் காதலுடன் கோதி உணர்ச்சியூட்டி மகிழ்ந்த மயிர்க் குழல்கள்... கிரேக்க அழகுத் தேவதை போல மாசு மறுவற்ற உடல் கிடந்தது...

என்ன இந்தச் சாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம்? ஜெர்மனி நாட்டின் கெய்சர் அரசனின் படையுடன் ஆஸ்திரியப் படைகளும் சேர்ந்து போரிட வேண்டும் எனக் கேட்டால் ருடால்ஃப் மறுத்திருப்பான், 1914இல் முதல் உலகப்போர் மூண்டிருக்காது. அப்படிப்பட்ட அமைதிப் பிரியன் அவன். அவன் இறந்துவிட்டான்.

தன் காதலியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பானா? அல்லது இருவரையும் யாராவது கொலை செய்திருப்பார்களா? இதுவரை இந்த இரகசியம் தெளிவாக்கப்படவில்லை. இறப்புக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ருடால்ஃபுக்கும் பெல்ஜிய இளவரசி ஸ்டெபேனியாவுக்கும் திருமணம் நடந்தது. இருமனங்கள் ஒன்று சேர்ந்த திருமணம் அல்ல. இரண்டு நாடுகளின் பிணைப்பு. அவ்வளவே. இருவரும் சந்தித்துக் கொள்வதே கிடையாது. தனித்தே வாழ்ந்தனர். மண் ஒட்டியது. மனங்கள் ஒட்டவில்லை. ருடால்ஃப் பல நாடுகள் சுற்றியவன். பத்து மொழிகளில் பேசும் புலமை உள்ளவன். நூல்கள் பல எழுதியவன். அய்ரோப்பாவின் அல்வாத்துண்டு. சாம்ராஜ்யத்தின் மதிப்புள்ள விக்ரகம்.

ஓராண்டுக்கு முன்னால்தான் கிரேக்க இரத்தம் ஓடும் பாரோனஸ்மேரி வெட்சரா எனும் அழகுப் பெட்டகத்தைச் சந்தித்தான். அவளுக்கு வயது 19. இவனுக்கு 10 கூடுதல். கண்டதும் காதல். வியன்னா நகரத் தெருக்களில் இவர்களின் காதல் பற்றியே பேச்சு. வெட்டிப் பேச்சுக்காரர்களுக்கு வம்பளப்பதுதானே பொழுது போக்கு! மாமன்னரின் காதுகளில் மகனின் காதல் களியாட்டங்கள் விழுந்தன. முதலில் கண்டுகொள்ளவே இல்லை. அவர் மட்டும் என்ன, கற்புக்கரசனா? நாள் செல்லச் செல்ல வியன்னாவும் புடாபெஸ்ட் நகரமும் வேறு பேச்சே பேசுவதில்லை.

மன்னர் மகனைக் கண்டித்தார். மகன் கேட்கவில்லை. மேரியைக் கைவிட முடியாது என்று கூறிவிட்டான். மணிமுடிகூட வேண்டாம் எனக்கு, என் மனங்கவர்ந்த மேரியே போதும் என்றான். மனைவியை மணவிலக்கு செய்திடுவேன் என்றான். மன்னர் மவுனமாகி விட்டார். என்றாலும் வேட்டை இல்லத்தில் ருடால்ஃபும் மேரியும் கமுக்கமாகச் சந்தித்து களிபேருவகையில் ஆழ்ந்தனர். அடர்ந்த பைன் மரக்காடுகளின் இடையே அமைந்த இந்த இல்லம் யாருடைய கழுகுக் கண்களிலும் படவில்லை. எப்படியும் பேசவல்ல நாக்குகளும் அசையவில்லை. அப்படி ஒரு நாள் வேட்டை இல்லம் போய் இன்பக்கடலில் நீந்திக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. அன்று காலை 6.30 மணிக்கு ருடால்ஃபை வேலையாள் எழுப்புகிறார். வேட்டை ஆடப்போகவில்லையா? எனக் கேட்கிறான்.

வெளியே பனிமூட்டமாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறான். கடுங்குளிர் என்பதையும் சொல்கிறான். ருடால்ஃப் நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாக்கு என்று வேட்டைக்குப் போகவில்லை. கன்னி வேட்டை முக்கியம் அல்லவா? முடித்துவிட்டு, வியன்னா திரும்பலாம் என நினைத்தான். கோச் வண்டியை ரெடி பண்ணும்படி வேலையாளிடம் சொன்னான். அதற்குள் ஆயுள் எடுக்கப்பட்டுவிட்டது. யார் எடுத்தது? இன்னும் தெரியவில்லை.

மன்னர் மருத்துவரை அழைத்தார். “அப்போ பிளக்சி” நோயால் தாக்கப்பட்டு ருடால்ஃப் இறந்துபோனதாக அறிக்கை தரச் சொன்னார்.

அது ஒரு விசித்திர நோய். எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் திடீரெனத் தாக்கிப் புலன்களையும், தசைகளையும் செயலற்றுப் போகச் செய்து சாகடித்துவிடும். ஆனால் மன்னரே சொல்லியும் மருத்துவர் மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லை. இளவரசர் அடக்கம் செய்யப்பட்டார். அடக்கம்கூட ஆடம்பரமாகவே நடந்தது. ஆனால் அவனின் இதயம் கவர்ந்தவளின் உடல்... அழுக்குத் துணிகள் அடைத்து வைக்கப்படும் கூடைக்குள் திணிக்கப்பட்டு பட்லரின் அறையில் வீசப்பட்டுப் பல நாள்கள் அப்படியே கிடந்தது.

ஒருநாள், யாரோ எடுத்துப்போய், இரவில் புதைத்தார்க்ள. சாதாரண சவப்பெட்டியில் போட்டுப் புதைத்தார்கள். அவள் தலையில் தொப்பி அணியும் அழகே தனி. அந்தத் தொப்பி அவளது தலைக்கீழ்.... தலையணையாக... மோசமான அடக்கம்தான். பைன் மரக்காடுகளின் ரீங்காரம்தான் அவள் சாவுக்கும், அடக்கத்துக்கும் பாடப்பட்ட இரங்கல் கீதம்.

ஆறு நூற்றாண்டுகள் ஆஸ்திரிய நாட்டை ஆண்ட பரம்பரையின் சாவு முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இனியும் அதற்கான வாய்ப்பும் இல்லை.

நன்றி: உண்மை


அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Empty Re: அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

Post by pupeshmohan Thu Feb 11, 2010 2:54 pm

சத்தியமாக நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல

தலை சுத்துது

முடியல
avatar
pupeshmohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 21/01/2010

Back to top Go down

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Empty Re: அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

Post by Baby Thu Feb 11, 2010 3:22 pm

நான் இதனை ஏற்கனவே படித்திருக்கிறேன். அனால் நண்பரே பணத்திற்கும், சமூக அந்தஸ்திற்கும் கிடைப்பது போன்று உண்மையான அன்பிற்கு அங்கிகாரம் கிடைப்பதில்லையே அது ஏன் ?


People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Empty Re: அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

Post by நிலாசகி Thu Feb 11, 2010 3:32 pm

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் 440806
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அங்கேரி இளவரசர் ருடால்ஃப் Empty Re: அங்கேரி இளவரசர் ருடால்ஃப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum